அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

 


அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

-----

 

      தனது உள்ளத்தில் உண்டான ப்ரமத்தை முருகப் பெருமான் தவிர்க்க வேண்டும் என்பது அருணகிரிநாதர் வேண்டுகோள். ப்ரமம் என்பது மயக்கம்.  "அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா"என்று கந்தர் அனுபூதியில் இந்தப் பிரமத்தைப் பற்றிச் சொல்கிறார். "பிரமம்" என்பது "பிமரம்" என்று எழுத்து மாறி வந்தது.

 

     (அமரும் பதி) நம் சொந்த ஊர் அல்லது வாழும் ஊர் நம்மைப் பலவகையில் வளர்த்தது. (கேள்) உறவினர்கள் நமக்கு ஆக்கமானவர்கள். (அகம்) நமது குடும்பமும் வீடும் நமது வாழ்க்கைக்கு உறுதுணை ஆனவை. இவை ஏன் நமக்கு அறிவு மயக்கத்தைத் தருகின்றன  என்பதை ஆராய்ந்துஉண்மையை அறிந்தால்அறிவு மயக்கம் தீர்ந்து அறிவுத் தெளிவு பிறக்கும். அமரும் பதிகேள்அகம் என்பவை அனைத்தும் நமது ஆன்ம வளர்ச்சிக்காக இறைவனால் அருளப்பட்டவை. இவற்றை அருளியலுக்குப் பயன்படுத்தினால் பிறப்புத் துன்பம் அறும். மாறாகஅவற்றிலேயே அழுந்திஅனுபவித்துக் கொண்டுஆன்ம வளர்ச்சி இல்லாமல் இருப்பது மயக்கம் அல்லது பிரமை அல்லது பிரமம் ஆகும். மதிநிலை கெட்டுப் போவது மயக்கம் ஆகும். "உலக பசு பாச தொந்தம் அதுவான உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் மலசல சுவாச சஞ்சலம் ஆதல் என் மதிநிலை கெடாமல் உன்தன் அருள் தாராய்" என்றார் திருப்புகழில்.


     பாசத்தினால் வந்த மயக்க உணர்வினால்,துணையாகாத உறவினர் மனைவி பிள்ளைகள் முதலியவரைத் துணை என நம்பி வாழ்நாள்களை பயனற்ற முறையில் கழித்துஅவமே கெட்டு,ஆன்மாக்கள் அல்லற்படுகின்றன."மனைவிதாய்தந்தைமக்கள்மற்று உள்ள சுற்றம் என்னும்வினையுளே விழுந்து அழுந்தி,வேதனைக்கு இடம் ஆகாதே" என்பார் அப்பர் பெருமான்.ஆன்மாக்களுக்கு உள்ள அறிவை ஆணவமலம் மறைத்து,அறிய விடாமல் தடுக்கின்றது. அதனால் ஆன்மா அறிவு கெட்டு,தனது உண்மையையும் தலைவனது உண்மையையும் அறியாமல் தவிக்கின்றது.ஞான வடிவாக உள்ள சிவம் என்ற அருட்பெருஞ்ஜோதிஆன்மாவிற்கு உள்ளும் புறமும் வியாபித்நு இருக்கும் போதுஆணவ மலம் என்னும் இருள்ஆன்மாவை எப்படி மறைக்கிறாது என்றால்,  கோட்டானுக்குச் சூரியன் இருட்டாக காணப்படுவது போமூடனுக்குத் தன் உயிருக்கு உயிராக நிற்கும் பரம்பொருள் தோன்றாது. அவன்தான் அறிவுக் குருடனாக இருக்கின்றானே. 

 

     பகல் பொழுதிலும் கோட்டான் விழிக் குருடாய் இருப்பதற்குஅதன் விழிக் குற்றம் காரணம். சூரியன் குற்றம் அல்ல.  அதுபோல் எங்கும் நீக்கமற நிறைந்து ஞானப் பகலாகவே உள்ள இறைவனைக் காணமாட்டாது ஆன்மா அறிவுக் குருடாய் இருப்பதற்கு அதனிடத்துப் பொருந்தி உள்ள ஆணவ மலக்குற்றமே காரணம். சிவஞானபோதம் 7-ஆம் சூத்திரம் யாவையும் சூனியம் சத்து எதிர்” என்று உபதேசிக்கின்றது. விளங்கி நில்லாமையே சூனியம் எனப்பட்டது. கோட்டானுக்கு  இருளில் பார்வை உண்டானது போ சீவனுக்கும் அஞ்ஞான தசையில் சிற்றறிவு நிகழும்.

 

     தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்.காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அல்ல. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். அனைத்தையும் விருப்பு வெறுப்புடன்தான் நாம் பார்க்கிறோம். நான் என்ற நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளைஅதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல்  நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே உணர்ந்து கொள்ள முடியவில்லை.

 

     இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவும் மெய்யாகவே தோன்றுகின்றன. உண்மையான பொருள் இன்னது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்ஆனால்அனுபவத்தில் மெய்ப்பொருளை உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம். மறத்துப் பேசுவதே பாவம் என்றும் சொல்லப்படுகிறது.

 

     நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன.  எல்லாப் பொருள்களையும் பொருள்களாக உணர்ந்தோமே அல்லாதுநாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப்பொருள் எங்கே இருக்கிறதுபெரியவர்கள் எல்லாப் பொருளாகவும் அந்த மெய்ப்பொருள் உள்ளதாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். மெய்ப்பொருள் நம்மை விட்டுஎங்கோ வெகுதூரத்தில் இருப்பது அல்லஅது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்வது நமக்குத் தெளிவை உண்டாக்குவது இல்லை."பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். நாம் காண்பது உண்மையானால்நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை.

 

     நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு என்கிறார் திருவள்ளுவ நாயனார். பிறவி என்பது பெரிய துன்பம்பல துன்பங்களை உண்டாக்கும் தாய் அது. அது நமக்கு எப்படி உண்டாகிறது? 'மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாகக் காண்பதனால்தான் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாகிறது’  என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்.

 "பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்  மருளான் ஆம் மாணாப் பிறப்பு" என்பது திருக்குறள். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாக உணர்வதுதான் மருள்,மயக்கம். அதையே அருணகிரியார் "ப்ரமம்" என்று சொல்கிறார். அதுதான் பிறப்புக்கு ஆதாரம். பிறப்பு சிறப்பு இல்லாதது. துன்பம் தருவதனால் மாணாத பிறப்பு ஆயிற்று.

 

     இந்த மயக்கமாகிய மருள் இறைவன் அருளால் நீங்கும். மருள்ஒன்றை வேறு ஒன்றாகவும் பலவாகவும் காணும்படி செய்கின்றது. அருளோ யாவற்றையும் ஒன்றாகக் காணச் செய்கின்றது. இருட்டிலே தெளிவு இராது. கட்டையானது மனிதன் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத இடத்தில் யாரோ நடமாடுவது போல இருக்கும். இந்த மருள் நீங்கி ஒளி உண்டானால் உள்ளது உள்ளபடியே தோன்றும். அருளால் ஒளி உண்டாக வேண்டும்.

 

     உள்ளத்தில் உள்ள மயக்கத்தால் உண்டாகும் விளைவுகள் பலவானாலும் இங்கே சுருக்கி இரண்டாகச் சொல்கிறார். சளத்தில் பிணிபட்டிருப்பது ஒன்று.  அந்தப் பிணிப்பினால் அசட்டுக் கிரியைக்குள் தவிப்பது மற்று ஒன்று. இவை ஒன்றுக்கு ஒன்று காரணமாக நிற்பவை. ப்ரமத்தால் சளம் உண்டாகிறதுசளத்தால் அசட்டுக் கிரியைகள் உண்டாகின்றன. "சளம்" என்னும் சொல்லுக்குமூர்க்கம்வஞ்சனைதுன்பம்கீழ்மைகுற்றம் என்று பொருள். ப்ரமம் என்பது சளத்தைஉண்டாக்கஅதில் நாம் பிணிபட்டுக் கிடக்கிறோம். அதன் விளைவாக அசட்டுச் செயல்களைச் செய்கிறோம்அதனால் தவிக்கிறோம். 

 

     மனத்தில் ஒன்று நினைப்பதுவாக்கில்  வேறு ஒன்று பேசுவது வஞ்சனைப் பேச்சு. மனத்தில் ஒன்றும் செயலில் வேறு ஒன்றும் செய்வது வஞ்சனைச் செயல். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகிய வஞ்சனையைப் பிறரிடம் நாம் காட்டுகிறோம். நாம் சொல்வது வஞ்சனைப் பேச்சுதான் என்று பிறர் எளிதில் அறிவதில்லை. ஆனால்நமக்கு வேண்டிய ஒன்றை நாம் எண்ணும்போது அப்படியே செய்யாமல்நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே வஞ்சனை செய்து கொள்வதனால் நமக்குக் கவலைகளும் அச்சமும் உண்டாகின்றன. "தன் நெஞ்சு அறிவது பொய்யற்கபொய்த்த பின்தன் நெஞ்சே தன்னைச் சுடும்"என்கிறார் திருவள்ளுவ நாயனார். பொய்யை மெய்யாக உணர்வது மருள் அல்லது ப்ரமம். அதிலிருந்து விளைவது உள்ளும் புறமும் ஒவ்வாமல் இருக்கும் பொய். மூலப் பொய்யுணர்வுக்கு ப்ரமம் என்று பெயர். அதிலிருந்து விளையும் பொய்க்கு வஞ்சனை என்று பெயர்.

 

     பிறரை வஞ்சிக்கும் குணம் தீயதுதன்னைத் தானே வஞ்சிக்கும் இயல்பு அதைவிடத் தீயது. இந்த வஞ்சனையில் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம். ஒரு செயலால் நமக்குத் துன்பம் விளைவதை அனுபவத்தில் உணரும்போதுஇனி இப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் மறுபடியும் அந்தச் செயலைச் செய்யப் போகிறோம். இது பெரிய வஞ்சனை. பிறரை வஞ்சிப்பவர்களை விடத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொள்பவர்களே அதிகம்.

 

     அந்த வஞ்சனையின் விளைவுதான் நாம் செய்யும் அசட்டுக் காரியங்கள். அசட்டுக் கிரியைகளைச் செய்து தவிக்கிறோம். அவை பயனில்லாததும்உலக சம்பந்தமானதும் ஆகிய மூடத் தொழில்கள். நாம் துன்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் செயல்களை அசட்டுக் கிரியைகள் என்று சொல்லலாம்.  அசடு என்று அறியாமை உடையவர்களை நாம் கூறுகிறோம். புத்திசாலி அல்லாதவன் அசடு. ப்ரமத்திலிருந்து உண்டான சளத்தின் விளைவு அசட்டுச் செயல்.

 

     அசத்து என்பதே அசடு என்று திரிந்தது சத்து அல்லாதது அசத்து. சத்து என்பது உண்மைமெய்ப்பொருள்.  அசத்துஉண்மை அல்லாததுபொருள் அல்லாதது. மெய்ப்பொருளில் நாட்டமின்றிச் செய்யும் அசட்டுக் காரியங்கள்.

 

"கசட்டுறு வினைத்தொழில் கள்வராய் உழல்

அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய

வசிட்டனும்,அருமறை வடிவு போன்று ஒளிர்

விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்."

 

என்பது கம்பராமாயணம்.

   

     (கசடு = குற்றம்) குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை உடையகள்வர்களாகத் திரிகின்ற அறிவிலிகள் போன்ற ஐம்புலன்களையும் அற்றுப் போகும்படிச் செய்த வசிட்டனும்அரிய வேதங்களின் வடிவைப்போல விளங்கும் சிறந்த  முனிவனான கலைக்கோட்டு முனிவனும் அந்த அரசவை பொலிவு எய்துமாறுவந்து அடைந்தனர் என்கிறார் கம்பர். ஐந்து பொறிகளாகிய அசட்டர்களை அற்றவர் ஆக்கினார் வசிட்டர். அவர் பொறிகளை அடக்கினவர் இந்திரிய நிக்கிரகம் செய்தவர்.  'பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் பொறிகளை அசட்டர்கள் என்று கம்பர் சொல்கிறார்.

 

     நமக்கு உண்டான நோயைக் குணப்படுத்த மருத்துவர் மருந்தை ஊசி வழியாக இரத்தத்தில் ஏற்றுகிறார். இரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும். அதுபோல மனிதனுடைய செயல்களில் உள்ள குற்றங்களைகசடுகளை நீக்கஅவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிற உள்ளத்தில் ஊசியைப் போட வேண்டும். உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கிவிட்டால் உள்ளும் புறம்பும் ஒத்து நிற்கும். செய்யும் செயல்கள் யாவும் சத்தாகிவிடும். இறைவன் திருவருளால் உள்ளத்தே ப்ரமம் நீங்கி ஒளி உண்டாகிவிட்டால் செய்யும் செயல்கள் யாவும் இறைவனோடு தொடர்புடைய சத்தாகிவிடும்.

 

     அருணகிரியார் தவிப்பைப் போக்குவாய் என்று சொல்லவில்லைஅசட்டுச் செயல்களை செய்யாமல் இருக்க அருள் புரி என்று சொல்லவில்லைஉள்ளொன்றும் புறம்பொன்றுமாக இருக்கும் வஞ்சனை நிலையை மாற்று என்றும் வேண்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணமான ப்ரமத்தைப் போக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறார். 

 

     பாசத்தால் கட்டுப்பட்டிருக்கும் உயிர் அந்தக் கட்டினின்றும் விடுபடுவதுதான் முத்தி. முத்தி என்ற சொல்லுக்கே விடுதலை என்பதுதான் பொருள்வீடு என்பதும் அதுதான்.  ப்ரமம் நீங்கினால் கட்டு நீங்கும்கட்டு நீங்கினால் அசட்டுச் செயல் நீங்கும்அது நீங்கினால் தவிப்பு நீங்கும்.

 

     தேவசேனாபதியாகிய முருகன் வீரருள் வீரன். அவன் அவுணர்களின் மார்பிலே வேலைப் பாய்ச்சி வெற்றி பெற்றான். பேய்கள் பிணத்தைத் தின்று குருதிக் கடலிலே குதித்து விளையாடும்படியாக அசுரர்களைச் சங்காரம் செய்த முருகனிடம் தனது துன்பங்களுக்கு எல்லாம் காரணமான பிரமத்தைப் போக்கி அருள அருணகிரிநாதர் வேண்டிக் கொள்கிறார். அரக்கர்கள் புரிந்த மாமாயைகளை நீக்கியது போதனது உள்ளத்தில் உள்ள மயக்கத்தையும் நீக்கி அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

 

"சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்

உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்,அவுணர்உரத்து உதிரக்

குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக்குடித்துவெற்றிக்

களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்டகாவலனே!"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியருளிய பாடல்.

 

இதன் பொருள் ---

 

     பேய்கள் அரக்கர்களுடைய மார்பில் இருந்து பெருகி வந்த இரத்தக் குளத்தில் குதித்து முழுகி களிப்புடன் அந்த இரத்தத்தைக் குடித்துபோர்க்களத்தில் அகங்காரத்துடன் ஆடும்படி வேலை விடுத்து அருளிய காவலர் ஆகிய முருகப் பெருமானே! ஆதிதைவிகம்ஆதிபௌதிகம்ஆதிஆத்மிகம் என்னும் மூவகைத் துன்பங்கள் என்னும் கயிற்றினால் கட்டப்பட்டு,  மூடத்தனமான செயல்களைச் செய்துஅவகளால் மீண்டும் ஆகாமியம் என்னும்  இனையைத் தேடிக் கொண்டுஅதில் இருந்து தப்பி ஈடேறும் வழி அறியாமல் மயங்கிக் கிடக்கின்றேன். அடியேனுடைய உள்ளத்தில் உண்டான மயக்கத்தை நீக்கி அருள் புரிவீர்.

 

     எல்லா உயிர்களுக்கும் காலவனாக அமைந்தவன் இறைவன். எனவே, "காவலனே!" என்றார். தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே" என்று திருப்புகழில் ஒரு சொற்றொடரை வைத்தார் அடிகளார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு புறக்காவலாக இருந்துஇடர்களை நீக்கி இன்பம் வழங்குவதோடுஉள்ளத்திலும் காவலனாக இருந்துதீய எண்ணங்கள் வந்து நுழையாவாறு காவல் புரிந்து காத்தருளுகின்றார் முருகப் பெருமான். தாய்க்குத் தனது பிள்ளைகள் மீது அன்பு. அடியார்கள் மீது பெருமானுக்கு அன்பு. அதனால்செஞ்சொல் அடியார்கள் வாரக்கார" என்றும் போற்றினார். வாரம் என்னும் சொல்லுக்கு அன்பு என்று பொருள். உள்ளத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் செம்மையான சொற்களையே பேசுகின்ற மனத்தூய்மை உடைய அடியார்களிடத்து அன்பு உள்ளவன் இறைவன். அது அறக்கருணை எனப்படும்.

 

     காவல் என்பது,  நல்லவர்களைக் காப்பதற்கும்அல்லாதவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்துதற்கும் உரியது.

 

     அடியார்கள் அல்லாதவர்க்கும் இறைவன் காவலனாக இருந்துஅவர்கள் மீதும் அன்பு காட்டுபவன். அவர்களை நல்வழிப்படுத்திஆட்கொள்பவன். அது மறக்கருணை எனப்படும்.

 

 

 

உயிரையும் கொடுப்பவர்

 


உயிரையும் கொடுப்பவர்

----

 

     சின்னக் குழந்தை ஒன்று கையில் ஒரு இனிப்புக் கட்டியைச் சுவைத்துக் கொண்டு நிற்கின்றது. அடுத்த வீட்டுக் குழந்தை ஒன்று இக் குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே நிற்கின்றது. இவ்வாறு மற்றக் குழந்தைகள் தம்மைக் காண்பதைக் கண்டவுடன்சில குழந்தைகள் வீட்டினுள் ஓடி மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகள் இதற்கு முற்றிலும் மாறாக நடந்துகொள்ளும்.

 

     பரிதாபத்தோடு தன்னைப் பார்க்கும் குழந்தையைஇனிப்பைச் சுவைக்கும் குழந்தை மிக்க பரிவோடு கவனிக்கின்றது தன்னை யாராவது கவனிக்கின்றார்களா என்பதைச் சுற்றும் முற்றும் ஒரு முறை கவனிக்கின்றது. அக் குழந்தையும் பயந்து கொண்டே இதன் அருகில் வருகிறது. உடனே தான் தின்றுகொண்டிருக்கும் இனிப்பில் பாதியைக் கடித்துக் கொடுத்துவிட்டு ஒடிப் போகிறது.

 

     தின்ற எச்சில் இனிப்பில் பாதியைக் கடித்துக் கொடுப்பதை எண்ணிப் பார்த்தால்அது மிகமிகப் பெரிய செயல் என்றேதோன்றும். கை நிரம்ப மிட்டாய் இருப்பினும் கூடஅதில் ஒன்றைக் கொடுப்பது என்பது ஒரு சிலருக்கே உரியது. தின்றுகொண்டிருக்கும் ஒரு மிட்டாயில் பாதியைக் கடித்துக் கொடுப்பது அனைவரும் செய்யக்கூடிய ஒருசெயல் அல்ல.  "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்என்பது பழமொழி. பயிரானது முளையிலேயே செழுமை பெறவில்லையானால்அது முதிர்ந்து செழுமையான கதிராவது இல்லை. வயதிலும்அறிவிலும் முதிர்ந்தவர்கள் செய்யக்கூடிய அரிய செயலை இளமையிலேயே செய்யும் திறமையை "முதுக்குறைவுஎன்று இலக்கியங்கள் கூறும். குறைந்த வயதிலேயே முதிர்ந்த திறமை என்பது இதன் பொருள். பிற்காலத்தில் எதனையும் பிறருக்கு  வழங்கக் கூடிய இயல்பு டையவர்களாக விளங்குபவர்கள் இளமைக் காலத்திலும் தே மனநிலையைப் பெற்றிருப்பார்கள்.

     அன்பு என்பது பழக்கத்தால் வருவது அல்ல. சித்திரம் தீட்டும் ஆற்றல் வேண்டுமானால், சிலகாலம் தக்க முறையில் பழகினால் போதும். நல்ல தமிழில் பேச ஆசைப்பட்டால், நாள்தோறும் பேசிப் பழகினால் போதும். நாள்தோறும் படித்துப் பழகினால் கல்வி அறிவு சிறக்கும். நடக்காமலேயே உட்கார்ந்து இருந்தால், நடை வராது. நடை என்பது நாள்தோறும் நடந்து பழகினால் உண்டாகும். ஆனால், உள்ளத்தில் பொருந்தி இருக்கவேண்டிய நற்பண்புகள் பிறவியிலேயே பொருந்தி இருக்கவேண்டும். எனவே, "நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்" என்றும், "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம், நித்தம் நடையும் நடைப் பழக்கம்" என்றும் சொன்னார் ஔவைப் பிராட்டியார். கொடுக்கும் இயல்பு என்பதுபிறப்பிலேயே அமைய வேண்டுமே தவிரபழகிக்கொண்டால் வரக்கூடியது அல்ல. பிறப்பிலேயே அந்த இயல்பு பொருந்தி இருப்பதால்தான்தான் தின்றுகொண்டிருக்கும் இனிப்பைப் பகிர்ந்து அளிக்கும் எண்ணம் குழந்தைக்கு உண்டாகிறது. அது எல்லாக் குழந்தைக்கும் பொருந்தி இருப்பதும் அல்ல.

     அன்பு என்ற ஒரு சொல் உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. அன்பு என்பது இயல்பாகவே பிறப்பில் வர வேண்டிய ஒருவகை மன உணர்ச்சி ஆகும். தன்னை அல்லாத  பிற உயிர்களிடம் ஏற்படும் பரிவுகருணை என்பனவற்றையே அன்பு என்றுகூறுகின்றோம். ஏனைய உணர்ச்சிகளைத் தாங்கியுள்ள மனத்தில்அன்பு உணர்ச்சி  நிரம்பும் பொழுதுதான் மனிதன் மகாத்துமா ஆகிறான். எந்தஉயிரும் வளர வேண்டுமானால்அன்பு என்ற ஒன்று தேவைப்படும்.

     தாய் குழந்தையிடம் காட்டுவதும்விலங்குகள் தம் குட்டிகளிடம்காட்டுவதும் ஆகிய அன்பாலேதான் உலகம் வாழ்கிறது. ஏனைய குணங்கள் எத்துணை நிரம்பி இருப்பினும், ஒருவன்  மனிதன் என்று வழங்கப்பட வேண்டுமானால்அவன் அன்பு உடையவனாக இருத்தல் வேண்டும்.விலங்குமனிதன்தெய்வம் என்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் இணைப்பது அன்பு ஒன்று தான்.

     அருள் உள்ளவன்தான் அருளைப் பெறமுடியும். அன்பு உள்ளத்தில் இருந்தால் அருள் பிறக்கும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவ நாயனார். மனிதன் தன்னைப் போன்ற உயிர்களிடத்தும் இறைவனிடத்தும் காட்ட வேண்டியஅன்பு வெளிப்படும்பொழுது எவ்வாறு இதனை அறிந்து கொள்வதுஉள்ளத்துள் தோன்றும் அன்பை அடைக்க முடியாது என்றும்அதனைப் பிறர் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்றும் திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார். கண்களே அன்பை அறிவிக்கும் மிகச்சிறந்த கருவிகளாகும். உள்ளத்தின் உள்ளே இருக்கும் அன்பை  வெளிக் காட்டக் கண்ணிர் பயன்படுகின்றுது. எல்லையற்ற அன்பைப் பல சொற்களால் கூற முடியாது. ஒரு சொட்டுக் கண்ணீரின் மூலம் எளிதாகக் காட்டி விடலாம். 

     அளவு மிகுந்த புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணிர்ஏழு கடல்களிலிருந்து வரும் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்குவதைக் காட்டிலும்அன்பர்களுடைய கண்ணிலிருந்து வரும் கண்ணிரிலேயே நீராட வேண்டும் என்று அம்பிகை விரும்புகிறாளாம்"என் பாவம் ஆறு கடல்ஏழிருந்தும், என் அம்மை அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்என்று ஒரு புலவர் பாடி உள்ளார். 

"நெஞ்சமே கோயில்நினைவே சுகந்தம்அன்பே மஞ்சன நீர் 

பூசைகொள்ள வாராய் பராபரமே"

என்று பாடினார் தாயுமான அடிகளார்.

     எல்லா உயிர்களுக்கும் பெருந்தேவையாக உள்ள அன்பு ஒரு சிலரிடம் மிகுதியாக இருந்து, அவர்களைச் செயற்கரிய செயல் செய்யும் மகாத்துமாக்களாகச் செய்கிறது. இன்னும்சிலரிடம் இருக்க வேண்டிய அளவு இருந்துமனித இயல்புடையவர்களாகச் செய்கிறது.ஒரு சிலரிடத்தில் இருக்க வேண்டிய அளவில் குறைந்து அவர்களை விலங்குநிலையிலும் கீழான நிலையினை அடையச் செய்துவிடுகிறது.

     திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூல் தோன்றுவதற்குப்பல காலம் முன்னரே சிபிச்சக்கரவர்த்தி என்ற ஒரு சோழ மன்னன் இருந்தான். தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவன்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவனுடையவள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும்,  இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர்.புறாவினைப் பருந்து துரத்தபுறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு''  என்று பருந்து சிபியைக் கேட்கசக்கரவர்த்தியோதன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்துஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்துஅந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால்போதும் என்றது. மகிழ்ந்த சிபிபுறாவினை ஒரு தட்டில் வைத்துதன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால்தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாதுபுறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர்தானே தட்டில் ஏறிநின்றான். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

     புறாவின்  துடிப்பையும்பருந்தின் பசியையும் கண்ட சிபிடச்சக்கரவர்த்தியின் அன்புக் கண்களில்  புறாவின் எடை பற்றிய கவலை தோன்றவேயில்லை. அதனாலேதான் தராசில் தானேஏறிவிட்டான். "தன் அகம் புக்க குரு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை  புக்கோன்என்று புறநானூறும், “புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்கபெரியோன்என்று இராமாயணமும், "எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறுபுன்கண் தீர்த்தோன்என்று சிலப்பதிகாரமும் போற்றும் சிறப்பைப் பெற்றான் சிபி.

     சிபி போன்றோர் வாழ்ந்து காட்டிய உன்னதமான வாழ்வை உலகம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் அருள் உள்ளத்தோடு திருவள்ளுவ நாயனார்,

"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்அன்பு உடையார் 

என்பும் உரியர்பிறர்க்கு" 


என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.


     என்பு - எலும்பு. எலும்பு என்பது ஆகுபெயராய் உடம்பை உணர்த்தியது. தமது உடம்பாலும் பிறருக்கு உதவுபவர்கள் என்பதுசோழர் குலத்தில் உதித்தவராகியசிபிச் சக்கரவர்த்தியைக் கண்டோம். விருத்திராசுரனை வெல்லும்பொருட்டு தனது முதுகெலும்பை இந்திரனுக்குத் தந்து உதவிய ததீசி முனிவரையும்அந்தணர் வடிவம் கொண்டு வந்து யாசித்த இந்திரனுக்குதன்னுடன் தோன்றிய கவசகுண்டலங்களைக் கொடுத்த கர்ணன் முதலான பிறரையும் இத் திருக்குறள் நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துவதை உணரலாம்.

 

     திருக்குறளையும்பெரியபுராணத்தையும் ஓதி உணர்ந்து தெளிந்தகுமாரபாரதி என்னும் பெரியார் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில்மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டினைமேற்படி திருக்குறளுக்கு விளக்கமாக அமைத்துப் பாடியுள்ளார்.

            

"சேர்த்திமுழங் கைஎலும்பும் தேயச்செஞ் சந்தனமா

மூர்த்திமது ரேசருக்கு முன்புஅரைத்தார்,- பார்த்தீரோ

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு."

 

      பாண்டி நாட்டிலேமதுரைப்பதியிலேவணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.

 

      நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில்,வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்துபாண்டியனை வென்றுமதுரைக்கு அதிபதியானான். அவன்சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான். அவன்தீங்குக்கு இடையே,மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.

 

      கருநாடக மன்னன்மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன்நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான். நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?"என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை. திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்னஅதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதிஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது. எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே.  இராச்சியம் எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்துஉன் திருப்பணியைச் செய்துநமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.

 

      அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குபு புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால்எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்துமுடிவாகஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும்அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோஅவர் அரசர் ஆதல் வேண்டும்என்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறேஒரு யானையை முறைப்படி அருச்சித்துஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத்துகிலால் அதன் கண்ணைக் கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்துமூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து,அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது. மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின்இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்துதிருக்கோயில் புறத்தில் நின்றார். அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கிஅவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். 

 

      முடிசூட்டுதற்கு உரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போதுநாயனார்மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்துசைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும்கண்டிகை கலனாகவும்சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.

 

      மூர்த்தி நாயனார்பிரமசரியத்தில் உறுதிகொண்டுதிருநீறுகண்டிகைசடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்துசைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்துசிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

                       

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் ஒன்றுபிறைசை சாந்தக் கவிராயர் என்பார் இயற்றிய "இரங்கேச வெண்பா"என்னும் நீதி சூடாமணி ஆகும். இந் நூலில்இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடல்....

 

"வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து,முனி

இப்புவியைக் காத்தான்,இரங்கேசா! - நற்புகழாம்

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்,அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு."                               

 

இதன் பதவுரை --- 

 

     இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வெற்பின் சிறகு அரிய - இந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டும்படிமுனி - ததீசி முனிவர்,  வெந் என்பு அளித்து - தமது முதுகெலும்பைக் கொடுத்துஇப் புவியைக் காத்தான் - இந்தப் பூலோகத்தை மலை அரக்கர் துன்பத்தினின்றும் காப்பாற்றினார். (ஆகையால்இது) நன்மை புகழாம் - நல்ல கீர்த்தியைத் தரத் தகுந்த, அன்பு இல்லார் - பிறர்மேல் அன்பு இல்லாதவர்கள்எல்லாம் தமக்கு உரியர் - தங்களுடைய உடல் பொருள் ஆவியாகிய எல்லாமும் தமக்கே உரியவர் ஆவார்,  அன்பு உடையார் - பிறர்மேல் அன்புடையவர்கள் பிறர்க்கு என்பும் உரியர் - பிறர்க்குத் தம்முடைய எலும்பையும் உரிமையாக்கச் சித்தமாய் இருப்பார்கள் (என்பதை விளக்குகின்றது).

 

      உண்மை அன்புஉடல் எலும்பை உதவவும் உடன்படும் என்பது கருத்து.

 

      முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும்மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால்அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனேஅவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால்அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால்அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால்அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர்,முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், ", தேவாதிபனே! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்?  செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும்காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப் பை. இருகாலில் செல்லும் பேய்த் தேர்இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தாஇதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார். தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியேஅந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்துஅதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்துபல்லுயிரையும் காத்தான்.  

 

      பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி மூன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அவ்வாறு இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல்தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு வேண்டா கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி கைம்மாறு வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி செய்வார்கள்.

 

"ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது."    ---  முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பதவுரை ---

 

     ஈரம் --- அன்பு உடைமையைவெய்யோர்க்கு --- விரும்பி இருப்பார்க்கு,  நசை கொடை --- பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பதுஎளிது --- எளிதாம்.

 

     பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதில் கொடுப்பர்.

அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

  அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை -----          தனது உள்ளத்தில் உண்டான ப்ரமத்தை முருகப் பெருமான் தவிர்க்க வேண்டும் என்பது அருணகிரிநாதர் வேண...