70. பூப்பு வாரம்


               70. பூப்பு  இலக்கினம்

                              ---


வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்

     மாறாது விபசாரி ஆம்;

  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்

     வலிதினிற் பிறரை அணைவாள்;


சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்

     சீர்பெறுவள் கன்னி யென்னில்;

  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்

     தேளினுக் குத்; தனுசுஎனில்


நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;

     நீள்மகரம் மான மிலளாம்;

  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ

     நெடியபே ரறிவு டையளாம்;


அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்

     அதுவென்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


மேடத்தில் வறுமை தப்பாது வரும் - மேட இராசியில் (பூப்பு அடைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும்.


இடபத்தில் மாறாது விபசாரி ஆம் - இடப ராசியில் தவறாமல் தீய ஒழுக்கம் உடையள் ஆவள்.


மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் - மிதுனத்தில் வாழ்வும் இன்பமும் அடைவாள்.


கடகம் வலிதினில் பிறரை அணைவாள் - கடகத்தில் தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள்.


மிருகேந்திரற்கு எனில் சிறுமை செயும் மிடி சேர்வாள் - சிங்கத்தில் இழிவுதரும் வறுமை உடையள் ஆவள்.


கன்னி என்னில் சீர் பெறுவள் - கன்னியில் ஆயின் புகழ் பெறுவாள்.


துலை எனில் செட்டு உடையள் - துலையாயின் சிக்கனம் உடையவளாய் இருப்பாள்,


தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் - விருச்சிகத்தில் நோயால் இளைத்திடுவாள்.


தனுசு எனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையள்ஆம் - தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே இருப்பாள்.


நீள் மகரம் மானம் இலள்ஆம் - பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள்.


கும்பம் எனில் நிறை போகவதி - கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள்.


மீனம் என்னிலோ நெடிய பேரறிவு உடையள் ஆம் - மீனத்தில் ஆனால் மிகுந்த பேரறிவு உடையவள் ஆவாள்.


மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன் அது என்பர் - இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.


பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.


No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...