முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

 


முயல் விட்டுகாக்கைப் பின் போவது கூடாது.

-----

 

     இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள். எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு செயலை விட்டுசெய்து முடிக்க இயலாத ஒரு செயலைச் செய்வதால் பயனில்லை என்பதை, "முயல் விட்டுக் காக்கைப் பின் போனது" என்றும் "இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்கப் போனது" என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

 

     "முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறு" என்று பயனற்ற செயலைச் செய்கின்ற மக்களைப் பார்த்துநக்கீரதேவ நாயனார்பதினோராம் திருமுறையில், "கோபப் பிரசாதம்" என்னும் அகவல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பயனற்ற செயல்களைச் செய்கின்ற மக்களைஇயமன் கொண்டு போகாமல் இன்னும் உலகில் வைத்திருப்பது ஏன் என்றுஇயமன் மீது கோபம் கொண்டு பாடிய பாடல். ஆதலால், "கோபப் பிரசாதம்" எனப்பட்டது. மிக நீண்டதொரு பாடலைசுருக்கித் தந்து உள்ளேன்.

 

"நீற்றிடைத் திகழும் நித்தனை,முத்தனை,

வாக்கும் மனமும் இறந்த மறையனை,

பூக்கமழ் சடையனை,புண்ணிய நாதனை,

இனைய தன்மையன் என்று அறிவு அரியவன்

தனைமுன் விட்டுத் தாம் மற்று நினைப்போர்,

மாமுயல் விட்டுக்

காக்கைப் பின்போம் கலவர் போலவும்....

.....             .....             .....

முன்னே அறியா மூர்க்க மாக்களை

இன்னே கொண்டு ஏகாக் கூற்றம்

தவறு பெரிது உடைத்தே,தவறு பெரிது உடைத்தே".

 

இதன் பொருள் ---

 

     திருநீற்றில் பொலியும் திருமேனியன் ஆகியவனும்,இயல்பாகவே பாசத்தின் நீங்கியவனும்சொல்லுக்கும் மன உணர்வுக்கும் எட்டாத வேதப் பொருளாய் உள்ளவனும், மலர்கள் மணக்கும் திருச்சடையை உடையவனும்புண்ணியத்தின் வடிவாக இருப்பவனும்இன்ன தன்மையை உடையவன் என்று அறிவதற்கு அருமையானவனும் ஆகிய சிவபரம்பொருளைஇளமைக் காலத்திலேயே வழிபடுவதை விடுத்துவேறு ஒன்றை நினைப்பவர்முயலை விட்டுக் காக்கையின் பின் செல்கின்ற வேடர்களைப் போன்றவர்கள். இவர்களைக் கூற்றுவன் ஆனவன் இப்பொழுதே கொண்டு போகாதது பெரும் தவறு ஆகும்.  

 

     வேட்டையாடுபவன் தரையில் ஓடுகின்ற முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான்அதை இடையில் விட்டுவிட்டு பறக்கின்ற காக்கையின் பின் போனால் என்ன பயன் பெறுவான்ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். கலவர் --- படைக்கலம் எந்தியவர்வேட்டையாடுபவர்.

 

     இளமைக் காலத்திலேயே,சிவபரம்பொருளை வழிபடாது விட்டுசமணர்களைச் சார்ந்து இருந்ததற்கு இரங்கி அப்பர் பெருமான்பாடிய தேவாரப்பாடல் ஒன்று....

 

"என்பு இருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு,

     என்னை ஓர் உருவம் ஆக்கி,

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,

     என் உள்ளம் கோயில் ஆக்கி,

அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு

     அருள் செய்த ஆரூரர் தம்

முன்பு இருக்கும் விதி இன்றி முயல்விட்டுக் 

     காக்கைப்பின் போனவாறே".

 

இதன் பொருள் ---

 

     எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து,எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்துஇன்பங்களை நுகர் பொருளாக வைத்துமுன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தமது இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்திஅடியேனை ஆளுதலைக் கடமை(கூழைமை)யாகக் கொண்டதிருவாரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டுகைப் பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்து,கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உண்பதற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

 

     அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த திருவாரூரருடைய திருமுன் இருக்கும் விதியில்லாதவன் என்று தன்னை நொந்து கொள்கின்றார். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதியுள்ளது என்பது பெறப்பட்டது. எதன் பின்புசமண் சமயக் கொள்கையின் நீங்கி வந்ததன் பின்பு. 

 

     திருமங்கை ஆழ்வாரும், "சிறிய திருமடல்" என்னும் ஒரு அகவல் பாடலில்இக் கருத்தை வைத்துப் பாடி உள்ளார்.

 

"ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று

ஆர்ஆர் இவற்றின் இடையதனை எய்துவார்,

சீரார் இருகலையும் எய்துவர் --- சிக்கென மற்று

ஆரானும் உண்டு என்பார்என்பதுதான் அதுவும்

ஓராமை அன்றேஉலகத்தார் சொல்லும் சொல்

ஓராமை ஆமாறு அது உரைக்கேன்கேளாமே

கார்ஆர் புரவி ஏழ் பூண்ட தனிஆழி

தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு

ஆரா அமுதம் அங்கு எய்தி,அதினின்றும்

வாராது ஒழிவது ஒன்று உண்டே. அது நிற்க,

ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே".

                  

இதன் பொருள் ---

 

     நூல் பயன் என்று சொல்லப்பட்ட அறம்பொருள்இன்பம் என்னும் மூன்றனுள் இன்பத்தைப் பெறுவோர்சிறப்புள்ள அதன் பகுதிகளான அறம் பொருள் என்னும் இரண்டையும் பெறுவர். இவை அல்லாமல் சிறந்தது வேறு உண்டு என்று உலகத்தார் சொல்லுவது அறிவின்மை ஆகும். அது எவ்வாறு என்று கூறுகின்றேன் கேளுங்கள். மேக மண்டலத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒரே சக்கரம் உடைய தேரில் சஞ்சரிக்கின்றான். வெப்பக் கிரணங்களை உடைய அச் சூரியனின் மண்டலத்தைத் தாண்டிமேலே பரமபதத்தைச் சென்று அடைந்து,அங்கு திருப்தி பிறக்காமல்அமுதமாகிய பரம்பொருளை அடைந்துஅவ்விடத்தில் இருந்து திரும்பி வராமல் இருத்தல் ஒன்று உண்டோபுலாலை விரும்புவோர்உடலில் தசைப் பகுதி அதிகமாக உள்ள முயலைத் தொடராமல்வானில் மரக்கிளைகளில் பறக்கும் காக்கையைப் பிடிக்க வேட்டையாடித் தொடர்வதோ?

 

     அர்ச்சை நிலையானது பற்றுவதற்கு எளிதாய் இருக்கஅதை விடுத்துப் பரத்துவத்தை நாடுவதோ என்பது கருத்து.

 

இதே கருத்தில் அமைந்த ஒரு பாடல், "பழமொழி நானூறு" என்னும் நூலில் இருந்து.....

 

"அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை

முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்,--- தெற்ற

முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்

முயல்விட்டுக் காக்கை தினல்".

 

இதன் பொருள் ---

 

     அறச் செயல்களைச் செய்வதற்கு அடிப்படையாக உள்ளத்தில் அருளை (அன்புகருணைஇரக்கம்)உடையவராக இருத்தல் சிறந்த பண்பாகும். இதனையே தமது ஒழுக்கமாகக் கொண்டுதெளிந்து அறிவோடு,அறம் செய்யவேண்டியதன் காரணத்தை முழுதுமாக அறிந்து அறச் செயல்களை செய்பவர் ஆவார்.

 

     அறத்திற்கு முதலாக இருக்கவேண்டிய பண்பாகிய அருளை விட்டுஅறச் செயல்களின் திறத்தை அறியாமல்அறச் செயல்களைக் கைவிட்டவருடைய பாதுகாப்பு அற்ற ஒழுக்கமானது,நிலத்தில் ஓடுகின்ற,தசைப் பகுதி நிறைந்ததும்உண்பதற்குச் சுவை உள்ளதும் ஆகிய முயலைப் பிடிப்பதை விட்டுவிட்டு,வானத்தில் பறந்து செல்லுகின்ற காக்கையைப் பிடித்துத் தின்ன ஆசைப்பட்டதைப் போன்றது.

 

     முயல் காக்கையை விடச் சிறந்தது. அதுபோலவேநல்லொழுக்கமும் சிறந்த பயனைத் தருவது. எளிதில் அடையக் கூடியதை விட்டு அரிது முயன்றும் அடையக் கூடாத செயலுக்கு ஆளப்படும் பழமொழி, "முயல் விட்டுக் காக்கை தினல்என்பது.

 

     இல்லற ஒழுக்கத்தில் இருந்து எளிதில் இறையருளைப் பெறலாம். துறவறத்தில் நிற்பது மிகவும் அரியது. அன்பு நெறியில் நிற்போர் இவ்வுலக இன்பத்தையும்அவ்வுரக இன்பத்தையும் பெறுவர். அடயோகம் பயில்வது அந்த மேலான பயனைத் தராது. உடம்பை நிலைநிறுத்த வேண்டுமானால் பயன் தரலாம். காக்கைப் பின் சொல்வோர் துறவறத்தார் ஆகவும்இல்லறத்தில் நிற்போர் முயலின் பின் செல்வோர் என்று கொள்ளலாம்.

 

     இதற்கு ஆதாரமாகப் பட்டினத்து அடிகளார் பாடி அருளிய "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை" என்னும் நூலில் வரும் பின்வரும் பாடல் வரிகளைக் கொள்ளலாம்...

 

"மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ,

மனையும் பிறவும் துறந்து,நினைவரும்

காடும் மலையும் புக்கு,கோடையில்

கைம்மேல் நிமிர்த்துக் கால்ஒன்று முடக்கி,

ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று,

மாரி நாளிலும் வார்பனி நாளிலும்

நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்,

 

சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்,

உடையைத் துறந்தும் உண்ணாது உழன்றும்,

காயுங் கிழங்கும் காற்று உதிர் சருகும்

வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்,

களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்,

தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்துஆங்கு அவர்,

அம்மை முத்தி அடைவதற் காகத்

தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்".....

 

இது துறவறத்தார் நிலையைக் குறித்தது.

 

"ஈங்கிவை செய்யாது,யாங்கள் எல்லாம்

பழுது இன்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,

செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்,

தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்

தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்,

அஞ்சொல் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்

 

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்

அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,

ஆடினர்க்கு என்றும்,பாடினர்க்கு என்றும்,

வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்,

பூசுவன பூசியும்,புனைவன புனைந்தும்,

 

தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்,

ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்,

மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி,

இவ்வகை இருந்தோம்,ஆயினும் அவ்வகை

மந்திர எழுத்து ஐந்தும் வாய் இடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த

முத்தியும் இழந்திலம் முதல்வ!" 

 

இது இல்லறத்தார் நிலையைக் குறித்தது.

 

     "நாங்கள் இவ்வகை இல்லற நெறியில் இயல்பாக இருந்தோம்ஆயினும் அந்த முத்தியும் இழந்திலம்என்றதனால், தம்மைத் தாமே ஒறுப்பவர்" அவ்வாறு ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறமாட்டார் என்பது பெறப்பட்டது. பல வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டே ஆகும். மனம் ஒருங்குதலின் பயன்மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே ஆகலின்தம்மைத் தாமே ஒறுத்தும்அது செய்யாதார்அந்த முத்தியை அடைவார் அல்லர்எனவும், `முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதேமாறாகஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்எனவும் `எந்த நிலையில் நின்றாலும் சிவனை நினைதலே முத்தி சாதனம்என்பதும், `எனவேஎதனைச் செய்யினும் அச்சாதனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லைஎன்பதும் உணர்த்தியவாறு.

 

அப்பர் பெருமானும்  இக்கருத்தை

 

``கங்கை யாடில் என்காவிரி யாடில் என்``  என்பது முதலாக எடுத்துக் கூறி, ``எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே`` என நியமித்து அருளிச் செய்தார்.

 

     அதனால் அவர்,அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும்இங்கு இவ்வாசிரியர்மக்களைமனைவியைஒக்கலை ஒரீஇக் காடும்மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும் இகழ்ந்தார் என்பது அல்ல. எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வலியுறுத்தினர். 

     

     கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம்முயன்று எரிதல்மக்களைமனைவியைஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும்மாட்டா ஒருவன் வாளா எறிதல்அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.

 

     கல்லின் இயல்புயார் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போலஐந்தெழுத்தின் இயல்புயாவர் ஓதினும் முத்தியில் சேர்த்தல்என்பது இவ்வுவமைகளால் விளக்கப்பட்டது.

 

"நான்" மடிந்தால் இன்பம்

 


"நான்" மடிந்தால் இன்பம்.

-----

 

     நிலத்திலை போடப்பட்ட வித்து மடிந்தால்தான் விளைவு பெருகும். இல்லாவிட்டால் அந்த விதை அழிந்து போகும். அதுபோலவேமனிதனுக்கு "நான்எனது" என்னும் அகப்புறப் பற்றுக்கள் ஒழிந்தால்தான் உண்மையான இன்பம் மிகுந்து வரும்.

 

     மனிதனிடம் உயர்ந்த அறிவு பொருந்தி இருக்கின்றது. இருந்தும் இழிந்த எண்ணங்களால் அவனது அறிவு பாழாகிப் போகின்றது. தன்னுடைய தாழ்வுக்கும் உயர்வுக்கும்தனது மனமே காரணமாக உள்ளது என்பதை அவன் உணர்ந்து கொள்ளாமையால்ஊனங்கள் பல விளைந்துஈனங்கள் பெருகி வருகின்றன. துயரங்களையும் இழிவுகளையும் விளைத்துக் கொண்டுவழிவழியாக அவல நிலைகளைச் சந்தித்து வருகின்றான்.

 

     நிலத்தில் விதைத்து வித்து அப்படியே கிடந்தால்அதில் இருந்து யாதொரு விளைவும் உண்டாவதில்லை. அது உருமாறி மடிந்த போதுதான் அதிலிருந்து முளை கிளம்பிவிளைவு தோன்றுகின்றது.

 

     மனிதனுக்கு நான் என்னும் அகங்காரமாகிய வித்து தடித்து இருக்கின்ற வரையில் இனிமையான போகங்கள் உதிப்பது இல்லை. துயரங்களுக்கு எல்லாம் விளைநிலமாக நான் என்னும் ஆணவம் உள்ளது.

 

"ஆங்காரம் ஆனகுல வேடவெம் பேய்பாழ்த்த

     ஆணவத் தினும்வலிதுகாண்,

   அறிவினை மயக்கிடும்நடுஅறிய ஒட்டாது,

            யாதொன்று தொடினும் அதுவாய்த்

தாங்காது மொழிபேசும்அரிஅரப் பிரமாதி

     தம்மொடு சமானம் என்னும்,

   தடையற்ற தேரில் அஞ் சுருவாணி போலவே

            தன்னில் அசை யாதுநிற்கும்,

ஈங்கு ஆர் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்து

     இராவணாகாரம் ஆகி

   இதயவெளி எங்கணுந் தன்னரசு நாடுசெய்து

     இருக்கும்இதனொடு எந்நேரமும்

வாங்கா நிலா அடிமை போராட முடியுமோ?

     மௌன உபதேச குருவே!

   மந்த்ர குருவே! யோக தந்த்ரகுருவே! மூலன்

            மரபில்வரு மௌனகுருவே".

 

என்று தாயுமான அடிகளார் பாடி இருக்கின்றார்.

 

         "அகங்காரமாகிய செருக்கு என்னும் கொடிய குலவேடரை ஒத்த கொடிய பேயானதுவலிமை மிக்க ஆணவத்தினும் மிகுந்த வலிமை உடையது. அது அடியேனுடைய அறிவினை மயக்குகின்றது.  நடுவுநிலைமை (நன்மை தீமை) இன்னது என என்னை அறியவொட்டாமல் தடுக்கும். யாதொரு பொருளைப் பற்றினும் அப் பொருள் தானாக நின்று (கருதவும் கேட்கவும்) பொறுக்க ஒண்ணாத மொழிகளையே வரம்பு இல்லாமல் பேசும். பிரமன்திருமால்அரன் என்னும் முத்தேவர்களும் (சில வேளை) எனக்கு ஒப்பானவர் என்று பேசும். எவ்வகைத் தடையும் இல்லாமல் எங்கும் அசைந்து உருண்டு செல்லும் தேரில் பொருத்தப்பட்டு உள்ள அழகிய அச்சாணி போமற்றவற்றை அசைவித்துக் கொண்டுதான் மட்டும் அசையாது இருக்கும்.இவ்வுலகில் எனக்கு ஒப்பானவர் யார் என வீம்பு பேசும். இராவணனைப் போல எவ்விடத்திலும் தான் நினைத்தபடியே ஆணை செலுத்தவேண்டும் என்று எனது உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டாக்கும். இத்தகைய பொல்லாத செருக்கினை விட்டு விலகி இருக்கவும் என்னால் முடியவில்லை. அதனோடு போராடவும் முடியவில்லை" என்று இறைவனிடம் முறையிடுகின்றார்.

 

     ஆங்காரம்ஆணவம் என்பன நான் என்னும் முனைப்புகளாய்த் தடித்து எழுகின்ற சீவத் திமிர்கள். ஆங்காரம் மனத்தில் இருந்து மண்டி எழுவது. ஆணவம் என்பது உயிரோடு எக்காலத்திலும் அத்துவிதமாக உள்ளது. இவை இரண்டும் உயிரினது அறிவு விளங்க ஒட்டாமல் தடுத்துபிறவித் துயர்ங்களுக்கு மூலமாக அமைந்தவை. எல்லாம் என்னால் முடியும் என்று உள்ளத்தில் இருந்து செருக்கி வருவது அகங்காரம். அகம் - மனம். காரம் --- உறைப்புமுனைப்பு. அகம் என்னும் சொல் முதல் நீண்டு வந்தது.

 

     ஆங்காரம் அடங்கினால்ஆணவத்தின் வலியானது சிறிது சிறிதாகக் குன்றி வரும். எல்லாம் இறைவன் செயல் என்றுமனம் அடங்கி ஒழுகுவது உயர்ந்த ஞானவொழுக்கம் ஆகும். எல்லாம் எனது செயலை என்று இழிந்த நிலையில் ஒழுகுவது ஆங்காரத்தின் இயல்பு.

 

"அமைவு அறிந்திடா ஆணவப் பயலே!

     அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்

எமை நடத்துவோன்,ஈது உணராமல்,

     இன்று நாம் பரன் இணையடி தொழுதோம்,

கமைவின் ஏத்தினோம்,அடியரும் ஆனோம்,

     கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்,

உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மைஎன்று உணரே".   

 

 இதன் பொருள் ---

 

     உனது தகுதி இன்னது என்று அறியாது,திமிர் கொண்டு இருக்கும் ஆணவம் என்னும் சிறு பையனே!  கோடிக் கணக்கான அண்டங்கள் அனைத்தையும் ஆட்டுகின்றவன் நம்மை நடத்துபவனாகிய இறைவனே. இதனை உணராமல், "இன்று நாம் பெருமானுடைய திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் அவனை ஏத்தி வழிபடுகின்றோம்அவனுக்கு அடியவர் ஆகிவிட்டோம். அதனால் எமது உள்ளம் கனிந்து விட்டது"என்று நாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்யாதே. உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் என்னும் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன்இதனை உண்மையாக உணர்வாயாக. 

 

"கருமையாம் அகங்கார மர்க்கடவா!

     கடையனே! உனைக் கலந்த அதனாலே,

அருமையாக நாம் பாடினோம்,கல்வி

     அற அறிந்தனம்,அருளையும் அடைந்தோம்,

இருமை இன்பமும் பெற்றனம் என்றே,

     எனை மதித்துநான் இழிவு அடைந்தனன் காண்,

ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே".

 

இதன் பொருள் ---

 

     கருமைப் பண்புடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே! உன்னோடு நான் கலப்புற்றமையால்'நாம் அருமையாகப் பாடுகின்றோம். கல்வியும் முற்றக் கற்று உள்ளோம். திருவருளையும் பெற்று விட்டோம். இம்மை மறுமைக்கு உரிய இன்பமும் பெற்றுள்ளோம்' என்று என்னை நானே வியந்து இழிவுற்றேன். (அதனால்இனியும் நீ அடங்கவில்லையானால்) ஒருமை நலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள பெருமானுடைய திருவருளாகிய ஞானவாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன். இதனை மெய்யாக உணர்வாயாக.

 

     உயிரினோடு அத்துவிதமாக அமைந்து உள்ள ஆணவத்தாலும்மனத்தில் குடிகொண்டு உள்ள ஆங்காரத்தினாலும் விளைந்த கேடுகளை உணர்ந்து தெளிந்த வள்ளல்பெருமான்ஆணவத்தையும்அகங்காரத்தையும் நோக்கி இவ்வாறு பாடி உள்ளார். ஆணவமும்அகங்காரமும் எவ்வளவு கொடியவை என்பதை இதனால் நாமும் உணர்ந்து கொள்ளலாம். "அகங்கார ஆணவங்களே! என்னை நீங்கள் பிறவிதோறும் கெடுத்து விட்டீர்கள். அறியாமையால் நானும் எங்கள் வழி அமைந்து கெட்டுப் போனேன். இப்பொழுது தெளிந்து கொண்டேன். இனிமேல் என்னிடத்து இல்லாது ஒழிந்து போய்விடுங்கள். நான் இறைவன் திருவருளைப் பெற்று நிற்கின்றேன். இனியும் என்னிடத்து நீங்கள் இருக்க எண்ணினால்என்னிடத்தில் உள்ள ஞானவாளைக் கொண்டு உங்களை வெட்டிவிடுவேன்" என வெகுண்டு கூறி உள்ளார்.

 

     நான் என்னும் செருக்கு மனிதனை ஈனப்படுத்தி விடுகின்றது. எல்லாம் இறைவன் செயல்நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்று தெய்வச் சிந்தனையோடு ஒழுகி வந்தால் நலம் விளையும். தெளிந்த ஞானம் பிறந்துஇது வரையில் விளைந்து வந்த ஈனங்கள் தொலைந்து போகும். தூய நாட்டம் கொண்டபோதுதீயநாட்டம் ஓய்ந்து போகும். தீயநாட்டம் போகவேஏக இன்பம் தலைப்படும்.

 

     விதை கெட்டால் விளைவு. அதைப் போலவேநான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்கள் கெட்டுப் போனால்உயர்ந்த இன்பம் விளையும்.

 

"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     தான் அல்லாத உடம்பை நான் என்றும்தன்னோடு இயைபு இல்லாத பொருள்களைத் தனது என்றும் எண்ணி, அவற்றின் மீது பற்று வைக்கின்ற அறிவு மயக்கத்தை விட்டவன்வானோர்களாலும் அடைய முடியாத முத்தி உலகத்தை அடைவான் என்றார். அவ்வாறு முத்தி உலகத்தை அடைகின்றவன், இந்த நிலவுலகத்தில் பருவுடலோடு வாழும் காலத்திலும் திருவருளால் செம்மையாகவே வாழ்வான். காரணம், அவனது அறிவு மயக்கமானது, கல்வி, அறிவு ஒழுக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, உண்மை அறிவு நிறைகின்றது. அதனால், வாழும் காலத்திலேயே பற்று அற்ற நிலையை அடைய முடியும். எந்த எந்த பொருளின் மீது பற்று வைக்கின்றோமோ, அந்த அந்தப் பொருள்களால் துன்பம் உண்டாகும். எந்த எந்தப் பொருளின் மீது வைத்த பற்றை விட்டுவிடுகின்றோமோ, அவற்றால் உண்டாகும் துன்பம் இல்லையாய் விடும் என்பதை, "யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் அதனின் அதனின் இலன்" என்று அற்புதமாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

 

     யான், தான் என்னும் சொல் இரண்டும் கெட்டால் ஒழிய யாருக்கும் இறைவன் திருவருள் தோன்றாது, மெய்ப்பொருள் விளங்கப் பெறாது என்பது சத்தியம் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"யான்தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி யாவருக்கும்

தோன்றாது சத்தியம். தொல்லைப் பெருநிலம் சூகரம் ஆய்க்

கீன்றான் மருகன்,முருகன், கிருபாகரன், கேள்வியினால்

சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே".

 

     நான் எனது என்னும் அறிவு மயக்கத்தைக் கெடுத்து, தன்மயமாக உயிரை ஆக்குவதே இறைவன் திருவருள் ஆகும். அப்படி விழுங்கப்பட்ட அனுபவத்தை, கந்தர் அனுபூதியில்,

 

"யானாகிய என்னை விழுங்கி, வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே"

 

என்று பாடினார். 

 

     நாம் பற்றெனக் கருதி நிற்போர் எல்லாம் நமக்குப் பேரிடர் வருங்கால் கைவிட்டு அகலுவர். எமனுடைய பாசக்கயிறு வந்து மரண யாத்திரை செல்லும்போதுயாரும் துணையாக வரமாட்டார். இறைவன் ஒருவனே எப்பிறப்பிலும் உயிருக்குத் துணையாக வருவான். இந்த உண்மையை நம்மிடத்தில் உள்ள அகங்காரம், மமகாரம் விளங்கிக் கொள்ள ஒட்டாமல் பண்ணிவிடும்.

 

"என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்

பொன்பெற்ற மாதரும் போஎன்று சொல்லிப் புலம்பி விட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்

உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே.              ---  பட்டினத்தார்.

 

     ஆதலினால்உலகவர் மீதுள்ள பற்றை ஒழித்துஉயிர்க்குத் துணையாய் உள்ள இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும்.  அவ்வாண்டவனே இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவான்.

 

"இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் பற்றாவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி"     ---  ஆண்டாள்.

  

"பற்று என்னும் பாசத் தளையும்பலவழியும்

பற்றறாது ஓடும் அவாத்தேரும் – தெற்றெனப்

பொய்த்துரை என்னும் பகைஇருளும் இம்மூன்றும்

வித்துஅற வீடும் பிறப்பு".                  --- திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     பற்று என்று சொல்லப்படுகின்றகயிற்று விலங்கும்பல பொருள்களிலும் பிடிப்பு  நீங்காமல் ஓடுகின்றஅவா ஆகிய தேரும்தெளிவாகப் பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும்அறிவுக்குப் பகையாகிய ஆணவ இருளும் ஆகிய இம் மூன்றும்தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட பிறப்பு அழியும்.

 

     அருணகிரிதாநர் அருளிய மொழியை வழிமொழிந்து நெஞ்சறிவுறுத்தலாகத் தாயுமான அடிகளார் பின்வருமாறு பாடி உள்ளார்.

 

"யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்று அருணைக்

கோன் தான் உரைத்த மொழி கொள்ளாயோ? - தோன்றி

இழுக்கடித்தாய் நெஞ்சே, நீ என்கலைகள் சோர

அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய்."

 

இதன் பொருள் ---

 

     நான் எனது என்னும் செருக்கு முற்றாக அற்று ஒழிந்தால், மாறுதல் இல்லாத இன்பநிட்டை எளிதாகவும் இனிதாகவும் கைகூடும் என்று மெய்யருள் பெற்றவர் ஆகிய அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள உறுதி மொழியை, எனது நெஞ்சமே, அறுதி பெறக் கொள்ள மாட்டாயோஅழுக்கைப் போக்கத் துணியைத் துவைக்கின்ற வண்ணரைப் போல என்னை நீ மீண்டும் மீண்டும் தீய நெறியிலேயே செலுத்த எண்ணுகின்றாய்.

 

யான் --- அகங்காரம் எனப்படும் அகப்பற்று. 

தான் --- எனது என்று சொல்லப்படும் புறப்பற்று. 

இழுக்கடித்தல் --- தீய நெறியில் புகுத்தல்.

 

     வண்ணார் துணிகளில் அழுக்கைப் போக்கத் துவைத்து எடுப்பது தொடர் நிகழ்வு. ஆடை மீண்டும் மீண்டும் அழுக்கு ஏறித் துவைக்கப்படும். அது போல,ஆன்மா மீண்டும் மீண்டும் பிறவியில் புகுந்து, பாசம் என்னும் சேற்றில் அழுந்தித் துன்புறும். 

 

     கண்ணொளியும், கதிரவன் ஒளியும் கலந்தபோது தான் பொருளை விளக்கம் காணமுடியும். அதுபோல,ஆன்மாவும், பதியாகிய இறைவனும் கலந்து ஒன்றுபட்ட போதுதான், மெய்ப்பொருள் விளங்கும். அது விளங்கிய இடத்தில் "நான்" என்பது மடிந்து போகும். நான் என்பது மடிந்தால் இன்பம்.

 

 

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...