27. சேர்ந்த இடத்தினால் சிறப்பு

“ஆனை மருப்பும், அருங்கவரி மான்மயிரும்,

கான வரிஉகிரும், கற்றோரும், - மானே!

பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே

செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.”

பெண்ணே! யானையின் கொம்பும், அருமையான கவரிமானின் மயிரும், காட்டில் வாழும் புலியின் நகமும், கற்றவர்களும் தாம் தோன்றிய இடத்தில் அல்லாமல், தாம் சேர்ந்த இடங்களிலேயே சிறப்புப் பெறுவர்.


(மருப்பு - தந்தம். கானவரி - காட்டில் வாழும் புலி.  உகிர் - நகம்.)


No comments:

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....