2. அந்தணர் இயல்பு
குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும்,
கூறுசுரு
திப்பெருமையும்,
கோதுஇலா ஆகம புராணத்தின் வளமையும்,
குலவுயாக ஆதிபலவும்,
முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும்
முளரிபோ
லேதகிப்பார்;
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ
மூர்த்தம்உண்
டாக்குவிப்பார்;
நிறையாக நீதிநெறி வழுவார்கள்; ஆகையால்,
நீள்மழை
பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங்
கோல்புரியும்
நிலையும், மா தவர்செய்தவமும்,
மறையோர்க ளாலே விளங்கும், இவ்வுலகத்தின்
மானிடத் தெய்வம்இவர் காண்,
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே!
இதன் பொருள் ---
மயிலேறி
விளையாடு குகனே!
புல் வயல் நீடுமலை
மேவு குமர ஈசனே!
குறையாத காயத்திரி ஆதி செப மகிமையும் --- குற்றமில்லாத காயத்திரி முதலான மந்திரங்களை செபிக்கும்
பெருமையும்,
கூறு சுருதிப்
பெருமையும் --- சொல்லப்படும் வேதங்களின்
பெருமையும்,
கோது இலா ஆகம
புராணத்தின் வளமையும் --- குற்றம் இல்லாத
ஆகமங்களின் சிறப்பையும் புராணங்களின் சிறப்பையும்,
குலவு யாக ஆதி
பலவும் --- விளங்கும் வேள்வி
முதலான பல கிரியைகளையும்,
முறையா நடத்தலால் --- ஒழுங்காகச் செய்து வருவவதனால்,
சகல தீவினைகளையும்
--- எல்லா வகையான
கொடிய வினைகளையும்,
முளரி போல
தகிப்பார் --- நெருப்பைப் போலே
எரித்து, இல்லாமல் செய்து விடுவார்,
முதன்மை பெறு சிலை
செம்பு பிருதுவிகளில் --- சிறப்புப் பொருந்திய கல்லிலும் செம்பிலும் மண்ணிலும்,
தெய்வ மூர்த்தம்
உண்டாக்குவிப்பார் --- தெய்வத் தன்மையை பொருந்திய மூர்த்தங்களை உண்டாக்கி வைப்பார்,
நிறையாக நீதிநெறி
வழுவார்கள் --- நீதியிலும், ஒழுக்கத்திலும் வழுவாமல்
ஒழுங்காக இருப்பார்கள்,
ஆகையால் --- இப்படி இவர்கள் விளங்குவதனாலே,
நீள் மழை
பொழிந்திடுவதும் --- மிகுதியாக மழை பெய்வதும்,
நிலம் அது
செழிப்பதும் --- அதன் காரணமாக மண் வளம் பெறுவதும்,
அரசர் செங்கோல்
புரியும் நிலையும் --- மன்னவர்கள் நல்ல ஆட்சியை நிலையாகச் செய்வதும்,
மாதவர் செய் தவமும்
--- பெரிய தவசிகள்
செய்யும் தவமும்,
மறையோர்களாலே
விளங்கும் --- மறையை ஓதும்
அந்தணர்களாலே விளக்கம் உறும்,
இவர் மானிடத்
தெய்வம் --- இவர்கள் மக்களிலே தெய்வம்
என்று மதிக்கப்படுபவர்கள்.
கருத்து --- அந்தணர்கள் நிலத் தேவர்கள்
எனப்படுவர். சுரர் - தேவர். பூ சுரர் - நிலத் தேவர். "பூசுரன்
ஞானசம்பந்தன்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளியதைக் குறிக்கொள்க. இவர்கள் முறையாக தமது குலமுறைப்படி நடந்தால்
மழை மிகுதியாகப் பொழியும். மண் வளம் பெறும்.
நல்லாட்சி நடைபெறும். தவமும் தானமும் சிறக்கும்.
No comments:
Post a Comment