இனநலம் எல்லாப் புகழும் தரும்

 


இனநலம் எல்லாப் புகழும் தரும்

-----

 

     பனைமரத்தில் இருந்து அது தருகின்ற நீரை இறக்குன்றார்கள். அதில் சிறிது சுண்ணாம்பு கலந்தால்பருகுவதற்கு இனிய சுவையினை உடையதுமாய்உடலுக்கு நலம் தருவதாய் உள்ள "பதநீர்" ஆகின்றது. நலம் விரும்புவோர் யாவரும் அதனைப் பருகலாம். 

 

     சுண்ணாம்பு  தோயாத  நீரானதுபுளித்துப் போய்கள் ஆக மாறுகின்றது. அதனைக் குடித்தால் அறிவு மயக்கம் கொள்ளுகின்றது. உடல் நலத்தை நாளடைவில் குலைக்கின்றது. கள்ளைப் பருகுபவனுக்கு மட்டுமல்லாமல்அவனது குடிக்கும் கேடு தருகின்றதுஅவனைச் சார்ந்தோர்க்கும் துன்பத்தை விளைக்கின்றது.

 

     பதநீர் எல்லோராலும் விரும்பப்படுகின்றது. கள் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது.

 

     பதநீர்பின்பு பனைவெல்லமாகவும்பனங்கற்கண்டாகவும் மாறி எல்லோர்க்கும் நலம் தந்து உதவுகின்றது. கள்ளானது இழிந்து கழிந்து பின்னர் ஒரு தொடர்பும் இன்றி அடியோடு அழிந்து போகின்றது.

 

     அதுபோலவேஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களானாலும்சத்துவ குணம் உடைய உத்தமரைச் சார்ந்து இருக்கின்ற பிள்ளைநல்லவனாகின்றான்நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்துஇப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றெடுக்கஇவன் தந்தை என்ன தவம் செய்தானோ? (என் நோற்றான் கொல்?) என்று எல்லோரும் புகழும்படியாக (தனது பருவுடலை நீத்த பின்னும்) நல்லோர் மனதில் எக்காலத்தும் வாழுகின்றான்.

 

     நல்லோரைச் சாராதவன்அப்பொழுதில் இருந்தே பொல்லாதவனாக மாறிதானும் பயனுற வாழாமல் போகின்றான்தன்னைச் சார்ந்தோரையும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றான்அவனுடைய சந்ததியும் சீராக இல்லாமல் போகின்றது. "தக்கார் தகவு இலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிதல் வேண்டும்.

 

     "தருமதீபிகை" என்னும் நூலில்இக் கருத்தைத் தாங்கி வரும் பாடல் ஒன்றைக் காண்போம்...

 

"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தார் ஏனும்,

பெரியார் நட்பு உற்றார் பெரியார் --- பெரியார்நட்பு

இல்லரேல் புல்லரேஇன்பனை நீர் சுண்ணம் உறின்

நல்லதுஇன்றேல் பொல்லதாம் நாடு".

 

     பனைமரம் தாய்க்கு ஒப்பு. அதன் நீர் பிள்ளைக்கு ஒப்பு. வெண்ணிறச் சுண்ணம்தூய உள்ளம் படைத்த சான்றோர்க்கு ஒப்பு. பதநீர் நல்ல பிள்ளைக்கு ஒப்பு. கள் இழிந்த பிள்ளைக்கு ஒப்பு.

 

"கள்ளும்பொய்யும்காமமும்கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை".     --- மணிமேகலை.

 

     கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத்தில் தோன்றுங் களவும் (திருட்டுப் புத்தி) தீயன என்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவை என்று பணிமேகலை கூறுகிறது. இந்த அரிய சொல்லைக் கைக்கொள்வதுதான் விவேகம் ஆகும்.

 

      'விவேகம்'என்னும் சொல்லுக்குப்பகுத்தறியும் வல்லமைபுத்திகூர்மைஅறிவுநுட்பம் என்று பொருள் உண்டு. நன்மை தீமையைப் பகுத்து அறிவது விவேகம். வேகம் நீங்கினால் விவேகம் பிறக்கும். வேகத்தில் செய்யும் செயல்கள் முழுமையாக வெற்றியைத் தருவது இல்லை. விவேகத்தோடு செய்யும் செயல்கள் முழு வெற்றியைத் தருவன. "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க" என்று மணிவாசகப் பெருமான் காட்டியது இந்தக் கருத்தில்தான். இதை "நித்தியாநித்திய வஸ்து விவேகம்" "நித்திய அநித்திய நிர்ணயம் தெரி விவேகம்" என்று கைவல்யம் கூறும்.

 

     சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஓர் அரிய மணி. அது நினைத்ததை எல்லாம் அளிக்கும் என்று கூறுவர்.  விவேகத்தை சிந்தாமணி போல அருள்கின்ற "விவேக சிந்தாமணி" என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதை அருளியவர் யார்அவருடைய காலம் என்னஎன்பன போன்ற ஆராய்ச்சிக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை. ஆனாலும்சான்றோர்களால் போற்றப்படுகின்ற நூல் "விவேக சிந்தாமணி" என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. பல வாழ்வியல் உண்மைகளைத் தெரிவிக்கின்ற நூல் இது.

 

     இந்த விவேக சிந்தாமணியில்வினா விடையாக ஒரு செய்தி சொல்லப்பட்டு உள்ளது. வினாவைத் தொடுப்பது ஒரு பரத்தை. அதற்கு விடை இறுப்பவள் அவளது தோழி. பரத்தையின் தோழி பரத்தையாகத் தானே இருப்பாள்ஆனால்பரத்தையர்கள் சிந்தையிலும் அற உணர்வு உள்ளது என்பது இந்த நூலைப் படித்தால் தெரியும். 

 

      தலைவிதனது தோழியைப் பார்த்து, "எனக்குத் தாயைப் போன்ற தோழியே! அற உணர்வை உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணே! உன்னிடத்தில் ஒர் உண்மையைக் கேட்பேன். அதனைத் தெளிந்து எனக்கு நீ சொல்லுதல் வேண்டும். தமக்கு இன்பம் வேண்டிஎன்னைக் கூடி மகிழ வருபவர்கள்எனக்கும் இன்பத்தைத் தருகின்றார்கள். அது அல்லாமல் பொன்னையும் பொருளையும் வேறு தருகின்றார்கள். அதுவும் அல்லாமல் எனது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றார்கள். இது ஏனோ?" என்று கேட்கின்றாள். பாடலைப் பார்ப்போம்....

 

"அன்னையே அனைய தோழி!

            அறந்தனை வளர்க்கும் மாதே!

உன்னை ஓர் உண்மை கேட்பேன்,

            உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்;

என்னையே புணருவோர்கள் 

            எனக்கும் ஓர் இன்பம் நல்கிப்

பொன்னையும் கொடுத்துப் பாதப் 

            போதினில் வீழ்வதேனோ? "

 

     இந்த வினாவிற்கு விடையைத் தோழியானவள் திறம்படத் தெளிந்து சொல்லுகின்றாள். நமக்கு அறிவில் தெளிவு இல்லாமல் குழம்பி இருக்கும் காலத்தில்தெளிவுபடுத்துவது தோழன் ஆகும். எனவேதான்நட்பைப் பெரிதும் போற்றுகின்றோம். அப்படிப்பட்ட அருமையான தோழிதனது தலைவியின் ஐயம் தெளிதல் பொருட்டுப் பின்வருமாறு விடை பகருகின்றாள்.

 

     "காதல் உணர்விற்குத் தலைவனான மன்மதன்,காதல் உணர்வை உயிர்களுக்கு ஊட்டிகாதல் போரை உண்டாக்குவான். (மலர்க் கணைகளைச் சொரிவான்) அந்த மன்மதனே மயங்கி விழும்படியான பெருத்துக் குவிந்த மார்பகங்களை உடையவளே! (எனது தலைவியே!)  நான் ஒன்று கூறுவேன்கேட்பாயாக. நல்ல அறச் செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமானது பாழாகவேண்டும் என்றுதான்பிரமதேவன் நம்மைப் போன்ற கணிகைகளையும்குடித்து மயங்குவதற்கான கள்ளையும்பொருளைத் தோற்று அழிவதற்கான சூதாட்டத்தையும் படைத்து வைத்தான்" பாடலைப் பார்ப்போம்.... 

 

"பொம் எனப் பணைத்து விம்மிப்

            போர்மதன் மயங்கி வீழும்

கொம்மைசேர் முலையினாளே!

            கூறுவேன் ஒன்று கேண்மோ;

செம்மையில் அறம் செய்யாதார் 

            திரவியம் சிதற வேண்டி

நம்மையும் கள்ளும் சூதும்

            நான்முகன் படைத்தவாறே!"

 

     திரு நீக்கப்பட்டார் என்பதுதிருவால் நீக்கப்பட்டவர் என்று  பொருள்படும். விலைமாதர் ஆசை கொண்டோர்கள் குடிப்போர் மற்றும் சூதாடுவோர் ஆகிய இவர்களே திருவால் நீக்கப்பட்டவர்கள் என்பது மேற்குறித்த வினாவிடைப் பாடல்களால் தெளிவாகும். இந்த உரையாடல் பாடல்களுக்கு,  கரு எங்கிருந்து வந்தது என்று பார்ப்போமானால்அதுவான்புகழ் கொண்ட திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளே ஆகும். கள்திருநீக்கப்பட்டார் தொடர்புகள் மூன்றில் ஒன்று என்று திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

 

"இருமனப் பெண்டிரும்கள்ளும்,கவறும்,

திருநீக்கப் பட்டார் தொடர்பு"

 

என்பது திருக்குறள்.

 

     இருமனப் பெண்டிரும் - இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் - கள்ளும்சூதும் - சூதாட்டம் ஆகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

 

     நல்லோர் சேர்க்கை நலத்தை விளைக்கும். தீயோர் சேர்க்கை தீமையை விளைக்கும். சான்றோர் இனத்துள் தானும் ஒருவனாக வாழ வல்லவனைப் பகைவர் எவரும் அவனைச் செய்வதற்கு எதுவும் இல்லை என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

 

"தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுகவல்லானை,

செற்றார் செயக் கிடந்தது இல்"             --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

யோகமுனி ராகவனை உற்றுஅரக்கர் போர்களைந்தே

யாகம் முடித்தான்,இரங்கேசா! --- ஆகையால்

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்.    

 

இதன் பொருள் ---        

 

       இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! யோகமுனி - இராஜயோக சாதக மாமுவனிவராகிய விசுவாமித்திரர்ராகவனை உற்று - இராம பிரானைத் துணையாகப் பெற்றுஅரக்கர் போர் களைந்து - மாரீசன் சுவாகு என்னும் அசுரர் சண்டையை நீக்கியாகம் முடித்தான் - தாம் தொடங்கின யாகத்தை நிறைவேற்றிக் கொண்டார்,  (ஆகையால்இது) தக்கார் இனத்தனாய் - மேலாரோடு சேர்ந்து கொண்டவன் ஆகிதான் ஒழுக வல்லானை - (ஒருவன்) தான் தக்கபடி நடந்துகொள்ள வல்லவனானால் (அவனை)செற்றார் - பகைவர்செயக் கிடந்தது இல் - செய்யக் கூடியதாகிய தீங்கு ஒன்றும் இல்லை (என்பதை விளக்குகின்றது).

 

      கருத்துரை--- பெரியாரைச் சேர்ந்தாரைப் பகைவர் அஞ்சுவார்கள்.

 

      விளக்கவுரை--- விசுவாமித்திரர் இராமபிரானைத் துணையாகக் கொண்டுபோய்த் தமக்கு முதற்பகையாகிய தாடகையைக் கொல்வித்துபிறகு யாகபங்கம் செய்த தாடகையின் மக்களாகிய மாரீசன்சுவாகு என்பவரில் முன்னவனை வெருட்டித் துரத்திக் கடலில் இடுவித்துபின்னவனை ஓரே அம்பால் எமனுலகு சேர்ப்பித்தார். பிறகு அவர் தமது யாகத்தை இடையூறு இன்றி முடித்து, "உதவி வரைத்து அன்று உதவிஉதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்றபடி, இராமபிரான் தமக்குச் செய்த உதவிக்கு மாறுதவியாகஅவர்க்குத் தெய்வ வாளிகள் வழங்கிஅவரை அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குப் போய்சிவ வில்லை வளைப்பித்துச் சீதையைத் திருமணம் செய்வித்தார்.     

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...                  

 

"சிறியர் ஆயினார் சார்பினை விழையன்மின்,

     திறல்கெழு பெரியோராம்

அறிஞர் ஆயினார் சார்பினை விழைமினோ,

     அலர் இதழ் விரிகொன்றை

வெறி நறுந்தொடை எம்பிரான் சார்பினை 

     விழைதலால்,உரகங்கள்

மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின 

     வாழ்ந்தனையோ என்ன."     --- காஞ்சிப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     சிறியராவார் சார்பினை விரும்பாது இருங்கள் வலிமை பொருந்திய பெரியோர் ஆகிய அறிஞர் தொடர்பினை விரும்பி இருங்கள். இதழ் அலர்ந்து விரிகின்ற கொன்றையின் நறுமணங்கமழும் மாலையை அணிந்த எமது சிவபெருமான் சார்பினை விரும்பி இருந்த பாம்புகள்குற்றமற்ற வலிமை நிரம்பிய கருடனை நன்றாக உள்ளாயா?என்ன வினாவின.

 

"ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்;

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்

ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ?என்று

      உரைத்தவிதம் என்னல் ஆமே!"  --- தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் ---

 

     பிள்ளாய்! ஆம் எனக் கொடுக்கும் பெரியோரை அடுத்தவர்கள் - இளைஞனே! முடியும் என்று அளிக்கும் சான்றோரைச் சார்ந்தவர்கள் அவனிக்கு எல்லாம் நாம் அதிகம் என்பர் - உலகிலே நாமே சிறப்பு உடையவர்கள் என்று  நடந்து கொள்வர்!நண்ணாரும் ஏவல் செய நாளும் வாழ்வார் - பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர்வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் - வானமே என்னும் எங்கும் நிறைந்த திருமேனியை உடைய தண்டலை இறைவரின் அணிகலனாக வளர்க்கப் பெற்ற பாம்புஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோஎன்று உரைத்தவிதம் என்னலாமே - ‘என்ன பிள்ளாய்! கருடனேநீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

 

      கருடனைக் கண்டால் பாம்பு நடுங்குவதுஇயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால்,கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தால் சுகம்என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும். 

 

 

 

 

 

செல்லும் பொருள் - செல்லாப் பொருள்

 


செல்லும் பொருள,செல்லாப் பொருள

-----

 

     உலகில் மிக உயர்ந்த பக்குவிகளும் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் அபக்குவிகளும் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு உபதேசங்களை அருணகிரிநாதர் அருளி இருக்கிறார்.

 

     மிக நன்றாகப் படித்த ஒருவர் மிக உயர்ந்த நிலையில் சொன்னால் எளியவர்கள் பலருக்கு  விளங்காது. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் எளிய நடையில் சொன்னால்படித்தவர்களுக்குப் பிடிக்காது. எல்லா வகையிலும் பேசினால் யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கொள்வார்கள். எல்லோருக்கும் பயன்படும் வகையில் தெளிவாகப் பேசக் கூடியவர்கள் அருளாளர்கள்.   தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற்று மகிழவேண்டும் என்னும் அருள் உள்ளம் படைத்தவர்கள் அவர்கள். உலகியல் வாழ்க்கையில் தொடர்புடைய மக்கள் அவரவர்  மனப் பக்குவத்திற்கு ஏற்பப்  பயன் அடையக் கூடிய வழிகளில் அனுபவமாக அருணகிரிநாதர் உபதேசம் செய்கிறார்.

 

      மனம் அடங்காதவர்களுக்கு மனம் அடங்க நல்வழி காட்டுகிறார்.  மனம்அடங்கிய பிறகு எந்த வழியில் போக வேண்டும் என்றும் காட்டுகிறார். நல்ல மனம் உடையவர்கள்பக்குவம் இருந்தும் வழி தெரியாது நிற்கும்போதுமேற்கொள் வேண்டிய நெறியைத் தம் நெஞ்சுக்குச் சொல்வது போலச் சொல்லி வழி காட்டுகிறார். மிகக் கீழ் நிலையில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டும் என்று ஓர் உபதேசத்தை இப்போது சொல்கிறார். அந்த உபதேசம் அறத்தில் தொடங்குகிறது.

 

     ஓர் ஊரிலிருந்து  மற்றோர் ஊருக்குப் போகிறவர்கள் பெட்டிகளில் பொருள்களைக் கட்டிக் கொண்டு போவார்கள். நீண்ட தூரம் போகிறவர்கள் தேவையான பணத்தை கொண்டு போவது வெளிநாட்டுக்குப் போகிறவர்கள் இந்த நாட்டுப் பணத்தை நிறைய எடுத்துக் கொண்டு போனாலும் பயன் இல்லை. இந்த தேசத்து நாணயம்போகும் தேசத்தில் செலாவணி ஆகாது. அங்கே செலாவணி ஆகக் கூடிய வகையில்  நாணய மாற்றம் செய்து,கொண்டு போக வேண்டும்.

 

     இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் நெடுந்துரப் பயணம் ஒன்று உண்டு. உலகத்தில் பிறந்த யாராலும் இந்தப் பயணத்தைத் தவிர்க்க முடியாது.உலகியல் பயணங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது போலவேஇந்த நெடுவழிப் பிரயாணத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்புச் செய்ய வேண்டும். இங்கே சுகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் போகிற இடத்திலாவது சுகமாக இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு. 

 

     வீட்டின் உள்ளே இருக்கும் போது அழுக்குச் சட்டைவெளியே போகும் போது வெள்ளைச் சட்டை என்று நாம் ஒரு ஒழுங்கு  வைத்துக் கொள்கிறோம். அதே போலப் போகிற இடத்தில் சுகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற நாம்சுகமாக இருப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்திக்கவேண்டும். ஆனால்நாம் தவிர்க்க முடியாததான அந்த நெடுந்தூரப் பயணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனால்ஏற்பாடுகளைச் செய்து கொள்வது பற்றிய எண்ணமும் உண்டாவதில்லை. இந்த உலகத்தில் நம்மிடம் உள்ள செல்வத்தைஅந்த உலகத்தில் பயன்படுவதற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள  மறந்துவிடுகிறோம். 

 

     இங்கே வாழும் காலத்தில் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மையானதாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் மக்கள் மதிக்கமாட்டார்கள். வேறு உலகத்திற்குப் போனால் மனத்தை வளர்த்துப்  பக்குவப்படுத்த வேண்டும். ஆயிரம் நூல்கள் படித்திருந்தாலும் மிக்க அறிவுடையவனாக இருந்தாலும் ஒர்இடத்திற்குப் போகும் போது நல்ல ஆடம்பரமான உடை இல்லாமல் போனால் மதிப்பு கிடைக்காது. 

 

     எந்த வகையில் பார்த்தாலும் தோற்றம் நன்றாக இருக்கவேண்டும். இங்கே உடம்பின் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். அங்கே உள்ளத் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஆடை அழுக்கு இல்லாமல் இருக்கவேண்டும். அங்கே மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இந்தஉலகத்தில் நம்மிடம் இருக்கும் பொருளை அந்த உலகத்தில் செலாவணி ஆகின்ற அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயம்தான் புண்ணியம்அது அறத்தினால் வருவது. வேறு உலகத்தில் செலாவணி ஆகும் நாணயங்களைப் பெறுவதற்கு இந்த உலகத்தில் நம்மிடமுள்ள நாணயங்களைத்அற வழியில் செலவிட வேண்டும். இங்கே செய்கிற தருமம் அங்கே பயன்படும் என்ற  நம்பிக்கை இருந்தால்தான் அப்படிச் செலவிட மனம் வரும்.அறச் செயல்களைச் செய்த உடனே கண்கூடாகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. 

 

     நல்ல காரியம் செய்யும்போது ஐயங்கள் உண்டாகின்றன. "இறைவனுக்குக்  குடம் குடமாகப் பால் அபிடேகம் செய்கிறார்களேஇதனால் என்ன பயன்எத்தனையோ குழந்தைகள் குடிக்கப் பால் இன்றித் தவிக்கும் போது எதற்காக இப்படிப் பாலைக் கொட்ட வேண்டும்?" என்பது போன்ற சந்தேகம் எழும். அதற்குக் கண் முன்னாலே ஒருபயனும் தோன்றவில்லை அல்லவா?  "இறைவனுக்குப் பால் அபிடேகம் செய்தல் நல்லதுஎன்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பால் அபிடேகம் செய்யவேண்டுமென்று சொல்லவில்லை. வீட்டில் குழந்தை பாலுக்காகக் கதறும் போது,  இறைவனுக்குப் பால் அபிடேகம் செய் என்று சொல்லவில்லை. எவ்வளவு இயலுமோஅந்தஅளவுக்குச் செய்தால் போதும்.நம்முடைய நாட்டில் எங்கே பார்த்தாலும் முன் காலத்தில் பசுக்கள் மிகுதியாகஇருந்தன. வறுமையான வீட்டில் கூட ஒரு மாடு இருந்தது. 

 

     அப்படி இருந்த நாட்டில் இப்பொழுது நமக்குப் பால் போதியதாக இல்லை. பால்தயிர்நெய் ஆகியவற்றில் எதுவும் சுத்தமானதாகக் கிடைக்கவில்லை. வறுமை மிகுதியான வீட்டில் ஒரு மாடாவது அந்தக் காலத்தில் இருக்கும் என்றால் எத்தனை பசுக்கள் நாட்டில் இருந்திருக்கும்! "சீர்த்த முலை பற்றி வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்"  என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். மனிதர்களுடைய  தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பசுமாடுகளின் தொகை இருந்தமையால்தேவைக்கு அதிகமான பால் மிகுதியாகக் கிடைத்தகாலம் அது. தேவைக்குமேல் பால் கிடைக்குமானால்மிஞ்சின பாலை அப்படியே வைத்துப் பல நாளுக்குக் காப்பாற்ற முடியாதுபுளித்துப் போய்விடும். பால்  பயனின்றி வீணாகிறது என்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகிவிட்டால் பால் கறக்கும்ஆர்வம் குறைந்து போகும்பசுக்களைப் பேணும் ஊக்கமும் போய்விடும்.

 

     சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தேவைக்கு மேல் அதிகமாகக் கோதுமை  விளைந்தமையால் அவற்றைக் கப்பலில் எடுத்துப் போய்க் கடலில் கொட்டினார்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்துவிட்டது. காரணம் என்ன?  சென்ற ஆண்டு கோதுமை விளைவித்தோம். அதைக் கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள்.  எதற்காக இவ்வாண்டு அவ்வளவு உழைக்க வேண்டும்என்று பலர் ஊக்கம் குன்றி இருக்கக் கூடும். அப்படி இல்லாமல் எத்தனை விளைந்தாலும் அதற்குச் சிறந்த பயன் உண்டென்று தெரிந்தால்மேலும் மேலும் விளைச்சல் அதிகமாகிக் கொண்டே வரும்.

 

     கோதுமை அளவுக்கு மிஞ்சி அமெரிக்காவில் விளைந்தது போல இந்நாட்டில் பால் அதிகம் இருந்தது. இறைவனுக்கு அபிடேகம் செய்வது உயர்வு என்று சொன்னார்கள்.  படிப் பால் மிஞ்சியவன் படிப் பால் கொண்டு முழுக்காட்டினான்.. குடப் பால் மிஞ்சியவனும் குடப் பால்  கொண்டு முழுக்காட்டினான். மிஞ்சினால் பின்னும் அதிகப் பயனுள்ள காரியத்துக்குப் பயன்படுகிறது என்ற எண்ணம் இருந்ததே இந்த ஊக்கத்துக்குக் காரணம்.  பால் குறைவாக இருக்கும் காலத்தில் அபிடேகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே?  என்ற வினா எழலாம். எந்து ஒரு வழக்கமும் இடைவிடாமல் இருந்தால்தான் சமயத்தில் நல்ல பயனைத் தரும். பால் இல்லாத காலத்தில் அபிடேகத்தை நிறுத்திவிட்டால்மீண்டும் அந்தப் பழக்கம் வருவது எளிது அல்ல. வழக்கத்தை விடாதே என்று மட்டும்சொன்னார்கள். ஒர் உத்தரணி பால்விட்டாலும் போதும். உலகியலுக்கும் அருளியலுக்கும் ஒத்த பழக்கம் இது.

 

     நம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளை இறைவனுக்கு நாம் அர்ப்பணம் செய்தால், நம்மிடம் இல்லாத பொருளை அவன் நமக்கு அளிக்கிறான் என்ற நம்பிக்கை  அடியார்களுக்கு இருந்தது. "இறைவனுக்கு நாம் பால் அபிடேகம் செய்வதனால் என்ன பயன் விளைந்தது?" என்று கேட்பவர்களும் உண்டு. தென்னை மரத்துக்கு வேரிலே விடுகின்ற தண்ணிர் இளநீராக வருகிறது. அப்படி இறைவனுடைய திருவடிக்கு நாம் அன்பால் செய்பவை அருளாக மாறிப் பயன் தருகின்றன. அறத்தில் நம் பொருளையும்ஆற்றலையும் செலவிட்டால் அது புண்ணியமாக மாறிமறுமைக்குப் பயன்படுகின்றது.

 

     வங்கியில் நாம் பணம் போடுகிறோம். வங்கியில் இருப்பவர்கள் நம்முடைய பணத்தைத் தனியாக அப்படியே மூட்டை கட்டி வைப்பதில்லை. ஆனால் ,நம் பணம் அங்கே இருக்கிறது என்பதற்குக் கணக்கு உண்டு. கோயில் கட்டுபவன்தண்ணிர்ப் பந்தல் வைக்கிறவன்ஏழைகளுக்குஉபகாரம் செய்கிறவன் ஆகிய பலர் செய்யும் நற்செயல்களும் இறைவனுடைய அருளாட்சி என்னும் வங்கியில் கணக்கிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. நற்செயல்கள் மட்டுமல்ல. அல்லாத செயல்களுக்கும் கணக்கு உண்டு. 

 

"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று,

ழுது காமுற்று அரற்றுகின் றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."

 

என்கிறார் அப்பர் பெருமான்.

 

     நற்செயல்களுக்கோ,  அல்லாத செயல்களுக்கோ நாம் செலவிட்ட பணத்துக்கு உரிய கணக்கு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இறைவன் கணக்கு மிகச் சரியாகவே இருக்கும். அந்த உலகத்தில் நமக்குப் பயன்படுவதற்குத் தகுந்த அறக்கருணை நாணயமாகவோமறக்கருணை நாணயமாகவோ அவை மாறுகின்றன. எந்த செயலைச் செய்கிறோம் என்பது நம்முடைய பொறுப்பு. நன்மையைச் செய்தால் நன்மை கிடைக்கும். எனவேநன்மை தரும் செய்ல்களையே செய்து வரவேண்டும் என்று பெரியவர்கள் வற்புறுத்தினார்கள்.

 

     இவ்வுலகில் பிறந்த மக்கள் எல்லோரும் கடைசியாகச் செய்ய வேண்டிய பயணம் ஒன்று இருக்கிறது. அது நெடுவழி. அந்த வழியில் செல்லும்போது நமக்குத் பயன்படும் செல்வத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் பத்து வீடுகள் இருக்கின்றன. பல இலட்சம் ரூபாய் இருக்கிறது. நிலபுலங்கள் உள்ளன. இவை பயன்படமாட்டாவாஎன்றால் "இவை யாவும் போகக்கூடிய உலகத்தில் சுகமாக இருப்பதற்குப் பயன்பட மாட்டா என்றுதான் சொல்லவேண்டும். இம்மையிலும்மறுமையிலும் சுகவாழ்வுக்குப் பயன்படும் செயல்கள் எவை என்று கேட்டால்திருவள்ளுவ நாயனார் ஓர் அருமையான வழியைக் காட்டுகிறார். வங்கியில் போட்டு வைக்கும் பணம் மறுமைக்கு ஆகாது.  மறுமைக்கு ஆகும் விதத்தில் ஒரு வங்கி உள்ளதுஅதில் உங்கள் பணத்தை வைப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

 

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்

பெற்றான் பொருள்வைப்பு உழி."

 

என்பது திருக்குறள் காட்டுகின்ற வங்கி.

 

     "வறியவரது மிகுந்த பசியைத் தீர்த்தல் வேண்டும். அது பொருளை வைத்திருப்பவன்அப்பொருள் தனக்கு உதவும்படியாக இட்டு வைக்கும் இடம்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். உயிர் செல்லப் போகின்ற அந்த நெடிய பயணத்திற்கு நம் கையில் வைத்திருக்கும் பணம் உதவாது. அந்த உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய பணமாக அதை மாற்றிக் கொள்ள வேண்டும். பணம் இல்லாத வறியவர் வயிறு என்னும் வங்கியில் போட்டு வைக்கவேண்டும் என்கிறார் நாயனார்.

 

     உலகியலும் அருளியலும் சில சமயங்களில் நேர்மாறாகத் தோன்றும். மிக்க ஆடம்பரமாக உடையணிந்து கொண்டிருக்கும் பெரிய பணக்காரனை உலகியலில்  மதிக்கிறார்கள். அவன் ஞானியாக மாட்டான். வீதியில் ஒடு ஏந்திக் கோவணத்தோடு போகும் சிலரை ஞானிகள் என்கிறோம். அருளியலில் அவர்களுக்குத்தான் மதிப்பு உண்டு. இறைவனே கபாலியாகத் தோற்றம் அளிக்கிறான். நம்மிடம் இருக்கும் பணத்தை நாம் பணம் நிறைய இருக்கும் வங்கியில் போடுகிறோம். உலகத்துச் செல்வ நிலை இது. ஆனால் வறிஞர்களாகிய வங்கியில் போடச் சொல்கிறார்கள் திருவள்ளுவ நாயனாரும்அருணகிரிநாதப் பெருமானும்.

 

     அப்படிச் செய்கிறபோதுநான் செய்கிறேன் என்னும் முனைப்புத் தோன்றாதபடிக்குகூர்மையான கதிரை வீசும் வடிவேல் பெருமானை வாழ்த்திஅவனைத் தொழுதுதருமத்தைச் செய்ய வேண்டும் என்கிறார் அருணகிரிதாநப் பெருமான்.  அறம் செய்வோருக்குச் செருக்கு உண்டாவது உண்டு. நல்ல காரியங்கள் செய்பவர்கள் கர்வம் அடைவார்கள். தவம் செய்வோருக்கும் அகங்காரம்  வந்துவிடுகிறது. மனிதவாழ்வில் எல்லாம் இடையிடையே போனாலும்நான் என்ற உணர்ச்சி கடைசி வரையில் செத்துப் போகாது. எதைச் செய்தாலும், "நான் செய்தேன்என்ற நினைவு வரும்.நாலு பேர் புகழ வேண்டும் என்பதற்காகச் சிலர் அறம் செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் கிடைத்துவிட்டால அவர் செய்த அந்தத்  தருமத்துக்கு உரிய பயன் அப்பொழுதே கிடைத்ததாகி விடுகிறது.  இவ்வுலகில் தருமம் செய்துவிட்டுபலபேர் புகழ வேண்டும் என்று  நினைத்தால்அந்தத் தர்மத்திற்குரிய விலையாகப் புகழ் கிடைக்கிறது. மறுமைக்கான புண்ணியம் உண்டாவதில்லை. ஆகவேதருமம் செய்யும் போது நான் செய்கிறேன்என்று நினைத்துச் செய்யக் கூடாதுபுகழை எதிர்பார்த்தும் செய்யக் கூடாது.

 

     உலகில் பொருள் பெறுவது எளிது. உயர் குணங்கள் நிரம்பியவனிடத்திலும் பொருள் இருக்கிறது. தவறான செயல்களைச் செய்கின்றவனிடத்திலும் பொருள் இருக்கிறது. பொருளைப் பெறுவது பெரிது அல்ல. அதைக் கொடுப்பது பெரிது.கொடுப்பதிலும் தன்னை மறந்து கொடுப்பது மிகமிக அருமை. ஈதலின் நோக்கமே ஆசைகளை அழிப்பதுதான். பற்றை ஒழிப்பதுதான். ஆதலால்புகழ் வேண்டும் என்னும் ஆசையை அந்த ஈகை உண்டாக்கக் கூடாது. சிலருக்கு எத்தனை முயன்றும் பொருள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இறையருள் இல்லை. ஆனால்,சிலருக்கு  மிகுதியான பொருளை இறைவன் கொடுத்து  இருக்கிறான். எதற்காகக் கொடுத்தான்என்றால், "இரப்பவர்க்கு ஈய வைத்தார்" என்கிறார் அப்பர் பெருமான். அப்படி ஈபவர்க்கு என்ன வைக்கப்பட்டுள்ளதுஎன்றால்,"ஈபவர்க்கு அருளும் வைத்தார்" என அவரே விடைசொல்கிறார். 

 

     பொருளை ஈட்டுவதற்குப் புண்ணியம் இல்லாத மக்களை அப்படியே விட்டுவிட மாட்டான் இறைவன். அவர்களுக்கு அருள் புரிவதற்காயார் செல்வர் ஆவதற்குப் புண்ணியம் பண்ணி இருக்கின்றார்களோஅவர்களுக்குச் செல்வத்தைக் கொடுத்து இருக்கிறான். இல்லாதவர்க்கு உதவிஇன்பத்தைப் பெறுவதற்காக இறைவன் அவர்களிடம் மிகுதியான பணத்தைக் கொடுக்கிறான். அந்தப் பணத்தின் மேல் அவர்கள் ஆசை வைக்காமல்அதைக் கொடுத்தவன் இறைவன் என எண்ணிஇரப்பவர்களுக்கு எல்லாம் தம்மிடம் இருப்பதை இல்லை என்று ஒளிக்காது ஈந்து  மகிழ்ந்தால்அவர்களுக்கு இறைவன் அருளைக் கொடுக்கிறான். அப்படிக் கொடுக்காதவர்க்கு என்ன வைத்துள்ளான்என்றால், "கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்" என்கிறார் அப்பர் பெருமான். தம்மிடம் பொருள் இருந்தும்இரப்போர்க்குக் கொடுக்காமல்,  'இல்லைஎனச் சொல்லி மறைத்து வைத்துக் கொள்கிறவர்களுக்குக் கடுமையான நரகத்தை வைத்திருக்கிறானாம்.

 

     எனவேநம்மிடம் பொருள் மிகுதியாக இருந்தால்இறைவன் அருள் பெற மிகுதியான வாய்ப்பு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். அந்தப் பொருளைத் தன்னுடையது என்று வைத்துக் கொண்டால் அருள் வராது. அருளைப் பெறுவதற்குத் துணையாகத்தான் இறைவன் பொருளை நம்மிடம் கொடுத்து இருக்கிறான் என்று உணர்ந்தால்இறைவனை வாழ்த்த வேண்டும் என்று தோன்றும். ஆகையால்வையில் கதிர் வடிவேலானை வாழ்த்தி வறிஞர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் சொல்கிறார்.

 

     நாலு பேர் காணக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆடம்பரத்துக்கும்கர்வத்துக்கும் அறிகுறி. ஆயிரம் ஆயிரம் கோயில்களை இந்நாட்டில் எழுப்பியிருக்கிறார்களேஅவற்றை எல்லாம் எழுப்பியவர் யார் என்று நமக்குத் தெரியுமாஆண்டவன் பெயரை வெளிப்படுத்தி,  தமது பெயரை அவர்கள் மறைத்துக் கொண்டு விட்டார்கள் அவர்கள்.  'நான் செய்தேன்என்ற நினைப்பு அற்றுஎல்லாம் இறைவன் திருவருளால் நிகழ்க்கின்றன என்ற எண்ணத்தில்,தம்மை மறந்து செயற்கு அரிய செயல்களைச் செய்த பெரியவர்கள் அவர்கள். 

 

     கையை உடையவன் கொடுக்கிறான்கை கருவியாக நின்று கொடுக்கிறது. நாம் கொடுக்கிறோம் என்று கை நினைப்பது இல்லை. அது போல நம்மைக் கருவியாகக் கொண்டு இறைவன் கொடுக்கிறான் என்று உணரவேண்டும். கொடுக்கும்போது இறைவனிடத்தில் அன்பு வேண்டும்இரப்பவனிடத்திலும் அன்பு வேண்டும். 'வறிஞர்க்கு என்றும் கொடுங்கள் 'என்கிறார் அருணை வள்ளல். யார் வறுமை உடையவர்களோ அவர்களுக்குக் கொடுப்பது கொடை. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற்ற எல்லாம் குறி எதிர்ப்பை நீர்து உடைத்துஎன்கிறார் திருவள்ளுவர். 

 

     'நமக்கு இருந்தால்தானே பிறருக்குக் கொடுக்க முடியும்?' என்று கேட்பவர் பலர். அரிசியில் உடைந்தது நொய். அதில் குறைந்தது குறுநொய். அதைக் "குறுணை" என்று சொல்கிறோம். பெரிய விருந்தாக வைத்தால்தான் தருமம் என்று ஆகாது. நீ விருந்து போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சோறு சாப்பிட்டால் அதில் ஒரு பகுதியைத் தருமமாகக் கொடுக்கலாம். அரிசியாகவே கொடுக்க வேண்டுமென்பதில்லை. நொய்கூடக் கொடுக்க முடியாது என்றால் அதிலும் உடைந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கலாம்  என்கிறார்.

 

     எப்பொழுது கொடுக்க வேண்டும்எல்லாக் காலத்தும்என்றும் ஏன் கொடுக்க வேண்டும்?நீங்கள் இவ்வுலகை விட்டுவேறு உலகத்திற்குக் கடைசியாகச் செய்யப் போகின்ற பயணத்தில் உங்களிடம் இருக்கும் பணம் பயன்படாது. ஆகவேஅந்த உலகத்தில் பயன்படக்கூடிய அருட்செல்வமாக அவற்றை எல்லாம் மாற்றிக் கொள்ளவறிஞர்களுக்கு இப்பொழுதே கொடுங்கள்என்கிறார் அருணகிரிநாதர்.

 

     உலகமாகிய ஆற்றில்இறைவன் அருளாகிய தெப்பத்தின் மீது ஏறிக்கொண்டவர்களுக்குஉலகத்தில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் கவலை  இல்லை. அவர்கள் துன்பம் அடைவதில்லை. துன்பப் படும்போதுதான் இறைவனை நினைக்கிறோம். இது மனித இயல்பு. எப்போதும் அவனையே நினைப்பது உண்மை அடியவர் இயல்பு. அகங்காரம்மமகாரம் மாறவேண்டும். அகங்காரம் மாறும் முன்பு,எனது என்கிற மமகாரம் ஒழிய வேண்டும். மமகாரத்தை ஒழிக்க,எனது எனது என்ற எண்ணத்தை மாற்றிஎல்லாம் அவனது என்று சொல்லவேண்டும். இறைவனது கருவியாக நான் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும். நம்மிடம் வரும் வறியவர்களை அவனாகவே எண்ணிஅவன் கொடுத்திருக்கும் பொருளை ஒளிக்காமல் அவனிடமே கொடுக்க வேண்டும்.

 

     தன்னிடம் உள்ள பொருளை இறைவனுடையது என்று எண்ணி ஏழைகளுக்குக் கொடுப்பது ஒன்றே அகங்காரம்மமகாரம் இரண்டையும் ஒழிப்பதற்கு வழி. பற்றையும் ஆசையையும் போக்கத் தியாகமே மாற்று. நல்ல வெயிலில் போக முடியாமல்புழுதிச் சூட்டைத் தாங்க முடியாமல்தவிக்கிற போது,நம்முடைய உடல் நிழலில்  நாமே கொஞ்சம் தங்கி இளைப்பாற முடியாது. உடல் நிழலில் வேறு யாராவது தங்கவும் முடியாது. அந்த உடம்பின் நிழல் போகையில் உள்ள பொருள் கடைவழிக்கு உதவாது என்கிறார் அருணகிரிநாதர்.

 

"வையில் கதிர் வடிவேலோனைவாழ்த்தி,வறிஞர்க்கு என்றும் 

நொய்யிற் பிளவு அளவேனும்பகிர்மின்கள்நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா  உடம்பின் வெறு நிழல்போல் 

கையில் பொருளும் உதவாதுகாணும் கடைவழிக்கே"

 

என்பது அருணகிரிநாதர் அருளிய உபதேசம்.

 

இதன் பொருள் ---

 

     உலகவர்களே! உங்களுக்கு இவ்விடத்தில் வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடம்பின் பயனற்ற நிழலைப் போமரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்குஉங்களக் கையில் உள்ள பொருளும் துணையாக வராது என்பதை உணர்ந்து,கூர்மை மிகுந்து ஒளி வீசுகின்றவடித்து எடுத்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானை வணங்கிஏழைகளுக்கு எக்காலமும் நொய்யில் பாதி அளவையாவது பங்கிட்டுக் கொடுங்கள்.

 

"பிறக்கும் பொழுது கொடு வந்தது இல்லைபிறந்து மண்மேல் 

இறக்கும் பொழுது கொடு போவது இல்லைஇடை நடுவில்

குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது

இறக்குங் குலாமருக்கு என்சொல்லுவேன்கச்சியேகம்பனே!7"

 

"வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்

போதுற்று எப்போதும் புகலு நெஞ்சே! இந்தப் பூதலத்தில்

தீது உற்ற செல்வம் என்தேடிப் புதைத்த திரவியம் என்?

காது அற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!"

 

என்னும் பட்டினத்து அடிகளாரின் அருள்வாக்கை இங்கு வைத்துச் சிந்திக்கவும்.

 

 

 

 

 

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...