திரு ஏகம்ப மாலை - 22


"நல்லாய், எனக்கு மனு ஒன்று தந்துஅருள், ஞானம்இலாப்

பொல்லா எனைக் கொன்று போடும்பொழுது, இயல் பூசை,செபம்

சொல்ஆர் நல்கோயில் நியமம், பலவகைத் தோத்திரமும்

எல்லாம் முடிந்தபின் கொல்லுகண்டாய், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  நன்மையை உடையவனே! அடியேனுக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அதனை ஏற்று அருளல் வேண்டும்.  ஞானம் இல்லாதவனாகிய பொல்லாத என்னைக் கொல்லும் போது, என்னால் செய்யக் கூடிய பூசையும், திருவைந்தெழுத்து செபமும், புகழ் நிறைந்த நல்ல சிவாலயங்களின் வழிபாடு முதலிய நியமங்களும், பல வகையான பாடல்களைச் சொல்லித் துதிப்பதும் ஆகிய எல்லாம் முடிவுற்ற பின்னர், கொல்லுவாயாக.


விளக்கம் -- "வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி. மதித்திடுமின், .... தில்லைக் கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமேயே" என்றார் அப்பர் பெருமான். மனிதப் பிறவி எடுத்தபின், சரியை, கிரியை, யோகம், ஞானங்களைக் குறைவற முடித்து, இறைவனது திருவடியை அடைய வேண்டும் என்பதால், அவை எல்லாம் முடிந்தபின், கொல்லும் படியாக ஒரு விண்ணப்பம் வைத்தார்.  அறிவில்லாதவனாகிய நான், மரண வேதனை உறுகின்ற காலத்தில், மெய்யறிவு கலங்கி, உன் திருவடியை மறப்பது திண்ணம்.  எனவே, அவ்வாறு நிகழ்வதற்கு முன்னரே, பூசை, செபம், கோயில் நியமம், பாடி வழிபடுதல் ஆகியவைகளை முடித்த பின்னர் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...