விருப்பும் வெறுப்பும் வேண்டா. தொண்டு செய் - துயர் தீரும்.

 


விருப்பும் வெறுப்பும் வேண்டா.

தொண்டு செய் - துயர் தீரும்.


-----

வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த

     வில்லங்கத் தாலே விளையும் சனனம்,

ஆண்டான் உரைத்த படியே,- சற்றும்

     அசையாது இருந்துகொள் அறிவாகி நெஞ்சே! 

 

இது தாயுமானார் பாடியருளிய ஆனந்தக் களிப்பு என்னும் பகுதியில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

     மனமே! விருப்பும் வெறுப்பும் கொள்ளதே. அவை உன்னை ஒரு கட்டுக்குள் கொண்டு செலுத்திவிடும். அந்தப் பிணிப்பினாலேமீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கின்றது. அதனால் விருப்பு வெறுப்பை விட்டு,குருநாதனாகி எழுந்தருளி வந்த ஞானாசாரியன் உனக்கு அறிவித்ததை உணர்ந்துசற்றும் சோர்வு கொள்ளாமல்அறிவு மயமாகஅசையாது இருந்துவிடு.

 

     ஆசையே பிறவிக்கு வித்து. அந்த ஆசை காரணமாககாணுகின்றஅனுபவிக்கின்றபுழக்கத்தில் உள்ள எந்த ஒரு பொருளின் மீதும் உயிர்களுக்கு விருப்பு அல்லது வெறுப்பு உண்டாகின்றது. பொருளின் இயல்பை அறிந்தும்,அறியாமலும் கூட இந்த விருப்பும் வெறுப்பும் விளையும். இதனை ராகத் துவேஷம் என்பர் வடநூலார்.

 

     ஒருவர் விரும்புகின்ற பொருளை மற்றவர் விரும்புவது இல்லை. அதுபோலவேஒருவர் வெறுப்புக் கொள்ளுகின்ற ஒரு பொருளின் மீதுஇன்னொருவர்க்கு விருப்பு உண்டாகின்றது. இந்த விருப்பு வெறுப்பு ஆகியவற்றிற்குக் காரணம் என்ன என்பதை அறிதல் மிகவும் கடினம். எந்த ஒரு காரணமும் இல்லாமலேயேஒரு பொருளின் மீது விருப்புக் கொள்வதும்வெறுப்புக் கொளவதும் உயிரின் இயல்பு. இதனை, "வேண்டுதல் வேண்டாமை" என்றார் திருவள்ளுவ நாயனார். இது உள்ளவரையில் உயிர்க்குதுன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

     ஒரு பொருளின் மீது விருப்பு உண்டாகும்போதுஅது தனக்கு வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும். அதனை அடைய முயற்சிகள் உண்டாகும். முயற்சி பலிக்காதபோது,கோபம் தோன்றும். அது வளர வளர,அறிவு மழுங்கிவிடும். "ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு". ஆத்திரம் வந்த பிறகுசெய்யத் தகுவதுசெய்யத் தகாதது என்று வேறுபாட்டு உணர்ச்சி இல்லாமல் போகும். அதன் பிறகு செய்யும் செயல்கள் எல்லாம் பெரும் தீங்கை விளைப்பதாகவே அமையும். இத்தனைக்கும் மூலமாய் இருப்பது "வேண்டும்" என்னும் ஆசை அல்லது விருப்பு தான்.

 

     இதற்கு எதிராக உள்ள "வேண்டாமை" அல்லது "வெறுப்பு" என்பதும் சிக்கலானதாகவே உள்ளது. ஒரு பொருள் தனக்கு வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால்அது வந்து எப்படியோ தன்னிடத்தில் பொருந்தி விடும். இந்த நிலையில், "வேண்டுதல்" என்னும் விருப்பு உள்ளபோது நடைபெறுகின்ற வில்லங்கங்கள் அனைத்தும்வேண்டாமையிலும் நடைபெறும்.

 

     விருப்புவெறுப்பு காரணமாகவினைகள் விளைகின்றன. வினைகள் காரணமாக பிறப்பு உண்டாகின்றது. பிறப்பு உண்டானால் இறப்பும் உண்டு. சங்கிலித் தொடர் போலஇவை யாவும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருளை விரும்புவதால்,அது நிலைக்காமல் போய்விடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. வெறுப்புக் கொள்வதால்அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. இந்த அச்சமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. 

 

     பிறவித் துன்பங்கள் ஆவன --- தன்னைப் பற்றி வருவனவும்பிற உயிர்களைப் பற்றி வருவனவும்தெய்வத்தைப் பற்றி வருவனவும் ஆகிய மூவகைத் துன்பங்கள். 

 

     விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவன் திருவடியைச் சேர்தலால்விருப்புவெறுப்புக் காரணமாக வருகின்ற மூவகைத் துன்பங்களும் இல்லை என்று ஆகும்.

 

     வேண்டுதல் --- பற்றாலும்ஆசையாலும்பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.

 

     வேண்டாமை --- வெறுப்பாலும்பொருந்தாமையாலும்பகைமையாலும் ஒன்றை விரும்பாமை.

 

     நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும்கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும்கருவை கருப்பை மூடியிருப்பது போலவும்,ஆசையானதுஉண்மை அறிவை விளங்கவொட்டாமல் மறைத்திருக்கிறது. உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமாகஒன்றை விரும்புதலும்ஒன்றை வெறுத்தலும்அவற்றால் விளையும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்றுபிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால்வெறுப்பு வருகின்றது.

 

     இந்த ஆசையும்அதனால் வினையின் விளைவும்,அதன் காரணமாக விருப்பு வெறுப்புக் கொள்வதும்அதனால் உண்டாகும் பிறப்பு இறப்புத் துன்பங்களும் நம்மைப் பற்றாமல் இருக்கவேண்டுமானால்அவற்றால் வரும் துன்பங்களை இல்லாமல் போக வேண்டுமானால்ஆசையை அடக்க வேண்டும். எது விதிக்கப்பட்டதோஅதன்படி நடந்துகொள்ளவேண்டும். அப்போது விருப்பு வெறுப்புத் தோன்றாது. பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். தொந்தம் துவந்தம் இரட்டைகள் என்னும்,விருப்பு - வெறுப்பு,சுகம் - துக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடவேண்டும்.

 

     ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது. ஏதாவது ஒன்றைச் சார்ந்து தான் அது இயங்கும். விரும்புதலும் இல்லை என்னும் நிலை வந்துவிட வேண்டும். ஆனால்இது மிகவும் அரியதே. வேண்டாமை என்னும் நிலை வந்தால்,வேண்டுதல் என்னும் நிலை வந்து நிற்கும். இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் வாழ்க்கை நடக்கும். அந்த இரண்டிலும் பற்றை ஒழித்து வாழவேண்டும் என்றால்இந்த இரண்டும் இல்லாத ஒருவரின் துணை வேண்டும். அந்த ஒருவன்தான் இறைவன் என்றார் திருவள்ளுவ நாயனார். அவனைப் பற்றிக் கொண்டுவிட்டால்துன்பங்கள் இல்லையாகும் என்று காட்ட,

 

"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல"

 

என்று அருளினார்.

 

     "அடி சேர்ந்தார்" என்பதற்குதிருவடியை அடையும் நோக்கத்துடன்எக்காலத்தும் திருவடியையே சிந்தித்தல் என்று பரிமேலழகர் காட்டியது சிந்தனைக்கு உரியது.

 

     எந்த மனத்தில் ஆசை உண்டானதோஅந்த மனத்தில் ஆசை அடங்கவேண்டும். எந்த மனத்தில் விருப்பும் வெறுப்பும் உண்டானதோஅந்த மனத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லாத சமநிலை உண்டாகவேண்டும். அதற்கு இறைவன் திருவடியே பற்றுக்கோடு.

 

சிந்தை பிறந்ததும் ஆங்கே,- அந்தச்

     சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே,

எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட

     யான்தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே.

 

என்கின்றார் தாயுமானார். 

 

இதன் பொருள் ---

 

     எவ்விடத்தில் இருந்து மனம் தோன்றியதோஅங்கேயே அம் மனம் ஒடுங்கி விடுகின்றது. எல்லா நிலைகளும் அங்கே உள்ளன. அங்கேயே எனது அறிவும் தெளிவு அடைந்தது. அங்கேயே அடியேன் இறைவன் திருவடியில்,இரண்டறக்கலந்து மெய்யின்பத்தையும் பெற்றேன்.

 

     இரண்டற்ற நிலை வாய்க்கவேண்டுமானால்எதையும் அறிவுக் கண் கொண்டு பார்ப்பதை விட்டுவிட வேண்டும். நம்முடைய அறிவு சிற்றறிவு. நமது அறிவு நிலைக்கு ஏற்பவே எந்தப் பொருளையும் பார்ப்போம். "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்அப் பொருள்மெய்ப்பொருள் காணுகின்ற அறிவு" நமக்கு இல்லை. எனவேநமது அறிவு நிலைஎன்னும் தற்போத நிலையில் இருந்து விடுபடவேண்டும். நமது அறிவு செத்துப் பொகவேண்டும். திருவாசகத்தில், "செத்திலாப்பத்து" அறிவுறுத்துவது இதைத்தான்.

 

     நமது கண்ணுக்கு ஒரு பொருள் தெரியவில்லைதெளிவாகத் தெரியவில்லை என்றால்கைவிளக்கு ஒன்றை ஏற்றி வைத்து,அதை முன்னே பிடித்துபின்னே இருந்து பொருளைக் காண்கின்றோம். அதுபோலவேநமது அறிவால் தெளிய முடியாத போதுதிருவருள் அல்லது குருவருள் என்னும் விளக்கைக் கொண்டு காணவேண்டும். திருவருள் அல்லது குருவருளின் துணைக் கொண்டுஎதையும் காணுகின்ற பக்குவம் வந்துவிடவேண்டும்.

 

அருளால் எவையும்பார் என்றான். - அத்தை

     அறியாதே,சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்,

இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட

     என்னையும் கண்டிலன் என்னேடி தோழி.

 

என்று தாயுமானார் அறிவுறுத்துகின்றார். 

 

இதன் பொருள் ---

 

     தோழியே! திருவருளை முன்னிட்டு எப் பொருளையும் பார்ப்பாயாக என்று குருநாதன் திருவாய் மலர்ந்தருளினார். அதன் உண்மையினை உணராமலேஎளியேன் சுட்டறிவாகிய எனது அறிவினாலே எதையும் பார்க்கலானேன். அவ்வாறு பார்த்தபோதுஇருளானதும்துன்பத்திற்கு இடமானதும் ஆகியஉலகியல் காரியப் பொருள்களைக் கண்டேனே அல்லாமல்,அவற்றைப் பார்த்த என்னையும் நான் காணவில்லை. இது என்ன புதுமையாக உள்ளதே.

 

     விருப்புவெறுப்பு அற்ற இன்பநிலை வேண்டுமானால் விருப்பு வெறுப்பு அற்ற, "வேண்டுதல் வேண்டாமை இல்லாத" ஒரு பொருளை நாடவேண்டும். நாடிவிட்டால்இன்பம் உண்டாகுமா?இல்லை. நாம் பிறவிகள்தோறும் ஈட்டிய வினைகள் தொலையவேண்டும். பிராரத்தம் தொலையவேண்டும்.

 

பண்டு செய்த பழவினையின் பயன்

கண்டும் கண்டும்,களித்திகாண் நெஞ்சமே!

வண்டு உலாமலர்ச் செஞ்சடை ஏகம்பன்

தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.

 

என்று வழிகாட்டுகின்றார் அப்பர் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! நீ முற்பிறவிகளில் செய்த பழவினைகள் ஆகிய சஞ்சிதம்அதன்பயனாகிய பிராரத்தம் ஆகிய வினைகளின் பயனை அனுபவத்தால் கண்டு வைத்து இருந்தும்இன்னும் மகிழ்ந்து இருக்கலாம் என்று எண்ணுகின்றாய். ஆனாலும்துன்பங்கள் உன்னை விட்டு அகன்றபாடு இல்லை. வண்டுகள் உலாவுகின்ற மலர்களை அணிந்த செஞ்சடை உடையவன் ஆகிய திருஏகம்பநானுக்குத் தொண்டன் ஆகித் தொண்டுகள் புரிந்து வந்தால்உனது துயரங்கள் தீரும்.

 

     பழவினையின் பயன் --- பழவினையாகிய சஞ்சிதத்தின் பயனாகிய பிராரத்தம். அதன் காரணமாக வரும் பிறப்பு.

 

     தொண்டு செய்வதில்ஆசைக்கோவிருப்பு வெறுப்புகளுக்கோ இடமில்லை. பலனை எதிர்பாராமல்எல்லா உயிர்க்கும் இன்பம் விளையும் செயல்களைச் செய்து வருவதே தொண்டு நிலை. தொண்டு செய்யப் புகுந்துவிட்டால்அது எக்காலத்தும் தொடரவேண்டும். என்னால் முடிந்தபோது செய்வேன்முடியாத போது ஒதுங்கி இருப்பேன் என்பதெல்லாம் தொண்டு ஆகாது. உடலையும் உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாது,இயன்றபோது இவ்விரண்டையும் அர்ப்பணித்துபிற உயிர்களுக்குத் தொண்டு செய்வதே திருத்தொண்டு ஆகும். 

 

     கருத்தால் செய்வதுகரத்தால் செய்வது எனத் தொண்டு இருவகைப்படும். பிறர் நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் கேட்டும் கேட்காமலும்,அவருக்கத் தெரிந்தும் தெரியாமலும் உடல்கொண்டு உழைத்து உதவினால் அது கைத்தொண்டு எனப் போற்றப்படும். இத்தகையை தொண்டு புரிபவர்களுக்கு இறைவன் தானே முன்வந்து உதவி செய்கிறான்.

 

     இதைத் தான் நமது நாயன்மார்களும்ஆழ்வார்களும்பிற அருளாளர்களும்,அக்காலத்தில் செய்து நமக்கு வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழியிலே தொண்டு செய்யப் புகுந்தவர்களும் உண்டு. தொண்டு செய்யப் புகுந்துபுகழும் பொருளும் சேர்ந்த பிறகு,அதைத் தொழில் ஆக்கியவர்களும் உண்டு. தொண்டைத் தொழில் ஆக்கியவர்கள் துன்பத்தில் தான் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.

 

     தொண்டு செய்யும்போது எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கும் நிலை வாய்க்கும். தொண்டு தொழிலாக மாறும்போதுபிறர்க்குத் துன்பம் தருவதில் தொடங்கிபின்னால் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலை உண்டாகும்.

 

"எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லமால்,

வேறு ஒன்று அறியேன் பராபரமே".       --- தாயுமானார்.

 

     எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவேண்டும் என்று மனத்தால் நினைப்பதே தொண்டு. நினைப்பதைச் செயலில் காட்டுவதே தொண்டு. 

 

     தொண்டு செய்வது குறித்துதமிழ்மாமுனிவர்அருள்நெறித் தந்தை,தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறி அருளியதை காண்போம்...

 

     "மனிதன் சிந்திக்கும் இயல்பினன். சிந்தனை சிறந்தால் மனிதன் வளர்வான். மனிதனின் சிந்தை அன்பு உடையதாக அமையவேண்டும். மானுடத்தின் உயிர்நிலையே அன்புதான். "அன்பின் வழியது உயிர்நிலை" என்றார் திருவள்ளுவர். "அன்பே சிவம்" என்றார் திருமூலர். அடியார்கள் என்றும் அன்புறு சிந்தையர்களாக இருப்பார்கள். சிவனை அன்புறு சிந்தையில் கொண்டு விளங்கும் நாயன்மார்கள் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொள்வர். பயன் பற்றிக் கருதார். அதனால்,துன்புறுதல் இலர். துன்பம் என்பதே ஒன்றை விரும்பும் போதுதான் வருகிறது. விருப்பத்தைக் கடந்த நிலையில்,சிவசிந்தனையுடன் தொண்டு செய்தால்துன்பம் வருவதில்லை".

-----------------------------------

இங்கே அடிகளார் எடுத்துக் கொண்டதுதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்...

 

அன்புறு சிந்தையர் ஆகி. அடியவர் 

நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று. 

இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் 

துன்புறுவார் அல்லர்: தொண்டு செய்வாரே.

 

என்பதாகும். இதன் பொருள் ---

 

மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாகஅனைத்து உயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராக விளங்குவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நல்ல தவத்தைச் செய்பவர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில்பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றஅனைத்து உயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.

 

"தொண்டு செய்பவர் துன்புறுவார் அல்லர்"

--------------------------------

குன்றக்குடி அடிகாளாரின் அருளிப்பாடு தொடர்கின்றது....

 

     "இன்று அன்புறு சிந்தையர் அருகி வரும் நிலை. எங்கும் எதிலும் வாணிகப் போக்கு. ஒரு காலத்தில் தொண்டாக விளங்கிய பணிகள் பலவும் இன்று தொழிலாக மாறி விட்டன. இன்று திருக்கோயில்களில்திருமடங்களில் கூடதொழிலாளர்களே உள்ளனர். தொண்டர்கள் இல்லை. அதனால்தொழிலுலகத்திற்கு உரிய பணிநிறுத்தம் முதலியன திருக்கோயில்களுக்கும் வந்து விட்டன.

 

     தொண்டு செய்தல் மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரின் கடமை ஆகும். தொண்டர்கள் பெருகி வளர்ந்துதொண்டு சிறந்தால்தான் இந்த வையகம் துன்பத்தினின்று நீங்கும். இன்புறும். இத்தகு தொண்டு அருகிப் போனமையால் இன்று எங்கும் துன்பம். காவல் நிலையங்களும்சிறைச்சாலைகளும்ஆட்சி அதிகாரச் சட்டங்களும் பல்கிப் பெருகி வளவர்வதன் காரணம் தொண்டு செய்வோர் குறைந்து போனதல்லஇல்லாது போனதுதான். ஒரோவழி "தொண்டின் புனைவில்" விளம்பர வாணிகம் நடைபெறுகின்றது. தொண்டு என்பது,அன்புறு சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப் பெறுவது. அதனால்தான்அப்பரடிகள், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார்.

 

     அன்பில் விளைவது நலம். நலம் வேண்டுவோர் அன்பு உடையர் ஆதல் அன்றி வேறு வழி இல்லை. அன்புக்குநலம் எ்று கூறும் வழக்கும் உண்டு. மானிட வாழ்க்கையின் இயக்கத்திற்குப் பொறுப்புள்ள உறுப்பு சித்தம். சித்தத்தின் தொழில் சிந்தனை. சிந்தனையில் அன்பு இருப்பின்சொல் செயல் அனைத்தும் நலமாக அமையும்".

-----------------------------------

 

தொண்டு செய்தால் துயர் தீரும்.

அச்சம் அகற்றி வாழ்வோம்

 


ஆசையை அளவு அறுப்போம். 

அச்சம் இன்றி வாழ்வோம். 

ஆண்டவன் அருள்வான்.

-----

 

     குகையில் வாழ்ந்திருந்த ஆதி மனிதன் வேட்டையாடுதல் முதலிய தொழில்களால் தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு இருந்தான். அவனது அறிவையும்செயலையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் ஆற்றல் அவனுக்கு அப்போது இருக்கவில்லை. அவனுக்கு அன்று இருந்த பிரச்சினைகள் இரண்டே. ஒன்று அச்சம்இன்னொன்று கவலை. முரண்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த அவனுக்குவீடு என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு வாழத் தெரியாத அவனுக்குவிலங்குகளைக் கண்டு அச்சம்இருளைக் கண்டு அச்சம்இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அச்சம். நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம். நாளைய பசியைப் போக்கிக் கொள்ள என்ன செய்யலாம் என்ற கவலை. தனியே திரிந்துகொண்டு இருந்த அவனுக்கு,அச்சமும் கவலையும் இல்லாமல் இருக்க முடியாது.

 

     அறிவு மெல்ல மெல்ல வளரத் தொடங்கிசிக்கிக் கல் மூலம் தீயை மூட்டவும்கற்களைக் கொண்டு ஆயுதங்களைச் செய்து கொள்ளவும்இவற்றின் உதவியால் விலங்குகளை வேட்டையாடவும் அவன் கற்றுக் கொண்டான். உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு ஒலிக் குறிப்புகளைப் பழகிக் கொண்டான். நாளாவட்டத்தில் அந்த ஒலிகள் சொல் வடிவம் பெற்றன. சொல்லுக்கு வரிவடிவத்தையும் அவன் கொடுத்துக் கொண்டான்.

 

     இதன்பிறகு அவன் வேகமாக வளரத் தொடங்கிவிட்டான். அறிவு வளர்ச்சிமொழி வளர்ச்சி இரண்டும் வளர்ந்த நிலையில்கணித வளர்ச்சியும் கண்டான். இந்த வளர்ச்சிஇந்த நூற்றாண்டில் அசுர வேகம் எடுத்து உள்ளது. ஆதி மனிதனின் நிலையை இன்றுள்ள நிலையோடு ஒப்பிடவும் முடியாது. "அவனில் இருந்தா நாம் வந்தோம்" என்று எண்ணத் தோன்றும்.

 

     ஆனால்அறிவு வளர்ந்ததே ஒழியஆதி மனிதன் மனத்தில் தோன்றிய அச்சம்கவலை என்ற இரண்டும் இன்றும் தொடர்கின்றது. அன்று இருளைக் கண்டும்விலங்குகளைக் கண்டு அஞ்சினான். பிற மனிதர்களைக் கண்டும் அச்சம் கொண்டான். இன்று இருளை ஒளிவெள்ளமாக மாற்றிவிட்டோம். விலங்குகளைக் காட்டுக்கு உள்ளேயே அடைத்துப் பாதுகாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால்மனிதன் மனிதனைக் கண்டு அஞ்சுகின்ற நிலை மட்டும் இன்னமும் மாறவில்லை. மனிதனுக்கு மனிதன் பயம். சமுதாயத்திற்குள் பயம். ஓர் ஊரார் இன்னொரு ஊராரைக் கண்டு பயம். ஒரு நாடுமற்றொரு நாட்டைக் கண்டு பயம் கொள்ளுகின்றது. 

 

     காரணம்என்ன என்று ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அறிவு வளர்ந்த வேகத்தில்மனிதனுக்கு ஆசையும் தாராளமாகவே வளர்ந்து விட்டது. பொன்னாசைபொருளாசைமண்ணாசை என்னும் மூவாசையும் மிகுந்துவிட்டது. அத்தோடுஇன்று பதவி ஆசை என்னும் ஒன்றும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது மற்ற மூன்று ஆசைகளோடு தொடர்பு உடையதாகி விட்டது.

 

     இன்றைய நிலையில் இருந்து மனதைச் சற்றுத் திருப்பிபொறுமையாகநமது சங்க நூல்களைப் பார்த்தால்,ஓர் உண்மை விளங்கும். "யாதும் ஊரேயாவரும் கேளிர்" என்ற ஒருமை நிலை அன்று இருந்தது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் ஒருமித்த நோக்கு இருந்தது. அரசனும்புலவரும் நண்பராக இருந்த வரலாறுகள் உண்டு. யாரிடத்தும் எவ்வித பேதமும் இல்லை. இரப்போர்க்கு இல்லை என்னாமல் கொடுத்து வாழ்ந்த காலம் அது. 

 

     அச்சம் என்பது அன்றும் இருந்தது. அது பகைவரால் அச்சம்விலங்குகளால் அச்சம்கள்வரால் அச்சம். மன்னனது பரிவாரங்களால் அச்சம். ஆளுகின்ற மன்னன் இந்த அச்சங்களை எல்லாம் போக்கிதன்னாலும் மக்களுக்கு அச்சம் உண்டாகாதவாறு ஆளுவது கடமை என்று இருந்தது. 

 

மாநிலம் காவலன் ஆவான்,மன்னுயிர் காக்கும் காலைத்

தான் அதனுக்கு இடையூறு தன்னால் ,தன் பரிசனத்தால்,

ஊனமிகு பகைத் திறத்தால்,கள்வரால்,உயிர் தம்மால்

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ

 

என்பது மனுநீதிச் சோழன் வரலாற்றால் அறியப்படுவது.

 

     "சாதிகள் நெறியில் தப்பா" என்று பெரியபுராணத்தில் காட்டியபடிஅன்றும் சாதிகள் இருந்தன. ஆனால்சாதியின் பெயரால் இன்று நடக்கும் அசிங்கங்கள் இல்லை. அந்தணர் குலத்தில் பிறந்த சுந்தமூர்த்தி சுவாமிகள்சேரநாட்டு அரசனுக்கு நண்பர். இவர் வீட்டிற்கு அவர் வந்து விருந்து அயர்வார். அவர் இவரது அரண்மனைக்குச் சென்று மிக உயர்ந்த உபசாரங்களைப் பெற்றுக் கொள்வார். அந்தணர் குலத்தில் பிறந்த திருஞானசம்பந்தருடன் எந்நேரமும் ஆயிரக் கணக்கான அடியவர்கள் இருந்தார்கள். அவருக்கு அணுக்கராக மாறியவர்தாழ்த்தப்பட்ட குலம் என்று இன்று பேசுகின்ற பாணர் குலத்தில் வந்தஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர். அந்தணர் ஆகிய திருஞானசம்பந்தரோடு என்றும் பிரியாமல் உடன் செல்கின்றார். (இன்று அது போன்றதொரு நிகழ்வைக் காண முடியாது) திருநீலநக்க நாயனார் என்கின்ற அந்தணர் வீட்டில்திருஞானசம்பந்தர்மற்ற அடியார்களோடு உணவு கொள்ளுகின்றார். திருநீலநக்க நாயனார் தனது வீட்டில்உள்ள யாகசாலைக்கு அருகில் பாணரையும்அவரது மனைவியாரையும் இரவு தங்க வைக்கின்றார். யாகசாலைக்கு அருகில் இன்று இதுபோல் ஒரு நிகழ்வு காணமுடியுமாஅப்பூதி அடிகள் என்னும் அந்தணர்வேளாளர் குலத்தில் பிறந்த அப்பர் அடிகளைத் தனது குருவாகக் கொள்கின்றார். திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரை எழுதியும் சொல்லியுமே வீடுபேற்றை அடைந்தவர் அப்பூதி அடிகள். இப்படிசொல்லிக் கொண்டே போகலாம். அவர்களில் யாருக்காவதுயாரிடத்திலேனும் அச்சம் இருந்ததா என்றால்அச்ச உணர்வு அறவே இல்லை. சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோஅறிவில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோபொருளாதாரத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோ இல்லவே இல்லை.

 

     வடநாட்டிலே தோன்றிய சாணக்கிய நீதிசுக்கிர நீதிமனுநீதி என்பன போன்ற அறிவு நூல்கள் இங்கே தோன்றவே இல்லை. காரணம்அவற்றுக்கான அவசியம் இங்கு இல்லை. எல்லா இனத்தவர்க்கும்எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான நீதியைச் சொல்லும் திருக்குறள் தான் இங்கே தோன்றியது. "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்று அறிவுறுத்தியது திருக்குறள். வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தில் திருக்குறளைத் தவிர வேறு விதமான நூல் தோன்ற வழியே இல்லை.வேதங்களிலோஉபநிடதங்களிலோ அறிவுக்கே முதலிடம் தரப்பட்டு உள்ளது. அங்கே பத்திக்கு இடமில்லை. வேதங்களைப் பலகாலம் ஓதினாலும்உள்ளம் கனிந்து கண்ணீர் வருவதில்லை. ஆனால்பத்தி நூலாகிய திருவாசகத்தைஒருகால் ஓதினாலும் கூடஉள்ளம் உருகிகண்ணீர் பெருகுவதைக் காணலாம்.

 

விளங்கு இழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்

காரணன் உரை எனும் ஆரண மொழியோ?

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ?

யாதோ சிறந்ததுன்குவீர் ஆயின்,

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சம் நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்;

திருவாசகம் இங்கு ஒருகால் ஓதில்

கருங்கல் மனமும் கரைந்து உக,கண்கள்

தொடுமணல் கேணியில் சுரந்துநீர் பாய,

மெய்ம்மயிர் பொடிப்ப,விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி,

மன்பதை லகில்மற்றையர் இலரே.

 

     முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயலாமல்பத்திநெறியில் நின்ற அடியார்கள் எல்லாரும்தம்மைஒப்பு உயர்வு அற்ற ஒரு தலைவனாகிய இறைவனுக்கு ஆட்படுத்திக் கொண்டவர்கள். ஆண்டான் இறைவன் ஒருவனே. அவனுக்கு நாம் எல்லாம் அடிமைகளே என்னும் ஒருமை உணர்வு அடியவர்களிடத்தில் இருந்தது. மற்ற வேற்றுமைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆதிமனிதனுக்கு இருந்த அச்ச உணர்வும்அறிவு வளர்ந்த நிலையில் இன்றைய மனித குலத்துக்கு உள்ள அச்ச உணர்வும்அந்த அடியார்களிடத்தில் காண முடியவில்லை. அச்ச உணர்வு இருக்கின்றது என்றால் அவர்கள் அடியார்கள் இல்லை. அடியார் கோலத்தில் உள்ளவர்கள்.

 

     இறைவன் நம்மை உடையவன். நாம் எல்லாம் அவனது உடைமைகள் என்று வந்துவிட்ட பிறகுஅச்சம் எப்படி உண்டாகும்காப்பதற்குத் தான் ஒருவன் உள்ளானே. அடியார்களுக்கு அச்ச உணர்வு இல்லை என்பதைப் பின்வரும் நிகழ்வுகளால் காணலாம்.

 

     சோழமன்னனது பட்டத்து யானையை எறிபத்த நாயனார் தனது மழு ஆயுதத்தால் கொன்று விடுகின்றார். செய்தி அறிந்த மன்னன் படைகளோடும்பரிவாரங்களோடும் வருகின்றான். குற்றம் புரிந்தவர் தப்பி ஓடுவது இயல்பு. ஆனால்சிறிதும் அச்ச உணர்வோகுற்ற உணர்வோ இல்லாமல்நிகழ்விடத்திலேயே எறிபத்த நாயனார் நின்று கொண்டு இருப்பதைப் படைகளோடு வந்த மன்னன் காண்கின்றான். தலையான அன்பு உள்ள இடத்தில் அச்சம் சிறிதும் இருக்காது என்பதை உணர்த்த, "அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே?" என்று வினாவினை எழுப்பிஅச்சம் இருக்காது என்ற விடையைத் தந்துவிட்டார் சேக்கிழார் பெருமான். ஏன் படைகளோடு வந்தான் என்றால்அப்போதும் இப்போது உள்ளது போல்ஒன்றை ஒன்றாகத் திரித்துக் கூறி ஆதாயம் தேடுபவர்கள் இருந்தார்கள். "மன்னாஉனது பட்டத்து யானையை ஒருவர் கொன்று விட்டார்" என்றுதான்நேரில் கண்ட உண்மையைச் சொல்லி இருக்கவேண்டும். ஆனால், "பகைவர்களே இல்லாத மன்னா! உனது பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றார்கள்" என்று உண்மைக்கு மாறாகச் சொல்லிசோழனது சொரணையைத் தீண்டிவிட்டார்கள். உண்மையைச் சொல்லி இருந்தால்அவன் படைகளோடு வந்திருக்க மாட்டான். அவனும் கூட வந்திருக்கவே மாட்டான். ஆனால் வந்துவிட்டான். நடந்ததை நாயனார் கூறக் கேட்ட மன்னன்அவர் மீது தவறு இல்லை என்பதை உணர்ந்து அவருக்கு அடியவன் ஆனான். நேர்மை நெறியில் நின்ற அடியவர்க்கு அச்சம் என்பது இல்லை.

 

     சமணர்களால் அளவில்லாத துன்பத்திற்கு ஆளானார் திருநாவுக்கரசு நாயனார். அன்புகொல்லாமை என்னும் அரிய கொள்கையை உடைய உண்மைச் சமணர்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். திருநாவுக்கரசு நாயனாரைத் துன்பத்துக்கு ஆளாக்கியவர்கள் போலிச் சமணர்கள். தமது கொள்கையைக் காற்றில் விட்டவர்கள். அவர்கள் வயப்பட்டு நின்ற பல்லவ மன்னன்திருநாவுக்கரசரை அழைத்து வருமாறு தனது ஏவலர்களை அனுப்புகின்றான். வந்தவர்களைப் பார்த்துஅவர்கள் சொன்னதைக் கேட்டுசிறிதும் அச்ச உணர்வு இல்லாமல், "வந்தவர்களாகிய நீங்கள் யார்உங்களது மன்னவன் யார்?" என்றுதானே கேட்டார். கேட்டதோடு நில்லாமல்ஒரு பாட்டையும் பாடி வைத்தார்.

 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;நமனை அஞ்சோம்;

     நரகத்தில் இடர்ப்படோம்;நடலை இல்லோம்;

ஏமாப்போம்;பிணி அறியோம்;பணிவோம் அல்லோம்;

     இன்பமே எந்நாளும்,துன்பம் இல்லை;

தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான

     சங்கரன்நற் சங்கவெண் குழை ஒர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

     கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

 

     "மன்னவன் உங்களை வரப் பணித்தான்" என்று ஒரு வார்த்தை சொன்னதற்குப் பதிலாக எத்தனை வார்த்தைகள் அள்ளி வீசி இருக்கின்றார் பாருங்கள். இத்தனை துணிச்சல் எங்கிருந்து வந்தது?. அச்ச உணர்வு அவரிடத்தில் ஏன் அணு அளவும் இல்லை?. காரணம்அவர் அடியார். பத்திநெறியில் நின்றவர். தன்னைக் காக்க ஒருவன் இருக்கின்றான் என்றபோது அச்சம் எங்கிருந்து உண்டாகும்அது மட்டும் அல்லாதுபல்லவ மன்னன்தன்னை அழிக்க,தனது பட்டத்து யானையைத் தன்மேல் ஏவியபோதும்"அஞ்சுவது யாது ஒன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை" என்று பாடினார்.

 

     இறைவன் திருநாமங்களை எண்ணி இருந்தால்வினைகள் அறும்அவற்றால் வரும் துன்பமும் இல்லையாகும் என்று நெஞ்சறிவுறுத்தலாக அப்பர் பெருமான் பாடியும் காட்டி உள்ளார்.

 

அச்சம் இல்லைநெஞ்சே! அரன் நாமங்கள்

நிச்சலும் நினையாய் வினை போய் அற,

கச்ச மாவிடம் உண்ட கண்டா! என

வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே .

 

இதன் பொருள் ---

     

     நெஞ்சே! அரன் திருநாமங்களை உனது வினைகள் விட்டு நீங்குவதற்காகநித்தமும் நினைவாயாக.உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவா!கைப்பு நிறைந்த ஆலகால விடத்தை உண்ட திருநீலகண்டா! என்று அன்பொடு நீ கூறி வந்தால்சேமித்து வைத்த மாநிதியைப் போல அவர் உனக்குப் பயன்படுவார்.

 

     இறைவனுக்கு ஆட்பட்ட அடியார்கள் எவ்வகையான நலங்கள் உள்ளவராக விளங்குவார் என்பதைதிருஞானசம்பந்தர் தேவாரத்தில் காட்டி உள்ளார்.

 

அச்சம் இலர்பாவம் இலர்கேடும் இலர்அடியார்,

நிச்சம் உறு நோயும் இலர்,தாமும் நின்றியூரில்

நச்சம் மிடறு உடையார்நறுங்கொன்றை நயந்து ஆளும்

பச்சம் உடை அடிகள்திருப்பாதம் பணிவாரே.

 

இதன் பொருள் ---

 

     கடலிலே வந்து எழுந்த நஞ்சைத் கண்டத்திலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும்மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும்தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய திருநின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிகின்ற அடியவர்கள் அச்சம்பாவம்கேடு,நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

 

     சிறந்த அடியாராகத் திகழ்ந்த பாரதியார்பாடி வைத்துள்ளதைக் காண்போம்.

 

பக்தியினாலே - இந்தப்

     பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ!

சித்தம் தெளியும்,-இங்கு

     செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்,

வித்தைகள் சேரும்,-நல்ல

     வீரர் உறவு கிடைக்கும்,மனத்திடைத்

தத்துவம் உண்டாம்,-நெஞ்சில்

     சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.

 

ஆசையைக் கொல்வோம்,-புலை

     அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட

பாசம் அறுப்போம்,-இங்குப்

     பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை

மோசம் செய்யாமல் - உண்மை

     முற்றிலும் கண்டு வணங்கி,வணங்கியொர்

ஈசனைப் போற்றி - இன்பம்

     யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம்.

 

கல்வி வளரும்,-பல

     காரியம் கையுறும்,வீரியம் ஓங்கிடும்,

அல்லல் ஓழியும்,-நல்ல

     ஆண்மை உண்டாகும்,அறிவு தெளிந்திடும்,

சொல்லுவது எல்லாம் - மறைச்

     சொல்லினைப் போலப் பயன் உளது ஆகும்,மெய்

வல்லமை தோன்றும்,-தெய்வ

     வாழ்க்கை உற்றே இங்கு வாழ்ந்திடலாம்.

 

     ஆசையை அளவு அறுப்போம். அச்சம் இன்றி வாழ்வோம். ஆண்டவன் அருள்வான். 

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...