“பெண் ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்;
பெண் இருவர் பேசில்விழும் வான்மீன்கள்; - பெண்முவர்
பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாகுமோ பின்.”
பெண் ஒருத்தி பேசினால் பெரிய நிலவுலகமும் நடுங்கும். இருவர் பேசினால் விண்மீன்கள் உதிர்ந்து விழும். மூவர் பேசினால் கடலும் வறண்டு விடும். பெண்மக்கள் பலரும் பேசத் தொடங்கினால் பின்னர் உலகம் என்ன ஆகுமோ?
(அதிரும் - நடுங்கும். சுவறும் - வற்றும்.) மேற்பாடலில் நன்மனையாளுக்கு (குலமகளுக்கு) இலக்கணம் கூறப்பட்டது. இப் பாடலில் தீய குணம் கொண்ட மகளிரின் நிலை குறித்துச் சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment