“கற்பூரம் போலக் கடல்உப்பு இருந்தாலும்,
கற்பூரம் ஆமோ கடல்உப்பு? - பொற்புஊரும்
புண்ணியரைப் போல இருந்தாலும், புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ? புகல்.” — நீதிவெண்பா
கடல் நீரில் தோன்றும் உப்பானது, உருவத்தால் கற்பூரம் போல வெண்மையாக இருந்தாலும், அது உண்மையில் கற்பூரம் ஆகுமா? ஆகாது. அதுபோல, தீவினையாளர்கள், கோலத்தால் அழகு மிகுந்த நல்வினையாளர்களைப் போலக் காட்சி தந்தாலும், தன்மையில் அவர்கள் நல்வினையாளர்கள் ஆகமாட்டார்.
(பொற்பு - அழகு. புல்லியர் - தீவினையாளர்.)
No comments:
Post a Comment