வலிமை மிக்க விதியை, மதியால் வெல்லலாம்

 


வலிமை மிக்க விதியை மதியால் வெல்லலாம்

-----

 

            "ஊழ்" என்னும் விதி வலியது. அது யாரையும் விட்டு வைக்கவில்லை. அந்த ஊழை விலக்குவது யாராலும் இயலாத ஒன்று என்பதையும் புராண நிகழ்வுகளின் வழியாக அறிந்து உள்ளோம். இத்தனை வல்லமை வாய்ந்த ஊழினை விலக்கிவெற்றிகொள்ள வேண்டுமானால்அது மதி (அறிவு) ஒன்றினால் மட்டுமே முடியும். அதுவும் நமது முயற்சி ஒன்றினாலேயே முடியாது. ஒரு பெருந்துணை நமக்கு வேண்டும். அந்தப் பெருந்துணையைப் பற்றியும்விதியை வெல்லும் உபாயம் குறித்தும் காண்போம்.

 

            உபாயம் என்னும் சொல்லுக்குஉத்திவழிசூழ்ச்சியோசனை என்று பொருள்.

 

            பெருந்துணை --- உயிர்களுக்கு எல்லாம் எக்காலுத்தும் பற்றுக் கோடாக உள்ள இறைவன்.

 

            நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால்தான்நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது. வருவன வந்தே தீரும்அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதிவசம் என எண்ணி ஆறுதல் அடைந்துமதி வலியால் அதனைப் போக்கலாம். அதற்குத் தளரா முயற்சி வேண்டும்

 

            ஊழின் வலியானதுதன் வழியாக வராதபோது ஒருவன் எடுத்த காரியத்தை அது விலக்கும். அப்போது எடுத்த முயற்சியை விடாது செய்து வந்தால்அந்த முயற்சியே ஊழாகிஎடுத்த தொழில் முற்றுப் பெறுவதோடுஎண்ணிய பயனையும் தந்துவிடும். எனவே,தொடர் முயற்சியானது முன் இருந்து,  ஊழை விலக்கிநற்பயனைத் தந்துவிடும் என்பதைக் காட்ட,

 

"ஊழையும் உப்பக்கம் காண்பர்உலைவு இன்றித்

தாழாது உஞற்றுபவர்".                      

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

            இத் திருக்குறளுக்கு விளக்கமாககமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"பாலன் ஒருவன் பணிந்து கடவூர் அரனைக்

காலற் கடந்து இருக்கக் கண்டோமே --- ஞாலத்தின்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர்".

 

இதன் பொருள் ---

 

            விடா முயற்சியால் விதியையும் கடக்கலாம். 

 

பாலன் ---  மார்க்கண்டேயன். கடவூரன் --- திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான். காலற் கடந்து --- இயமனை வென்று. மார்க்கண்டேயன் பொருட்டுச் சிவபெருமான் யமனைச் சங்கரித்தது யாவரும் அறிந்ததே.

 

மார்க்கண்டேயர் வரலாறு

 

            அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்திகாசித் திருத்தலத்தை அடைந்துமணிகர்ணிகையில் நீராடிவிசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.  வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நீ வேண்டும் வரம் யாது?” என்றனர். முனிவர் பெருமான் திரிபுராந்தகன் ஆகிய பரம்பொருளைப் போற்றி செய்துபுத்திர வரம் வேண்டும் என்றனர். 

 

            அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீங்கு பொருந்திய குணம்ஊமைசெவிடுமுடம்தீராப்பிணிஅறிவின்மை ஆகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோஅல்லது சகலகலா வல்லவனும்கோல மெய்வனப்பு உடையவனும்குறைவிலா வடிவுடையவனும்நோயற்றவனும்எம்பால் அசைவற்ற அன்புடையவனும்பதினாறாண்டு உயிர்வாழ்பவனும் ஆகிய மைந்தன் வேண்டுமாசொல்லுவாயாக” என்றனர்.

 

OPTION A.

 

"தீங்கு உறு குணமே மிக்குசிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகிமுடமும் ஆய்விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",     

 

OPTION B

            

"கோலமெய் வனப்பு மிக்குகுறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றிஎமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்றுகலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோநின் எண்ணம் என்? பகர்தி" என்றான்.    --- கந்த புராணம்.

 

            முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” (OPTION B) என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.

 

"மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகியாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றிஎம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன்புரிக என்றான்".         --- கந்த புராணம்.

                        

            ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதியினிடத்துஇளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்திஅறிவுஅடக்கம்அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் உண்டாமோசிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன. இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி நாங்கள் ஏங்குகின்றோம்" என்றனர். 

 

            மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர்அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறதுஅர்ச்சிக்க நறுமலர் இருக்கிறதுஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறி விடைபெற்று,காசியில் மணிகர்ணிகையில் நீராடிசிவலிங்கத்தைத் தாபித்துநறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்துஅன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி மைந்தா! யாது வரம் வேண்டும்?” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

 

ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்யநேர் வந்து நீ உதவு என்று ஓதலும்"   --- கந்தபுராணம்.

 

            “சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் குழந்தாய்! அஞ்சேல்அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

 

            மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்துஇயமதூதன் விண்ணிடைக் கருமுகில் என வந்துசிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பிசைமினி நகரம் போய்தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூறஅவன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர், “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லைமார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால்அவர் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை. கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி மார்க்கண்டேயனைப் பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றிமுனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துள்ளான். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவான். வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.

 

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன்விரைவில்

 போதிபோதி என்று உரைத்தலும் நன்று எனப் போனான்.

                                     

            அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூறஇயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகிஊழிக் காலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும்பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன். 

 

            அந்தகனைக் கண்ட மார்க்கண்டேய அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் மைந்தா! யாது நினைந்தனையாது செய்தனைஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்ஈசனாரது வரத்தை மறந்தனை போலும்நீ புரியும் சிவபூசை உனது  பாவத்தை நீக்குமே அல்லாதுநான் வீசும் பாசத்தை விலக்குமோகடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து உடுக்களை எண்ணினும் எண்ணலாம்எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோபிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு. கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்டு. பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும்மூவர் காப்பினும்மற்ற எவர் காப்பினும்,உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்விரைவில் வருதி” என்றனன்.

 

            மார்க்கண்டேயர் அந்தகா! அரன் அடியார் பெருமையை நீ அறிந்திலை போலும்அவர்களுக்கு முடிவில்லைமுடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றிஇயமபுரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்க வல்லார்அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்இதனை நோக்கில்உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

 

தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய்பேதாய்நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய் என்றுஉரை செய்தான் புகரில்லான்".      --- கந்தபுராணம்                                                                                                         

 

            “இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட  கூற்றுவன் மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனையாஎன் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால்மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவிசிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு குழந்தாய்! அஞ்சேல்அஞ்சேல்செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து இயமனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபாரம் மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

 

"மதத்தான் மிக்கான்மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னிவெகுண்டான் பதி மூன்றும்

சிதைத்தான்வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான்கூற்றன் விண்முகில் போல் மண் உற வீழ்ந்தான்".      --- கந்தபுராணம்

                                                                                                                    

            இந்த நிகழ்வைசுந்தரமூர்த்தி நாயனார் திருச்சோற்றுத்துறைத் திருப்பதிகத்தில் ஒரு பாடலில் வைத்து அழகுறக் காட்டி உள்ளார்.

 

"உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு

வதையும் செய்த மைந்தன் இடமாம்,

திதையும் தாதும் தேனும் ஞிமிறும்

துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே".

 

இதன் பொருள் ---

 

            நிலைபெற்ற மகரந்தமும்,தேனும்வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்றகாவிரி ஆற்றை உடைய,திருச்சோற்றுத்துறை என்னும் தலமேகூற்றுவனுக்கு உதையையும்ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்.

 

            "கூற்றுக்கு உதையும்ஒல்கா விதிக்கு வதையும்" என்று கூட்டிப் படிக்கவேண்டும். --- கூற்றுவனைத் தனது திருவடியால் உதைத்துதோல்வி என்பதையே கண்டு அறியாத விதியை (ஊழ்வினையை) வதை செய்தவன் சிவபெருமான். யாருக்காக என்றால்,தனது திருவடியே சரண் என்று இருந்து மார்க்கண்டேயருக்காக.

 

            "தாழாது உஞற்றுபவர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியபடியேகுமரகுருபர அடிகளார், "உலையா முயற்சி களைகண்ணா" என்று குறித்து அருளிய பாடலைக் காண்போம்.

 

"உலையா முயற்சி களைகணாஊழின் 

வலி சிந்தும் வன்மையும் உண்டே, - உலகு அறியப் 

பால்முளை தின்றுமறலி உயிர்குடித்த  

கால்முளையே போலும் கரி".        --- நீதிநெறி விளக்கம்.     

            

இதன் பொருள் ---

 

            உலையா முயற்சி --- இளைத்தல் இல்லாத முயற்சியையேகளைகண்ணா --- பற்றுக்கோடாகக் கொண்டுஊழின்வலி --- போகு ஊழினது வலிமையை,சிந்தும் --- சிதைக்கின்றவன்மையும் உண்டே --- வலிமையும் உண்டுஉலகறிய --- உலகம் அறியபால்முளை தின்று --- ஊழ்வினையின் முளையைத் தின்றுமறலி உயிர் குடித்த --- கூற்றுவனது உயிரையும் குடித்த கால்முளையே --- மார்க்கண்டன் என்னும் சிறுவனேகரி --- சான்றாவன்.

 

"சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை, --- உபாயம்

இதுவே மதியாகும்அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்".             --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

            "சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் தியானிப்பவர்களுக்குஒரு நாளும் துன்பம் உண்டாகாது. விதியை வெற்றி கொள்வதற்கு இதுவே சிறந்த உபாயம் ஆகும். இதுவே சிறந்து மெய்யறிவும் ஆகும். இது அல்லாத மற்றைய அறிவு எல்லாம்விதியை நீக்கத் துணை செய்யமாட்டா. விதிப்படியே நன்மை தீமைகளை அனுபவிக்க நேரும்.

 

             வலிமிக்க விதியை வெல்வதற்கு உபாயம் இறைவன் திருவடி வழிபாடே. தன்னை வழிபடுவோர்க்குப் பெருந்துணையாக இருந்து காப்பவன் இறைவன்.

 

             அப்படியானால்இறப்பு நேராமல் எண்ணிய காலம் வரையிலும் உயிரோடு வாழமுடியுமாஎன்னும் ஐயம் தோன்றும். தோன்றிய அனைத்தும்நின்று அழியக் கூடியவையே என்பதை அறிதல் வேண்டும். 

 

              விதியை வெல்ல முடியாதவர்களுக்குவிதியின் முடிவில் இறப்பு நேரும். இறந்தால்பின்னர் வந்து பிறக்க நேரும். பிறப்பும் இறப்பும் சங்கிலித் தொடர்போல் வந்து கொண்டே இருக்கும். அந்தச் சங்கிலியில் ஒரு இணைப்பைத் துண்டித்து விட்டால் போதும். துண்டிப்பதற்கு நம்மால் முடியாது. காரணம்சங்கிலித் தொடரைப் பூட்டியவன் இறைவன். அவனால் அறுக்க முடியும். வினைத் தொடர் அறுந்து போனால்பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

             இறைவன் திருவடி ஞானத்தால்வினைத் தொடரை அறுத்துக் கொள்ள முடிந்தவர்க்கும்விதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னர் உடம்பு இருக்காது. 

 

            வினைத் தொடர் அறாதவர்கள் உடம்பை விட்டால்காலதூதுவர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்வார்கள். வினைத் தொடரை அறுத்துக் கொண்ட அடியவர்கள்உடம்பு விடும் காலம் வந்தபோதுஇறைதூதுவர்கள் வந்து உயிரைக் கொண்டுபோய்இறைவன் திருவடியில் வைத்து இறவாத இன்பத்தில் திளைக்க வைப்பார்கள்.

கல்லாமையால் வரும் தீமை

 


கல்லாமையால் வரும் தீமை.

-----

 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றிசிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்களின் வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும்பல நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால்சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின்கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழித்து,பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில்நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும்இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கிஉண்மைப் பொருளை உணர்ந்துஉணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால் உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். 

 

     கற்ற வழியில் நிற்றல் என்பதுஇல்லறத்தில் வழுவாது நின்று,மனைவியோடு போகம் புசித்து,கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கிதுறவறத்தில் நின்றவரானால்,தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்துஅவா அறுத்துசிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும். 

 

     அவ்வாறு கற்றலின் சிறப்பைக் "கல்வி" என்னும் அதிகாரத்தில் உடன்பட்டு அருளிய நாயனார், "கல்லாமை" என்னும் அதிகாரத்தில் கற்றலைச் செய்யாமையால் வரும் இழிவை எதிர்மறையாக அறிவுறுத்துகின்றார். இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "உயிரோடு மனித வடிவில் இருக்கின்றனர் என்று சொல்லும் அளவினர் அல்லாமல்தமக்கும் பிறர்க்கும் பயன் தராமையால்,கல்லாதவர்கள், பயன் விளையாத களர் நிலத்தைப் போன்றவர்கள்" என்கின்றார் நாயனார்.

 

     களர் நிலம் என்பது நெல் முதலியன பயிரிடுவதற்குத் தகுதியாகாத பயனற்ற நிலம். கல்லாதவரும் தம்மைப் பிறரால் மதிக்கப்படுதல் இல்லாமையோடுபிறர்க்கும் அறிவினை உதவப் பயன்படார் என்றார்.

 

உளர்என்னும் மாத்திரையர் அல்லால்பயவாக்

களர் அனையர்கல்லாதவர்.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     களர் நிலத்தில் எந்த வித்தும் முளைக்காது. உணவுக்கு உரிய எந்தப் பொருளும் விளையாது. ஆகவேகளர் நிலத்தை யாரும் விரும்பமாட்டார்கள். மக்களுள் யாருக்கும் பயன் தராமல்பாழாய்க் கிடக்கின்ற நிலத்தைக் காட்டி, "பயவாக் களர்" என்றார் நாயனார். மனிதனுக்கு உள்ளீடாக இருக்கவேண்டிய அறிவும்அன்பும் இல்லாமையால்,கல்லாதவன் எவர்க்கும் பயன் இல்லாதவன் ஆகின்றான். நிலத்திற்கு உரிய இனிய தன்மை களருக்கு இல்லை. மனிதனுக்கு உரியஅரிய அறிவு மாண்புகல்லாத மனிதனுக்கு இல்லை. 

 

     உழுது பண்படுத்திநீர் பாய்ச்சிப் பலவகைகளிலும் விளைகின்ற நிலம் போல,கல்வி அறிவு உள்ளவன் எல்லோருக்கும் பயன் உள்ளவனாக வாழ்ந்துபுகழப் பெறுகின்றான். கல்லாதவன் ஒரு பயனும் இன்றி வீணே இருப்பதால்அவனை யாரும் மதிப்பதில்லை.

 

     உலகப் பொருள்களைக் கண்டு பயன்பெறுவதற்கு உடலில் கண் அமைந்துள்ளது போபரம்பொருளை நோக்கி மகிழ்வதற்குகல்வி ஆகிய கண் உயிரில் உள்ளது. கற்றிடும் அடியவர் புத்தியில் இறைவன் உறைகின்றான். மற்றவர் அறியாதபடி மறைந்து நிற்கின்றான். சேந்தனார் இதனை அருமையாகத் தமது பாடல் ஒன்றில் காட்டி உள்ளார்.

 

"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

            கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

            மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்

            திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுஉள்ளம்

            குளிரஎன் கண்குளிர்ந் தனவே".  --- திருவிசைப்பா.

 

     இறைவன் கற்றவர் விழுங்கும் கனியாக உள்ளான் என்று கற்றவரின் சிறப்பை வெளிப்படுத்தியவர்மற்றவர் அறியா மாணிக்க மலை என்று சொல்லிகல்லாதவரின் இழிவைக் காட்டினார். "கற்றவர் உண்ணும் கனியே போற்றி" என்றார் அப்பர் பெருமான்.

 

     எல்லாம் அறிய வல்ல இறைவனைக் கல்வி அறிவு ஓரளவுக்குக் காட்டி அருளுகின்றது. அந்த அருளால் உள்ளம் தெளிந்து ஞானக் காட்சியால் இறைவனை உணர்ந்து, உயிர் பேரின்ப நிலையை அடைகின்றது. இந்த அரிய பேறுகல்லாதவனுக்கு இல்லாமல் போகின்றது. போகவேஅவனது மனம் கல்லாகவே இருக்கின்றது.

 

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,

வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றிக்

கல்லைப் பிசைந்து கனியாக்கி,தன்கருணை

வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனை,

தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்

ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.  --- திருவாசகம்.                                              

 

என்று இறைவன் தன்னை ஆட்கொண்டு அருளிய அருமைப் பாட்டினை மணிவாசகப் பெருமான் மேற்கண்டவாறு பாடியருளினார். கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயாகிய என்னைகல்லைப் பிசைந்து கனியாக்கியது போல ஆக்கிக் கொண்டான் இறைவன் என்கின்றார். கல்லாதவன் மனிதன் கல்லாய் இழிகின்றான். கற்ற போது கனியாய் இனிக்கின்றான்.

 

     "கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள்தன்னைக் கற்றார்கள் உற்று ஓரும் காதலானை" என்றார் அப்பர் பெருமான். "கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

"வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்;

அல்லாதவர்கள் அறிவு பல என்பார்;

எல்லா இடத்தும் உளன் எங்கள் தம்இறை,

கல்லாதவர்கள் கலப்பு அறியாரே"            --- திருமந்திரம்.

 

     இது கல்லாமை என்னும் தலைப்பில்திருமூல நாயனார் பாடி அருளிய திருமந்திரம்.

 

     கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து, அதன்கண் பொருந்தி உயர்வு அடைகின்றனர். அல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக் கண்டு தடுமாற்றம் அடைந்து எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் இறைவன் எங்கும் நிறைந்து நிற்பினும்கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.

 

     அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் இழிவை இப்படி எல்லாம் எடுத்துக் காட்டிகற்றறிந்த ஞானிகள் தாம் கண்ட இன்ப நிலையைமற்றவரும் பெற்று உய்ய வழிகாட்டி உள்ளனர்.

 

     கல்லாமையால் உண்டாகும் கேட்டினைவள்ளல்பெருமான் மிக அருமையாக உருவகப்படுத்திப் பாடி அருளினார்.

 

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்

     மதித்திடான்,நின் அடிச்சீர்

மகிழ்கல்வி கற்றிடான்,சும்மா இரான்காம

     மடுவின் இடை வீழ்ந்து சுழல்வான்,

 

சினமான வெஞ்சுரத்து உழலுவன்,உலோபமாம்

     சிறுகுகையின் ஊடு புகுவான்,

செறுமோக இருளிடைச் செல்குவான்,மதம்எனும்

     செய்குன்றில் ஏறி விழுவான்,

 

இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே

     இறங்குவான்,சிறிதும்அந்தோ!

என்சொல் கேளான்எனது கைப்படான்,மற்று இதற்கு

     ஏழையேன் என்செய்குவேன்?

 

தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

     தலம்ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!

     சண்முகத் தெய்வமணியே!.

 

இதன் பொருள் ---   செல்வம் மிகுந்துள்ள சென்னை மாநகரில்கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற கந்தப் பெருமானே! குளிர்ந்த ஒளியை உடைய தூய மணிகளில் சிறந்த மணியே! ஆறுமுகம் கொண்ட மணியே! எனது மனம் ஆகிய சிறுவன்அறிவாகிய குருவையும் மதிப்பது இல்லை. உனது திருப்புகழை விரும்பி உரைக்கும் கல்வியையும் கற்பதில்லை. சும்மாவும் இருக்கமாட்டான். காமம் என்கின்ற மடுவினில் விழுந்து கரையேற முடியாமல் சுழல்கின்றான். சினம் என்கின்ற கடுமையான பாதையில் திரிகின்றான். கஞ்சத் தனம் என்னும் சிறிய குகையில் புகுந்து கொள்ளுகின்றான்பகை செய்கின்ற மோக இருளில் சென்று இடர்ப்படுகின்றான். மதம் என்னும் சிறு குன்றின் மேல் ஏறி விழுகின்றான். மதம் பிடித்து உள்ளதால்மாச்சரியம் என்னும் பொறாமை அவனிடத்தில் குடி கொண்டு உள்ளது. மாச்சரியம் என்னும் பெரும்பள்ளத்தில் இறங்குகின்றான். ஐயோஎன் சொல்லைக் கொஞ்சமும் கேளாதுஎனது கைக்கும் அகப்படாமல் இருக்கின்றான். ஏழையாகிய நான் இதற்கு என்ன செய்ய முடியும். நீ தான் துணை புரியவேண்டும்.

 

     கல்லாமையால் விளைகின்ற கேட்டினை உணர்ந்துதிருவருள் நெறியில் நின்றுஇறைவன் திருப்புகழைக் கற்று உய்தி பெறுதல் வேண்டும். 

 

     நூல்கள் என்னும்போது உலகநூல்கள் வேறு, அறிவு நூல்கள் வேறு. உலகநூல்களால் உண்டாகும் அறிவு, உயிருக்கு உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்காது. அறிவு நூல்களால் உண்டாகும் அறிவு, தனக்கு உண்டான தடுமாற்றத்தையும் போக்கும்பிற உயிர்க்கு உண்டான தடுமாற்றத்தையும் போக்கும். இந்த அறிவுதான் பயனுள்ளது என்பதை,

 

"அறிவினால் ஆகுவது உண்டோபிறிதின் நோய்

தன்நோய் போல் போற்றாக் கடை"

 

என்னும் திருக்குறளால் தெளியலாம். பிற உயிர்கள் படும் துன்பத்தைதான்படும் துன்பமாக மதித்து நடந்து கொள்ளாத போதுதான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ

 

     எனவேஇத்தகைய சிறந்த அறிவினை உலகநூல்கள் தரமாட்டா. அறிவுநூல்களும் அருள்நூல்களுமே தரும்.

 

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...