செய்தத குற்றம் என்ன?

 



செய்த குற்றம் என்ன?

-----

 

    குற்றம் ஏதும் செய்யாத நிலையில்,ஒரு துன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க நேர்ந்தால்அதைப் பொறுக்க மாட்டாமையால்இறைவனிடம் முறையிடுவது நல்லது. இறைவன் ஒருவன்தான் நமது முறையீட்டைக் கேட்கச் சலித்துக் கொள்ளமாட்டான். தக்க உதவியையும் செய்வான். வேறு யாரிடமாவது முறையிட்டால்கேட்பவர்க்கு சலிப்பு உண்டாகும். நன்மை அல்லாமல்வேறு வகையில் துன்பம் வந்தாலும் வரும். பிறவித் துன்பத்தைப் பொறுக்க மாட்டாத அருணகிரிநாதப் பெருமான்முருகப் பெருமானிடம்பிரமன் குற்றப்பட்டு விட்டதாக முறையிடுகின்றார். "பெருமானே! உன்னை வழிபட முடியாத நிலையில் என்னப் பிரமன் படைத்து விட்டானேஅவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்" என்று முறையிடுகின்றார்.

 

     இறைவன் திருவருளில் ஈடுபட்டு,வழிபட்டுமனத்தினாலே சிந்தித்துவாக்கினாலே பாடிப் பேரின்ப அனுபவத்தைப் பெற்றவர் அருணகிரிநாதர். த்தகையவர்"பெருமானே! உனது திருவடியைத் தாழ்ந்து வணங்காத தலையையும்உனது திருமேனியைக் கண்ணாரக் காணாத கண்களையும்உனது திருவடியைத் தொழாத கைகளையும்உனது அருட்புகழழைப் பாடாத நாவையும் எனக்குத் தெரிந்துதான் பிரமன் படைத்திருக்கின்றான். அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று புலம்புகிறார். இது உண்மை அல்ல. முழுப் பொய்யே ஆகும். "மலடியின் மகன் நான்" என்று சொல்வது போல் இது இருக்கிறது மகன் என்ற சொல்லேஅவனைப் பெற்றவள் மலடி அல்ல என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தப் பாட்டில் சூடாத சென்னிநாடாத கண்,தொழாத கை ஆகியவற்றைப் பிரமன் படைத்திருக்கிறானே என்று மட்டும் சொல்லி இருக்கலாம். ஆனால் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே என்கிறார். அற்புதமான திருப்புகழ்ப் பாடல்களை மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சாத்தி மகிழ்ந்தவர் அவர். இந்தப் பாட்டைப் பாடியதும் அவர்தான். ஆகவேஅருணகிரிநாதர் பாடியது பொய் என்றுதான் தோன்றும். பொய்போலத் தோற்றினாலும் அது பொய் ஆகாது. 

 

     நற்பயன் விளையுமானால் பொய்யும் மெய்யே என்பார் திருவள்ளுவ நாயனார். தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும்நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் மெய்ம்மை.நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதல் பொய்ம்மை. தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதல் பொய்ம்மை.

 

"பொய்ம்மையும் வாய்மை இடத்தபுரை தீர்ந்த

நன்மை பயக்கும் எனின்" 

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     உண்மையைச் சொல்வதனால் தீமை உண்டாகுமானால் அதைச் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் இருக்கலாம். நல்லது நடப்பதற்காக ஒரு பொய் சொன்னால்அது பொய் ஆகாது. பொல்லாதவன் ஒருவன் வேறு ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று துரத்திக்கொண்டு வருகிறான். ஒடி வருகிறவன் ஒருவனுடைய வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். துரத்தி வந்தவன் வந்து, "இங்கே எவனாவது வந்து ஒளிந்திருக்கிறானா?” என்றால் உடனே, "ஆம்இதோ இருக்கிறான்" என்று காட்டினால் நாம் அரிச்சந்திரன் ஆகிவிடமாட்டோம். "அவனை நாம் அறியேன்" என்று சொன்னால் அது பொய் அல்லவா என்று தோன்றும். உண்மையில் அது பொய் அல்ல. வாய்மை என்றால் என்ன? "வாய்மை எனப்படுவது யாது எனின்?யாது ஒன்றும் தீமை இலாத சொலல் என்கிறார் திருவள்ளுவ நாயனார். 

 

     பொய்யில் இரண்டுவகை உண்டு. ஒருவகைப் பொய்சொல்கிறவனுக்குப் பொய் என்று தோன்றும்கேட்கிறவனுக்குத் தெரியாது. இது வஞ்சனை ஆகும். மற்றொரு வகைசொல்கிறவனுக்கும் கேட்கிறவனுக்கும் பொய் என்று தெரியும். இதற்குக் கற்பனை என்று பெயர். புலவர்கள் மட்டும் அல்லாது அருளாளர்களும் இந்த வகையில் எத்தனையோ பொய்களை வாரி வாரி வீசி இருக்கின்றார்கள். அவர்களுடைய கற்பனைகள் உண்மை அல்லபொய்தான். ஆனால்இவற்றால்யாரும் ஏமாறுவதில்லை. படிக்கிறவர்களுக்கு இவை கற்பனை என்று தெரியும்.

 

     'துரும்பாக இளைத்து விட்டாயேஎன்று ஒருவரைப் பார்த்துச் சொல்கிறோம். உண்மையில் துரும்பு போல எப்படி இளைக்க முடியும்அப்படிச் சொல்லும்போது,பொய் என்ற நினைவு சொல்பவனுக்கும் இல்லைகேட்கிறவனுக்கும் இல்லை. மிகையாகச் சொல்வதாக அமையும்.. இப்படியே குழந்தையைப் பார்த்து, 'யானைக் குட்டி" என்கிறோம். யானைக்குட்டி போலக் கொழு கொழு என்று இருக்கிறதென்று பொருள். இதுவும் மேலாகப் பார்த்தால் பொய்யாகத் தோன்றும். ஆனால்,பொய் அல்ல.அலங்காரமாகச் சொல்வது. அதுபோலஅலங்காரமாக ஒரு பாடலை அருணகிரிநாதர் பாடுகிறார். அந்த நூல் "கந்தர் அலங்காரம்" எனப்படும்.

 

     மிக உயர்ந்தவர்கள் தாம் விழைந்த பெரும்பயன் விளையாமல் துன்பப் படும்போதுதாம் குற்றப்பட்டு விட்டதாக எண்ணிப் புலம்புவார்கள். ஆனால்தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் இறைவனைப் பழிப்பார்கள்.அருணகிரிநாதப் பெருமான் சுவாமிகள் புலம்புவன எல்லாம். தம்மை நினைந்து சொல்வன அல்ல.

 

"வாழ்த்த வாயும்,நினைக்க மடநெஞ்சும்,

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே".

 

என்று அப்பர் பெருமான் புலம்பி உள்ளார். இறைவன் இந்த உடம்பையும்அதில் பொருந்தி உள்ள உறுப்புக்களையும் நன்றாகப் படைத்ததேதன்னை நன்றாகத் தமிழ் செய்யத்தான். உடம்பால் பெற்ற பயன் இறைவனைத் தொழுவதே ஆகும்.

 

     பெரியவர்களைப் புகழ்ந்தால் அவர்கள் நாணப்படு்வார்கள்அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால்மனம் வாடுவார்கள். சொன்னவரைப் பழிக்கமாட்டார்கள். பொல்லாத மக்களிடத்தில்,அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் கோபம் கொள்வார்கள்சொன்னவருக்குத் தீங்கு செய்தாலும் செய்வார்கள். குரங்குக்கு உபதேசம் செய்த தூக்கணங்குருவி பட்ட பாடு நாம் அறிந்ததே. 

 

     நம் உடலில் உள்ள உறுப்புகளில் சிலவற்றை நாம் இயக்கலாம். சில தாமே இயங்குவன. இதயம் இருக்கிறது. அதை நம்மால் இயக்க முடியாது. அது நின்று விட்டால் மீண்டும் நம்மால் அதை இயக்க முடியாது. கை கால் தலை இவைகளை நாம் இயக்கலாம். நம்மால் இயக்குவதற்குச் சாத்தியமானபுறத்தில் இருக்கிற உறுப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை. 

 

     உயர்ந்த பொருளைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டால் மனிதர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள் சிறிய பொருளைக் கொண்டு,பெரிய பொருளை வாங்கவேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு இருக்கும். கிடைத்தற்கரிய பொருள் கிடைத்தால்,அதைக் கொண்டு மிகப் பெரும்பயனை அடைவதுதான் முறை. பணம் கொடுத்து மற்றப் பாண்டங்களை வாங்கிவிடலாம். இறைவன் தந்திருக்கிற பாண்டமாகிய உடம்பு எத்தனை பொருள் கொடுத்தாலும் வாங்க முடியாதது. நமது சுண்டுவிரல் போய் விட்டால்எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்க முடியாதுபுதிதாக ஒன்றைப் பண்ணவும் முடியாது. அத்தகைய அரிய உறுப்புகளைக் கொண்டுமிக அதிகமான பயனைப் பெற வேண்டும் என்று மனிதன் நினைக்க வேண்டும். இறைவன் திருவருளைப் பெறுவது ஒன்றுதான்நாம் அடைகிற பெரும்பயன். கையும் காலும் உடைய நாம்தன்னை வணங்கவேண்டும் என்றே இறைவன் கையும் காலும் உடையவனாக எழுந்தருளியிருக்கிறான்.

 

     உடம்பில் உள்ள அங்கங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கொடுக்காவிட்டால்அவைகெட்ட வேலையைத்தான் செய்யும். அவற்றுக்குச் சரியான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பெரியோர்கள் ஆலயங்களுக்குச் செல்வதுஆண்டவன் சந்நிதியில் சிரம் தாழ்த்தி வணங்குவதுகை கூப்புவது அருட்பாடல்களை நாவினாலே ஓதுவது ஆகிய பல செயல்களைவைத்திருக்கிறார்கள். உடலில் உள்ள உறுப்புகளுக்கு இறைவனோடு தொடர்புடைய வேலையைக் கொடுத்தார்கள். இப்படி இந்த உடம்பு முழுவதையும் இறைவனின் திருத்தொண்டில் ஈடுபடுத்தினால்உடம்புபுனிதமாகும். "பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை" இது. பொத்தை ஊன் சுவர்புழுப் பொதிந்துஉளுத்துஅசும்பு (நிணம்) ஒழுகிய பொய்க்கூரை ஆகிய இதை மெய் எனக் கருதி நின்று இடர்க்கடலில் விழுதல் கூடாது.இந்த உடம்பு கங்கை நீரில் கழுவினாலும் தூய்மை பெறாது. இதைப் புனிதப்படுத்தும் வழி இறை வழிபாடு ஒன்றுதான். 

 

     அப்பர் பெருமான் "தலையே நீ வணங்காய்"என்று தொடங்கி, "திரு அங்கமாலை" என்னும் ஒரு திருப்பதிகத்தை அருளிச் செய்துஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பணியைச் சொல்கிறார். உறுப்புகளைப் பெற்றதனால் பயன் அவற்றைச் செய்வதுதான். 

 

     மனத்தில் இறைவனுடைய நினைவு உறைக்க வேண்டுமானால்அவன் நினைவு உண்டாவதற்குரிய செயல்களைப் புறத்தில் செய்து பயில வேண்டும். அதற்கு ஏற்ப உடம்பிலுள்ள அங்கங்களை இயக்க வேண்டும். ஒவ்வோர் அங்கத்துக்கும் ஒவ்வொரு வகை இயக்கம் இருக்கிறது. கால் நடக்கிறது.கை வேலை செய்கிறது.கண் பார்க்கிறது.வாய் பேசுகிறது. இவ்வாறு உள்ள உறுப்புகளை இறைவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். 

 

     வள்ளல்பெருமான்,முருகப் பெருமானை வழிபடாத அங்கங்கள் இன்ன இன்ன விளைவைப் பெறும் என்று ஒரு பாடலில் சொல்கிறார்.

 

எந்தை! நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் 

ஏக்கற்று இருக்கும் வெறுவாய்;

எங்கள் பெருமான்! உனை வணங்காத மூடர்தலை 

இகழ்விறகு எடுக்கும் தலை

கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர்கண் 

கலம்நீர் சொரிந்த அழுகண்

கடவுள்! நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி 

கைத்து இழவு கேட்கும் செவி;

பந்தம் அற நி(ன்)னை எ(ண்)ணாப் பாவிகள்தம் நெஞ்சம் 

பகீர்என நடுங்கும் நெஞ்சம்;

 பரம! நின் திருமுன்னர்க் குவியாத வஞ்சர்கை 

பலியேற்க நீள் கொடுங்கை;

சந்தம்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள்வளர் 

தலம் ஒங்கு கந்தவேளே! 

தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி! 

சண்முகத் தெய்வ மணியே!" 

 

     என்ன அலங்காரம் செய்து கொண்டாலும் இறைவனுடைய திருவடியில் வணங்காத தலை எதற்கும் பயன் இல்லை என்பதை அறிவுறுத்ததிருவள்ளுவ நாயனார்,"கோள்இல் பொறியின் குணம் இலவே,எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்றார். இறைவனுடைய திருவடியை வணங்குவதற்கு நமக்குத் தலை இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்யாவிட்டால்கேளாத காது போலவும்காணாத கண் போலவும்மணத்தைத் தெரிந்து கொள்ளாத மூக்குப் போலவும் தலை பயனற்றதாகிவிடும் என்று சொல்கிறார். இறைவனுடைய திருவடியை வணங்காத தலையைப் பற்றி வள்ளல்பெருமான்வேறு ஒரிடத்தில் பாடுவது மிகவும் அருமையாக இருக்கிறது. 

 

வீட்டுத் தலைவ! நின் தாள் வணங்கார்தம் விரிதலைசும்- 

மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை,

ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை,பாம்பின் அடுந்தலைகல் 

பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே

 

என்று அவர் நாகரிகமாகத் திட்டுகிறார். இப்படிப்பட்ட தலையை உடையவனை, 'மாடேபன்றியேஆடேநாயே என்று திட்டுவது போலத் தலையை வைத்துச் சொல்கிறார். 

 

     அருணகிரிநாதப் பெருமான்,முருகப் பெருமானைப் பார்த்து, 'உன்னுடைய திருவடியை வணங்காத தலையும்உன்னுடைய  திருவடியின் பேரழகைக் காணாத கண்ணும்அதனைத் தொழாத கையும்அதனைப் பாடாத நாவும் பிரமன் எனக்கென்றே அறிந்து படைத்திருக்கிறானேஎன்று புலம்புகிறார். 

 

"கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம்என்குன்றுஎறிந்த 

தாடாளனே! தென் தணிகைக் குமர! நின் தண்டை அம்தாள் 

சூடாத சென்னியும்,நாடாத கண்ணும்,தொழாத கையும்,

பாடாத நாவும் எனககே தெரிந்து படைத்தனனே!"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     கிரவுஞ்சமலை பிளவுபடுமாறு வேலை விடுத்து அருளிய மிகுந்த முயற்சியை உடையவரே! ஞானம் கொழிக்கும் அழகான திருத்தணிகை மலையில் எழுந்தருளி உள்ள முகாரப் கடவுளே! உமது தண்டை அணிந்த திருவடிகளைச் சூடிக் கொள்ளாத தலையையும்உமது திருவடியைக் கண்ணாரக் கண்டு மகிழாத கண்களையும்உமது திருவடியைக் கூப்பி வணங்காத கைகளையும்உமது அருட்புகழைப் பாடாத நாவையும் எனக்கென்றே தெரிந்து படைத்து வைத்துள்ளான். எல்லாவற்றையும் முறையாகச் செய்கின்ற அவனுக்கு நான் மட்டும் என்ன குற்றம் செய்தேன்?

 

     (கோடாத --- ஒருபால் சாயாத,பட்சபாதம் இல்லாத. "கோடாமை சான்றோர்க்கு அணிஎன்பது திருக்குறள். வேதன் --- பிரமன். (கோடாத வேதன் --- தனது தொழில் முறையில் கோணுதல் இல்லாத பிரமன்) தாடாளன் - தாளாளன். தாடாளன் என்று சீர்காழியிலுள்ள திருமாலுக்கு ஒரு பெயர் உண்டுபெருமுயற்சியுடையோன் என்பது பொருள்.)

 

     இறைவனுடைய ஆணையைத் தாங்கி இந்த உலகத்தை யெல்லாம் நெறி தவறாமல் படைக்கும் வேலையை உடைய பிரமன் சிறிதும் பட்சபாதம் இல்லாதவன். எல்லா உயிர்களையும் அவரவர்களுடைய வினைக்கு ஏற்றபடி படைத்திருக்கிறான். அப்படி இருந்தும் தன் அளவில் அவன் ஏதோ தவறு செய்துவிட்டான் அருணகிரிநாதருக்குத் தோன்றுகிறது. 'நான் அவனுக்கு எந்தவிதமான குற்றமும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் எனக்கு வேண்டாத உறுப்புக்களை அளித்திருக்கிறான். ஒருவேளை என்னையும் அறியாமல் அவனுக்கு ஏதாவது தவறு செய்துவிட்டேனோநானே அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாது. ஆகையால் உன்னைக் கேட்கிறேன்என்று பாடி உள்ளார். நமக்கும் இது பொருந்தும்தானே.

 

     மனிதர்கள் முற்பிறவியில் செய்திருக்கும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி அனுபவங்களை அடுத்த பிறவியில் தரவேண்டும் என்பது பிரமன் பெற்ற ஆணை. அவன் அந்த ஆணையைச் சரிவர நிறைவேற்றிக் கொண்டு வருகிறான். அதில் சிறிதும் கோடுவது இல்லை.பிரமன் தன்னுடைய வேலையைச் செய்வதற்கு ஏற்ற அறிவு படைத்தவன். எப்போதும் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன். வேதம் நித்தியமானது. அதைச் சொல்லித் தன்னுடைய தொழிலில் சிறிதும் குற்றம் ஏற்படாமல் செய்கிறவனாக அவன் இருந்தும்தனக்குச் சரியான வகையில் உறுப்புக்களை அமைக்கவில்லைஎன்று குறைபட்டுக் கொள்கிறார்.

 

     கைகளைக் குவித்துக் கும்பிடுவது நமது நாட்டு வழக்கம். கோபுரத்தைக் கண்டாலும் கை குவியும். இறைவனுடைய நினைப்பை ஊட்டுகின்ற எந்தப் பொருளைக் கண்டாலும் கும்பிடுவது நமக்கு இயல்பு. நம்முடைய கைகள் தனித்தனியே இரண்டு வேறு பக்கங்களில் இருக்கின்றன. நடக்கும்போது வீசி நடக்கின்றன. கொடுக்கும்போது நீண்டு கொடுக்கின்றன. வாங்கும்போது நீண்டு வாங்குகின்றன. அடிப்பதுஅணைப்பது ஆகிய சமயங்களில் எல்லாம் கைகள் வேலை செய்கின்றன. இத்தனை இருந்தும் நல்ல பயன் உண்டாவது இல்லை. ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கைகளும் குவித்துத் தொழுவதுதான் சிறந்த பயன் தரும் செயல். சில பெரியவர்களைப் பார்த்து'நீங்கள்கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருங்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'என்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சொல்வார்கள். அது போல் நம்முடைய கைகள் ஒரு வேலையையும் செய்யாமல் இறைவனுடைய சந்நிதானத்திற்கு முன் குவிந்து நின்றால் பெரிய நன்மை உண்டாகும். கையைச் சேர்த்துக் குவிப்பதுசெயல்மாண்ட நிலையைக் குறிக்கும். "என் செல் ஆவது ஒன்றும் இல்லை,இனித் தெய்வமேஎல்லாம் உன் செயலே" என்றும் இருக்கும் நிலை இது. கரம் குவித்தால் உள்ளம் மகிழும். "கரம் குவிவார் உள் மகிழும் கோன்" என்பார் மணிவாசகப் பெருமான்.

 

      'பாடாத நாவை எனக்குப் படைத்தான்என்று சொல்வதே ஒரு பாட்டாக இருக்கிறது. நாமாகப் புதிய பாடல்கள் பாடவேண்டும் என்பதில்லை. முன்னே பல அருளாளர்கள் பாடி வைத்த பாடல்களை இறைவன் முன் நின்றுபொருள் உணர்ந்து பாடவேண்டும்அதனால் உள்ளம் நெகிழும். 

 

     அருணகிரிநாதர்  தலைகண்கைநாக்கு ஆகிய நான்கையும் இங்கே சொன்னாலும்உபலக்கணத்தால் காதையும் உள்ளத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருளில்தான்திருவள்ளுவ நாயானார் அருளிய, "கோள் இல் பொறியின் குணம் இலவேஎண்ட குணத்தான் தாளை வணங்காத் தலை" என்னும் திருக்குறளும் அமைந்து உள்ளது. உடம்பில் உள்ள உறுப்புகளில் மிகவும் சிறந்ததாக இருப்பது தலை. தலை என்பதே சிறப்புடைய பொருளைக் குறிக்கும் சொல். வடமொழியில் இதை "உத்தமாங்கம்" என்று சொல்வார்கள். உடம்பினால் வழிபடும் மனிதனுக்கு எல்லாவற்றிலும் சிறந்த உறுப்பாகிய தலை முருகப் பெருமானுடைய திருவடியைத் தாழ்ந்து வணங்க வேண்டும். "சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்" என்பார் மணிவாசகப் பெருமான். ஆகையால்தலையை முதலில் சொன்னார். ஐம்பொறிகளில் மிகவும் சிறந்தது கண். "கண்ணில் சிறந்த உறுப்பு இல்லைஎன்பது நான்மணிக் கடிகை. கண் என்னும் பொறி நம் உள்ளத்தில் ஆசையை உண்டாக்குவதற்குத் துணையாக இருக்கிறது. பார்க்கின்ற பொருள்களெல்லாம் நமக்கு வேண்டுமென்று ஆசைப்படும்படி கண் வேலை செய்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் பொருளின் திறத்தைத் தெரிந்து பார்க்கும் ஆற்றல் நம் கண்ணுக்கு இருக்கிறது. மனிதனுடைய உடம்பு சிறந்தது. அதனில் அவனுடைய தலை மிகச் சிறந்தது. அதில் கண் மிகமிகச் சிறந்தது. 

 

     அடுத்தபடியாக,மனிதன் கைகளால் பல வேலைகளைச் செய்கிறான். விலங்குகளுக்குக் கால்கள் மட்டுமே உண்டு. கைகள் இல்லை. உலகம் முழுவதும் மனிதன் செய்கிற செயல்கள் மிக்க அற்புதமாக இருக்கின்றன. அவனுடைய கைகள் அவனுக்கு உறுதுணையாக உள்ளன. ஆகையால் மனிதனுடைய கைகள் மிகச் சிறந்தவை.

 

     அப்படியே அவனுடைய நாவும் மற்ற உயிர்களுக்கு இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. விலங்கு முதலியன சில ஒலிகளைத்தான் எழுப்பும். மனிதன் மட்டுமே பேசும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். அவனுடைய நாக்கு மிகச் சிறந்தது. ஆகவே இந்தப் பாட்டில் மனிதனுக்குச் சிறப்பைத் தந்த தலையையும்கண்களையும்கைகளையும்நாவையும் எடுத்துச் சொன்னார். மற்ற உயிர்க் கூட்டங்களைப் போல இல்லாமல் சிறப்பான உறுப்புக்களைப் பெற்ற மனிதன் அந்த உறுப்புக்களைக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெற வேண்டும். 

 

     தலையினால் வணங்குவதற்கும்கண்ணால் காண்பதற்கும்கையால் தொழுவதற்கும்நாவினால் பாடுவதற்குமாக இறைவன் திருவுருவத்தோடு எழுந்தருளியிருக்கிறான். நம்முடைய கண் முன்னே திருத் தணிகைமலை உச்சியில் நின்று தன்னுடைய திருக்கோலக் காட்சியை வழங்குகிறான். அவனுடைய திருவடியில் ஈடுபட்டுக் கீழே விழுந்துஅட்டாங்க பஞ்சாங்கமாகவணங்குவது மிகவும் முக்கியமானது. அவனுடைய திருமேனி உறுப்புக்கள் பலவற்றைக் கண்டு வணங்கினாலும் இறுதியில் அவனுடைய திருவடியை வணங்குவதுதான் தலையானதுபயனைத் தருவது. அதனால்அந்தத் திருவடியை வணங்காத தலையையும்அதனை நோக்காத கண்ணையும் அதனைத் தொழாத கையையும்அதனைப் பாடாத நாவையும் பிரமன் எனக்கென்றே படைத்தானேஎன்று அருணகிரிநாதர் திருத்தணிகைப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிறார். 

 

     திருத்தணிகைக் குமரனுடைய தண்டை அணிந்த திருவடிகளைத் தலையினால் வணங்கிகண்ணாரக் கண்டு,கையாரக் கும்பிட்டுநாவாரப் பாடி வழிபடவேண்டும் என்பதை கருத்து. 

 

     இறைவன் திருவருள் ஆணைப்படியே பிரமதேவன் படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான். அவன் குற்றப்பட்டான் என்றால்அந்தக் குற்றம் அவனது தலைவனாகிய இறைவனையே சாரும். அப்படி நேராகச் சொல்லாமல்மறைமுகமாக முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிளார். அருணகிரிநாதப் பெருமானுடைய உள்ளக் கருத்து முருகப் பெருமானுக்குத் தெரியாமலா இருக்கும்நாமும் அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

 

 

 

 

சொந்த வீடும் - புகுந்தத வீடும்.

 



சொந்த வீடும் - புகுந்த வீடும்

-----

 

            உயிருக்குச் சொந்தமாக அமைந்துள்ள நிரந்தரமான வீடு இறைவன் திருவடி ஆகும். அது மோட்சம் என்றும் வீடு என்றும் சொல்லப்படும். மோட்சம் என்னும் சொல்லுக்குவீடுபேறு,  விடுபடுதல்வினைத்தொடர்பில் இருந்து நீங்குதல் என்று பொருள். உயிர் புகுந்து இருக்கின்ற வீடுபஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன இந்த வீடு. சொந்த வீட்டுக்குப் பொவதற்குபுகுந்த வீடு துணைபுரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது.

 

            உயிரானது புகுந்து உள்ள உடலிலும் பேதங்கள் உள்ளன.  "உடலில் பஞ்சபேதம்" என்பது குறித்து திருமூல நாயனார் அருளி உள்ளார். உள்நாடிக் காண்பதற்குத் துணையாக வாய்த்ததே இந்த உடம்பு. உடம்பினுள்ளே ஒன்றும் இல்லையானால்அதற்கு "மெய்"என்று பெயர் வந்து இருக்காது. மெய்ப்பொருளை உணரத் துணை செய்வதாலேயே அதற்கு "மெய்" என்று பெயர் வந்தது.

 

            இந்தப் பருவுடல் மட்டுமல்லாமல்அதற்குஉள்ளே நான்கு நுண் உடம்புகள் உள்ளன. இயற்கையிலும் கூட இந்த அமைப்பு உள்ளது. வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றும் இல்லாமல் போகும். கனிகளும் இந்த வகையில் உள்ளவையே.

 

            முதலாவது பரு உடல். இது நமது கண்ணுக்குப் புலனாவது.  உடல் என்பதற்குக் கோசம் என்று ஒரு பெயரும் உண்டு. "அன்னமய கோசம்" என்றும் சொல்லப்படும். இந்த உடம்பிற்குபஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன உணவினை இட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

 

            இரண்டாவது காற்று உடம்பு. கண்ணுக்குத் தெரியாது.  இதைப் "பிராணமய கோசம்" என்பர். இது பிராண சத்தியால் இயங்குவது. உடம்பில் இருந்து உயிர் பிரியும்போது இது மேலெழுந்து போகும். நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் நாய்கோட்டான் முதலியவைகளுக்குப் புலப்படும். நாய் அழும்போதும்கோட்டான் கத்தும்போதும்யாரோ இறந்துவிட்டார் என்று பேசுவதை நாம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.

 

            மூன்றாவது மன உடம்பு. இது மிகவும் நுட்பானது. நமது எண்ணத்திற்கு ஏற்ப உருப்பெறும்வலுப்பெறும். இது "மனோமய கோசம்" என்று அழைக்கப்படும். உயர்ந்த சிந்தனைகளால் மனமானது மென்மை அடைந்துஆற்றல் பெற்று விளங்கும். "எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்" என்பது இதை வைத்துத் தான். தேவையற்றவீணான நினைப்புகளை அகற்ற வேண்டும்.

 

            நான்காவது அறிவு உடம்பு. இதுவும் நுண்மையானது.  அறிவால் ஆனது. அதனால்இதை "விஞ்ஞானமய கோசம்" என்பர். ஆன்மா அறிவுப் பொருள். ஆனாலும் அது சிற்றறிவு எனப்படும். இந்த அறிவைக் கொண்டுதான்மேலும் மேலும் அறிவு விளக்கத்தை அது பெற்றுமுற்றறிவினனான இறைவனை உணர முடியும். அதற்குத் தான் கல்விகேள்வி முதலானவை துணை செய்யும். "கற்றதனால் ஆய பயன் என்கொல்வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின்" என்னும் திருக்குறளைச் சிந்தித்தால் இது விளங்கும். கண் ஒளியைக் கொண்டு சூரியன் ஒளியால் பொருள்களைக் கண்டு அறிவது போல இது. ஆன்ம அறிவு முதிரும்போது அன்பு பிறக்கும். அது மேலும் முதிரும்போது அருள் பிறக்கும். அறிவு முதிராத போது வன்மை உடையதாக இருக்கும். முரட்டுத் தனம் என்று இதைச் சொல்லலாம். அறிவு முதிர முதிரக் கூர்மை பெறும். அதனால் 'ஞானவாள்'என்று சொன்னார்கள். முரட்டுத் தனத்தைக் காய்க்கு ஒப்பிடலாம். மென்மைத் தன்மையைக் கனிக்கு ஒப்பிடலாம்.  

 

            ஐந்தாவது உடம்புகாரண உடம்பு. இதை "ஆனந்தமய கோசம்" என்பர். இது மிகவும் நுட்பமானது. ஆன்ம அறிவு இந்த உடலுக்கு வந்த பிறகு மற்ற கருவிகளின் துணை இல்லாமல் விளங்கும். இந்த உடல் வந்தபின் ஆன்மா கருவியின் துணையில்லாமல் செயல்படும். அன்புடைய ஒருவரை இந்த உடம்பில் இருந்து நினைத்தாலே அவர் வந்துவிடுவார். கடிதம் எழுத வேண்டுவதில்லை. இந்த உடம்போடு வாழ்வது சிறந்தது. மேன்மேலும் இன்பம் தருவதாக அமையும். இந்த உடம்பே மிகவும் நுட்பநானது. இறைவனும் மிக நுட்பமானவன். இந்த உடம்பிலே இறைவனுடைய அருட்காட்சி தோன்றும்.  

 

            இத்தகு நிலையைப் பெறுவதற்கு பருவுடலையே பெரிதாக எண்ணிஅதற்கு உணவு தேடும் முயற்சியிலேயே காலத்தைக் கழிப்பதை மாற்றி,  உள் உடம்புகளுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபடவேண்டும். சத்துவ உணவைக் கொள்ளவேண்டும். மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு அடிப்படை ஆதாரமாக நல்ல நூல்களைப் பயில வேண்டும். நல்லவர் கூட்டத்திலே இருத்தல் வேண்டும். அப்போதுதான் அதிசூக்கும உடலுக்குப் போகமுடியும். அங்குதான் ஆன்ம அறிவு விளங்கும். விளங்கிய ஆன்ம அறிவுஅன்பாக மாறும். தத்துவங்களை எல்லாம் சடமாகக் காணும் நிலை உருவாகும். அந்த நிலையில் ஓங்காரத்தின் உட்பொருள்திருவைந்தெழுத்தின் உட்பொருள் விளங்கும். இறையருள் பெருகும். அந்த மனத்தினைக் கோயிலாகக் கொண்டு இறைவன் வந்து விளையாடுவான்.

 

            இரும்பைக் காய்ச்ச வேண்டுமென்றால் எரிந்து கொண்டிருக்கிற நெருப்பிலே தூக்கிப் போட்டு விடலாம். சிறிது நேரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்போடு இரும்பும் காய்ந்து தகதகவென ஒளி விடத் தொடங்கும். ஆனால் பாலைக் காய்ச்ச வேண்டுமானால் இரும்பைப் போட்டதுபோல அடுப்பிலே அப்படியே கொட்ட முடியாது. அப்படிக் கொட்டினால் பாலும் வீணாகும்நெருப்பும் இல்லாது போகும். நெருப்பின் சூட்டை வாங்கிஅதனிடத்தில் சாரச் செய்கின்ற பாத்திரம் ஒன்று இடையில் வேண்டும். 

 

            அதுபோலவேஉயிர் நேரே அனுபவத்தைப் பெறுவது இறைவனுடன் இணைந்து முத்தியாகிய இன்பம் பெறும்போது தான்இது இரும்பு நேரே சூட்டைப் பெறுவது போன்றது. நல்வினை தீவினைகளின் பயனாகிய இன்ப துன்ப அனுபவத்தைப் பெறும்போது பாலுக்கும் நெருப்புக்கும் இடையிலுள்ள பாத்திரத்தைப் போன்றுஒரு உடம்பு வேண்டும். 

 

            பாத்திரம் நிலையாக இருக்கவேண்டும். ஆனால்உடம்பு நிலையாக இருக்கக் கூடாது. அது இயங்கவேண்டும். அது சரீரித்தலால், 'சரீரம்என்று பெயர் பெற்றது. உலக அனுபவங்களாகிய இன்ப துன்பங்கள் சரீர சம்பந்தமாகவே வரும். உலகில் வாழும் போது இந்தத் துல சரீரத்தின் சம்பந்தமாக அனுபவங்கள் வருகின்றன. உலகில் வாழ்ந்துமரணம் அடைகிறவர்கள் நரகத் துன்பத்தையும்சொர்க்கலோக இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவம் வெளி உடம்பு எனப்படும் தூல உடம்பினால் வருவது அல்ல. சூக்கும உடலைச் சார்ந்து வருவது. 

 

            இத்தகைய சரீரங்களில் எதுவுமே இல்லை என்றால் உயிரானது நேரே இறைவனோடு ஒன்றி எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறது. எனவேஉயிர் எப்போதும் தனித்து இராது. ஒன்று உடம்போடு ஒட்டி இருக்க வேண்டும்உடம்போடு ஒட்டி இருப்பது புகுந்த வீடு அல்லது வாடகை வீடு.  அல்லது இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். அது சொந்த வீடு. வாடகை வீடு பலவாகும். சொந்த வீடு ஒன்றே ஆகும்.

 

            உலகில் வாழும்போது பலவகை நுகர்ச்சிகளையும் அடைகிற இந்தப் புற உடலை இறைவன் மிக அற்புதமாகவும் மிக நுட்பமாகவும் படைத்திருக்கிறான். இந்த இயந்திரத்துக்கு உள்ளே எத்தனையோ சிறிய சிறிய உறுப்புக்கள் இருக்கின்றன. புதிய புதிய இயந்திரங்களை விஞ்ஞானிகள் படைக்கும்போது கண்டு வியந்து போற்றுகின்ற நாம்,நமது உடலாகிய அற்புதமான இயந்திரத்தைப் பார்த்து மிக்க வியப்பை அடைவதில்லை. நமது முயற்சி ஏதும் இல்லாமலேயேமிக ஏளிதில்இது கிடைத்திருப்பதுதான் இத்தகு நிலைக்குக் காரணம். இதன் அருமை புலப்படுவது இல்லை.பற்பல வகைகளில் ஆச்சரியப்படும்படியாகஇறைவனுடைய திருவருள்உயிர் வாழ்வதற்கு உரிய வீடான இந்த உடம்பைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. 

 

            வாடகை வீடாக இருந்தாலும் நாம் அதில் வாழ்வதனாலே தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். பழுது உபார்த்துக் கொள்கிறோம். நம்முடைய வீடு அல்ல என்றாலும்நாம் அதில் வாழவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறோம். இல்லையானால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.அங்கே இருக்கும் காலம் வரையில் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையதாகிறது.

 

            அதுபோல,உடம்பு நமக்குச் சொந்தமானது அல்ல என்றாலும்அதனால் வருகின்ற துன்பங்களைப் போக்கிக் கொண்டு அதை நன்றாக நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைத் திருமூலர் சொல்கிறார். 

 

            உடம்பு ஒரு மல பாண்டம். இழுக்கு உடையது. இதை எதற்காகப் பாதுகாக்க வேண்டும்என்றுதான் அவர் எண்ணி இருந்தார். பின்பு உடம்பினைப் பேணத் தொடங்கினார். உடம்பு கொழுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஊனைப் பெருக்குவது நோக்கம் அல்ல.உடம்புக்குள்ளே இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து கொண்டார். இறைவன் திருக்கோயிலாகிய இதை நன்றாகப் பாதுகாத்துக் கொள்வது முறை என்று உணர்ந்தார். 

 

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்;

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று,

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" --- திருமூலர்.

 

            நாமும் உடம்பைப் பாதுகாத்துக் கொள்கிறோம். யோகிகளும் உடம்பை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். இருவர் செயலும் ஒன்றாகத் தோன்றினாலும்குறிக்கோள் வேறானது. கத்தியைத் தீட்டுகின்ற ஒருவர் உயிரை வதைக்கவும் பயன்படுத்தலாம். வழியில் உள்ள முட்செடிகளை அகற்றவும் பயன்படுத்தலாம். செய்கை ஒன்றுதான். நோக்கம் வேறு.

 

            ஞானிகளோ உடம்பினுள்ளே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்துஅவன் வாழ்கின்ற கோயிலாகிய வீட்டை நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தினால் ஒம்புகிறார்கள். நம்மவர்கள் அப்படி அல்ல. நாக்குச் சுவை கருதிகண்ட கண்ட உணவுகளை உட்கொண்டு உடம்பிலுள்ள இந்திரியங்கள் தருகிற இன்பத்தையே நுகர்ந்து,அவை வன்மை இழந்த பிறகு வருந்திச் செத்துக் கொண்டிருக்கிறோம். மரணமில்லாப் பெருவாழ்வை விரும்பும் ஞானியர்கள் அதை அடைவதற்குரிய கருவியாகிய உடம்பைஉண்ணவேண்டிய உணவை மட்டும் உண்டு பேணி வருகிறார்கள்.

 

            இந்த உடம்பாகிய கருவிக்கு ஒரு கால எல்லை உண்டு. அக்காலம் வரையில் உடம்பைப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. எந்தக் காலத்தும் நாம் உடம்புக்கு அடிமை ஆகிறோம். உடம்பைக் கருவியாகக் கொண்டுஅதற்கு அடிமையாகாமல்அதை எந்தச் சமயத்திலும் உதறித் தள்ளும் நிலையில் வாழ்கிறார்கள் ஞானிகள். 

 

            உடம்பாகிய இந்த வீட்டில் வாழும் நாம் உடம்பை விட்டு நீங்கினால்,வேறு கட்டுப்பாடு இன்றி இறைவனுடைய திருத் தாளாகிய முத்தி இன்பம் ஒன்றையே பெறவேண்டும். அதுதான் நமது இலட்சியம் அப்படி இன்றி,இந்த உடம்பை விட்டு வேறோர் உடம்பை எடுக்கும் நிலை வரக்கூடாது. நாம் இறந்து இறந்து பிறந்து கொண்டிருக்கிறோம். புற உடம்பு அழிகிறதே தவிர உயிருக்கு உட்சட்டையாக இருக்கிற சூட்சும காரண சரீரங்கள் அழிவில்லாமல் இருக்கின்றன. அவற்றை விட்டு உயிர் நீங்க வேண்டுமானால்,அது தனது சொந்த வீடாகிய இறைவன் திருவடியில் பொருந்தும் முயற்சியைச் செய்ய வேண்டும். 

 

            தெரு வீதியிலே படுத்து உறங்கும் ஏழையாக இருந்தாலும்மாட மாளிகையில் படுத்துக் களிக்கும் செல்வனாக இருந்தாலும் பிறக்கும்போது எவ்வித வேற்றுமையும் இல்லாமல் இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடிசையாகிய இந்த உடம்போடுதான் வருகிறார்கள். இந்தக் குடிசை நமக்குச் சொந்தமானது அல்ல என்று அலட்சியம் செய்யவும் முடியாது.

 

            இந்த உடம்பாகிய சிறிய குடிசைக்குச் சுவராக இருப்பது தோல். சுவர் இருந்து விட்டால் போதாது. கால் நாட்ட வேண்டும்.இந்த வீட்டுக்கு ஆதாரமாக இருப்பவை நாலாறு கால்கள். நாலு ஆறு என்பதற்கு,இங்கே பத்து என்று பொருள்கொள்ள வேண்டும். பத்துக் கால்களின் மேல் இந்தகு குடிசை அமைந்து உள்ளது. கால் என்றால் தூண் என்றும் சொல்லலாம்காற்று என்றும் சொல்லலாம். இந்த உடம்பாகிய வீட்டைத் தாங்குபவை பத்துக் கால்கள்பத்து வாயுக்கள். 

 

            மூச்சுப் போய்விட்டால்உடம்புபிணம் எனப்படும். உயிரோடு வாழ்கின்ற மனிதனின் உடம்பைத்தான் உடம்பு என்று சொல்கிறோம். வாழ்கின்ற மனிதனின் உடம்பிலே பல வகையான நாடிநரம்புகள் இருக்கின்றன. 72 ஆயிரம் நாடிகள் இருக்கின்றன எனச் சொல்வர். இரத்த ஒட்டம் இருக்கிறதுகை காலை அசைக்கிறோம். இத்தனை செயல்களுக்கும் மூலமாக இருப்பது காற்று. அந்தக் காற்றைப் பத்து வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள்.  உடம்பிலே பல செயல்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருப்பவை பத்து வாயுக்கள். உடம்பாகிய இந்த வீடுபத்துக் கால்களில் சுமத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துக் கால்கள் உடம்புக்கு ஆதாரமாக இருக்கின்றன. 

 

            மற்ற அமைப்புகள் நான்கு கால்களிலே நிற்கிற குடிசைகள்மாடுகள் போன்ற விலங்குகள். மனிதர்களுக்கு இரண்டு கால்களே உள்ளன. ஆகவே இந்தக் குடிசை இரு கால்களால் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது.  "இரு காலால் எழுப்பி" என்றார். இங்கே கால் என்பதற்குக் காற்று என்ற பொருள் இல்லை. முதலிலே காற்று என்ற பொருளில்"நாலாறு காலில் சுமத்தி" என்றார். இங்கே பாதம் அல்லது தூண் என்ற பொருளில்"இரு காலால் எழுப்பிஎன்கிறார். உடம்பாகிய குடிசை தோலால் சுவர் வைத்துபத்துக் காற்றுகளை ஆதாரமாக வைத்துஅவற்றின் மேல் சுமத்திஇரு கால் ஆகிய தூணில் நிற்கிறது. 

 

            இரண்டு பக்கமும் சார்ப்பு இறக்குவதற்கு நடுவில் ஒரு விட்டம் வேண்டும். அந்த விட்டம்போல இருப்பது முதுகு. அது வளையக் கூடிய சக்தி உடையது. வளைமுதுகை விட்டமாக வைத்துஇரண்டு பக்கமும் கையாகிய சட்டத்தை அமைத்திருக்கிறான் இறைவன். இந்தக் குடிசைக்கு மேற்கூரை வேய வேண்டும். கீற்றினாலும் வைக்கோலினாலும் கூரை மேய்வார்கள். பனை நாரையோ கயிற்றையோ கொண்டு கட்டுவார்கள். இந்த உடம்பாகிய வீட்டுக்குக் கூரை தசையினால் வேய்ந்திருக்கிறது. நரம்பாகிய கயிற்றினால் கட்டப்பட்டிருக்கிறது.

 

            இந்தக் குடிசையாகிய உடம்பு நிலையானது அல்ல. எத்தனை காலம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. இறைவன் அலட்சியமாக அதை அமைத்துக் கொடுக்கவில்லை. நூறு ஆண்டு வசிக்கப் போகிற உடம்பு என்பதற்காக நல்ல முறையில் அதைப் படைப்பதும்நூறுநாள் தானே உலகில் வாழப்போகிறது என்பதற்காக மற்றோர் உடம்பை மட்டமாகப் படைப்பதும் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகதோலால் சுவர் வைத்துநாலாறு காலில் சுமத்திஇரு காலால் எழுப்பிவளை முதுகு ஒட்டி,கைநாற்றி நரம்பால் ஆர்க்கை இட்டுத் தசை கொண்டு வேய்ந்துபடைக்கிறான். 

 

            எவ்வளவுதான் அற்புதமான வீடாக இருந்தாலும் இதிலேயே இருந்துவிட முடியாது. சென்று சேருகின்ற இடம் ஒன்று உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பல இடங்களில் குடியிருந்தவன்,சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கும் காலம் ஒன்று வரும்.  இந்த உடம்பாகிய புகுந்த வீட்டை விரும்பாமல்,நிலைத்த இன்ப வீட்டைசொந்தமாக உள்ள முத்தி வீட்டைப் பெறலாம் என்று நினைக்கும் பக்குவம் ஒரு காலத்தில் வந்தே தீரும்.   இந்த உடம்பு எங்கே போனாலும் துக்கம்தான். இதிலும் எந்த உறுப்புக் கெட்டுப் போனாலும்,போனது போனது தான். இந்த வீட்டில் இருக்கிறபோதே சொந்தமாக வேறு ஒரு பாதுகாப்பு உள்ள வீட்டைக் கட்டிக் கொண்டால்தான் இந்த வீடு அழியும் போதுதுன்பம் இல்லாத நிலையான ஆனந்தத்தை அளிக்கும் இடத்துக்குப் போக முடியும்என்று உணர்ந்தார்கள் ஞானிகள். வாடகை வீட்டில் உள்ள ஒருவன் வேறு ஒரு வாடகை வீட்டைத் திட்க் கொள்வது சிரமம். வாடகை வீட்டில் உள்ளபோதேதனக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிவிட்டால்ஆனந்தமாக வாடகை வீட்டில் இருந்து வெளியேறி விடலாம்.

 

            இன்பத்தைப் பல காலம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற மனிதன்அந்த இன்ப நுகர்ச்சிக்குக் கருவியாகிய உடம்பு பல காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறான். உடம்பு நெடுங் காலம் இராது என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் அறிவு மயங்கிநிலையாத உடம்பை நிலைக்கப் பண்ணக் காயகல்ப மருந்தை உண்ணுகிறான். சித்தர் என்றுசாமியார் என்று யார் யாரையோ தேடிச் சென்று காலில் விழுகிறான். "ஆசைக்கு ஓர் அளவு இல்லை...நெடுநாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னும் காயகல்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் என்று இந்த நிலையைத் தாயுமானவர் பாடுகிறார்.

 

            ஆகவேஉண்மை தெரிந்தவர்கள்உடம்பு இருக்கும் போதேஉயிர் உடம்பை விடும்போது சென்று சேர வேண்டிய இலட்சியத்திலே குறியாக இருப்பார்கள். அந்த இலட்சியத்திற்குத் தடையாக இருக்கிற உலக மாயையில் சிக்க மாட்டார்கள். உடம்பின் மீது கொண்ட பற்று,இறைவன் திருவடியில் கொண்ட பற்றாக மாறும். 

 

            தாமரை வளர வேண்டுமானால் சேறு நிறைந்த குளம் வேண்டும். சேற்றிலே முளைக்கின்ற தாமரை வேண்டும் என்பவன்,குளத்தின் சேறு இழிந்த பொருளாக இருந்தாலும் அதைக் காப்பாற்றுவான். 

 

            உடம்பு சேறு நிறைந்த குளமாக இருந்தாலும் முளைக்கின்ற தாமரை ஆகிய ஞானத்திற்காகஞானிகள் அதைக் காப்பாற்றினார்கள். உடம்பு நிலையற்றது என்பது தெரிந்தமையால்,அது செத்துப் போவதற்குள்முத்தி இன்பத்தைப் பெறுவதற்கு முயன்றார்கள். இந்திரிய சுகத்தை எண்ணியே நாம் உடம்பினிடத்தில் அபிமானம் கொள்கிறோம். ஞானிகளோஞானத்தைப் பெறுவதற்குஇறைவனின் திருவடியாகிய முத்தி வீட்டைப் பெறுவதற்குத் தமக்கு வாய்த்துள்ள உடம்பினிடத்தில் அபிமானம் கொண்டார்கள். 

 

            அற்புதமான மாணிக்கத்தைப் பெற்ற ஒருவன் அழுக்கான கிழிசல் துணி கிடைத்ததனால் அதில் முடிந்து கொண்டு போகிறான். அழுக்குப் படிந்த கிழிசல் துணியில் அவனுக்கு இருக்கும் அபிமானம் அதனுள் இருக்கும் மாணிக்கத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதால் உண்டாகிறது. வீட்டுக்குச் சென்ற பிறகு மாணிக்கத்தைப் பெட்டியில் வைக்கிறான். பிறகு கிழிசல் துணியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எறிந்து விடுகிறான்

 

            உயிராகிய மாணிக்கம் இறைவனது திருவடிகிய பெட்டியை அடையும் வரைக்கும் அது பத்திரமாக இருக்க வேண்டும் என்று,அது முடியப்பட்டிருக்கும் உடம்பாகிய அழுக்குக் கந்தையிடம் அபிமானம் வைத்திருப்பார்கள் ஞானிகள்.

 

            குளிர் காய வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். நெருப்பிடம் நெருங்கினால் சுட்டுவிடும். அப்பால் அகன்றால் குளிர் வாட்டும். நெருப்பை விட்டு மிகவும் அகலாமலும் அதனிடத்தில் மிகவும் நெருங்காமலும் நின்று குளிர் காய்வதைப் போல,உடம்பை விடாமலும்உடம்பினால் வருகின்ற சுகத்தையே கருதி அதனிடம் நெருங்காமலும் இருப்பார்கள் ஞானிகள். உடம்பினுள் உயிர் வாழ்கின்ற காலம் வரையில் இறைவனுடய திருத்தாளைச் சென்று சேருவதற்கு உரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். 

 

            இன்னார் ஒருவர் எங்கே இருக்கிறார்?என்று நாம் கேட்டால்அறிந்தவர்கள்அவர் இருக்கும் ஊரைச் சொல்லிதெருவைச் சொல்லிவீட்டு எண்ணைச் சொல்லுவார்கள்.

அப்பர் பெருமான் இந்த விதமாகச் சொல்லுகிறார்.

 

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

    மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;

    அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை;

தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்;

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!"

 

            முத்தி வீடு என்பதற்குப் பலவிதமான அடையாளங்களை அவரவர்களுடைய தகுதிதன்மைநிலைக்கு ஏற்பச் சொன்னாலும்பொதுவாகச் சொல்லப்போனால் முத்தி வீடு என்பது இறைவன் திருவடிதான். அதைத் தலைப்படுவதற்கு உரிய வழியை அப்பர் பெருமான் சொன்னார். இறைவன் திருவடி அடைந்தார் என்று முத்தி பெற்றவர்களைச் சொல்வது எல்லோருக்கும் வழக்கம்.

 

            சர்க்கரை வேறுஇனிப்பு வேறு என்று வேறு பிரித்துக் காட்ட முடியாததைப் போல இறைவனுடைய தாள் வேறுஅதை அடைந்தவுடன் கிடைக்கின்ற இன்பம் வேறு என்று வேறுபடுத்திச் சொல்ல முடியாது. 

 

            உலகத்தார் இறைவனிடம் வைக்கும் வேண்டுகோள் பல வகை. சிலர் தமக்கு உடம்பில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டிஅடுத்த பிறவியிலாவது நல்ல உடம்பாகக் கொடுக்க வேண்டும்என்பர். அடுத்த பிறவியில் பணக்காரர் மாளிகையில் பிறக்கும்படி செய்ய வேண்டும் என்பவர் சிலர். சுவர்க்க இன்பத்தைப் பெற வேண்டும்என்று விரும்புவார் சிலர்.

 

            ஆனால் "தோலினால் சுவர் வைத்துதசவாயுக்களை ஆதாரமாக வைத்துஇரண்டு கால் வைத்துவளைகின்ற முதுகாகிய விட்டம் அமைத்துகைகளாகிய சட்டத்தைத் தொங்க விட்டுநரம்பாகிய ஆர்க்கையினால் தசை கொண்டு வேய்ந்திருக்கும் இந்த அகம் பிரிந்தால்,உயிர் சென்று சேரவேண்டிய இடம் ஒன்றுதான். அதுவே இறைவன் திருத்தாள்என்கிறார் அருணகிரிநாதர்.

 

            வாடகை வீடு நிரந்தரமானது அல்ல. அடிக்கடி வாடகை வீட்டை மாற்றிக் கொண்டு இருப்பதை விடசொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டுஇன்பமாக வாழலாம்.

 

            உடம்பை விட்டு நீங்குகின்ற உயிருக்கு மீட்டும் உடம்பு வராமல் இருக்க வேண்டுமென்றால்இறைவனுடைய இரு தாள் அன்றி வேறு பாதுகாப்பான இடம் இல்லை. அந்தத் தாளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல்உயிராகிய மாணிக்கத்தை இறைவனுடைய தாளிலே சேர்க்கும் வரையில் பாதுகாக்கும் கருவியாக உடம்பை நினைக்காமல்இந்திரிய சுகமே பெரிது என்று வாழ்வது கூடாது.  இதனால் மீட்டும் பிறந்து இன்ப துன்பங்களுக்கு ஆளாகி இப்போது போலவே எப்போதும் அல்லலுற வேண்டும். பாசத்துக்குக் கட்டுப்பட்டு உடம்பெடுத்து வந்து இறைவனுக்கு அடியவன் ஆகி,இறைவனுடைய இருதாளாகிய முத்தி வீட்டைப் பெற்று நித்திய இன்பத்தை அனுபவிக்கவேண்டும். அதை விட வேறு கதி இல்லை  என்று உபதேசம் புரிகிறார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"தோலால் சுவர் வைத்துநால்ஆறு காலில் சுமத்தி,இரு 

காலால் எழுப்பிவளை முதுகு ஒட்டிக் கைந் நாற்றிநரம் 

பால்ஆர்க்கை இட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம் பிரிந்தால்,

வேலால் கிரிதுளைத்தோன் இருதாள்அன்றி   வேறு இல்லையே". --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

          தோலினாலே சுவர் எழுப்பிபத்து வாயுக்களால் தாங்குவித்துஇரண்டு கால்களாகிய தூணின்மேல் நிற்கச் செய்துவளைந்த முதுகு எலும்பு ஆகிய மேல் முகட்டை அமைத்துஇரு கைகள் ஆகிய கொடுங்கைகளைத் தொங்கவிட்டுநரம்புகளால் கட்டிபுலால் என்ற பூச்சவேலையால் முடிச் செய்த இந்த உடம்பாகிய வீட்டை விட்டு உயிர் பிரியும் வேளையில்வேற்படையால் கிரவுஞ்ச மலையைத் தொளைத்த முருகப் பெருமானுடைய இரண்டு சரணாரவிந்தங்களைத் தவிரப் புகலிடம் வேறு இல்லை. 

 

           புகுந்த வாடகை வீடாகிய இந்த உடம்பை விடுத்த பின்னர்சொந்த வீடாகிய இறைவன் திருவடியை அடைவதற்கான முயற்சியை இந்த உடம்பில் வழுகின்ற போதே மேற்கொள்ள வேண்டும்.

 

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...