“தாமோ தரன்முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்,
பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே, - நாம்உடலை
நேசிப்பது என்னோ? நிலையாகும் சங்கரனைப்
பூசிப்பது ஒன்றே புகல்.” -- நீதிவெண்பா.
திருமால் முதலிய தேவர்களே இறந்து போதலைப் பற்றி நூல்களில் சொல்லப்பட்டதையும், நில உலகத்தில் உள்ள மக்கள் முதலிய உயிர்கள் இறந்து போவதையும் முறையே கேட்டும் கண்டும் தெரிந்து கொண்டோம். அப்படி இருந்தும், நாம் உடம்பின் மேல் ஆசை வைப்பது எதற்காகவோ? சிவபரம்பொருளை வழிபடுவதே நிலையானது என்று சொல்.
(தாமோதரன் - திருமால். பொன்றுவது - சாவது. சங்கரன் - சிவபெருமான்.)
No comments:
Post a Comment