“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்,
இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்
நேத்திரத்தோர் பாலே நிறைவு.” -- நீதிவெண்பா.
சந்திரன், சூரியன் என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அவற்றின் ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும். அதுபோல, சந்திரன், சூரியன் என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்த இறைவனின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.
(இந்து - சந்திரன். இரவி - சூரியன். கிரணம் - ஒளி. நேத்திரம் - கண். நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன். நேத்திரத்தோர் - அடியவர்.)
No comments:
Post a Comment