திருத்தில்லை - 3

 


"கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள்களவு

கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்

சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே

செல்லாமல், செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை -- சிதம்பரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள இறைவரே! ஓர் உயிரையும் கொல்லாமல் இருக்கவும், கொன்றதன் ஊனைத் தின்னாமல் இருக்கவும், வஞ்சகத்தையும், கோள் சொல்லுதலையும், திருட்டுத் தனத்தையும் கற்காமல் இருக்கவும், வஞ்சகரோடு சேராமல் இருக்கவும், கனவிலும் பொய்களைச் சொல்லாமல் இருக்கவும், துன்பம் விளைவிக்கும் சொற்களைக் கேளாமல் இருக்கவும், மாதர் மயல் அடையாமல் இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.


No comments:

Post a Comment

53. நல்ல மாட்டுக்கு ஓர் அடி

“துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலும்      மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்! சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலும்அளவே      மெய்யதனில் தழும்ப...