“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா,
தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா,
கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே
கொண்ட விரதம் குறைவு.”. – சிறுபஞ்சமூலம்
தாழைமலர் முடிக்கப்பட்டு விளங்குகின்ற அழகிய கூந்தலை உடையவளே! நண்பர்களிடத்துத் துன்பம் செய்தலும், அவர்கள் துன்புறும் காலத்தில் அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடாதிருத்தலும், பகைவரிடத்து நட்புக் கொள்ளுதலும், உள்ளத் தூய்மை உடையவரின் தொடர்பை விட்டுநீங்குதலும், கைக்கொண்ட நோன்பில் குறைவுபடுதலும் ஆகிய இவைகள் தீய பயன்களையே தரும்.
No comments:
Post a Comment