திருத் தில்லை - 14

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல், ஏக்கற்று இருப்பர்களே."


கங்கை நதியோடு, தும்பை மலரையும் தரித்து ஆடுகின்ற அம்பலவாணப் பெருமானை வழிபடாதவர்களுக்கு இந்த உலகத்தில் அடையாளம் உள்ளது. அது என்னவென்றால், சோற்று வாசனை இல்லாமல், சுகம் ஏதும் இல்லாமல், உடுத்திக் கொள்ள ஆடை ஏதும் இல்லாமல், பிச்சை எடுத்தாலும் கிடைக்காமல் ஏங்கி இருப்பவர்கள்.


"இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையை சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே"


என்னும் சுந்தரர் தேவாரத்தினை எண்ணுக.


No comments:

Post a Comment

54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

  “கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;     செங்கோலிற் கடல்சூழ் வையம் புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,     நரகமில்லை; பொய்யி தன்றால்; உரப...