பொருள்
இல்லார்க்கு இன்பம் இல்லை,
புண்ணியம் இல்லை, என்றும்
மருவிய
கீர்த்தி இல்லை,
மைந்தரில் பெருமை இல்லை,
கருதிய
கருமம் இல்லை,
கதிபெற வழியும் இல்லை,
பெருநிலம்
தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகுவாரே.
இதன் பொருள் ---
பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை --- செல்வம் இல்லாத வறியவர்களுக்கு இவ்வுலக இன்பம் இல்லை,
புண்ணியம் இல்லை ---
அப் பொருளைக் கொண்டு நல்லறம் செய்வதால் உண்டாகும்
புண்ணியம் இல்லை,
என்றும் மருவிய கீர்த்தி இல்லை --- பொருந்திய புகழ் என்பது எக்காலத்தும் இல்லை,
மைந்தரில் பெருமை இல்லை --- மக்களில் அவருக்கு நன் மதிப்பு இல்லை,
கருதிய கருமம் இல்லை --- எண்ணிய செயல் முடிவது இல்லை,
கதிபெற வழியும் இல்லை --- நல்ல நிலைமையை அவர்களால் அடையவும் முடியாது,
பெருநிலம் தனில் சஞ்சாரப் பிரேதமாய்த்
திரிகுவாரே --- பரந்த இந்தப் பூமியில் அவர்கள் நடைப்பிணமாய் பயனில்லாமல் திரிவார்கள்.
கருத்து --- "அருள் இல்லார்க்கு அவ்வுலகம்
இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்
இல் ஆகி ஆங்கு" என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
No comments:
Post a Comment