18. புல்லோர்க்கு உடம்பு முழுதும் விடம்

“ஈக்கு விடம்தலையில் எய்தும், இரும்தேளுக்கு

வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே, - நோக்கரிய

பைங்கண் அரவுக்கு விடம் பல்அளவே, துர்ச்சனருக்கு

அங்கம் முழுதும் விடமே ஆம்.” — நீதிவெண்பா


ஈக்கு விடமானது தலையிலே பொருந்தியிருக்கும். கருந் தேளுக்கு விடம் அதன் கொடுக்கில். பார்க்க அரிதான பாம்புக்கு விடம் அதன் பல்லில் மட்டுமே பொருந்தியிருக்கும். ஆனால், கெடுமதி படைத்தவர்க்கோ, அவர்கள் உடம்பு முழுதும் விடம் பொருந்தியிருக்கும். (இருந்தேள் - கருந்தேள்.  துர்ச்சனர் - கெடுமதி உடையோர்.)


No comments:

பாடல் 13

"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும் பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள் ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை மாகாளம் கைதொழு...