30. இல்லாளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

“அன்னை தயையும், அடியாள் பணியும்,மலர்ப்

பொன்னின் அழகும், புவிப்பொறையும், - வன்னமுலை

வேசி துயிலும், விறல்மந் திரிமதியும்,

பேசில் இவையுடையாள் பெண்.” — நீதிவெண்பா


சொல்லப் புகுமிடத்து, தாயைப் போன்ற அன்பும், வேலையாளைப் போலத் பணிபுரிதலும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளைப் போல அழகும், நிலத்தைப் போல பொறுமையும், அழகிய தனங்களை உடைய விலைமாதரைப் போலத் துயிலும்முன் தரும் இன்பமும்,  திறன் மிகுந்த அமைச்சரைப் போல அறிவும் ஆகிய ஆறு பண்புகளையும் உடையவளே நன்மனையாள் என்று சொல்லத் தக்கவள் ஆவாள்.


(அடியாள் - பணிவிடை செய்பவள்.  பொன் - இலக்குமி.  புவி - பூமி.)


No comments:

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....