பொது --- 1032. சீதமலம் வெப்பு

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சீதமலம் வெப்பு (பொது)

 

முருகா! 

திருவடிப் பேற்றினை அருள்வாய்

 

 

தானதன தத்த தானதன தத்த

     தானதன தத்த ...... தனதான

 

 

சீதமலம் வெப்பு வாதமிகு பித்த

     மானபிணி சுற்றி ...... யுடலூடே

 

சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க

     தீதுவிளை விக்க ...... வருபோதில்

 

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க

     சாகரம தற்கு ...... ளழியாமுன்

 

தாரணி தனக்கு ளாரண முரைத்த

     தாள்தர நினைத்து ...... வரவேணும்

 

மாதர்மய லுற்று வாடவடி வுற்று

     மாமயிலில் நித்தம் ...... வருவோனே

 

மாலுமய னொப்பி லாதபடி பற்றி

     மாலுழலு மற்ற ...... மறையோர்முன்

 

வேதமொழி வித்தை யோதியறி வித்த

     நாதவிறல் மிக்க ...... இகல்வேலா

 

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி

     மீளவிடு வித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

சீதமலம்,வெப்பு,வாதம்மிகு பித்தம்

     ஆன பிணி சுற்றி,...... உடல் ஊடே

 

சேரும் உயிர் தப்பி ஏகும் வணம்,மிக்க

     தீது விளைவிக்க ...... வருபோதில்,

 

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க

     சாகரம் அதற்குள் ...... அழியாமுன்,

 

தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த

     தாள் தர நினைத்து ...... வரவேணும்.

 

மாதர் மயல் உற்று வாடவடிவு உற்று

     மாமயிலில் நித்தம் ...... வருவோனே!

 

மாலும் அயன் ஒப்பு இலாதபடி பற்றி

     மால் உழலும் மற்ற ...... மறையோர்முன்

 

வேதமொழி வித்தை ஓதி அறிவித்த

     நாத! விறல் மிக்க ...... இகல்வேலா!

 

மேல் அசுரர் இட்ட தேவர்சிறை வெட்டி,

     மீளவிடு வித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            மாதர் மயல் உற்று வாட--- ஆன்மாக்காளாகிய பெண்கள் எல்லாம் உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி

 

            வடிவுற்று--- அழகிய திருவுருக் காட்சி தந்து,

 

            மாமயிலில் நித்தம் வருவோனே--- சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவரே!

 

            மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி--- திருமாலுக்கும்பிரமனுக்கும்ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து,

 

            மால் உழலும் மற்ற மறையோர்முன்--- அன்பில் மயங்கித் திரியும் மற்றைய மறையவர்களும் காணும்படியாக

 

            வேதமொழி வித்தை ஓதி அறிவித்த நாத--- (அடியேனுக்கு) மறைகளின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதரே!

 

            விறல் மிக்க இகல் வேலா--- வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவரே!

 

            மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி --- முன்னாள் அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த சிறையைத் தகர்த்து,

 

            மீள விடுவித்த பெருமாளே--- தேவர்கள் மீண்டும் தமது பொன்னுலகில் குடி புகுமாறு விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

            சீதமலம்--- சீதபேதி,

 

            வெப்பு--- காய்ச்சல்,

 

            வாதம்--- உடலில் வாயு மிகுதல் ஆகிய நோய்க் கூறு,

 

            மிகு பித்தமான பிணி சுற்றி ---  ஈரலில் இருந்து மிகுந்துவரும் பித்தநீரால் உண்டாகும் நோய்கள் ஆகிய இவைகள் சூழ்ந்துள்ள,

 

            உடல் ஊடே சேரும் உயிர் தப்பி ஏகும் வ(ண்)ணம்--- இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி,

 

            மிக்க தீது விளைவிக்க வருபோதில்--- மிகுந்த தீமையை உண்டாக்கும் சமயத்தில்,

 

            தாதையொடு மக்கள்--- தந்தையோடு மக்களும்,

 

            நீதியொடு--- உலக நியதிப்படி

 

            துக்க சாகரம் அதற்குள் அழியாமுன்--- துயரக் கடலுள் அழுந்தி அழியும் முன்பு,

 

            தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும்--- இந்த உலகத்தில் உள்ளோர் போற்றுகின்ற வேதங்கள் சொல்லும் தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத்  தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும்.

 

                        

பொழிப்புரை

 

 

     ஆன்மாக்காளாகிய பெண்கள் எல்லாம் உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படிஅழகிய திருவுருக் காட்சி தந்துசிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவரே!

 

            திருமாலுக்கும்பிரமனுக்கும்ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்துஅன்பில் மயங்கித் திரியும் மற்றைய மறையவர்களும் காணும்படியாகஅடியேனுக்கு மறைகளின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதரே!

 

            வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவரே!

 

            முன்னாள் அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த சிறையைத் தகர்த்து,தேவர்கள் மீண்டும் தமது பொன்னுலகில் குடி புகுமாறு விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

            சீதபேதிகாய்ச்சல்உடலில் வாயு மிகுதல் ஆகிய நோய்க் கூறுஈரலில் இருந்து மிகுந்துவரும் பித்தநீரால் உண்டாகும் நோய்கள் ஆகிய இவைகள் சூழ்ந்துள்ள,இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படிமிகுந்த தீமையை உண்டாக்கும் சமயத்தில்தந்தையோடு மக்களும்உலக நியதிப்படிதுயரக் கடலுள் அழுந்தி அழியும் முன்புஇந்த உலகத்தில் உள்ளோர் போற்றுகின்ற வேதங்கள் சொல்லும் தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத்  தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும்.

 

 

விரிவுரை

 

 

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியாமுன்---

 

உடலை விட்டு உயிர் பிரியும்போதுஉற்றாரர்கள் சுற்றி அழ,பெற்றார்கள் மிக்க அழுது துயரக் கடலில் அழுந்துவார்கள்,

 

"கூகா என எனி கிளை கூடி அழப்

போகாவகை மெய்ப்பொருள் பேசியவா!"

 

எனக் கந்தர் அனுபூதியில் அடிகளார் பாடி உள்ளது காண்க.

 

மாதர் மயல் உற்று வாட வடிவுற்று மாமயிலில் நித்தம் வருவோனே--- 

 

தலைவன் ஒருவன் உலாப் போகும் போதுஅவனது அழகில் மயங்கிபேதை முதல் பேரிளம்பெண் வரையில் ஆன ஏழு வகைப் பெண்களும்அவன் மீது காதல் கொண்டதாகப் பாடப்படுவது திருஉலா என்னும் பிரபந்த வகையாகும். ஆன்மாக்கள் அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப பெண்களாக உருவகிக்கப்பட்டனர். அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப மயிலின் மீது வந்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.

 

சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளிய "திருக்கயிலாய ஞான உலா" என்னும் நூல்ஆதி உலா என்று பொற்றப் பெறுவது.

 

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்

 

 

 

 

 

 

 

தெய்வம் பேணாதார் தெளிவு

 


 

தெய்வம் பேணாதார் தெளிவு

-----

 

             உயிரானது அறிவுப் பொருள். என்றாலும்அதற்கு இயற்கையிலேயே அறியாமை உண்டு. அறியாமைஅவிச்சைஅகங்காரம். அவித்தைஆணவம் என்னும் இவையெல்லாம் ஒரு பொருளனவே.

 

             சைவசித்தாந்தம்என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் குறிக்கும். இறைவன்உயிர்தளை என்பன அவை. பதிபசுபாசம் என்றும் சொல்லப்படும் இந்த முப்பொருள்களை,மேற்பொருள்இடைப்பொருள்கீழ்ப்பொருள் என்றும் சொல்லலாம். மேற்பொருளாய் இருப்பது இறைவன். இடைப்பொருளாய் இருப்பவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள்.

 

            இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம்நீர்தீகாற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும்விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால்அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.

 

            உயிரை வடமொழியில் சீவன் என்றும்சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கி இருப்பவை. இறைவனது பெருநிறைவுவியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்.  பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பட்ட பொருளுக்கும்கீழ்ப்பட்ட பொருளுக்கும் இடையில் உள்ளதால்உயிர் இடைப்பொருள் ஆகின்றது.

 

            மேற்பொருளாகிய கடவுளும்இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் என்பதுஆணவம்மாயைகன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்பதாலும்,பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

 

         கடவுளும் உயிரும் சித்து (அறிவுப் பொருள்) என்ற வகையில் ஓரினம். என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டன ஆகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவதுஉயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்துஅதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒப்பு உடையன அல்ல என்பது விளங்கும்.

 

            கடவுட்பொருள் மிக நுண்ணியதாய் இருப்பதால்ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றிஎன்றும் தூயதாய் நிற்கிறது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின்  அது மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாக இருக்கின்றது. கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல்பருமையான நீரையே பற்றுவதாக உள்ளது. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியுற்றதற்கான காரணத்தை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

            இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஆணவமலம் எனப்படுகிறது. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும்கண்ணை மறைக்கும் இருள் போலவும்உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெரும்பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவமலமே ஆகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேடுகளுக்கும் இதுவே மூலம். எனவே ஆணவமலம் "மூலமலம்" எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்பதால் "சகசமலம்" என்றும் சொல்லப்படும்.

 

         உயிர்கள் மனிதப் பிறவிக்கு வந்த பிறகுவாழ்க்கை அறியாமையில் தொடங்குகிறது. அறிவை நோக்கிப் பயணம் செய்கிறது. அறியாமை கடலை விடவும் அகலமும்ஆழமும் உடையது. அறிவு வர வரஅறியாமை சற்றே அகலும். அறியாமை முழுதுமாக அகலப் பலகாலம் ஆகும்.  பல பிறவிகள் எடுக்கவேண்டியதும் ஏற்படும். பெற்ற அறிவை மீண்டும் இழக்காமல்இடையீடு இல்லாமல் அறிவை நோக்கிப் பயணம் செய்தால்தான் அறியாமை முழுதுமாக அகலும். அறியாமை முற்றாக அகன்ற உயிர். அறிவு மயமாகிறது ஞானத்தின் வடிவமாகத் திகழ்கின்றது. உயிர்ஞானநிலை எய்திய பிறகு அதற்கு விருப்பு இல்லைவெறுப்பு இல்லைஇன்பமும் இல்லைதுன்பமும் இல்லைபிறப்பும் இல்லைஇறப்பும் இல்லை. ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பில் அது நிலைபெற்று மகிழ்கின்றது.

 

         அறிவின் இயற்கை,அது வளரவளர அறியாமையின் வன்மையைக் காட்டுவதுகுழப்பத்தைத் தரக் கூடியது. இதுவோ அதுவோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பவன் அறிவின் தொடக்கத்தில் இருக்கிறான். தெளிவாகச் சொன்னால் மனிதன் ஒரு குழப்பவாதி. அவன் ஒரு பொழுதும் முடிவுக்கு வரமாட்டான். ஐயம்திரிபுமயக்கம் காரணமாக வினாக்கள் எழுந்துகொண்டு இருக்கும்வரைஅறியாமையின் இருப்பதாகவே பொருள். அறியாமைக்கு இடம் தந்து கேட்கப்படும் வினாக்கள் பயன் தராதவை. சிலர் தங்களை அறிவு உள்ளவராகக் காட்டிக் கொள்வதற்கே வினாக்களை எழுப்புவர். அதுவே அவர்கள் அறிவில்லாதவர் என்பதைக் காட்டும். அறிவுக்கு ஆக்கம் கருதி எழுப்பப்படும் வினாக்கள் பயன் உள்ளவை. இங்கே வாதம் இல்லை. விவாதம் இல்லை.

 

         அறியாமை அகலஅறிவு பெறப் பல முயற்சிகள் தேவை. முதல் முயற்சி சிந்தித்தல். இன்றுசிந்தனைப் பழக்கம் பலருக்கு இல்லை. இன்று பலருடைய மூளை சத்திரம் போலத்தான் இருக்கிறது. அதாவதுவீடு என்றால் அங்கேயே சிலர் வாழ்வர். சத்திரம் என்றால் வருவோரையும் போவோரையுமே பார்க்கலாம். அதுபோல்இன்று பலரும் நூல்களைப் படிப்பதுமூளையில் ஏற்றிக்கொள்வதுதிரும்ப ஒப்புவிப்பது என்ற பணிகளையே செய்வர்.  பிறரை அவ்வாறே செய்விக்கவும் தூண்டுவர். அதை ஒரு சாதனையாகவும் காட்டிக் கொள்வர். கற்றதைச் சிந்திப்பதே இல்லை. சிந்திக்கின்ற மனிதன்வாழ்க்கையில் சிக்கல்களுக்கு ஆளாக மாட்டான். அவனுடைய அறிவுநிலையானபடி முறையில் வளர்ந்து வரும். கற்றவன் சிந்திக்க வேண்டும். பிறரைச் சிந்திக்க விடவேண்டும்.

 

     சிந்தனையைத் தொடர்ந்து மேலும் அறிவு நூல்களைக் கற்றல்அடுத்து அறிவு பெறும் முயற்சி ஆகும். கற்பது என்பது ஒருவனுக்கு இன்றியமையாத கடமை. கற்கும் முயற்சிக்குத் தானே கண்கள் தரப் பெற்றன. கற்றலை அடுத்து வரும் முயற்சிகேட்டல். "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறிவுநூற் பொருளைக் கற்ற அறிவுடையார் பால்கேட்பதுஉயிரின் அறிவாக்கத்திற்குத் துணை புரியும். அது  ஒரு சிறந்த முயற்சி. எளிய முயற்சியும் கூட ஆனால்யாரிடம் கேட்கவேண்டுமோஅவரிடம் கேட்காது போனால் அறிவு நலத்திற்குப் பதில் அறியாமையும் குழப்பமும் விஞ்சி நிற்கும். அறியாமையையே அறிவு என்று அயருகின்ற நிலையும் உண்டாகும். இது தடுமாற்றத்தையே தரும். உணவு வகைகளைச்  சுவை பார்த்து உண்பதைப் போலஅறிவு நூல்களை சுவை பார்த்துக் கேட்கவேண்டும். கற்றலும் கேட்டலும் மாணவர்கள் கடமை மட்டுமல்ல. பெரியவர்களும் செய்ய வேண்டிய கடமை என்பதனைத் திருஞானசம்பந்தர்"கற்றல் கேட்டல் உடையார் பெரியார்"என்று காட்டுவார். 

 

     அடுத்துஅறிவைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளும் நெறிபெற்ற அந்தச் சிறு கூறாகிய அறிவை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதலாகும். சிந்தனைஅறிவைப் பெறும் வாயிலே தவிர சிந்தனையே அறிவாகாது. கல்விஅறிவைப் பெறும் வாயிலே தவிரகல்வியே அறிவாகாது. கல்விகேள்விசிந்தனைகளால் பெற்ற கருத்தை நல்ல அறிவாக்கி உயிர்க்குத் தரவல்லது வாழும் முறையே ஆகும். அறிவியல் கூடத்துச் சோதனைகளில் விஞ்ஞான அறிவு கிடைப்பதைப் போல,வாழ்க்கைச் சோதனைகளில் அறிவு கிடைக்கிறது. சோதனைக்கு ஆட்படவும்வாழ்க்கையைச் சோதனைக்கு ஆளாக்கவும் திறமை தேவை. கோழைஒரு பொழுதும் அறிவுடையவனாக முடியாது. இங்ஙனம்,வாழ்க்கை அனுபவத்தின் மூலம்அறிவு முழுமை நலம் பெறுதற்குரிய தகுதியை எய்துகிறது. ஆனாலும் முழுமை அடைந்து விடுவதில்லை. அறிவு நலம் முழுமை அடைய அல்லது முழுமை அடைந்தது என்பதை அறிந்துகொள்ளத் துணை செய்வது இறைவழிபாடே ஆகும். இறைவன் நிறை அறிவினன்.அவன் வாலறிவன். ஆதலால்அறிவு நலம் பெற்ற உயிர்மேலும் முழுமை நலம் எய்தவாலறிவு என்னும் ஞானத்தைப் பெற இறைவழிபாடு துணை நிற்கிறது. மேலும்தெளிவாகச் சொன்னால் இந்த நிலை எய்திய உயிர்கள் செய்யும் வழிபாடே வழிபாடு. எனவேதான், "கற்றதனால் ஆய பயன் என்கொல்வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அறிவின் வாசனையே இல்லாத மனிதர்கள் செய்யும் இறைவழிபாடு இறைவன் திருவடியைக் கருதியது அல்லதமது தேவைகளைக் கருதியது. தேவைகள் நிறைவு பெறவேண்டுமானால்இறைவன் திருவடிப் பற்று மிக வேண்டும். பொருட்பற்று அறவேண்டும். இதை அறியாதவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கே இறைவன் உள்ளான் என்று கருதிதமது தேவைகளுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தேவைகள் நிறைவேறாதபோது நாத்திகம் பேசுகின்றனர். நாத்திகம் பேசுவதால்நாக்குத் தழும்பு ஏறும். "நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஞான நிலையில் ஞானிகள் தொழுவதே வழிபாடு. "உலகியல் வேதநூல் ஒழக்கம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். வேதங்களில் விதிக்கப்பட்டபடி வாழ்ந்து ஒழுகுவதே உலகியல் ஆகும். எனவே, "உலகியல்" என்பதை உணர்ந்து"அருளியல்" என்ன என்பதைத் தெளிந்துஇறைவன் திறம் நினைந்து வழிபடாதார் எவ்வளவு கற்றாலும்,எவ்வளவு கேட்டாலும் அவர்கள் எவ்வளவுதான் தெளிவாக விரிவுரைகள் செய்தாலும் பயன் இல்லை. அவை எல்லாம் மீண்டும் மீண்டும் சேற்றிற்குள் இழுத்து அமிழ்த்தும் செயல் முறையாகவே முடியும். "ஐம்புலன் ஆகிய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்துசிவன் எம்பெருமான் என ஏத்திஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள்ளே உருகிப் போற்றி நிற்கவேண்டும்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். அவ்வாறு வழிபடாதவர்களுடைய அறிவைத் தெளிந்த அறிவாக மதித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். 

 

     பூம்புகார்ச் சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசனையே தெய்வம் என்று தெளிந்து வழிபடுவாரே வழிபடுபவர். அவர்களே கற்றல் கேட்டலுடைய பெரியார். அங்ஙனம் வழிபடத் தெரியாதவர்களின் தெளிவைத் தெளிவாக நாம் கொள்ளமாட்டோம் என்கின்றார். உண்மைப் பொருளை உண்மை என்று உணராதவர் அறிவு எப்படிப்பட்டதாக இருக்கும்?

 

"வையநீர் ஏற்றானும்,மலர் உறையும் நான்முகனும்,

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன்பெருமை,

தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறாமே".

 

என்பது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடல்.

 

     மாவலியிடத்து வாமனவடிவோடு சென்ற திருமால் தனது திருவடியால் மூன்றடி மண்ணைக் கேட்டார். மாவலி நீர் வார்த்துத் தரவும்இந்த உலகைத் தனது ஓரடியால் ஏற்றார் திருமால். இந்த நிகழ்வை, "வையம் நீர் ஏற்றானும்" என்றார். தாமரை மலரில் உறைபவன் நான்முகன் ஆகிய பிரமதேவன். முன்னவன் காத்தல் தொழிலை ஏற்றவன். பின்னவன் படைப்புத் தொழிலை ஏற்றவன். இருவராலுமேசிவபரம்பொருளின் பெருமையை அளந்துகாண முடியவில்லை. அப் பரம்பொருள் திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளான். அவனை இன்னிசையால் மகளிர் புகழ்ந்து பாடும் பாடலோசை எப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட பெருமானைத் தெய்வமாக விரும்பி வழிபடாதவரை தெளிந்த அறிவினைப் பெற்றவராக நாம் கொள்ளமாட்டோம் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     "அத் தேவர் தேவர்அவர் தேவர் என்று இங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புதலை விடுத்துநமது உலகப் பற்றுக்கள் அறும்வண்ணம் நாம் பற்ற வேண்டியது மெய்த்தேவர் (உண்மைத் தேவர்) ஆகிய சிவபரம்பொருளையே. அதுவே, "கற்றதனால் ஆய பயன்" ஆகும்.

 

துறவு நெறி --- அருள்நெறி

 


துறவுநெறி - அருள்நெறி

-----

 

     மனிதன் பெற வேண்டிய இணையற்ற செல்வம்அருளுடைமை ஆகும். அது மகவு எனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகும் அருளொழுக்கமாகும். அருள் வாழ்க்கை என்பது மிக எளிமை போலத் தோன்றினாலும் அருள் உடையராக வாழ்தல் அரிதினும் அரிது. 

 

     மனித இனத்திற்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பும்எளிய சாதனமுமாகிய அன்பு நெறியிலேயே இன்னமும் மனிதன் தட்டுத் தடுமாறிக் கொண்டே இருக்கிறான். தனக்குப் பயன்படுவோருக்குத் தானும் மீண்டும் அவ்வண்ணமே பயன்படவேண்டும் என்ற உணர்வின்றிஅடித்தும்கெடுத்தும்எடுத்தும்வஞ்சித்தும் விலங்கினைப் போலத் தின்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான். 

 

     அன்பு என்பது தொடர்பு உடையார் மாட்டு உண்டாவது. அருள் என்பது தன்னோடு தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மாட்டும் உண்டாவது என்று பெரியோர் வகுத்துக் காட்டி வாழ்ந்தனர். அன்பிலும் முதிர்ந்தது அருள். அன்பு தாய்அது பெற்றெடுத்த குழந்தையே அருள் என்பார் திருவள்ளுவ நாயனார். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்னும் திருக்குறளைக் காண்க.

 

     இந்த உலகில் யாரிடத்திலும்எந்த உயிரினிடத்திலும் அன்புகாட்டி வாழ்வித்து வாழும் உணர்ச்சியே அருள் உணர்ச்சி. அருள் உணர்ச்சி உள்ள இடத்தில் தன்னலம் இல்லைஅருளுணர்ச்சி உடையாருக்கு இன்பம் என்பது, பிறர் இன்புற்று வாழ்வதைக் காண்பதே ஆகும். "தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுதல்" அருள் உடையார் வாழ்க்கை. 

 

     இத்தகு அருள் உணர்வு திடீரென ஒருநாளில் தோன்றி விடுவதில்லைஅதற்கு இடையறாத பயிற்சி தேவை. அருள் உணர்வுக்கு இடையூறாக இருப்பது மனிதனுடைய புலன் உணர்வு. எதையாவது ஒன்றைத் துய்த்து மகிழ வேண்டும் என்ற அவாபுலன்களினுடைய இயற்கை. அந்த இயற்கையுணர்வுமுதலில் பெரும்பாலும் தான் துய்த்து மகிழ வேண்டும் என்றே தொடங்கும். அந்த உணர்வைத் தடுத்துமடை மாற்றிப் பிறரைத் துய்ப்பிக்கச் செய்தல் மூலம் தான் துய்த்ததாகவே கருதி மகிழ்கின்ற உணர்வைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.

 

     இந்த நிலையில்தான் தொண்டு உணர்வு கால் கொள்ளுகின்றது. தொண்டு உணர்வு கால் கொள்ளும்போதுதான் துறவு நிலை முகிழ்க்கின்றது. துறவுமிகமிக உயர்ந்த இயல்புடையது. துறவு நெறி வெளிப்படுவது தோற்றத்தில் அல்ல. உள் உணர்விலேயே துறவு முகிழ்க்க வேண்டும். என்னுடையது என்று யாதொன்றும் வைத்துக் கொள்ளாதவரும்இது இல்லாமல் எதவும் முடியாது என்னும் வாழ்க்கைப் போக்கு இல்லாதவருமே உண்மைத் துறவியாக வாழ முடியும்.

 

     இத்தகு துறவுநெறி இந்த வையகத்தில் எங்கிருக்கிறதுஎன்று கேட்கக் கூடிய நிலை இன்று இருக்கின்றது. எண்ணில்லாத செவ்வத்திற்கு உரியவர்களாக நம்மிடையே காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் சுகபோக வாழ்க்கையை வாழுகின்ற துறவிகள் உண்டு. இவர்களை சாதாரண மக்கள் நெருங்க முடியாது. மற்றொரு வகையினர்வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியின்றிப் பிச்சை எடுக்கும் திருக்கோலமாகத் துறவுக் கோலம் பூண்டு நடமாடுகின்றனர். அவர்களிடத்துத் தோற்றத்திலேயே துறவு காணப்படுகிறது. முதல் வகையினரின் வாழ்க்கை முறையில் துறவுக்கான வாடையும் இல்லை. இருந்திருந்தால்அப்படிப்பட்ட துறவிகளின் கையிலே பட்ட பொருளானதுஇந்த நாட்டு மக்களது வாழ்க்கைக்கு உணவாக,கல்வியாகமருந்தாகப் பயன்பட்டிருக்கும். வீணான ஆடம்பரங்களுக்கே அப்பொருள் பயன்படாது. இழக்க வேண்டிய நான்’ என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரமும்,எனது’ என்னும் புறப்பற்று ஆகிய மமகாரமும் ஆகிய இரண்டு பற்றுக்களும் பற்றறத் துறக்கப்படவில்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்த்துத் தான் கூடாவொழுக்கம் என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

"வான் உயர் தோற்றம் எவன் செய்யும்தன்நெஞ்சம்

தான் அறி குற்றப் படின்?"             --- திருக்குறள்.

 

"தான் குற்றம் என்று அறிந்த ஒன்றிலே மனம் பதியுமானால்ஒருவனுக்கு வானளாவ உயர்ந்த தவ வேடமானது என்ன பயனைத் தரும்?" என்று வினவுகின்றார் நாயனார். கம்பீரமாய் விளங்கும் தோற்றத்தை "வான் உயர் தோற்றம்" என்பது இலக்கண வழக்கு. அறியாமல் செய்த குற்றத்திற்குக் கழுவாய் உண்டு. அறிந்தே செய்த குற்றத்திற்குக் கழுவாய் இல்லை. எனவேசெய்த குற்றம் நிற்கும். தவவேடத்தால் மற்றவரை மருட்டியதே அல்லாமல் வேறு பயன் இல்லை.

 

"வலி இல் நிலைமையால் வல்லுருவம்,பெற்றம்

புலியின்தோல் போர்த்து மேய்ந்து அற்று".  --- திருக்குறள்.

 

"மனத்தைத் தன்வயப்படுத்தி அடக்கும் வல்லமை இல்லாத இயல்பினை உடையவன்மனத்தைத் தம்வயப்படுத்தி அடக்கின வல்லமை உடையவரது தவவேடத்தைத் தான் மேற்கொண்டுதான் தனது மனம் போன வழியே போதல்பசுவானதுகாவல்காரர் விரட்டாது இருக்கும்படிபுலியின் தோலைப் போர்த்துக் கொண்டுபயிரை மேய்ந்தது போலும்" என்கின்றார் நாயனார். புலியானது பசித்தாலும் புல்லைத் தின்னாது என்னும் நம்பிக்கையாலும்நெருங்கிச் சென்று துரத்தினால் கொன்றுவிடும் என்னும் பயத்தாலும்புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேயும் பசுவைக் காவலர் துரத்தமாட்டார். பசுவானது வல்லுவருவம் கொண்டதன் பயன் அதுவே. 

 

     தவத்தினர்காம இன்பத்தை அனுபவிக்க மாட்டார் என்னும் நம்பிக்கையாலும்நெருங்கிச் சென்று விசாரித்தால்அவர் இடுகின்ற சாபத்தை அனுபவிக்க நேருமே என்னும் பயத்தாலும்உலகவர் சந்தேகம் கொள்ளமாட்டார் என்னும் காரணத்தாலும்தனக்கு உரிமையாக உள்ள மனைவியையும் துறந்துமனத்தைத் தன்வயப்படுத்தும் வல்லமை இல்லாதுபிறர் சந்தேகம் கொள்ளாதபடிதவவேடத்தைத் தரித்து,கூடாவொழுக்கத்தால்தன்மனம் சென்ற வழியே சென்றுதவவேடத்தில் மறைந்து நின்று,பிற பெண்களை விரும்புதல்தவத்திற்குக் கூடாவொழுக்கம் ஆகியது. கௌதம முனிவரின் பன்னியை இச்சித்த இந்திரன்கௌதம முனிவர் போன்று வேடமிட்டு வந்தது இங்கு கருதத் தக்கது.

 

"நெஞ்சில் துறவார்துறர்நார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்"               --- திருக்குறள்.

 

"மனத்தளவில் பற்றுக்களைத் துறவாது இருந்துதுறந்தவர் போல்தானம் செய்வாரை வஞ்சித்து வாழ்கின்றவரைப் போல,கொடுமையை உடையோர் உலகத்தில் ஒருவரும் இல்லை" என்கின்றார் நாயனார். நாம் இந்த தவசிக்கு ஏதாவது கொடுப்போமானால்மறுமையில் தேவலோகத்தை அடைதல் கூடும் என்று எண்ணிக் கொடுப்பவர் இல்லறத்தார்கள். அவர் பொருளைப் பெற்றுக் கொண்டுஅவரைத் தாழ்ந்த நிலையினர் ஆக்குதல்தமக்கு ஆவன செய்யாதார்க்கு,ஆகாதனவற்றைச் செய்தல். இப்படிபொய்யான ஒழுக்கத்தால் பிறரை வஞ்சித்தவர்கள் மிகவும் கொடியவர்கள். அவர்கள் மறுபிறப்பில் இழிவான பிறப்பை அடைவார்கள். 

 

     துறவு என்பது எங்கோ இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கின்ற இயல்பல்ல. சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் கூடத் துறவு உணர்வு தேவை. காதல் வாழ்க்கைக்கும் கூட ஓரளவு துறவு தேவை. காதலன் காதலி மகிழ்வுக்காகச் சிலவற்றைத் துறக்கிறான். காதலி தாயான பின்பு தனது குழந்தைக்காகச் சிலவற்றைத் துறக்கிறாள். இங்ஙனம் வேண்டிய போது வேண்டியபடியே துறவு மனப்பான்மை தலைகாட்டாத குடும்ப வாழ்க்கை இன்பம் தராது. ஊரொடு தழுவி வாழும் இயல்பு இல்லாத குடும்ப வாழ்க்கை இன்பம் பெருக்காது. துன்பமே சூழும். 

 

துறத்தல் --- கைவிடுதல்பற்று அறுத்தல்.

 

துறவு --- விடுதல்இரகசியம்வாய்ப்பான நிலைவெளியிடம்சந்நியாசம்.

 

நியாசம் --- வைத்தல். 

 

        ஆசைபாசம்பற்று என்பவற்றிலிருந்து நீங்கிய நிலைஉலக இன்பங்களை விட்டு ஆன்மீக ஈடேற்றத்தை நாடும் நிலைசந்நியாசம் ஆகும்மௌனம் வாக்கின் தண்டம்பலனில் பற்றுக்கொண்டு செயல்களைச் செய்யாமல்இருப்பதுஉடலின் தண்டம்பிராணாயாமம் முதலியன செய்வதுமனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் (திரிதண்டி) கைக் கொள்ளாத துறவிவெறும் மூங்கில் தடியைச் சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக முடியாது.

 

            துறவு நிலை எதுதுறவி என்பவர் யார்என்பன போன்ற வினாக்கள் பலகாலமாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்றும் கேட்கப் பெறுபவை. தமிழகம்தனக்கென ஒரு சிறந்த சமய நெறியைப் பெற்று விளங்கிய புகழுடையது. சேக்கிழார் தமிழகத்துச் சமய நெறியினை "அசைவு இல் செழுந்தமிழ் வழக்கு’ என்றார். இந்தச் செழுந்தமிழ் வழக்குஅயல் வழக்கை வென்று விளங்க வேண்டும் என்ற திருக்குறிப்பு திருஞானசம்பந்தர் வரலாற்றில் நமக்குக் கிடைக்கிறது. இங்குச் சேக்கிழார் குறிப்பிடும் அயல் வழக்கு எதுசமண் சமயமே அயல் வழக்கு. சமண சமயம் கடுமையான துறவினை வலியுறுத்தவது. அந்தச் சமணத்தை எதிர்த்தே திருஞானசம்பந்தர் கிளர்ச்சி செய்தார்.

 

     மணிவாசகர் பெளத்தத்தைச் சந்தித்து இருக்கிறார்பெளத்தத்தை வழக்காடி வென்றிருக்கிறார். அந்த வழக்கில் உங்கள் இறைவன் தனது திருமேனியில் ஒருபால் பெண்ணை வைத்து மகிழ்ந்து கூத்தாடுகின்றானேஅவன் ஒரு பெண் பித்தன் தானே" என்று ஏளனமாகப் பேசினார்கள் பௌத்தர்கள்.

 

"தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண்பால் உகந்தான்பெரும்பித்தன் காண்ஏடீ!"

 

என்று எழுந்த கேலிப் பேச்சுக்கு விடையாக,

 

"பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர்காண்"

 

என்று பாடி"அறிவிலியேஎமது இறைவன் தனது திருமேனியில் பெண்ணின் பகுதியை விரும்பாவிடில்பெரிய நிலவுலகத்தார் யாவரும்வீடு அடைவதற்குரிய யோகம் ஒன்றிலேயே நின்றுஅதனை முற்றுவிக்க மாட்டாமல் அழிவர்" என்று விடை தந்தருளினார்.

 

     "மங்கையோடு இருந்தே யோகு செய்வான்"பெண்ணோடு கூடியிருந்தே யோகநிலையில் உள்ளவன் சிவபரம்பொருள் என்று திருவிசைப்பா கூறும்.

 

     அப்பரடிகள் திருவையாற்றில் திருக் கயிலையைக் காட்சியை இறைவன் காட்டக் கண்டு ஊனுருகஉளமுருக நின்று பாடுகிறார். காதல் மடப்பிடியோடும் களிறு வருவன” காண்கிறார். இங்கே இப்போதைய துறவு நிலை கூறப்படவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள்பரவையாரை மணந்து,பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வாழ்ந்தார். இவர்கள் நமது நாயன்மார்கள்நமக்கு நல்ல  வழிகாட்டும் தலைவர்கள். இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,புற வாழ்க்கைத் துறவை நம்முடைய சமய ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே.

 

     வாழ்க்கை என்பதுஉடல் வாழ்க்கைஉயிர் வாழ்க்கைஉணர்வு வாழ்க்கை என்றெல்லாம் பகுத்துக் கண்டவர் நமது முன்னோர். சிலர்உடல் வாழ்க்கைக்கு உரியதையே உயிர்உணர்வு வாழ்க்கைக்கும் உரியதாக்கி விடுவர். அது விலங்கியல் வாழ்க்கை. "திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் இதனை விரிவாகவே காட்டி உள்ளார் பட்டினத்து அடிகள். இந்த வாழ்க்கைப் படிகள் அனைத்தையும் அடைந்து அனுபவித்து அதனதன் எல்லையிலே நின்று உணர்வில் சிறந்து வாழ்தல் சிறப்புடைய வாழ்க்கை. அதுவே சீலம் நிறைந்த வாழ்க்கை. அறவாழ்வு என்று சொன்னாலேஅது இல்லறத்தைத் தான் குறிக்கும். "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்றார் திருவள்ளுவ நாயனார். துறவறம் அறம் ஆகாதாஎன்னும் வினா எழுமாயின், "அதுவும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்று விடை பகர்ந்தார் திருவள்ளுவ நாயனார். தவ உணர்வுக்குப் புறம்பான கூடாவொழுக்கம் இருக்குமாயின்அது பிறரால் பழிக்கப்படும். எனவேபிறரால் பழிப்புக்கு இடமாகாமல் இருந்தால் துறவறமும் நல்லதுதான் என்றார்.

 

     திருஞானசம்பந்தர்எளிமையாகத் துறவு நிலையை அடைவதற்கு அற்புதமான ஒரு வழியைக் காட்டினார்.  “துறவி ஆகுமே” என்று பாடுகின்றார். நீ துறவி ஆவாய் என்கின்றார். எப்பொழுதுஉள்ளதைத் துறப்பதினால் மட்டும் துறவியாகி விடுவதில்லை. துறக்கக் கூடாத ஒன்றைத் துறக்காமல் இருப்பதன் மூலமே துறவி ஆகின்றாய் என்கின்றார். துறவு நிலையை மேற்கொண்டவர்கள் துறந்த பொருட்களின் பட்டியல் பெருகலாம். "உடை துறந்தேன்என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்புஉடலுக்கு அல்லவா இழப்பு? “உணவைத் துறந்தேன்!” என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்புஉடலுக்கு அல்லவா இழப்புதுறந்த பொருள்களின் பட்டியல் பெருகுவதால் பயனில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் வைத்து கொண்டா வாழ்கிறார்கள்மகிழ்கிறார்கள்வண்டி வாகனம் ஏதும் இல்லாமல்உலகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் கால்களால் நடக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வண்டிகளைத் துறந்தவர்களாகத் தம்மை அறிவித்தால் பொருந்துமாஒரு வேளை உண்பது துறவு என்றால்ஒருவேளை உணவு கூடக் கிடைக்காமல் வெறும் வயிற்றோடு வாடுபவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றனர். இவர்களைத் துறவிகள் என்று சொல்லாலம் அல்லவா?எனவேபுறத்திலே துறந்த பொருட்களைக் கொண்டு துறவு நிலையை நிர்ணயிக்க முடியாது. உண்மையில் ஒருவன் துறக்க வேண்டியதுஅவன் கொண்டுள்ள "நான்" என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரத்தையும், "எனது" என்னும் புறப்பற்று ஆகிய மமகாரத்தையுமே ஆகும். இத்தகு நிலைக்கே துறவுக் கோலம் நிச்சயிக்கப்பட்டது. துறக்க வேண்டியவற்றைத் துறக்காமல்வெறும் துறவுக் கோலத்தை மட்டும் பூண்டு இருப்பதால் பயனில்லை. மாறாக சமூகக் கேடு தான் விளையும். "வேடநெறி நில்லாதார் வேடம் பூண்டு என்ன பயன்?" என்கின்றார் திருமூல நாயனார்.

 

     துறக்க வேண்டியவை அகங்காமமகாரங்கள் ஆகிய அகப்புறப் பற்றுக்கள். துறக்கக் கூடாத ஒன்றும் உள்ளது. அது இறைப்பற்று ஆகும். இறைப்பற்றை இறுகப் பற்றிக் கொண்டால்அகப்புறப் பற்றுக்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும்.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் உண்மைத் துறவு நிலையைத் தமது பாடலில் விளக்குகின்றார். நீ ஒன்றைத் துறவாது இருந்தால் துறவி ஆவாய் என்கிறார். பெருமான் திருவாக்கினைக் கொண்டு பார்த்தால் மனிதன் துறக்கக் கூடாததும் ஒன்று உண்டு எனத் தெரிகின்றது. அதுதான் இறைவன் திருநாமம்.  இறைவன் திருநாமத்தை நெஞ்சு துறக்கக்கூடாது,மறக்கக்கூடாதுஇறைவன் திருநாமத்தை வாயாரக் கூறி வழிபடத் தவறுதல் கூடாது. அதுவே துறவுக்கு இலக்கணம் என்பதைத் "துறவி ஆகுமேஎன்று சொல்லி நம்மை நெறிப்படுத்துகின்றார்.

 

     பெளத்தத் துறவிகள் கடவுளை மறந்தனர். சமணத் துறவிகள் நோன்பே கடவுள் எனக் கொண்டனர். இன்றையத் துறவிகளில் சிலர்கடவுளை மறந்து சாதி குலம் பார்க்கின்றனர். உருத்திராக்க மாலையை அதிகமாக அணிபவர்கள் சிலர்கடவுளை மறந்து காசுகளை அதிகமாக எண்ணுகின்றனர். காணிகளே வேண்டும் என்று எண்ணி. கோயிலைப் பாழடித்து விட்டுக் காணிகளை வைத்துக் களிப்புறுகின்றனர். இப்படிப்பட்ட துறவிகள்’ நம்முடைய தலைமுறையில் இல்லையாஎன்ன இந்த வினாவிற்கு விடை வெளிப்படையாகக் கிடைக்காது. விசாரித்து அறிந்தால் தெரிய வரும்.

 

     உடையும் கலன்களும் துறவுக் கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! கனியின் தோல் பழுத்து பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்தில் கனிந்த கனிவே தோலையும் பற்றுகிறது. சுவை மிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதல்ல. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம். முதற்கனிவு கனியின் உட்பகுதியே ஆகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல் மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்லஅது வெம்பல்! துறவிலும் உள்ளம் பழுக்கவேண்டும். "பழுத்த மனத்து அடியர்என்பார் மணிவாசகப் பெருமான். உடல் பழுத்திருக்கிறதுஉடை பழுத்துக் காட்டுகிறதுஆனாலும் உள்ளம் பழுக்கவில்லை! இத்தகைய துறவுக் கோலத்தினர்,திருஞானசம்பந்தர் கூறிய துறக்கக் கூடாத ஒன்றைத் துறந்துவிட்டனர். திருஞானசம்பந்தர் கூறுவதைப்போல இறைவன் திருநாமத்தை நினைப்பற நினைந்து ஏத்துங்கள்! அந்தச் சீலமே துறவு நிலைக்கு உயர்த்தும். பிறவியை அறுக்கத் துணை புரியும்.

 

     பிறவியை அறுக்க நினைப்பவர்கள். துறவு நிலைக்கு உயர வேண்டும். அருணகிரிநாதப் பெருமான் கூறியது போ, "காவி உடுத்தும்தாழ்சடை வைத்தும்காவி உடுத்தும்,தாழ்சடை வைத்தும்காடுகள் புக்கும் தடுமாறி;காய்கனி துய்த்தும்,காயம் ஒறுத்தும்,காசினி முற்றும் திரிவது" துறவு அல்ல.இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும்செம்பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்ற குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு.

 

     நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான். நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.

 

"மழித்தலும் நீட்டலும் வேண்டாஉலகம் 

பழித்தது ஒழித்து விடின்".            ---  திருக்குறள்.

 

     நாட்டை விட்டு காடு போய்மழைக் காலத்திலும்பனிக் காலத்திலும்தண்ணீரில் நின்றும்வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும் தவம் இயற்றுதல். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.

 

"காடே திரிந்து என்ன,காற்றே புசித்து என்ன,கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன,உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர் 

நாடே,இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர்,நாரியர் பால் 

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!"        --- பட்டினத்தார்.

 

     அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாதுஉயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடையார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்றுக் கொண்டான். அன்பு இல்லாதவர் மலர் விட்டு எறியினும் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.  இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். இறைவன் திருவடியில் தலையாய அன்பு கொண்டுதிருவருள் தாகம் கொண்டு நிற்றலே அவன் அடியை அடைவதற்கு எளிய வழியாகும். 

 

     இதற்கு மாற்று என்ன?என்றால்"சீவன் ஒடுக்கம்,பூத ஒடுக்கம்தேற உதிக்கும் பரஞானதீப விளக்கம் காண,எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே" என்று முருகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     சீவன் ஒடுக்கம் --- உயிரைப் பொருள் என அறிவது பசுஞானம். அது கழலுதல் வேண்டும். அந்தக்கரண ஒடுக்கம் இதுவே ஆகும். விடயங்களைப் பற்றி நிச்சயித்து அபிமானித்து சிந்தித்து நிற்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் அந்தக்கரண வாசனை நீங்குதல் ஆகும்.

 

     பூத ஒடுக்கம் ---பாசத்தைப் பற்றி அறியும் ஞானம் பாசஞானம்ஆகும். அதுவும் நீங்குதல் வேண்டும். விடயங்களை அபகரிக்கும் கண் முதலிய பஞ்சேந்திரியங்களுக்கும்அபகரித்த போது வசன கமன தான விசர்க்க ஆனந்த விடயீகரிக்கும் வாக்கு ஆதி கன்மேந்திரியங்களுக்கும்ஆதாரமாய் நிற்கும் பூதங்களின் நீக்கம்.

 

     பரஞானம் ---பரஞானம்பதிஞானம்அநுபவஞானம்சிவஞானம் எல்லாம் ஒன்றே. இதுவே திருவருள் ஞானம். இதுவே பரகதிக்கு சிறந்த சாதனம். இந்தப் பரஞான தீப விளக்கத்தைத் திருவருளால் பெறுவதே சிறந்த சாதனம் ஆகும்.

 

     திருத்தலங்கள் தோறும் சென்று இறைவரை வழிபட்டுவாழ்வியல் நெறிகளை மக்களுக்கு உணர்த்திதிருப்பதிகங்களை இன்னிசையோடு பாடிநன்னெறிப்படுத்திய திருஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார்...

 

"பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்துறவி ஆகுமே!"

 

     பிறவியை அறுத்துக் கொள்ள வேண்டுமானால்நான் எனது என்னும் அகங்கார மமகாரங்களை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துறவு நிலை உண்டாகும். அதற்கு ஒரே சாதனம்இறைவன் திருவடியை மறவாது வழிபடுதல் ஒன்றே ஆகும். அருள்நெறியில் ஒழுகுவதே துறவுநெறி ஆகும்.

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...