மங்குல்
ஐம்பதினாயிரம் யோசனை
மயில்கண்டு நடமாடும்,
தங்கும்
ஆதவன் நூறாயிரம் யோசனை
தாமரை முகம் விள்ளும்,
திங்கள்
ஆதவற்கு இரட்டி யோசனை உறச்
சிறந்திடும் அரக்கு ஆம்பல்,
எங்கண்
ஆயினும் அன்பராய் இருப்பவர்
இதயம் விட்டு அகலாரே.
இதன்
பொருள் ---
மங்குல் ஐம்பதினாயிரம் யோசனை --- ஐம்பதினாயிரம் யோசனை
தொலைவில் உள்ளது மேகம்.
மயில் கண்டு நடம் ஆடும் --- மயிலானது
அதைக் கண்டு மகிழ்ந்து தோகையை விரித்து நடம் புரியும்.
தங்கும் ஆதவன் நூறு ஆயிரம் யோசனை --- கதிரவன்
இலட்சம் யோசனை தூரத்தில் உள்ளது.
தாமரை முகம் விள்ளும் --- தாமரை
அரும்பு அதைக் கண்டு மலரும்.
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனை உற --- சந்திரன்
ஆனவன் மதிரவனுக்கு இரண்டு மடங்கு அதிகமான தொலைவில் இருக்க,
சிறந்திடும் அரக்கு ஆம்பல் --- அவனைக் கண்டு செம்மை நிறமுடைய ஆம்பல் அரும்பு மலர்ந்திடும்.
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம்
விட்டு அகலாரே
--- ஒருவருக்கு ஒருவர் அன்பு உடையவராய் இருந்தால், அவர் எவ்விடத்தில் இருந்தாலும்
மனத்தை விட்டு நீங்கமாட்டார்.
விளக்கம் --- உண்மையான நட்பு பூண்டு இருப்போர்
எங்கு இருந்தாலும் ஒருவர் உள்ளத்தை விட்டு ஒருவர் நீங்கமாட்டார். "புணர்ச்சி பழகுதல்
வேண்டா, உணர்ச்சி தான் நட்பாம் கிழமை
தரும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் திருக்குறள் கருத்தை இதனோடு வைத்து எண்ணுக.
No comments:
Post a Comment