“கன்னியரை, பொன்நாண் கழிந்தோரை, மற்ற அயலார்
பன்னியரை, மாயப் பரத்தையரை, - முன்ன அரிய
தாதியரை, நல்லோர் தழுவ நினையார், நரகத்
தீதுவரும் என்றே தெரிந்து.” -- நீதிவெண்பா.
அறிவுடைய பெரியோர்கள் மணமாகாத கன்னிப் பெண்களையும், பொன்னால் ஆன தாலியை இழந்த விதவைப் பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை பொருந்திய பொதுமகளிரையும், விரும்பக் கூடாத வேலைக்காரிகளையும் சேர்தலால் நரகத் துன்பமே வரும் என உணர்ந்து, அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்.
(நாண் - தாலி. பன்னியர் - மனைவியர். மாயம் - வஞ்சனை. தாதியர் - பணிப் பெண்கள்.)
No comments:
Post a Comment