திருத் தில்லை - 6

"ஓடும் எடுத்து, அதள் ஆடையும் சுற்றி, உலாவி, மெள்ள

வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல்

ஆடும்அருள் கொண்டு, இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னைத்

தேடும் கணக்கு என்ன காண், சிவகாம சவுந்தரியே."


இதன் பொருள் ---


பிச்சைப் பாத்திரமாகிய பிரமனின் மண்டை ஓட்டை எடுத்துக் கொண்டு,  அரையிலே புலித்தோலையும் உடுத்துக் கொண்டு, மான் தோலைத் தோளிலே போட்டுக் கொண்டு, யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு, மெல்லத் திரிந்து, வீடுகள் தோறும் பிச்சையை ஏற்று, விதி அற்றவன் போலும், பித்தனைப் போலும் அம்பலத்திலே ஆடுகின்ற ஆண்டியாகிய பெருமானை, நீ தேடும் காரணம் என்ன, அம்மா சிவாகம சவுந்தரியே.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...