“குணம் நன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணம் நன்கு உடையார் குறுகார்; - குணம்உடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசுஒலிக்கும்
வண்ணானுக்கு உண்டோ வழக்கு.” — நீதிவெண்பா
ஆடையை அணியும் இயல்பு இல்லாத சமண மதத்தினர் இருக்கும் இடத்தில், அழுக்கு ஆடைகளை வெளுக்கும் தொழில் செய்யும் வண்ணானுக்கு வேலை இல்லை. அதுபோல, நல்லியல்பு இல்லாத தீயோரிடத்தில், நல்ல இயல்புகளை உடைய பெரியோருக்கு வேலை இல்லை.
(தூசு - ஆடை. ஒலித்தல் - மாசு நீக்கி வெளுக்கச் செய்தல். ஆடை உடுத்தாத சமணர், திகம்பரர் எனப்படுவர், வெள்ளை ஆடை உடுத்துகின்ற சமணர் சுவேதாம்பரர் எனப்படுவர்)
No comments:
Post a Comment