உண்டான போது கோடானு கோடி
ஆல்இலை
பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்,
சாலவே
பட்சி எல்லாம் தம் குடி என்றே வாழும்,
வாலிபர்
வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி,
ஆல்இலை
ஆதிபோனால் அங்கு வந்து இருப்பார் உண்டோ? 6.
ஆலமரத்தினிடத்து இலைகளும், பூவும், காய்களும், பழங்களும் உண்டாய்
இருந்தால்,
அதில்
பறவைகள் எல்லாம் மிகுதியாக வந்து, தம்முடைய இருப்பிடம் என்று கருதி வாழ்ந்து இருக்கும்.
ஆலமரத்தின் நிழலை விரும்பி எண்ணற்ற வாலிபப் பருவத்தினரும் வந்து புகழ்ந்து பேசி இருப்பார்கள்,
அந்த ஆலமரத்தில் இலை முதலியன இல்லாமல் போனால், அங்கே வந்து இருப்பவர்
யாரும் இல்லை.
செல்வம் மிகுந்து இருக்கும் காலத்தில் வந்து உறவாடி, பயன் பெற்றுச் செல்பவர்கள், வறுமை உற்ற காலத்தில்
எட்டியும் பார்க்கமாட்டார்கள்.
கல்லானே
ஆனாலும்,
கைப்பொருள்
ஒன்று உண்டாயின்,
எல்லாரும்
சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும்
வேண்டாள்;
மற்று
ஈன்றெடுத்த தாய்வேண்டாள்;
செல்லா(து)
அவன்வாயிற் சொல்.
என்னும்
ஔவைப் பிராட்டியின் நல்வழிப் பாடல் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
நேரா
அழுக்குத் துணி ஆகில் உன்தனை நேரில்கண்டும்
பாராதவர்
என நிற்பார்,
உடுத்தது
பட்டு எனிலோ,
வாராது
இருப்பது என்,
வாரும்
என்பார்,
இந்த
வஞ்சகர்பால்
சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனைச்
சேர் விரைந்தே.
என்னும்
திருவருட்பா இங்கு வைத்து எண்ணத் தக்கது.
No comments:
Post a Comment