“ஈக்கு விடம்தலையில் எய்தும், இரும்தேளுக்கு
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே, - நோக்கரிய
பைங்கண் அரவுக்கு விடம் பல்அளவே, துர்ச்சனருக்கு
அங்கம் முழுதும் விடமே ஆம்.” — நீதிவெண்பா
ஈக்கு விடமானது தலையிலே பொருந்தியிருக்கும். கருந் தேளுக்கு விடம் அதன் கொடுக்கில். பார்க்க அரிதான பாம்புக்கு விடம் அதன் பல்லில் மட்டுமே பொருந்தியிருக்கும். ஆனால், கெடுமதி படைத்தவர்க்கோ, அவர்கள் உடம்பு முழுதும் விடம் பொருந்தியிருக்கும். (இருந்தேள் - கருந்தேள். துர்ச்சனர் - கெடுமதி உடையோர்.)
No comments:
Post a Comment