செல்வம்
வந்து உற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார்,
சொல்வன
அறிந்து சொல்லார்,
சுற்றமும் துணையும் பேணார்,
வெல்வதே
கருமம் அல்லால்
வெம்பகை வலிது என்று எண்ணார்,
வல்வினை
விளைவும்ஓரார்,
மண்ணின் மேல் வாழும் மாந்தர்.
இதன்
பொருள் ---
மண்ணின் மேல் வாழும் மாந்தர் --- இந்த நிலவுலகத்தில்
வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்கள்,
செல்வம் வந்து உற்ற காலை --- தங்களுக்குப் பெரும்
செல்வம் வந்து பொருந்திய போது,
தெய்வமும் சிறிது பேணார் --- தமது
அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்,
சொல்வன அறிந்து சொல்லார் --- சொல்ல
வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்,
சுற்றமும் துணையும் பேணார் --- உறவினர்களையும், உதவியாக உள்ள நண்பர்களையும்
போற்றிக் கொள்ள மாட்டார்கள்.
வெல்வதே கருமம் அல்லால் --- எப்பொழுதும் எதையும்
வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர,
வெம்பகை வலிது என்று எண்ணார் --- எதிரிகள்
வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணிது துணிய மாட்டார்கள்,
வல்வினை விளைவும் ஓரார் --- தாம் செய்யும் காவச்
செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
கருத்து --- முன்னர் ஒரு பாட்டில், "பெருத்திடு செல்வமாம்
பிணி வந்து உற்றிடில், ....... தரித்திரம் என்னும் ஒரு மருந்தில் தீரும்" என்று
இந் நூலாசிரியர் கூறியுள்ளதைக் கருத்தில் கொள்க.