உழவர் திருநாள் --- திருவள்ளுவர் திருநாள் --- உணர்த்துவது என்ன?

 


இன்று உழவர் திருநாள் --- திருவள்ளுவர் திருநாள்

-----

 

     திருவள்ளுவ நாயனார் கூறிய உழவு என்பதன் பருப்பொளையும்நுண்பொருளையும் சிந்திப்போம்.

 

பருப்பொருள் --- மேலோட்டமாக அறிந்து கொள்வது.


நுண்பொருள் --- நுட்பமாகப் உணர்ந்துகொள்ள வேண்டியது.

 

     சான்றோர்களும் அருளாளர்களும் ஒன்றைச் சொல்லுகின்றார்கள் என்றால்அதில் நுண்பொருளும் பொதிந்து இருக்கும். அதனை உய்த்து உணர வேண்டியது நெறியில் நிற்க விழைவோரின் கடமை ஆகும்.

 

     அறிவது வேறு. உணர்வது வேறு. உணர்வு மிக நுண்மையானதாகும். உமையம்மையார் அளித்த ஞானப் பாலை உண்ட அளவிலேயே எல்லா ஞானங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் அறிந்தார் என்று சொல்லாமல், "உணர்ந்தார்" என்று சொல்லி, "தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்" என்று தெய்வச்சேக்கிழார் பெருமான் அருளி உள்ளது உய்த்து உணரத் தக்கது.

 

     பருப்பொருளை மட்டுமே உணர்வதால் இடர்ப்பாடு தீராது. உண்மைப் பொருளையும் உணர்ந்துஅதன்வழி நிற்றல் வேண்டும். திருஞானசம்பந்தப் பெருமானோடு வாதம் புரிந்து தோற்ற சமணர்களைப் பார்த்துமதுரை வாழ்வார்"பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன பாரீர்" என்று பரிகசித்ததாகத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுவார்.

     

     அறங்களை விதிக்கும் நூல்களை மட்டும் கற்றுஅவற்றின் நுண்பொருளாகிய உள்ளுறையை அறியாதவரால் பாவ புண்ணியங்களை உணரமுடியாது. கங்கை ஆடினால்காவிரியில் ஆடினால் பாவம் போகும் என்பது பருப்பொருள். நீர் என்பது அன்பைக் குறிக்கும். உள்ளத்தில் அன்பு இல்லாமல்எந்தத் தீர்த்தத்தில் முழுகினாலும் பாவம் போகாது என்பது நுண்பொருள். எனவே, "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று நாயனார் அறிவுறுத்தியபடிஎதிலும் பொதிந்து உள்ள உண்மைப் பொருளைத் தெளிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

 

     உழவின் தன்மையையும்உண்மையையும் அறியாதவர்களும் உழவு என்று ஒன்றைச் செய்வார்கள். அதன் பயன் விளைபொருள் சாவி ஆகிப் போகும். உண்மையான உழவு செய்தால்விளைபொருள் நலம் பயக்கும். அத்தகைய உண்மையான உழவர்கள் உள்ளதால் இந்த நாடும்நாட்டில் உள்ளவர்களும் நலம் பெறுகின்றார்கள்.

 

     எல்லாப் பற்றுக்களையும் அறவே துறந்து விட்டோம் என்று சொல்லிக் கொள்ளுகின்றசொல்லாமல் வாழுகின்ற முனிவர்களுக்கும் பசிப்பிணி என்பது உண்டு. நமக்குப் பசி வந்தால்துவண்டு போய்உணவுக்கு ஓடி அலைவோம். ருசியுள்ள உணவு தேடுவோம். முனிவர்களுக்குப் பசி வந்தால்ருசியைப் பார்க்காமல்ஒரு கவளம் உணவு கிடைத்தால் உண்டு பசி தீர்ப்பார்கள். இல்லை என்றாலும்தண்ணீர்இலைசருகுகனி போன்றவற்றை உண்டு பசி தீர்த்துக் கொள்வார்கள். உணவுக்காக வாடி இளைக்கமாட்டார்கள். மேலும்முனிவர்கள் செய்யும் வேள்விகளுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்காமல் போகும்.எனவேஉழவர்கள் இல்லையானால்துறவிகளுக்கும் நிலை இல்லாமல் போகும் என்னும் கருத்தில்,

 

உழவினார் கைம்மடங்கின் இல்லைவிழைவதூஉம்

விட்டேம் என்பார்க்கு நிலை.           

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     இத் திருக்குறளின் கருத்தை உறுதிசெய்யதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

வேள்வித் தொழிற்கும் உழுதொழில் முன்வேண்டுமால்,

சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா! - வாழும்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கு நிலை.

 

இதன் பொருள்---

 

            சூழிசூழ் தென்குளத்தூர்ச் சோமேசா --- நீர் நிலைகள் சூழ்ந்து விளங்கும் அழகிய குளத்தூரில் வீற்றிருக்கும் சோமேசப் பெருமானே! வாழும் உழவினார் கை மடங்கின் --- உலகம் வாழத் தாம் வாழ்கின்ற உழவுத் தொழிலை உடையார் கையானது உழவுத் தொழிலைச் செய்யாது மடங்குமாயின்விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை --- யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்பதும் கூடாதாகும்.

 

     வேள்வித் தொழிற்கும் --- உழுதொழிற்கு இன்றியமையாத மழை பெய்தற்குக் காறணமாகிய வேள்வித் தொழிலுக்கும்உழு தொழில் முன் வேண்டும் --- உழவுத் தொழில் முற்பட இன்றியமையாமல் வேண்டுப்படும் ஆகலான் என்றவாறு.

            

     "வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை" என்று விவேக சிந்தாமணி கூறும். "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது" எனத் தெய்வச் சேக்கிழார் பெருமானும் கூறியருளினார். எனவே,மழை பொழிவதற்கு வேள்வியே முதல் காரணம்அம் மழை இல்லாமல் உழுதொழில் நிகழாதுஎன்பதை அறிக. 

 

     இனிஉழவுத் தொழிலின் நுண்பொருள் காண்போம். உழவர்கள் கரடு முருடாக உள்ள நிலைத்தைப் பண்படுத்தி உழவுத் தொழிலைச் செய்து விளைபொருளைக் கொள்வது போல்கரடு முருடாக உள்ள மனம் என்னும் நிலத்தைப் பண்படுத்திபத்தி என்னும் பொருளை விதைத்துமுத்தி என்னும் பொருளைப் பெற்று,பேரானந்தம் என்னும் இன்பத்தை அனுபவிக்கவேண்டும்.

 

     உழவர் முதலில் நிலத்தப் பண்படுத்தி நாற்றங்காலில் செந்நெல்லை விதைத்து நெருக்கமாக வளர்ப்பார். அது வளர்ந்து வரும்போதுவேறு ஒரு பெரிய நிலத்தை உழுது எரு இட்டு செம்மைப் படுத்துவார். ஒரு சாண் அளவு நெருக்கமாக வளர்ந்த நாற்றைப் பிடுங்கிபெரிய நிலத்தில் சற்று விரிவாக நடுவார். பின்னர் அப் பயிரிடையே களை தோன்றும். ஆட்களை விட்டுக் களை பறிப்பார். அவ்வப்போது தேவையான அளவுக்கு தண்ணீர் பாய்ச்சுவார். மாடு கன்று பயிரை மேய்ந்து அழிக்காவண்ணம் வேலியிட்டுக் காப்பாற்றுவார். பின்னர் கதிர் தோன்றி முற்றியதும் அறுவடை செய்து மகிழ்வார்.

 

     அதுபோலதாயின் கருப்பமாகிய நாற்றங்காலில் இவ் உடம்பாகிய பயிர் நெருக்கமாகப் பத்து மாதம் வளர்ந்தது.  பின் உலகமாகிய பெரிய வயலில் நாற்றுப் பிடுங்கி நடுவது போல்கருப்பையில் இருந்து வெளியாக்கப்பட்டது.  காமக்ரோதம் முதலிய களைகள் தோன்றுகின்றன. நல்லாசிரியர் அக் களைகளைப் பறிப்பார். அன்பு என்ற தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். மலமாயா கன்மங்களாகிய மாடு கன்று மேய்ந்து அழிக்காவண்ணம் ஞானமாகிய வேலியிடுதல் வேண்டும். மோகமாகிய கடுவெய்யில் உண்டாகாவண்ணம் பார்த்து உயிராகிய பயிரைப் பாதுகாத்து வந்தால் சிவகதி என்னும் கதிர் தோன்றும்.

 

     தண்ணீர் இன்மையாலும்வெயிலின் வன்மையாலும் பயிர் சாவியாகிவிடும். "ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே" என்று அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வேண்டுவார்.

 

     சொல்லரசர் ஆகிய அப்பர் பெருமான்,ஒரு பயிர்த் தொழிலைக் கூறும் அழகுஇதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.

 

மெய்ம்மையாம் உழவைச் செய்து,

            விருப்பு எனும் வித்தை வித்தி

பொய்ம்மையாம் களையை வாங்கி,

            பொறை எனும் நீரைப்பாய்ச்சி

தம்மையும் நோக்கிக் கண்டு,

            தகவு எனும் வேலி இட்டு

செம்மையுல் நிற்பர் ஆகில்

            சிவகதி விளையும் அன்றே.

 

     தவராஜ செல்வராகிய தாயுமானாரும் ஒரு உழவை மிகவும் அழகாகக் கூறுகின்றனர்.

 

காராரும் ஆணவக் காட்டைக் களைந்துஅறக்

     கண்டுஅகங் காரமென்னுங்

  கல்லைப் பிளந்து,நெஞ் சகமான பூமிவெளி

            காணத் திருத்தி,மேன்மேல்

பாராதி அறியாத மோனமாம் வித்தைப்

            பதித்துஅன்பு நீராகவே

  பாய்ச்சிஅது பயிராகு மட்டும்,மாமாயை வன்

            பறவை அணுகாத வண்ணம்,

நேராக நின்று,விளை போகம் புசித்துஉய்ந்த

            நின்னன்பர் கூட்டம் எய்த,

நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே

            நின்னருட் பாரம்என்றும்

ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி

     யாகின்ற துரியமயமே

  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி

            ஆனந்த மானபரமே.

 

     இந்த மெய்ம்மையான உழவை விளக்குவதே வள்ளிநாச்சியார் வரலாறு. இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார்சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்துதினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.

 

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

 

     ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனத்தில்மெய்ம்மையான உழவைச் செய்து,நல்ல எண்ணங்கள் ஆகிய தினைப்பயிர் வளர்ந்துகொண்டு இருக்கின்றது. அது வளர்ந்து ஞானானுபவம் ஆகிய பசுங்கதிர் உண்டாகும். நல்லெண்ணம் ஆகிய தினைப்பயிரைதீய எண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல் புரிந்து கொண்டு இருந்தவர்சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டிஅகிலாண்ட நாயகியாகிய வள்ளித் தாயார். அந்த சீவான்மாவைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார் ஆறுமுகப் பரம்பொருள்.

 

    உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும்மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும்சாமர்த்தியமாகவும் பேசிப் பொய்யான வாழ்வில் உழலுவர். அவரால் உண்மையான ஞானத்தைப் பெற முடியாது.

 

     இந்தப் பொய்யான வாழ்க்கையால்ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்துநல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும். 

 

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி,முன்புற

மெய் எ(ன்)னும் எருவை விரித்துங்குயமில்

பத்தித் தனி வித்துட்டு,நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி,நேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சி,ள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட,அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி,செம்மையின் ஓங்கி

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டும் எனக்

கண்ணீர் அரும்பி,கடிமலர் மலர்ந்துபுண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி;நஞ்சுபொதி

காள கண்டமும்,கண் ஒரு மூன்றும்,

தோள் இரு நான்கும்,சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று,தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப;சிலர்இதின் வாராது,

 

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி,தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர,

இச்சை வித்து உகுத்துழி,யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி,செய்யும்

பாவப் பல்தழை பரப்பி,பூ எனக்

கொடுமை அரும்பிகடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி,பின்பு

மரணம் பழுத்து,நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

 

எனவரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"என்னும் அருள் நூலில்மெய்ம்மையான உழவு குறித்தும்அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

இதன் பொருள் ---

 

     நெஞ்சப் புனத்து --- மனமாகிய கொல்லைப் புறத்தில்வஞ்சக் கட்டையைவேர் அற அகழ்ந்து போக்கி --- (அநாதியே முளைத்து வேர் விட்டு இருந்த) வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி,தூர்வை செய்து--- நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்தி,அன்பு என் பாத்தி கோலி--- அன்பு என்னும் பாத்தியைச் செய்து,முன்புறமெய் எ(ன்)னும் எருவை விரித்து--- முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டுங்கு--- அந்தக் கொல்லையில்யம் இல்பத்தித் தனிவித்துட்டு--- பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாத,பத்தி எனப்படுகின்ற விதையை விதைத்துநித்தலும்ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி--- நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சிநேர் நின்று --- எதிரில் நின்றுதடுக்குநர்க்கு அடங்காது --- உள் புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காது,இடுக்கண் செய்யும்பட்டி அஞ்சினுக்கு அஞ்சி--- துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டிமாடுகளுக்குப் பயந்துஉள்சென்று --- அவைகளைத் தடுப்பதற்குகொல்லையின் உள்ளே சென்று,சாந்த வேலி கோலி --- சாந்தம் என்னும் வேலியினை அமைத்து,வாய்ந்த பின்--- (இவை அனைத்தும்) முடிந்த பின்னர்,ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து--- ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்து,கருணை இளந்தளிர் காட்ட--- அது வளர்ந்துகருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து,அருகா --- எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்றகாமக் குரோதக் களை அறக் களைந்து --- காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வைரோடு பறித்து எறிந்துசேமப் படுத்துழி--- அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர்செம்மையின் ஓங்கி --- செம்மையாக வளர்ந்துமெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு--- உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னும் அரும்பு உண்டாகி,ம் எனக்கண்ணீர் அரும்பி--- அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டு,கடிமலர் மலர்ந்து--- ஞானமணம் உள்ள மலர் மலர்ந்துபுண்ணிய அஞ்செழுத்து அருங்காய் தோன்றி--- புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகிநஞ்சு பொதிகாள கண்டமும்--- ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும்,கண் ஒரு மூன்றும்--- ஒப்பற்ற மூன்று திருக்கண்களும்,தோள் இரு நான்கும்---எட்டுத் திருத்தோள்களும்சுடர்முகம் ஐந்தும்--- அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும்,பவளநிறம் பெற்று--- பவள நிறத்தோடு விளங்கிதவள நீறு பூசி--- வெண்மையான திருநீற்றினைப் பூசி,அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் --- கைப்புஇனிப்பு,துவர்ப்புகார்ப்புபுளிப்புஉவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய்,காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் --- கண்ணால் கண்டாலும்காதால் கேட்டாலும்மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்ற,சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி --- மிக உயர்ந்த மருதமாணிக்கம் என்னும் இனிய கனியானதுபையப் பையப் பழுத்துக் கைவர--- மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்க,எம்மனோர்கள் இனிது இனிது அருந்திச்செம்மாந்து இருப்ப--- எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியை) இன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

 

     சிலர் இதின் வாராது--- இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர்இந்த உழைப்பினை முயலாது,மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி --- மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ் நிலமாக இருக்கவிட்டுகாமக் காடு மூடி--- காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால்,தீமை செய்ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக--- தீமைகளைப் புரிகின்ற ஐம்புல வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்க,இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட---சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர---கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படி,இச்சை வித்து உகுத்துழி--- ஆசை என்னும் வித்தை (அந்தப் பாழ் நிலத்தில்) உதிர்த்த காலத்தில்,யான் எனப் பெயரியநச்சு மாமரம் நனிமிக முளைத்து--- நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சுமரமானது மிகவும் முளைத்து,பொய் என் கவடுகள் போக்கி--- பொய்ம்மையாகிய கிளைகளைப் பரப்பி,செய்யும்பாவப் பல்தழை பரப்பி--- செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்து,பூ எனக் கொடுமை அரும்பி--- கொடுமை என்னும் அரும்புகளை விட்டு,கடுமை மலர்ந்து--- தீமையே மலர்ந்து,துன்பப் பல்காய் தூக்கி--- துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டு,பின்பு --- அதன் பின்புமரணம் பழுத்து--- மரணம் என்கின்ற பழமானது பழுத்துநரகிடை வீழ்ந்து--- நரகத்தில் விழுந்து,தமக்கும் பிறர்க்கும் உதவாது--- தமக்கும்மற்றவர்க்கும் பயன்படாது,இமைப்பில் கழியும் --- இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின்,இயற்கையோர் உடைத்தே --- குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

 

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய்எ(ன்)னும்

தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை

அரிதின் இகழ்ந்து போக்கி,பொருதிறல்

மைருள் நிறத்துமதன் உடை அடுசினத்து

வகைக் கடாவும்யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி,அருள்விளக்கு ஏற்றி,

துன்ப இருளைத் துரந்து,முன்புறம்

மெய்யெனும் விதானம் விரித்து,நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறைக்கிச்

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு

ந்தைநீ இருக்க இட்டனன்" 

 

என்று "திருக்கழுமல மும்மணிக் கோவை" என்னும் அருள்நூலில்பட்டினத்தடிகள்மெய்ம்மையான உழவைச் செய்வதுதமது உள்ளம் என்னும் பாழறையைஇறைவனுக்குப் பள்ளியறை ஆக்கிய அருமை குறித்துப் பாடி உள்ளார். இதன் பொருளைச் சிந்திப்போம்....

 

       கருமுதல் தொடங்கிப்பெருநாள் எல்லாம்--- நான் கருவில் அகப்பட்டுபூமியில் பிறக்கத் தொடங்கிய காலம் முதலாகக் கழிந்த எண்ணில்லாத காலங்கள் எல்லாம்,காமம்--- காமத்தால் விளைந்த தீமையும்வெகுளி--- நல்லோரையும் மற்றோரையும் கோபித்துக் கொண்டதால் வந்த தீமையும்கழிபெரும்பொய்எ(ன்)னும் --- மிகுதியாகப் பொய்யைப் பேசுவதால் வந்த தீமையும் எனப்படும்தூய்மையில்குப்பை--- தூய்மை இல்லாத குப்பைகள்தொலைவின்றிக்கிடந்ததை--- அழியாமல் இருப்பில் இருந்தவற்றை.அரிதின்இகழ்ந்து போக்கி--- நீக்கக் கூடாதவையாக இருந்த அவற்றால் விளைந்த தீமைகளால் அவற்றை வெறுத்து,அவை என்னை விட்டுப் போகும்படியாகச் செய்துபொருதிறல்--- போர் புரியும் தன்மை கொண்ட,மைருள்நிறத்து--- மிக்க கருமை நிறம் கொண்டமதன் உடை--- மதம் பிடித்த,அடுசினத்துவகைக்கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி--- கொல்லத்தக்க கோபத்தினை உடைய ஐந்து வகையான வேறுபட்ட ஒழுக்கம் கொண்டஐந்து புலன்கள் ஆகிய கடாக்களையும்அவைகள் கட்டப்பட்டு இருந்து கட்டினை அவிழ்த்து அப்புறப்படுத்தி அன்புகொடு மெழுகி--- அந்த இடத்தினை அன்பு என்னும் நீரால் மெழுகிஅருள்விளக்கு ஏற்றி--- அருள் என்னும் விளக்கினை ஏற்றி வைத்து,துன்ப இருளைத்துரந்து--- துன்பமாகிய இருட்டினை ஓட்டிமுன்புறம்--- இவ்வாறு இருந்த அந்த இடத்தில், மெய்எ(ன்)னும் விதானம்விரித்து--- வாய்மை என்கின்ற மேற்கட்டினை விரித்து விளங்கக் கட்டிநொய்யகீழ்மையில்தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்பாழறை---அற்பமாகிய தாழ்ந்த குணங்களில் சிக்கியிருந்த எனது மனமாகிய பாழான அறையை,எந்தை,னக்குப் பள்ளியறைக்கி--- எனது பெருமானே! நீ திருத்துயில் கொண்டு இருக்கும் இடமாகப் பண்ணிஅந்தப் பள்ளியறையில்நீ இருக்க--- தேவரீர் எழுந்தருளி இருக்க,சிந்தைத்தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசுஇட்டனன்--- எனது சிந்தையாகிய அழகிய தாமரை மலரினால் ஆகிய அழகிய இருக்கையை இட்டு வைத்தேன்.

 

     எனவேமெய்ம்மையான உழவைச் செய்து இறையருள் அனுபவத்தைப் பெற்ற அடியார்களைப் போற்றுகின்ற திருநாளாகவும்இந்த உழவர் திருநாள் உள்ளது என்பதை உய்த்து உணரவேண்டும். அத்தகைய அடியார்களைப் போற்ற மகிழ்கின்ற திருநாள் இந்த உழவர் திருநாள்.

 

     அடியார்கள் இருப்பிடம் தேடிச் சென்றுஅவர்களைக் கண்டு மகிழ்ந்து அருள் பெறுவதற்கு உரியது "காணும் பொங்கல்" என்னும் திருநாள் என்பதையும் உய்த்து உணர்ந்து திருவருள் பெற்று இன்புறுவோமாக.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...