“ஆனை மருப்பும், அருங்கவரி மான்மயிரும்,
கான வரிஉகிரும், கற்றோரும், - மானே!
பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே
செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.”
பெண்ணே! யானையின் கொம்பும், அருமையான கவரிமானின் மயிரும், காட்டில் வாழும் புலியின் நகமும், கற்றவர்களும் தாம் தோன்றிய இடத்தில் அல்லாமல், தாம் சேர்ந்த இடங்களிலேயே சிறப்புப் பெறுவர்.
(மருப்பு - தந்தம். கானவரி - காட்டில் வாழும் புலி. உகிர் - நகம்.)
No comments:
Post a Comment