கேடு வந்தாலும் நன்மை உண்டு

கேட்டிலும் ஒரு நன்மை உண்டு

-----

 

            "நட்பு ஆராய்தல்" என்னும் அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவனுக்குக் கேடு என்பதுதமது நண்பராகிய நிலங்களை குறைவில்லாமல் அளப்பதாகிய ஒரு கோல் ஆகும். எனவேகேட்டிலும் ஒருவகையான நன்மை உண்டு" என்கின்றார் நாயனார்.

 

            ஒரு பயன் கருதி தம்மிடம் வந்து உறவு/நட்புப் பூண்டவர்தமக்குக் கேடு அல்லது வறுமை வந்த காலத்து வேறுபட்டு நிற்பர். உண்மையான உறவு/நட்பு அல்லமால்பெயரளவிற்கு புறத்திலே உறவு/நட்புப் பூண்டிருந்தவரை இன்னார் என்று அளந்து அறிதற்குஒருவனிடத்து உண்டான வறுமை அல்லது துன்பமானது ஓர் அளவுகோலாக நிற்கும். செல்வக் காலத்தில் உறவாக/நண்பாரக இருந்தவர் வறுமைக் காலத்திலும் அவ்வாறே இருந்தால் உண்மையான உறவு/நட்பு என்றும்விட்டு நீங்கினால் பொய்யான உறவு/நட்பு என்றும் அளந்து அறிந்து கொள்ளலாம்.

 

            கிளை என்னும் சொல்லுக்குஉறவுசுற்றம் என்றும் பொருள் உண்டு. எனவேகிளைஞர் என்னும் போது உறவினரையும்,சுற்றத்தாரையும் கொள்ளலாம். சுற்றி இருப்பது உறவினராகவும்நட்பினர் ஆகவும் இருக்கலாம்.

 

"கேட்டினும் உண்டு ஓர் உறுதிகிளைஞரை

நீட்டி அளப்பது ஓர் கோல்".                

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

            இத் திருக்குறளுக்கு விளக்கமாககமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"மாறனது கேட்டில் உறுதி எனமாணிக்கம்

கூறி விலையாக் கொடுக்கும் இறை, --- ஆதலால்

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பது ஓர் கோல்".

 

இதன் பொருள் ---

 

            உக்கிரபாண்டியனின் மகனான வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்டு வந்தான். அவனுக்கு பட்டத்து அரசியைத் தவிர மனைவியர் பலர் இருந்தனர். வீரபாண்டியனுக்கு பட்டத்து அரசியைத் தவிர ஏனைய மனைவியர் மூலம் குழந்தைகள் பலர் பிறந்தனர். பட்டத்து அரசிக்கு மட்டும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. எனவே வீரபாண்டியனும் அவனுடைய பட்டத்து அரசியும் குழந்தைப் பேறு வேண்டி அட்டமி விரதம்சதுர்த்தி விரதம்சோமவார விரதம் முதலியவற்றைப் பின்பற்றி வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் பலனாக சற்புத்திரன் ஒருவரைப் பெற்றனர். தன் பட்டத்து அரசியின் மகனான செல்வப்பாண்டியனுக்கு முறைப்படி கல்விகலைகள் ஆகியவற்றை வீரபாண்டியன் கற்பித்தான்.

 

            ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது புலியால் கொல்லப்பட்டான். மன்னன் மறைந்த சேதியை அறிந்த மன்னனின் மற்ற மனைவியர்களின் பிள்ளைகள் கருவூலத்தை அடைந்து நவமணிகள் பதித்த திருமுடியையும்செல்வத்தையும் திருடிச் சென்று விட்டனர்.

 

            மன்னன் மறைந்த சேதியை அறிந்த அமைச்சர்கள் வீரபாண்டியனுக்கு உரிய முறையில் செல்வபாண்டியனை வைத்து ஈமச் சடங்குகளை முடித்தனர். பின்னர் செல்வப் பாண்டியனுக்கு முடிசூட்ட எண்ணினர். கருவூலத்தை திறந்து திருமுடியை தேடினர். நவமணிகள் பதித்த திருமுடியும்பிற செல்வங்களும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தனர். வேறு மணிமுடி ஒன்று செய்யலாம் என்றாலோ உயர்ந்த பெரிய மணிகள் இல்லை. முடி இல்லையாயின் அரசும் இல்லை. அரசு இல்லையாயின் மக்கள் துன்பம் அடைவர். இப்போது என்ன செய்வதுஎன்று திகைத்தனர்.

 

            பின்னர் அரசகுமாரனை அழைத்துக் கொண்டு இறைவனை வணங்க எண்ணிச் சொக்கலிங்கப் பெருமான் திருமுன்னர் சென்று கொண்டிருந்தனர். அப்போது இறைவன் அவர்கள் முன்னர் ஒரு நவரத்தின வணிகராக வேடம் பூண்டு தோன்றினார். அவர்அமைச்சர்களிடம் நீங்கள் கவலை தோய்ந்த முகத்தினராய் வரும் செய்தி யாது?” என்று கேட்டார்.

 

            அமைச்சர்கள் நடந்தவைகளை அவரிடம் விளக்கிக் கூறினர். அதனைக் கேட்ட இறைவனார் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்னிடம் நவரத்தினங்கள் பல உள்ளன. அவற்றைக் காட்டுகிறேன். பாருங்கள் அவை பலகோடி பொன் விலையுள்ளன.” என்று கூறி கீழ்த்திசையினை நோக்கி அமர்ந்து ஒரு பெரிய கம்பளத்தை விரித்தார். அக் கம்பளத்தின் எட்டுத் திசைகளிலும் முறையே முத்து முதலிய எட்டு மணிகளை எடுத்து வைத்து இம்மணிகள்  வலன் என்னும் அசுர அரசனின் உடற்கூறுகள்” என்று கூறினார். உடனே அமைச்சர்கள் "வலன் என்பவன் யார்அவனுடைய உடலிலிருந்து எவ்வாறு நவமணிகள் தோன்றின?” என்று கேட்டனர்.

 

            இறைவனான வணிகர்அமைச்சர்களிடம் வலன் என்பவன் ஓர் அசுர அரசன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் என்னை நோக்கி தவம் இயற்றியதன் காரணம் என்னஉனக்கு யாது வேண்டும்?” என்று வினவினார். அதற்கு வலன் நான் போரில் யாராலும் பிளவுண்டு இறக்காத வரத்தை அருள வேண்டும். ஊழ்வினையின் காரணமாக எனக்கு இறப்பு நேர்ந்தால் என் உடலானது துறவிகளும் விரும்பும் ஒன்பது மணிகளாக வேண்டும்” என்று வேண்டினான். இறைவனாரும் வலனுக்கு அவ்வாறான வரத்தினை அருளினார். வரத்தினை பெற்ற மகிழ்ச்சியால் தேவேந்திரனோடு வலன் போரிட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றினான். வலனின் வரத்தினை அறிந்த தேவேந்திரன் வலனை போரினால் வெல்ல இயலாது. ஆகையால் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் என்று எண்ணி மனதிற்குள் ஒரு திட்டத்தினை வகுத்தான்.

 

            அதன்படி தேவேந்திரன் வலனை அணுகி வெற்றி உடையவனே! உன்னுடைய தோளின் வலிமையும்வெற்றிப் பெருக்கும் எல்லா திசைகளிலும் பரவி விட்டது. அந்த புகழ்ச்சியின் காரணமாக நான் ஒரு வரத்தினை உனக்கு அளிக்க விரும்புகிறேன். நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டான்.அதற்கு வலன் சிவபெருமான் அருளிய நல்ல வரங்கள் எனக்கு இருக்கவும்அதற்கு மேலாக நான் உன்னிடம் பெறக்கூடியது ஏதேனும் உள்ளதாஎன்னிடம் உனக்கு வேண்டியது யாது?” என்று எதிர் கேள்வி கேட்டான்.

 

            வலனின் வார்த்தையைக் கேட்டதும் தேவேந்திரன் மகிழ்ந்து மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அவுணர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளிமலையை அடைந்துஅங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். நீ அப்போது தேவர்களுக்கு அவி ஊட்ட வேள்விப் பசுவாகி வருவாயாகஎன்று கூறினான்.

 

            அதனைக் கேட்ட வலன் ததீசி முனிவன்தன்னுடைய முதுகுத் தண்டினை வஜ்ஜிரப்படைக்குக் கொடுத்து உடலால் புகழ் பெற்றான். நானோ பிறரை வெல்லும் வெற்றியாலும்பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் ஆகிய இரண்டால் (கொடைவெற்றி) புகழ் பெறப் போகிறேன். ஆதலால் நீ வேண்டியபடி வேள்விப் பசுவாகி உங்களுக்கு அவியுணவு ஊட்ட வருவேன்” என்று வாக்களித்தான்.

 

            பின்னர் வலன் தன் மகனுக்கு பட்டத்தைச் சூடிவிட்டு தேவர்களுக்கு அவியுணவு ஊட்ட வேள்விப் பசுவாகி அமைதியாக தேவேந்திரன் வேள்வி செய்யும் இடத்திற்கு வந்து நின்றான். தேவர்கள் அமைதியின் உருவாகி வந்த பசுவாகிய வலனை மூச்சடக்கிக் கொன்றனர். இறந்து போன வலன் சத்தியலோகம் சென்றான். இந்திரன் வலனின் உடலினைத் தீயிலிட்டு தேவர்களுக்கு உண்பித்து வேள்வியைச் செய்து முடித்தான். வேள்விப் பசுவாகி வந்த வலனின் இரத்தம் மாணிக்கம் ஆனது. பற்கள் முத்துமயிர் வயிடுரியம்எலும்பு வயிரம்பித்தம் மரகதம்நிணம் கோமேதகம்தசை பவளம்கண்கள் நீலம்கோழை புருடராகம் என நவமணிகள் தோன்றின.என்று கூறினார். பின் நவமணிகள் தோன்றிய இடங்களையும்சாதிகளையும்குணங்களையும்குற்றங்களையும்இம்மணிகளை உடலில் அணிபவர் அடையும் பயன்களையும் கூறி முடித்தார்.

 

     (வலன் என்னும் அசுரனை வெற்றி கொண்டதால்இந்திரன் "வலாரி" எனப்பட்டான்.) 

 

            பின்னர் அவர் வடக்கு திசையினை நோக்கி இருந்து மணிகளைக் கையில் எடுத்து இவ்வரசிளங் குமரனுக்கு நிறைந்த செல்வமும்நீண்ட வாழ்நாளும் அமைவதாக. இந்த மணிகளைக் கொண்டு மணிமகுடம் செய்து சூட்டி இக் குமாரனுக்கு அபிடேகப்பாண்டியன் என்று பெயரிட்டு அழைப்பீராக” என்று வாழ்த்தி நவமணிகளை வழங்கினார். அரசிளங்குமாரனும் சொக்கலிங்கப் பெருமானை வணங்கி அம்மணிகளைக் கையில் பெற்றுக் கொண்டான். இறைவனாரும் நவமணிகளை அளித்தவுடன் அவ்விடத்தைவிட்டு மறைந்தார்.

 

            இங்கு வணிகராக வந்தது சொக்கநாதரே என்று அமைச்சர்கள் உணர்ந்தனர். அரசகுமாரன் சொக்கநாதரை வழிபட்டு அரண்மனையை அடைந்தான். இறைவனார் அளித்த நவமணிகளை கொண்டு மணிமகுடம் செய்து நல்ல நாளில் அரசிளங்குமரனுக்கு முடிசூட்டி அபிடேகப்பாண்டியன் எனப் பெயரிட்டனர்.

 

            முன்னர் பொருட்களைக் கவர்ந்து சென்ற வீரபாண்டியனின் மற்றைய பிள்ளைகள் பிடிபட்டனர். அபிடேகப்பாண்டியன் அவர்களை மன்னித்து அவர்கள் வாழ்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். பின் அபிடேகப் பாண்டியன் நல்வழியில் நீதி தவறாது மதுரையை ஆட்சி செய்து வந்தான்.

 

     கேடு வந்தபோது செல்வப் பாண்டியனை விட்டு உறவினர் நீங்கினர்.  இறைவன் திருவருள் துணை புரிந்தது. கேட்டிலும் நன்மை விளைந்ததை அறிக.

 

            "நான்மணிக் கடிகை" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ளபின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க...                     

 

"மண்ணி அறிப மணிநலம்பண் அமைத்து

ஏறிய பின்னறிப மாநலம்மாசறச்

சுட்டுஅறிப பொன்னின் நலம் காண்பார்கெட்டு அறிப

கேளிரான் ஆய பயன்".                

 

இதன் பொருள் ---

 

            மணி நலம் மண்ணி அறிப --- மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பைக் கழுவி அறிவார்கள்மா நலம் பண் அமைத்து ஏறிய பின் அறிப --- குதிரையின் நல்லியல்பைஅதன்மேல் சேணம் அமைத்து ஏறிய பின் அறிவார்கள்பொன்னின் நலம் காண்பார் மாசு அறச் சுட்டு அறிப --- பொன்னின் மாற்றைகுற்றங் கெட அதனை உருக்கி அறிவார்கள்கேளிரான் ஆய பயன் கெட்டு அறிப --- உறவினரால் உண்டாகும் பயனைதமது செல்வம் எல்லாம் கெட அறிவார்கள்.

 

            செல்வம் கெட்டு வறுமையுறும்போதுதான், உறவினரால் உண்டாகும் பயன் நன்கு அறியப்படும்.  கேடு வரும்போது தன்னோடு பழகியவரின் உண்மையை அறியலாம்.  தெய்வமே துணையாக இருந்து காக்கும் என்பதையும் அறியலாம்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...