2. இல்லாளின் சிறப்பு
கணவனுக்கு இனியளாய், ம்ருது பாஷியாய், மிக்க
கமலை நிகர் ரூப
வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி இலாதது ஓர்
கால்வழியில் வந்தவளும் ஆய்,
மணமிக்க
நாணம்மடம் அச்சம் பயிர்ப்பு என்ன
வரும் இனிய மார்க்க
வதியாய்,
மாமிமா மற்க் இதம் செய்பவளும் ஆய்,வாசல்
வருவிருந்து ஓம்புபவளாய்
இணையில் மகிழ்நன் சொல் வழி நிற்பவளும் ஆய், வந்தி
என் பெயர் இலாதவளும் ஆய்,
இரதி எனவே லீலை புரிபவளும் ஆய், பிறர்தம்
இல்வழி செலாதவளும் ஆய்,
அணிஇழை ஒருத்தி உண்டாயின் அவள் கற்புடையள்
ஆகும்; எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இப் பாடலின் பொருள் ---
எமது அருமை
மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு - எம் அருமையான
மதவேள் நாள்தோறும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
கணவனுக்கு
இனியளாய் - கணவனுடைய பார்வைக்கு அழகியவளாகவும்,
மிருது
பாஷியாய் - இனிமையான சொற்களைப் பேசுபவளாகவும்,
கமலை
நிகர் மிக்க ரூபவதியாய் - திருமகளை நிகர்த்த மிகுந்த அழகினை உடையவளாகவும்,
காய் சினம் இலாதவளுமாய் - மிகுந்த கோபம் இல்லாதவளாகவும்,
நோய் பழி இல்லாதஓர்
கால் வழியில் வந்தவளுமாய் - நோயும் பழியும் இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாகவும்,
மணம் மிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு
என்ன வரும் இனிய மார்க்கவதியாய் - புகழத்தக்க நாசம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் பொருந்திய
நல்லொழுக்கமுடையவளாகவும்,
மாமி மாமற்கு இதம்
செய்பவளுமாய் - மாமிக்கும் மாமனுக்கும் இதமான செயல்களையே செய்பவள் ஆகவும்,
வாசல் வரு
விருந்து ஓம்புபவளாய் - வாயிலில் வரும் விருந்தினரை ஆதரிப்பவளாகவும்,
இணை இல் மகிழ்நன் சொல் வழி நிற்பவளுமாய் -
ஒப்பற்ற கணவன் மொழிப்படி நடப்பவளாகவும்,
வந்தி
என் பெயர் இல்லாதவளுமாய் - மலடியெனும் பெயர் இல்லாதவளாகவும்,
இரதி எனவே லீலை புரிபவளுமாய் - மன்மதன் துணைவியாகிய இரதியைப் போல
இன்பக்கலவி செய்பவளாகவும்,
பிறர்தம் இல்வழி
செலாதவளுமாய் - மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாகவும்,
அணி இழை ஒருத்தி உண்டாயின் - அழகிய
அணிகலன்களையுடைய ஒரு மங்கை இருந்தால்,
அவள்
கற்பு உடையளாகும் - அவள் கற்புடையவள் எனப்படுவாள்.
No comments:
Post a Comment