பாடல் 12 - சங்கு வெண்தாமரைக்கு




சங்கு வெண்தாமரைக்குத்
     தந்தைதாய் இரவி தண்ணீர்;
அங்கு அதைக் கொய்து விட்டால்,
     அழுகச் செய்து அந்நீர் கொல்லும்;
துங்கவெண் கரையில் போட்டால்
     சூரியன் காய்ந்து கொல்வான்;
தங்களின் நிலைமை கெட்டால்
     இப்படித் தயங்குவாரே.                    12.

     சங்கைப் போல வெண்மையாய் இருக்கும் தாமரை மலருக்குத் தந்தை சூரியன். தாய் தண்ணீர்.

     இருந்தாலும், குளத்தில் உள்ள தாமரை மலரைக் கொய்து, அந்தக் குளத்திலேயே போட்டு விட்டால், அந்தத் தாமரை மலருக்குத் தாயாய் இருந்த தண்ணீரே அதனை அழுகுமாறு செய்து கொன்று விடும்.

     அந்தத் தாமரை மலரைக் கொய்து கரையிலே போட்டு விட்டால், முன் தந்தையாய் இருந்து, அந்தத் தாமரையை மலர்த்தத் துணை புரிந்த சூரியனே மிக்க வெயிலை வீசிச் சுட்டுக் கொல்வான்.

     இப்படித் தான், இந்த உலகத்தில் உள்ளோரும் தங்களின் உயர்ந்த நிலைமையானது கேட்டினை அடைந்த போது, தங்களுக்கு உரியவராலேயே தீங்கு செய்யப்பட்டு வாடி வதங்கிப் போவார்கள்.

No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...