“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.”
கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழம் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் தொலைவிலும், சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழம் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களுக்குக் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது. (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.)
(கொம்பு உளது - ஆடு மாடு முதலியன. வெம்புதல் - சினம் கொள்ளுதல். கரி - யானை. வம்பு - தீமை.)
No comments:
Post a Comment