63. சகுனம் - 2

 


                            63. சகுனம் - 2


"நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

     நாவிசிக் சிலியோந் திதான்

  நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

     நாடரிய சுரபி மறையோர்


வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்

     வழிப்பயணம் ஆகை நன்றாம்;

  மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,

     வாய்ச்சொல்வா வாவென் றிடல்,


தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு

     தப்பட்டை ஒலிவல் வேட்டு

  தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

     தனக்கேக நன்மை யென்பர்!


அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

      இதன் பொருள் ---

    அருணகிரண உதயம் தருண பானுவை அனைய அண்ணலே - சிவந்த கதிர்களை உடைய காலை இளஞாயிறு போன்ற பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

    நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை நாவி சிச்சிலி ஓந்திதான் - நரியும் மயிலும் பச்சைக்கிளியும் கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும் ஓணானும், 

    நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி நாட அரிய சுரபி மறையோர் - வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும் சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், 

    வரி உழுவை முயல்இவை அனைத்தும் - வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் 

    வலம் ஆயிடின் வழிப்பயணம் ஆகை நன்று ஆம் - வலமாக வந்தால் வழிச்செலவு நன்மை தரும், 

    மற்றும் - மேலும், 

    இவை அன்றியே - இவையல்லாமலும், 

    குதிரை அனுமானித்தல் - குதிரை கனைத்தலும், 

    வாய்ச்சொல் வாவா என்றிடல் - வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும், 

    தருவளை தொனித்திடுதல் - கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், 

    கொம்பு கிடுமுடி முரசு தப்பட்டை ஒலி - கொம்பும் கிடு முடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் 

    வல்வேட்டு தனிமணி முழக்கு எழுதல் - விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும், 

    இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை என்பர் - இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...