வறுமை என்னும் ஒரு பாவி

 


வறுமை என்னும் ஒரு பாவி

-----

 

     திருக்குறளில் "நல்குரவு" என்னும் ஒர் அதிகாரம். நல்குரவு என்னும் தலைப்பிற்கு, "நுகர்தற்கு ஏதும் இல்லாமை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.நல்குரவு என்பதுவறுமைஇல்லாமைஏழ்மைமிடிதரித்திரம் என்று பலவாறாகச் சொல்லப்படும்.

 

"வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே".

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய, "கந்தர் அனுபூதி"யில் வரும் ஒரு பாடல். வறுமையை "இன்மையை ஒரு பாவி" என்ற அருணகிரிநாதர்அதன்கொடுமையை இந்தப் பாடலில்விளக்கி அருளினார்.

 

     "பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே! வறுமை என்கிற பாவி வந்து ஒருவனைப் பிடித்துவிட்டால்அவனுடைய அழகும்சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும்நல்லொழுக்கமும்பரம்பரை கெளரவமும்நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்!"

 

     வறுமை காரணமாக உணவு கிடைக்காமல்பசி நோய் வந்துவிட்டால்தன்மானமும்குடிப்பெருமையும்கல்வியும்கொடையும்அறிவு உடைமையும்தானமும்தவமும்பெருமையும்தொழிலில் ஈடுபடும் முயற்சியும்தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும்ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார். 

 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்.         --- ஔவையார்.

 

"தாங்க ஒணா வறுமை வந்தால்

     சபைதனில் செல்ல நாணும்,

வேங்கை போல் வீரம் குன்றும்,

     விருந்தினர் காண நாணும்,

பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,

     புல்லருக்கு இணங்கச் செய்யும்,

ஓங்கிய அறிவு குன்றும்,

     உலகெலாம் பழிக்கும் தானே". 

 

இது விவேகசிந்தாமணி என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...   

 

இதன் பொருள் ---  

 

     ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால்அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான்.அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால்விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான்.மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனைகீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானதுஇப்போது குன்றிப் போகும்.உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.

 

"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்

     சரீரத்தை உலர்தர வாட்டும்,

தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,

     சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே

     தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,

தரித்திரம் அவமானம் பொய் பேராசை

     தரும் இதில் கொடியது ஒன்று இலையே".

 

இது குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

   வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும்வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும்,சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும்.வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும்.வறுமையானது மானம் இழத்தல்பொய் பேசுதல்பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். ஆதலால் இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.

 

"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,

     சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்

     தக்க பேர் ஆகரம் என்ப,

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்

     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,

தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது,அத்

     தகையதை ஒழித்தல் நன்று ஆமே".

 

இதுவும் குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

     வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்சொல்லப்பட்ட பலவிதான எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும்.வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்தரித்திரம் கொடிய எவற்றினும் கொடியது. அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

 

"கொடியது கேட்கின்நெடிய வெவ் வேலோய்!

கொடிது கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை"..

 

வறுமைஅதனினும் இளமையில் வறுமை மிகவும் கொடியது என்றார்ஔவையார். மிகவும் கொடிதான வறுமை ஒருவனுக்கு வந்தால்அதன் விளைவு எப்படி இருக்கும்?

 

"வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;

     மனையாட்டி சற்றும் எண்ணாள்;

வாக்கில் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

     வசனமாய் வந்துவிளையும்;

 

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது

     சிந்தையில் தைரியமில்லை;

செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;

     செல்வரைக் காணில்நாணும்;

 

உறுதிபெறு வீரமும் குன்றிடும்விருந்துவரின்

     உயிருடன் செத்தபிணமாம்;

உலகம் பழித்திடும்பெருமையோர் முன்புசென்று

     ஒருவர் ஒரு செய்திசொன்னால்

 

மறுவசனமும் சொலார்துன்பினில் துன்பம்இது

     வந்து அணுகிடாது அருளுவாய்

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல் நீடு

     மலைமேவு குமரேசனே!"

 

     இதுகுருபாத தாசர் என்னும் பெரியார் இயற்றிய, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

     மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! --- திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!

 

     ஒருவனுக்கு வறுமை வந்து சேருமானால்பெற்ற தாயும் குற்றம் கூறுவாள்மனைவி சிறிதும் மதிக்கமாட்டாள்அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்இழிவும் நீங்காத கவலையுமேஉண்டாகும்.அது அல்லாமல்உள்ளத்தில் தைரியம் இருக்காதுநல்ல சபையிலே போய் வர நாணம் உண்டாகும்செல்வம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கம் அடையும்நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்உலகத்தார் இகழ்ந்து பேசுவர்பெருமையுடையோர் எதிரில் போய்வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால்அவர்மறுமொழியும் சொல்லமாட்டார்இத்தகு துன்பத்திலும் துன்பமான இந்த வறுமையானது ஒருவருக்கும் வந்து சேராமல் அருள்புரிவாய்.

 

"பிறந்த குலம் மாயும்பேராண்மை மாயும்

சிறந்த தம் கல்வியும் மாயும் - கறங்குஅருவி

கல்மேறல் கழூஉங் கணமலை நன்னாட!

இன்மை தழுவப்பட் டார்க்கு".     --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     உயர்ந்த குலத்தில் பிறந்தவர் என்ற பெருமை போய்விடும். அறிவாற்றலும்கல்விச் சிறப்பும் கூட மறைந்து போய்விடும். இவ்வளவும்வறுமையினால் ஒருவர்க்கு உண்டாகும் துன்பங்கள்.

 

     அருணகிரிநாதர் வறுமையை, "மிடி என்று ஒரு பாவி" என்று அருளியதை மேலே கண்டோம்.. வறுமையில் கிடந்து வாடுபவனை, "வறுமையாகிய தீயின் மேல் கிடந்து நெளியும் நீள் புழு" என்றார்.

 

     திருவள்ளுவ நாயனாரும்வறுமையை, "இன்மை என ஒரு பாவி" என்றார். அந்த பாவி ஒருவனிடம் வந்து சேர்ந்தால்அவனுக்கு இவ்வுலக இன்பமும்மறுமை இன்பமும் இல்லாமல் போகும் என்றார்.

 

"இன்மை என ஒரு பாவிமறுமையும்

இம்மையும் இன்றி வரும்".       --- திருக்குறள்.

 

     வறுமையில் வாடுபவர் இம்மை இன்பம்மறுமை இன்பம் ஆகிய இருமையையும் அறியாதவர்கள் என்கின்றார்,திருக்கோவையார் என்னும் நூலில் மணிவாசகப் பெருமான்.

 

     திருக்கோவையாரின் தலைவனான ஆன்மாசிவமாகிய தலைவியை அடைந்த பிறகுபொருள் தேடப் பிரிய எண்ணுகின்றது. தலைவனது பிரிவைக் கேட்ட தலைவியின் வாட்டம் நீங்குதற்குதோழி தனது தலைவியிடம் சொல்லியதாக "பொருள்வயின் பிரிவு" என்னும் தலைப்பில் ஓர் அருமையான பாடலை வடித்துக் காட்டி உள்ளார் மணிவாசகப் பெருமான். 

 

"வறியார் இருமை அறியார்

     எனமன்னும் மாநிதிக்கு

நெறிஆர் அருஞ்சுரம் செல்லல்

     உற்றார் நமர்,நீண்டு இருவர்

அறியா அளவு நின்றோன் தில்லைச்

    சிற்றம்பலம் அனைய

செறிவார் கருங்குழல் வெண்ணகைச்

     செவ்வாய்த் திருநுதலே".            --- திருக்கோவையார்.

 

இதன் பொருள் ---

 

     திருமாலும்பிரமனும் அடிமுடி அறியாதபடி நீண்டு நின்ற சிவபெருமானது திருச்சிற்றம்பலத்தை ஒத்தநீண்ட கரிய கூந்தலையும்வெண்மையான பற்களையும்சிவந்த வாயினையும்அழகிய நெற்றியினையும் உடைய தலைவியே! பொருள் இல்லாத வறியவர்கள் இம்மை மறுமை ஆகிய இருவகை இன்பத்தையும் அறியாதவர்கள் என்பதை எண்ணியே,நமது தலைவர் நிலையான செல்வத்தைத் தேடும்பொருட்டுஅரிய காட்டு வழியில் சென்றார்.

 

     வறுமை என்பது இவ்வுலக இன்பத்தை ஒருவனுக்குத் தராது. பொருள் இன்மை காரணமாகவிருந்து புறந்தருதல் முதலாகிய அறங்களைச் செய்ய இயலாமையால்மறுமை இன்பத்துக்கும் வழியில்லாமல் போகும். எனவே,பொருளைச் செய்தல் வேண்டும். அந்தப் பொருள் அன்போடும்அருளோடும் வந்ததாக இருத்தல் வேண்டும். "அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்" என்பது நாயனார் அருளிய திருக்குறள். பிறர்பால் ஒருவன் கொள்ள வேண்டிய அருளுடனும்பிறர் தன்பால் கொண்டுள்ள அன்புடனும் வராத செல்வச் செழிப்பைர தீமை என எண்ணிஅதனோடு பொருந்தாமல்போகவிடுதல் வேண்டும் என்றார்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...