“தலைமயிரும், கூர்உகிரும், வெண்பல்லும் தம்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும்; நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான்.” — நீதிவெண்பா.
தலைமயிரும், கூரிய நகமும், வெண்மையான பல்லும், தமக்கு என்று ஒரு நிலையினை உடைய மானமுள்ள பெரியோரும் தாம் இருக்கின்ற நிலையில் இருந்து தவறிப் போகாத போதே நன்மதிப்பு சாரும். நிலை தவறும் இடத்தில் நன்மதிப்பு இல்லை. இழிவே உண்டாகும்.
“தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை” என்பது திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment