31. தீ மகளிரின் வாக்கு நிலை

“பெண் ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்;

பெண் இருவர் பேசில்விழும் வான்மீன்கள்; - பெண்முவர்

பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்

பேசில்உலகு என்னாகுமோ பின்.”


பெண் ஒருத்தி பேசினால் பெரிய நிலவுலகமும் நடுங்கும்.  இருவர் பேசினால் விண்மீன்கள் உதிர்ந்து விழும்.  மூவர் பேசினால் கடலும் வறண்டு விடும்.  பெண்மக்கள் பலரும் பேசத் தொடங்கினால் பின்னர் உலகம் என்ன ஆகுமோ?

    (அதிரும் - நடுங்கும்.  சுவறும் - வற்றும்.) மேற்பாடலில் நன்மனையாளுக்கு (குலமகளுக்கு) இலக்கணம் கூறப்பட்டது. இப் பாடலில் தீய குணம் கொண்ட மகளிரின் நிலை குறித்துச் சொல்லப்பட்டது.


No comments:

பாடல் 4

“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன், பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்க முகம், கூம்புகஎன் கை.” இதன்...