பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலை வேண்டும்.

                                            பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலை வேண்டும்

-----

 

       சாத்திர நூல்களை நன்றாகப் படித்து விட்டு ஆன்மா என்பது என்ன இறைவன் யார்அவனுடைய குணங்கள் என்ன?என்பவற்றை அறிந்து கொள்வதும் அறிவுதான். இது எழுத்துக் கூட்டிப் படிக்கிற குழந்தைகளின் அறிவைப் போன்றது. எழுத்துக் கூட்டிப் படித்துவிட்டாலும் குழந்தைக்கு தான் படித்த நூலின் சுவையைத் அனுபவிக்க முடியாது. நூலறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். நுண்ணறிவு என்பது அனுபவ அறிவு அல்லது பட்டறிவு ஆகும். அனுபவ அறிவைப் பெற வேண்டுமானால் முயற்சி வேண்டும். நம் முன்னோர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். அந்த வழிதான் பத்திநெறி. அதுவே முத்திக்கு நெறியாகும். அனுபவத்தைப் பெறுவதற்கு உரிய நம்பிக்கையை அளித்துஅனுபவத்தை உண்டாக்கிஅதனால் ஏற்படுகின்ற இன்பத்தை அனுபவித்து ஆனந்திக்கும்படி தேவார திருவாசகம் முதலாகிய அருள்நூல்கள் அமைந்து உள்ளன.  

 

     ஒருவன் அடைகிற இன்பத்தைப் பார்த்துஅதை அடைய வேண்டுமென்று நினைப்பது மனித இயல்பு. ஒருவன் ஒரு செயலைச் செய்து துன்புற்றால்நாமும் துன்புறும்படி நேரும் என்று அஞ்சி அச் செயலைத் தவிர்க்கின்றோம். அருளாளர்கள் தம்முடைய பாடல்களில் தமக்குத் கிடைத்த இன்ப அனுபவங்களை மாத்திரம் சொல்லியிருந்தால்அவற்றைப் படிக்கும்போது நாம் வியப்படைவதோடு நிற்போம். தம்முடைய பாடல்களில் தம்மிடத்து இருந்த பலவிதமான குறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, "அப்படி இருந்த நான் இத்தகைய இன்பங்களைப் பெறும்படி செய்தாயே!” என்று இறைவனைப் பார்த்துச் சொல்லும்போதுநாமும் அவர் கூறியுள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் உடையவர்களாக இருப்பதனால்"நாமும் அவர் முதலில் இருந்தது போலத்தானே இருக்கிறோம்அவர் சொல்கிறபடி இறைவனை வழிபட்டால் அவர் அனுபவித்த இன்ப நலங்களை நாமும் பெறலாமே!" என்கிற நம்பிக்கை நமக்கு எழுகிறது. நம்பிக்கையை அடுத்து முயற்சியும் உண்டாகிறது.

 

     தோத்திர நூல்களில் இறைவன் புகழ் மாத்திரம் இராது. அர்ச்சனையும் இருக்கும். குறைபாடுகளைச் சொல்லி வருந்துவதும் இருக்கும். சாத்திர நூல்களில் இறைவனின் இயல்பும் தத்துவங்களின் இலக்கணமும் இருக்கும். அருளாளர்களின் பாடல்களில் உயர்ந்த நிலையில் இருப்பார்களுக்கு ஏற்ற பொருள்களும் இருக்கின்றன. மிகவும் இழிந்த நிலையில் உள்ளவர்களையும் மேல் நிலைக்கு உயர்த்துவதற்கான வழிகளும் இருக்கின்றன. 

 

     வெறும் சாத்திரம் மாத்திரம் படித்தவன்பூகோள ஆசிரியரைப் போன்றவன். ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றியும்அங்குள்ள மலைகள்நதிகள் முதலானவற்றைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பவர் பூகோள ஆசிரியர். பூகோளப் பாடம் என்னவென்று அறியாத ஒருவன்ஒரு ஊருக்குச் சென்று அங்கு உள்ளவற்றை எல்லாம் நேரில் பார்த்து வந்துபூகோள ஆசிரியரிடம் சொன்னால்அப்படித்தான் பூகோள நூலும் சொல்வதாகவே பூகோள ஆசிரியர் சொல்லுவார். ஆனால்பூகோள ஆசிரியர் உண்மையில் பார்த்து அறிந்து அனுபவித்தவர் இல்லை. பூகோளப் பாடத்தில் ஒருக்கால் பிழை இருந்தாலும்நேரில் பார்த்து வந்தவனால் திருத்தமுடியும்.

 

     அருளாளர்களின் அருட்பாடல்களில் சாத்திர அறிவோடுஅதை அறிந்து அனுபவித்த உண்மை அறிவும் புலப்படுவதைக் காணலாம். தமிழ் வேதமாகிய தோத்திரங்கள் சிறந்தவை என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். வேதங்களில் சொல்லியிருப்பவற்றை எல்லாம் தோத்திரம் சொல்கிறது. வேதத்தில் காணக் கிடைக்காத அனுபவ விடயங்களும் தோத்திரத்தில் இருக்கின்றன. அந்தத் தோத்திரத்தை யாரிடத்திலிருந்து பெறுகிறோமோ அவர்களுடைய சொந்த அநுபவங்களுக்கு ஏற்ப அது பின்னும் உயர்ந்திருக்கிறது. 

 

     நல்ல புலமை உள்ளவர்கள் பல பாடல்களைப் பாடலாம். அனுபவம் இல்லாத வெறும் புலமை உடையவர்கள் பாடிய பாடல்களை நாம் பாடும்போது நம் மனம் குழையாது கரைந்து உருகாது. புலமை இல்லாவிட்டாலும் அனுபவ முதிர்ச்சி பெற்ற அருளாளர்களின் திருவாயிலிருந்து வரும் பாடல்களில் மனத்தை நெகிழ வைக்கும் தன்மை இருக்கும். அத்தகைய பாடல்களில் இலக்கண அமைதியும் பொருந்தி இருக்கும். இல்லாமல் இருந்தாலும் பிழை இல்லை. 

 

     ஒரு தமிழ்ப் புலவரைப் பார்த்துஓரு சின்னக் குழந்தை கேட்டது.'அப்பாநாளைக்கு வந்தாரே ஒரு மாமா,அவர் நேற்று வருவாரா அப்பா?' என்று கேட்கிறது.'நாளைக்கு என்பது எதிர்காலம். நாளைக்கு வந்தாரே என்று இறந்த காலத்தில் சொல்வது பிழை. நேற்று என்பது இறந்த காலம். அதோடு வருவாரா என்று எதிர்கால வினை வருவது பிழை. "ஏன் பிழையாகச் சொன்னாய்?" என்று  குழந்தையைக் கடிந்து கொள்வாரா அந்தப் புலவர்அந்தக் குழந்தையை வெறுத்து ஒதுக்குவாராதம்முடைய குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டு மனம் உருகிப் போவார். அந்த இன்பத்தில் குழந்தையின் சொல்லில் பிழை காணமாட்டார்.

 

     இப்படித்தான் ஞானிகள் தங்களுடைய அனுபவத்தை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நிலையில் அருட்பாடல்களாகப் பாடிச் சென்றார்கள். அவற்றை அப்படியே அனுபவிப்பதை விடுத்துசில புலவர்கள் அருளாளர்களின் பாடல்களில் இலக்கண அமைதி காண்பதும்பாடபேதங்களைச் சொல்வதுமாக இருந்தார்கள். இப்போதும் இருக்கின்றார்கள். வெறும் நூலறிவு இதைத்தான் செய்யும்.

 

     பக்திச் சுவை ததும்பஅனுபவ முதிர்ச்சியை அள்ளிக் கொட்டும் அருட்பாடல்கள் அருளாளர்களின் அருளிச் செயல்கள். நம்மில் யாரும் அவர்கள் அளவுக்கு உயர்ந்து நின்றவர் இல்லை. நூல்களைப் பயின்று நாம் பெற்ற அறிவைக் கொண்டு பாடபேதம் காண்பது அறிவுடைமை ஆகாது.

 

     தேவாரம்முதலிய அருட்பாடல்கள்சாத்திரங்களை விடச் சிறந்தவைஎனக் கருதுவதற்குக் காரணம்அவை நமது நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றன. அதற்குக் காரணம் அதைப் பாடியவர்கள் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்கள். ஓதாது எல்லாம் உணரப் பெற்றவர்கள். நாம் ஓதிய நூல்களைக் கொண்டு சிறிதளவு அறிவைப் பெற்று உள்ளோம். அது முழுமையான அறிவுமெய்யறிவு அல்ல. அருட்பாடல்களைச் சொல்லும்போதே, 'நமக்கு அந்த நிலை வர வில்லையே!'என்னும் ஏக்கம் உண்டாகிறது. ஏங்குகிற இடத்தில் தான் நெகிழ்வு உண்டாகிறது. உருக்கம் அதற்கு அப்பால் உண்டாகும். ஏக்கம் வந்தால்உருக்கம் வரும். உருக்கம் உண்டானால் புலம்பல் வரும். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதுபோல்இறையருளை வேண்டி அழுதவர்கள்அவனருளைப் பெறுவார்கள். அவர்களுக்கு மரணம் இல்லை. உடம்பை விட்டுபிறவாத பெருநிலையைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

 

     தேவர்களுக்கு ஒரு நாள் ஒர் ஆசை தோன்றியது. சாவாமல் இருப்பதற்கு ஏதாவது மருந்து வேண்டும். அதற்குவேதங்களில் சொல்லப்பட்டிருக்கிற அமுதத்தை எப்படி அடைவது என்று எண்ணினார்கள்.பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான் அவர்களுக்கு உபகாரம் செய்ய வந்தார். "இந்தப் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும்என்று சொன்னார்.

 

     பாற்கடலைக் கடைவதற்கு நல்ல மத்தாக மேருமலையை நாட்டினார்கள். மத்தைச் சுற்றிக் கடைவதற்கு உரிய கயிறாக வாசுகி என்னும் பாம்பை வைத்தார்கள். அமுதம் கடையும் போது ஒரு தூண் வேண்டும். அமுத மயமாக உள்ள சந்திரனே அதற்கு ஏற்றவன் என்று கொண்டார்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சும்போதுமுதலில் கிடைப்பது தேவையற்ற பொருட்களே. அவற்றை அகற்றிய பிறகுதான் பாகு கிடைக்கும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போதுமுதலில் தோன்றியது ஆலகால விடம். அது யாரையும் விடாது. தேவர்களையும்உலகையும் காப்பாற்ற வேண்டிசிவபரம்பொருள் அந்த ஆலகால விடத்தை ஏற்றுக் கொண்டுதமது கண்டத்திலே நிறுத்தினார்.

 

     தேவர்கள் மறுபடியும் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் வந்தது. உடனே, "எனக்கு உனக்கு” என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை மூண்டு விட்டது. திருமாலே அப்போதும் மோகினி உருவம் எடுத்துக் கொண்டு வந்து அமுதம் பரிமாறினார். தேவர்களை ஒரு பக்கமாகவும்அசுரர்களை ஒரு பக்கமாகவும் உட்கார வைத்துத் தேவர்களின் வரிசையில் முதலில் படைக்க ஆரம்பித்தார். அசுரர்கள் அமிருதத்தை மறந்து மோகினியின் அழகிலே சொக்கிப் போனார்கள். அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கி மறைந்தாள் மோகினி.  

 

     தேவர்கள் அமுதத்தை உண்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் திருமால். இதை சைவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில்,சமணராகிய இளங்கோவடிகள் இதைப் பற்றி,"'வடவரையை மத்தாக்கி,வாசுகியை நாணாக்கி,கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே!" என்று பாடி இருக்கின்றார்.

 

     தேவர்கள் அமுதத்தை அருந்தியதாலேயே தங்களுக்கு இனி மரணம் இல்லை என்று தலை தருக்கி நின்றார்கள். அவர்களுடைய செருக்கு அதிகமாகிவிட்டது. அவர்கள் அமிருதம் சாப்பிட்டதால் பூர்ண ஆயுளோடு வாழ்ந்தார்களே தவிரதுன்பம் இல்லாமல் வாழவில்லை. அவர்களை அழிக்கச் சூரன் தோன்றியவுடன் பலர் மாண்டிருக்கிறார்கள். எனவேதேவர்கள் உண்டது அற்ப ஆயுளோடு வாழவைக்கும் அமுதமே ஆகும்.

 

     ஆனால்,  தேவர்களுக்கு அமுதம் தந்த திருமாலின்திருமருகன் ஆன முருகப் பெருமான் தனது அருளாகிய அமுதத்தைத் தன் அடியார்களுக்கு வழங்குகிறான். அது எந்நாளும் சாவா நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் மிக்கது. பிறப்பையே நீக்கும் அமுதத்தை முருகப் பெருமான் வழங்குகிறான். பிறப்பு நம்முடைய வினையினால் வருவது. வினை ஒரு நிலையில் கட்டுப்படாமல் திரிகின்ற மனத்தினால் விளைவது. ஒரு நிலைப்படாமல் திரிகின்ற மனத்தைக் கட்டுப்படுத்தியவன் மிகப் பெரியவன். 

 

     'நிலையில் திரியாது அடங்கியான் றோற்றம் மலையினும் மாணப் பெரிது’ என்கிறார் திருவள்ளுவர். மலை கொஞ்சங்கூட அசையாமல் இருக்கிறது. அதைக் காட்டிலும் பெருமை உடையவர்கள்  இறைவன் திருவருள் ஒன்றையே பற்றிக்கொண்டுமனமானது ஆடாமல் ஓடாமல் அசங்காமல் இருக்கும் இயல்பைப் பெற்றவர்கள். மலை கூட ஒருநாள் தனது நிலையில் இருந்து மாறலாம். ஆனால்திருவருள் பெற்றவர்கள் எப்போதும் மாறாமல் ஒருநிலையாக இருக்கக் கூடியவர்கள்.

 

     பிறக்கலாம். பிறப்பது தவறு அல்ல. பிறந்தவன் இறக்கத் தான் வேண்டும். ஆனால் பிறந்து திரிகிறானேமனம் ஒரு நிலைப்படாதவாறு உழல்கிறானேஅவன் தவறு இழைக்கிறான். பலவிதமான அழுக்குக்களை பூசிக்கொள்கிறான். உடம்பில் சேர்த்துக் கொள்கிற அழுக்கை நீரினாலே போக்கிக் கொள்ளலாம். ஆனால் உள்ளத்திலே பூசிக் கொள்கின்ற அழுக்கைப் போக்க வழி இல்லை. 

 

"துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்து மாரியம்மா! 

தோல் வெளுக்கச் சாம்பர்உண்டு எங்கள் முத்து மாரியம்மா! 

மணிவெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்து மாரியம்மா! 

மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்து மாரியம்மா!"

 

என்று பாரதியார் பாடினார். மனத்தில் உள்ள மாசுகள் எல்லாம் நீங்க வேண்டுமானால் மனத்திலே இறைவனைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மனம் என்னும் பாழறையானதுஇறைவனுக்குப் பள்ளியறை ஆகவேண்டும். எப்படி ஆக்குவது என்பது குறித்துப் பட்டினத்து அடிகள் வழி காட்டி உள்ளார்.

 

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய் எ(ன்)னும்

தூய்மையில் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை

அரிதின் இகழ்ந்து போக்கி,பொருதிறல்

மையிருள் நிறத்து மதன் உடை அடுசினத்து,

ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி,அருள்விளக்கு ஏற்றி,

துன்ப இருளைத் துரந்து,முன்புறம்

மெய் எ(ன்)னும் விதானம் விரித்து,நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு

எந்தை நீ இருக்க இட்டனன்"

 

அப்போதுதான் இன்பம் பெருகும். இறைவன் உள்ளத்தில் வந்து அமர வேண்டுமென்றால்உழன்று உழன்று திரிகிற மனம் நிலைக்க வேண்டும். மனம் நிலைக்கின்ற தன்மையே நமக்கு வரவில்லை.

 

     பிறந்து பிறந்து உழன்று சாகிற நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றே இறைவன் உறுதி பூண்டு இருக்கின்றான். நாம் செய்கிற பாவங்களினால் மட்டும் அல்லாமல் புண்ணியத்தினாலும் வந்து பிறக்கின்றோம். புண்ணியமும் பிறவிக்கு வித்து ஆகும் என்பதை மறந்து விடக் கூடாது  பிறந்து உழல்கிறோம். 'நீ வேறுநான் வேறுஎன்று வேறுபடுத்திப் பார்க்கும் வரையில் மனம் ஒரு நிலைப்படாமல் திரிந்து கொண்டே இருக்கிறது. என்றைக்கு, 'நீ வேறு அல்லநான் வேறு அல்லஎன்னும் மனோபாவம் வருகிறதோ அப்போது மனம் ஒன்றுபடுகிறது. நம் மனம் எந்த நிலையில் நின்று ஒன்றுபட்டாலும் அந்த நிலைக்கு இறங்கி நமக்கு அருள் செய்ய எம்பெருமான் ஒடோடியும் வருவான். "நீ வேறு எனாது இருக்கநான் வேறு எனாது இருக்கநேராக வாழ்வதற்கு உன் அருள் கூர" என்பார் அருணகிரிநாதப் பெருமான். அந்த நிலையை அடையநமக்குத் தனிப்பட்ட ஆற்றல் இல்லை. இறைவனே பெருங்கருணையால் நாம் இருக்கும் நிலைக்கு இறங்கி வருகிறான். 

 

     இறைவன் இறங்கி வருவதால் அவனுக்கு மாசு ஏற்படாதா? என்று தோன்றும். கிணற்றில் விழுந்துவிட்ட ஒருவனைக் காப்பாற்ற இன்னொருவன் கிணற்றிலே குதிக்கின்றான். கிணற்றிலே விழுந்தவன்தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றோகிணறு இருக்கிறது என்று அறியாமையினாலோ விழுந்திருக்கலாம். பின்னவன் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணையினால்விழுந்தவன் கேட்காமலேயே குதிக்கிறான். இறைவன் நமது நிலைக்கு இறங்கி வந்தாலும் தனது நிலையில் மாறமாட்டான். 

 

     தேவர்களுக்குக் கிடைக்காத அமுதத்தை ஊட்டி,நம்மைப் பிறக்காமல்உழலாமல்சாகாமல் செய்கின்ற ஒருவன் இருக்கிறான். ஏதோ ஒரு காலத்தில் கொடுப்பான் என்பதும் அல்ல. எப்போதும் கொடுப்பான். எத்தனே பேர் வந்தாலும் கொடுப்பான். நேற்றைக்கும் கொடுத்தான்இன்றும் கொடுக்கிறான்.நாளைக்கும் கொடுப்பான். யாருக்கும் கொடுப்பான். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் போற்றி" என்பார் அருணகிரிநாதர்.

 

     அந்தத் தியாகமூர்த்தி ஆகிய முருகப் பெருமானை நோக்கி,  "உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எல்லோரையும் ஆண்டு அருளும் வள்ளலேஎனக்கும் உன் அருள் கிடைக்குமாஅது எந்தக் காலம்?" என்று முறையிடுகின்றார் அருணகிரிநாதர்."உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்துஎன்னை உன்னில் ஒன்றா விதித்து,ஆண்டு அருள் தரும் காலம் உண்டோ?"என்பது அவரது முறையீடு.

 

     எம்பெருமான் அருள் என்னும் அமுதத்தை வழங்கவே காத்துக் கொண்டிருக்கிறான். "கருத அரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான்" என்றார் மணிவாசகப் பெருமான். அருணகிரிநாதர் "தரமாட்டாயா?" என்று கேட்கவில்லை. 'எனக்குக் கிடைக்கிற காலம் உண்டா?' என்று கேட்கிறார். கேட்டாலும், 'கிடைக்கிற காலம் உண்டுஎன்கிற பொருளையே அது தரும்.

 

     நமது வீட்டுக்கு வருகிற ஒருவர், “ஐயா,இன்றைக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு உண்டா?என்று கேட்டுக் கொண்டே வந்தால், 'இல்லைஎன்று சொல்லி அவரைப் போகச் செய்பவர் யாரும் இல்லை. அதுபோல, "அருள் தரும் காலம் உண்டோ?"என்று அருணகிரிநாதர் கேளவியாகக் கேட்டாலும், 'அருள் தரும் காலம் உண்டு. நீ தரத்தான் வேண்டும். நான் பெறத்தான் வந்திருக்கிறேன்என்று பொருள்படும். காரணம்இறைவன் யார்க்கும் இல்லை என்னாது அருள் புரிபவன். 

 

     தனக்கு அருள் புரிய உள்ளவன் மயில் ஏறிய மாணிக்கம் ஆகிய முருகப் பெருமான். முருகன் வாகனமாகிய மயில் தனது காலின் கீழே நச்சுப் பாம்பை மிதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மயிலின் அடி பட்டாலேநஞ்சு கக்கும் பாம்பு சுருண்டு தன் ஆற்றலை இழந்து விடுகிறது. ஐந்து தலைகளை உடையது அந்த நாகம். மனம் என்பதும் ஒரு நாகந்தான். ஐந்து பொறிகளாகிய தலைகளை உடையது அது. அது நஞ்சைக் கக்குகிறது. ஐந்து தலைகளாகிய ஐந்து இந்திரியங்களை வைத்துக் கொண்டு இந்த நாகம் ஆகிய மனசு நஞ்சைக் கக்குகிறது. அதனால் துன்பம் உண்டாகிறது. 

 

     நஞ்சைக் கக்குகின்ற நாகத்திடம் இருந்துதான்மாணிக்கமும் தோன்றுகிறது. நாகம் நஞ்சைக் கக்காமல் நெடுங்காலம் இருந்தால்அந்த நஞ்சேஇறுகி மாணிக்கம் ஆகிறது என்று சொல்வார்கள். நமது மனமாகிய நாகமும்ஐந்து இந்திரியங்களின் வழியாக நஞ்சைக் கக்காமல் இருந்தால் நமக்குத் தீங்கு விளைப்பதற்கு மாறாக நன்மையையே உண்டாக்கும். உலகத்தின் மாயையிலே சிக்கிமையல்பட்டுஐந்து தலைகளாகிய ஐந்து பொறிகளின் வாயிலாக நஞ்சைக் கக்காமல்மனமான நாகம் அமிழ்ந்து கிடக்கும்படியாக எம்பெருமானின் மயில் வாகனம் நமது உள்ளத்திலே வந்து விட்டால் போதும். நஞ்சு கக்குகின்ற இடமாகிய மனத்திலேயே மாணிக்கமாகிய முருகன் வந்து விடுவான். 

 

"உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து,என்னை உன்னில்ஒன்றா 

விதித்துஆண்டு அருள்தரும் காலம்உண்டோ வெற்பு நட்டுஉரக

பதித்தாம்பு வாங்கிநின்று,அம்பரம் பம்பரம் பட்டு உழல 

மதித்தான் திருமரு காமயில் ஏறிய மாணிக்கமே!"

 

என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடியது போல்நாமும் உள்ளம் உருகிஇப் பாடலின் பொருள் உணர்ந்து ஓதி வருதல் வேண்டும்.

 

     மந்தரமலையைத் திருப்பாற்கடலில் நட்டுபாம்புகளுக்கு அரசு ஆகிய வாசுகியா வடமாகக் கொண்டுதிருப்பாற்கடலானது பம்பரம் போலச் சுழலுமாறு கடைந்தவர் ஆகிய திருமாலின் திருமருகரே! மயில்வாகனத்தின் மீது ஏறிய மாணிக்க மணியே! பிறந்துபிறந்த இடங்களிலேயே உழல்வதும்சாவதும் ஆக உள்ள நிலையை நீக்கிஅடியேனை தேவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்துஆட்கொண்டு அருள் புரியும் ஒரு காலமும் உண்டாகுமோ?

 

     பிறவியாகிய பெருங்கடலில் இருந்து நீங்கிமுத்தியாகிய கரையில் ஏறிஇறைவனுடன் கலந்து இன்புறுகின்ற காலம் ஒன்று நமக்கும் வாய்க்கவேண்டிஅருளாளர்களின் பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதி வழிபடுவோம்.

 

 

 

 

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                        பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்.

-----

 

     பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்யப்பட்ட துரோணாச்சாரியார் இறந்த பின்னர்அடுத்த தளபதியாக கர்ணன் நியமிக்கப்படுகின்றான். பாரதப் போரின் பதினேழாம் நாள் அன்றுமுன்னாளில் தோற்ற மன்னரும் சேனைகளும் புடைசூழகர்ணன் துரியோதனனுடன் போர்க்களம் புகுகின்றான். கர்ணன் இறந்தால் போரில் வெற்றி பெறுவது உறுதி என்று உட்கொண்டுதனது தம்பியர் புடைசூழத் தேரில் நின்ற தருமபுத்திரர், "இன்று போரில் கர்ணன் இறப்பது உறுதிதானே" என்று கண்ணனிடம் உசாவுகின்றார். "கர்ணன் இன்றும்துரியோதனன் நாளையும் மடியஇந்த உலகம் உன்னதே ஆகும்" என்று கண்ணபிரான் கூறுகின்றார்.

 

"இத் தினம் இரவி சிறுவனும் விசயன் 

     ஏவினால் இறந்திடும்நாளைத்

தத்தின புரவித் தேர்ச் சுயோதனனும் 

     சமீரணன் தனயனால் மடியும்;

அத்தினபுரியும் ஈர்இரு கடல் சூழ் 

     அவனியும் நின்னஆம்என்றான்,

சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் 

     செய்ய கண் கருணைஅம் திருமால்". -- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     ஞானசொரூபியாய்எல்லாப் பொருள்களும் தானாகிய சிவந்த திருக்கண்களையும்திருவருளையும்,அழகையும் உடையஇலக்கமிக்கு நாயகன் ஆன கண்ணன்"இன்றைக்குசூரியகுமாரன் ஆன கர்ணன்,அருச்சுனன் விடுகின்ற பாணங்களால்இறப்பான்நாளைய தினம்பாய்கிற குதிரைகளைப் பூட்டிய தேரை உடைய துரியோதனனும் வாயுகுமாரன் ஆன வீமனால் இறப்பான்அதன் பின்புஅத்தினாபுரமும்நான்கு திக்குக்களிலும் கடல்களால் சூழப்பட்டுள்ளபூமி முழுவதும் உன்னுடையவையே ஆய்விடும்"என்று (தருமபுத்திரனுக்குவிடை பகர்ந்தான்.  

 

     (சமீரணன் = வாயுதேவன். தனயன் = மகன்புத்திரன். சமீரணன் தனயன் = வாயுபுத்திரன் ஆன பீமன்)

 

     இவ்வாறு கண்ணபிரான் கூறக்கேட்ட தருமபுத்திரர்கண்ணன் தங்களுக்குச் செய்கின்ற பேருதவியை நினைந்துநன்றி பாராட்டிஅவனது திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றார். கண்ணபிரான் தருமபுத்திரரைத் தழுவிஅவருக்கு உபசாரம் சொல்லிஅன்றைய போரில் திட்டத்தூய்மனை அணிவகுக்கப் பணிக்கின்றார். எதிர் முனையில்துரியோதனனைப் பார்த்து, "இன்றைய போரில்சல்லியன் எனது தேரைச் செலுத்தினால்எல்லோரையும் வென்று விடுவேன்" என்று கர்ணன் சொல்கின்றான். துரியோதனன் சல்லியனை கர்ணனுக்குத் தேர்ப்பாகனாக இருக்குமாறு வேண்டுகின்றான். சல்லியன் கோபம் கொண்டு துரியோதனனது வேண்டுகோளை முதலில் மறுக்கின்றான். துரியோதனன் சமாதானம் சொல்ல இசைகின்றான்

 

     ஏற்கெனவே, "துரியோதனனை நான் கொல்வேன்" என்று அருச்சுனன் சபதம் பூண்டு இருப்பதை எண்ணிஅவனது சபதத்திற்கு இழுக்க நேரக் கூடாது என்பதற்காகபோர்முகத்தில் தன்னை எதிர்ப்பட்ட துரியோதனனைக் கொல்லாது விடுகின்றான் பீமன். கர்ணனால் திட்டத்துய்மன் முதலியோர் தளர்தல் கண்டுதருமபுத்திரர் சேனையுடன் நெருங்கிப் போர் புரிகின்றார். தருமனது தோள் முதலான இடங்களில் கர்ணன் அம்பு எய்யதருமபுத்திரர் சோர்ந்து புறங்கொடுக்கின்றார்.

 

     போர் முகத்தில் கர்ணனைப் பார்த்த அருச்சுனனுக்குகர்ணன் தருமபுத்திரர் போல் தோன்றவேபோர் புரிவதை விடுத்துதேர் ஏறித் திரும்பினான். கண்ணனுடன்தன் முன் வந்து நின்ற அருச்சுனனைப் பார்த்த தருமபுத்திரருக்குச் சினம் உண்டானது. "கர்ணனைக் கொல்லாமல் என் முன் வந்து நிற்கின்றாயே. உனக்கு எதற்கு காண்டீபம்?" என்று பழித்துக் கூறுகின்றார்.

 

"முகில்வண்ணனும் வாசவன் மாமகனும் 

     முரசக் கொடி மன்னவன் முன்பு செல,

'பகலின்பதி மைந்தனை இன்னமும்இப் பகல் 

     சாய்வதன் முன்பு,படுத்திலையால்;

இகல் எங்ஙன் முடித்திடும்நின் கையில் வில்

     இது என்ன வில்?'என்று திருத்தமையன்

புகலும் சொல் அவன் செவியில் புகவே

     புண்மேல் அயில் உற்றது போன்றதுவே".--- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     மேகம் போன்ற நிறத்தை உடைய கண்ணனும்சிறந்த இந்திரகுமாரன் ஆன அருச்சுனனும்முரசம் கொடி முரசை எழுதிய கொடியை உடைய தருமனுக்கு எதிரில் போகஅருச்சுனனது மேலான தமையனான தருமன்இந்தப் பகற்பொழுது கழிதற்கு முன்னேபகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான கர்ணனை நீ கொன்றாய் இல்லைஉனது கையில் பிடித்த காண்டீபம் என்னும் இந்த வில், பகையை எவ்வாறு அழித்துவிடும்இது என்ன வில்என்று அலட்சியமாகச் சொன்ன வார்த்தைஅருச்சுனனது காதில் நுழையவேபுண்ணில் வேல் நுழைந்தது போன்று மிக வருத்தம் உண்டாக்கியது.

 

     (முகில் வண்ணன் = திருமால். வாசவன் மாமாகன் = இந்திரன் மகனாகிய அருச்சுனன். பகலின்பதி = சூரியன். பகலின்பதி மைந்தன் = சூரிய புத்திரன் ஆன கர்ணன்).

 

     "தனது வில்லாகிய காண்டீபத்தை யார் பழித்தாலும் கொல்லுவேன்"என்று முன்னரே சபதம் பூண்டிருந்த அருச்சுனன்அண்ணன் என்றும் கருதாமல்தனது வில்லை எடுத்துதருமபுத்திரரைக் கொலை செய்யத் துணிகின்றான். கண்ணபிரான்அருச்சுனனை விலக்கி, "பெரியோர்களை அவமதித்துஒருமையில் சுடுசொற்களைப் பேசுவது கூடகொலை செய்வதற்குச் சமம். எனவேஉனது அண்ணனைக் கொல்வதை விடஅவனைப் பார்த்து இழிவான சொற்களைச் சொல்லி விடு" என்று கூறுகின்றார். 

 

"கூர்ஆர் முனை வாளிகொள் இச் சிலையைக் 

     குறை என் எதிர் கூறினர்அம் புவிமேல்

யார் ஆயினும்ஆவி செகுத்திடுமால்இது 

     வஞ்சினம் ஆதலின்,இப்பொழுதே

தார்ஆர் புய வென்றி உதிட்டிரனைத் 

     தலை கொய்வன்எனத் தனுவும் குனியா,

வாராமுன்விலக்கிஅருச்சுனனை 'வருக!

     என்று தழீஇ மதுசூதனனே."       --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     அருச்சுனன், "கூர்மை பொருந்திய நுனியை உடைய அம்புகளைக் கொண்ட "காண்டீபம்" என்னும் இந்த எனது வில்லை அழகிய பூமியில் என் எதிரிலே குறை கூறியவர்கள் எவராக இருந்தாலும்அவர் உயிரை இந்த வில்லானது அழித்துவிடுவேன்இது எனது சபதம் ஆகும். எனவேஇப்பொழுதே மாலை பொருந்திய தோள்களையும்,வெற்றியையும் உடைய  தருமனைத் தலை துணிப்பேன்" என்று சொல்லித் தனது காண்டீபம் என்னும் வில்லை வளைத்து வருவதற்கு முன்னமேமிக விரைவிலே கண்ணன் அருச்சுனனைத் தடுத்துவருவாயாக என்று சொல்லிஅருகே அழைத்துஅவனைத் தழுவிக்கொண்டு (பின் வருமாறு அவனுக்கு) அறிவுரை கூறுகின்றான்.

 

'"குரவோர்களை நீ எனினும்கொலையின் கொடிது" 

     என்று உயர் கேள்வியர் கூறுவரால்;

உரவோனையும் அம் முறை கொன்றதனோடு 

     ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய்,

இரவோர் தமது இன்முகம் வண்மையினால் 

     இதயத்தொடு கண்டு,மகிழ்ந்துபெரும்

பரவு ஓத நெடுங் கடல் சூழ் புவியில் 

     பரிதாபம் ஒழித்த பனிக் குடையோய்!"--- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     வந்து இரக்கின்ற யாசகர்களது இனிய முகத்தைஈகைக் குணத்தால்நல்ல மனத்தோடு பார்த்து மகிழ்ந்துபெருத்துப் பரவியுள்ளஅலைகளை உடைய  நீண்ட கடலினால் சூழப்பட்டுள்ளஇந்தப் பூமியில் உள்ளவர்களது வருத்தமாகிய வெப்பத்தைப் போக்கினநல்ல ஆளுகை ஆகிய குளிர்ந்த குடையை உடையவனேஅருச்சுனா! ஐம்பெருங்குரவர்களைமரியாதை பற்றிப் பன்மையாக "நீங்கள்" என்று கூறாமல்"நீ" என்று இகழ்ச்சியாக ஒருமையால் கூறினாலும்அது அவர்களைக் கொல்லுதலைக் காட்டிலும் கொடுமையை உடையது என்று சிறந்த நூற்கேள்விகளை உடைய பெரியோர்கள் சொல்லுவார்கள். அந்த முறைமைப்படி வலிமையை உடைய உனது அண்ணன் ஆகிய தருமபுத்திரனைக் கொல்வதை விடுத்துகொன்றதோடு ஒப்பாகிய சில இழிவான சொற்களை சொல்லி விடுவாயாக (என்றான் கண்ணபிரான்).

 

     "பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்துபேசினாலும் அவர்களைக் கொலை செய்ததோடு ஒப்பு ஆகும் என்று சான்றோர் சொல்வார்ஆதலால்இப்பொழுதுநீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாகஅப்படிச் சொன்னால் அவனைக்

கொன்றதனோடு ஒப்பு ஆகும். ஆகவேஉனது வில்லைப் பழித்தவரைக் கொல்வேன் என்ற உனது சபதம் நிறைவேறினதாக ஆகும்" என்று கண்ணபிரான் உபாயம் கூறிஅருச்சுனன்தனது அண்ணன் ஆகிய தருமனைக் கொல்வதைத் தடுத்தருளினான்

 

     "தன்னை விடப் பெரியவர்,பன்மையில் "நீங்கள்" என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் "நீ" என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம்" என்றார் கண்ணபிரான். "நீங்கள்" என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமபுத்திரரை,"நீ" என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்றான் அருச்சுனன்.

 

     "எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும்அந்தம் இல் பெருங் குணத்து இராமன்" என்று தனக்கு முன் பிறந்த அண்ணன் இராமபிரானபை போற்றினார் பரதாழ்வார் என்று கம்பராமாயணத்தில் காணலாம். "எனக்குத் தந்தையும்தாயும்என் கடவுளும்என் அண்ணனும் எல்லை இல்லாத பெருங்குணங்களை உடைய இராமபிரானே ஆவன்" என்று பரதாழ்வார் சொன்னதாகவிச்சக்கரவர்த்தி கம்பர் காட்டியதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஆசாரக் கோவை" என்னும் நூலில் சொல்லியதை அடியொற்றியே உள்ளது. இராமாயணத்தில் கண்டதற்கு மாறாகஅருச்சுனனது செயல் உள்ளது. சினம் காரணமாகவே இவ்வாறு அருச்சுனன் நடந்துகொண்டான். அந்தச் சினத்தை மாற்றி அருள்புரிந்தவர் கண்ணபிரான்.

 

     ஐம்பெரும் குவர் வழிபாடு குறித்து, "ஆசாரக் கோவை" என்னும் நூல் கூறுமாறு காண்க...

 

"அரசன்,உவாத்தியான்,தாய்தந்தை,தம்முன்

நிகர் இல் குரவர் இவர்வரைத்

தேவரைப் போலத் தொழுது எழுக என்பதே

யாவரும் கண்ட நெறி".                 

 

இதன் பொருள் ---

 

     அரசனும்ஆசிரியரும்தாயும்தந்தையும்தனக்கு முன் பிறந்தோனும் ஆகிய இவர்கள்தமக்கு நிகர் இல்லாத குரவர்கள் ஆவார்இவர்களைத் தேவரைப் போலத் தொழுது எழுக என்று சொல்லப்படுவதுஅறிவுடையோர் எல்லாரும்வரையறுத்துக் கூறியநெறி ஆகும்.

 

     "குரவு" என்பது குருத் தன்மையைக் குறிக்கும். குருத் தன்மை உடையவர் "குரவர்" எனப்படுகின்றனர்.

 

     ஒருவன் தனது தந்தையர்களாக வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஒன்பது பேர் என்று "குமரேச சதகம்"என்னும் நூல் அறிவிக்கும்.

 

"தவம்அதுசெய்தேபெற்றுஎடுத்தவன்முதல்பிதா,

     தனைவளர்த்தவன்ஒருபிதா,

தயையாகவித்தையைச்சாற்றினவன்ஒருபிதா,

     சார்ந்தசற்குருஒருபிதா,

 

அவம்அறுத்துஆள்கின்றஅரசுஒருபிதா,நல்ல

     ஆபத்துவேளைதன்னில்

அஞ்சல்என்றுஉற்றதயர்தீர்த்துளோன்ஒருபிதா,

     அன்புஉளமுனோன்ஒருபிதா,

 

கவளம்இடுமனைவியைப்பெற்றுஉளோன்ஒருபிதா,

     கலிதவிர்த்தவன்ஒருபிதா,

காசினியில்இவரைநித்தம்பிதாஎன்றுஉளம்

     கருதுவதுநீதியாகும்,

 

மவுலிதனில்மதியரவுபுனைவிமலர்உதவுசிறு

     மதலையெனவருகுருபரா!

மயிலேறிவிளையாடுகுகனேபுல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

 

 இதன் பொருள் ---- 

 

     மவுலி தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா - திருச்சடையில் பிறைச்சந்திரனையும்பாம்பையும் தரித்துள்ள சிவபெருமான்சூரபதுமனால் தேவர்கள் படும் துயர் தீர்வதற்காக உதவி அருளிய குழந்தைவேலனாக வந்துதந்தைக்கு உபதேசம் செய்து அருளிய மேலான குருநாதனே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     1. தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா - இல்லறமாகிய தவத்தினைப் புரிந்து,அதன் பயனாகப் பெற்று எடுத்தவன் முதல் தந்தை ஆவான்,

 

     2. தன்னை வளர்த்தவன் ஒரு பிதா - தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை ஆவான்,

 

     3. தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா - பெரும் கருணை செய்து கல்வியை/வித்தையைக் கற்பித்தவன் ஒரு தந்தை ஆவான்

 

     4. சார்ந்த சற்குரு ஒரு பிதா - உயிர் மேலான புருஷார்த்தங்களை அடைய அருள் நூல்களை அறிவுறுத்தியவன்  ஒரு தந்தை ஆவான்

 

     5. அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா - துன்பம் நேராமல் காத்து அரசாட்சி புரிகின்றவன் ஒரு தந்தை ஆவான்,

 

     6. நல்ல ஆபத்து வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா - கொடிய ஆபத்து வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி,நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை ஆவான்

 

     7. அன்பு உள முனோன் ஒரு பிதா - அன்புடைய அண்ணன் ஒரு தந்தை ஆவான்

 

     8. கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா - அன்போடு உணவு ஊட்டும் மனைவியைப் பெற்றவன் ஒரு தந்தை ஆவான்

 

     9. கலி தவிர்த்தவன் ஒரு பிதா - வறுமையைப் போக்கி உதவியவன் ஒரு தந்தை ஆவான்,

 

     காசினியில் இவரைநித்தம் பிதா என்று உ(ள்)ளம் கருதுவது நீதியாகும் - உலகத்தில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்தில் கொண்டாடுவதே அறம் ஆகும்.

 

     எனவேபோற்றத் தக்கவர்களாகிய இவர்களில் யாரையும் அவமரியாதை செய்தல்இகழ்ந்து கூறுதல்,அவர்களைக் கொலை செய்ததற்கு ஒப்பான பாவம் ஆகும்.

 

     இனிவில்லிபாரதத்தில் காணாத ஒரு செய்தி. "பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும்எனவே தற்கொலை செய்து கொள்வேன்" என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான் அருச்சுனன். "நில்" என்று தடுத்த கண்ணபிரான்"எப்படி உனது தகாத நடத்தையால்,உனது அண்ணன் ஆகிய தருமபுத்திரரைக் கொல்லாமல் கொன்றாயோஅப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள்" என்று சொல்லிச் சிரித்தான். "அது எப்படிகண்ணா?"என்றான் அருச்சுனன். "தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள். தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்".

 

     வணங்கிப் போற்ற வேண்டிய பெரியவர்களை அவமதிப்பதும்அவர்களை ஒருமையில் பேசுவதும் கொலைக்குச் சமமான பாவச் செயல் ஆகும். ஒருவனைப் பிறர் புகழ்வதுதான் தக்கது ஆகும். ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதுதற்கொலைக்குச் சமம். "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...