049. காலம் அறிதல் --- 03. அருவினை என்ப

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "தொழில்களை முடிப்பதற்கு ஆகும் சாதனங்களுடன்தக்க காலத்தையும் அறிந்து ஒருவன் செய்வானானால்செய்ய முடியாத செயல்கள் எதுவும் உண்டோ?" என்கின்றார் நாயனார்.

 

     அறிவுஆண்மைபெருமை என்கின்ற மூன்று வகையான ஆற்றல்களும்,சாமதானபேததண்டம் என்கின்ற நால்வகை உபாயங்களும் பெற்றிருந்தாலும்தக்க காலத்தை அறிந்து ஒரு தொழிலைச் செய்யவேண்டும். அவ்விதம் செய்தால்முடியாதது எதவும் இல்லை.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

அருவினை என்ப உளவோகருவியான்

காலம் அறிந்து செயின்.                        

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---    

 

     அருவினை என்ப உளவோ --- அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ

 

     கருவியான் காலம் அறிந்து செயின்--- அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.

 

    (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்என்பது அறிவித்தற்குக் 'கருவியான்என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

யோகு இருந்த காலம் உணராது,உறுமதனன்

தேகம் இழந்தான்,சிவசிவா! --- ஆகில்

அருவினை என்ப உளவோ?கருவியால்

காலம் அறிந்து செயின்.         

 

     சிவபெருமான் யோகத்தில் அமர்ந்த காலத்து மன்மதன் சென்று அவன்தன் நெற்றிவிழியால் நீறுபட்டு அழிந்தான்.

 

காமவேள் நீறுபட்டு அழிந்த வரலாறு

 

     இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வரபிரமதேவர் வைகுந்தம் சென்றுதிருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால்நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார். 

 

     "எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கிமைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டுநாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறிபெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கிஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்னஎன்று கேட்கவேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

 

     சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால்ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துநால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால்மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டுதிருக்கயிலையை அடைந்துமனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள்ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியைகிரியையோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்துஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டிமோன நிலையை உணர்த்திதானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம், எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றிஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல்சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும்பிற தேவர்களையும்,தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் சிவபரம்பொருள்சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

 

     இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்அருவமும்உருவமும்உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும்எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்றமூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார்உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

 

"ஆவிகள் அனைத்தும் ஆகி,

     அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன 

     மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் 

     செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் 

     தொன்மை போல் இருக்கும்நீரார்".

 

     "சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன்,ஊழ்வினை வயப்பட்டு,செய்ந்நன்றி மறந்துசிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்யஅந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்துஇன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும்தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டிஉயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கிஎம்பெருமாட்டியை மணந்து கொண்டால்படைத்தல் தொழில் இனிது நடைபெறும்.  உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால்சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரேஇவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால்உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டுஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால்சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கிஅகிலாண்ட நாயகியை மணந்துசூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

 

     அது கேட்ட பிரமதேவர், "அண்ணலேநன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

 

     திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்துசிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டுதமது மனோவதி நகரை அடைந்துமன்மதனை வருமாறு நினைந்தார். மாயவனாகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி"அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கிசிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறுஉனது மலர்க் கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

 

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல்வெற்பின்

மங்கையை மேவ,நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினைஇன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".

 

     பிரமதேவர் கூறிய கொடுமையானதும்நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால்பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

 

     மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்திதிருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்துவாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

 

     "அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால்பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையாஎன்னுடைய மலர்க் கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும்பூவில் வைகும் சீதேவியையும்,ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும்,திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும்உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும்கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்துஇந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போதுஅவளைக் கண்டு மயங்கச் செய்துசூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து,புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கிமாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர்அத்திரிகோதமன்அறிவில் சிறந்த காசிபர்,வசிட்டர்மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியைஇமைப்பொழுதில் நீக்கிஎன் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க் கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும்சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

 

     "சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில்வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல்உய்ந்தவர் யாரும் இல்லை".

 

     "திரிபுர சங்கார காலத்தில்திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரியமுக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

 

     "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனைபெருமான் தனது இடது திருவடியால் உதைத்துமார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

 

     "முன் ஒரு நாள்தாங்களும்நாராயணமூர்த்தியும்'பரம்பொருள் நானே'என்று வாதிட்ட போது,அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்கஉமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

 

     "சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

 

     "உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும்பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

 

     "திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு,நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

 

     "உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

 

     "தாருகா வனத்தில்இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனைபுலிமான்,முயலகன்பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும்போர்வையாகவும்ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

 

     "சர்வ சங்கார காலத்தில்சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோஇத்தகைய பேராற்றலை உடைய பெருமானை,நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டுமலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

 

     இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும்நான்முகன் உள்ளம் வருந்திசிறிது நேரம் ஆராய்ந்துபெரு மூச்சு விட்டுமன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால்நீ கரும்பு வில்லை வளைத்துபூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல்ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கிஅவருடைய துன்பத்தைக் களையாது,தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால்அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால்அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்துபின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால்அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால்பாவம் மட்டும் அல்லஅகலாத பழியும் வந்து சேரும்.

 

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல்அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே,மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே".

 

     பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்பவிருத்தாசுரனை வதைக்கும் பொருட்டுதனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோபாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது,திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறிஅவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்றுதமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோபிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டுநீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

 

     அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

 

     பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.

 

     மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்திஎன்ன செய்யலாம் என்று சிந்தித்துஒருவாறு தெளிந்துபிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால்அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும்,பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவேநீர் சொல்லியபடியே செய்வேன்சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

 

     பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

 

     மன்மதன்பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்றுநிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூறஅவள் போகவேண்டாம் என்று தடுக்கமன்மதன் அவளைத் தேற்றிமலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டிகரும்பு வில்லை எடுத்துகுளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டிகுயில்கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க,மீனக் கொடியுடன் கூடியதும்கிளிகளைப் பூட்டியதும்சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டுஎம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டுகரம் கூப்பித் தொழுதுதேரை விட்டு இறங்கி,தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுஇரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு,பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்துமலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும்விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டுஇது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்'என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும்விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்திதிருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுதுயார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்துவேள்வி புரிந்துமீளவும் அப்பசுவை எழுப்புதல் போல்மன்மதனை எரித்துமலைமகளை மணந்துபின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்'என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்கமன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

 

     மன்மதன் திருநந்தி தேவரை வணங்கிமேலை வாயிலின் உள் சென்றுசோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்றுஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்றுஉள் நடுங்கிஉடம்பு வியர்த்துகையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனேஎதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்துகரும்பு வில்லை வளைத்துசுரும்பு நாண் ஏற்றி,அரும்புக் கணைகளைப் பூட்டிசிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

 

     இது நிற்கமனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி"மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று,சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும்,பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்கநெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்... 

 

                                                                        

காலம் அறியாதோன் கையுறல் பொய்.    ---  முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பொருள் ---

 

     காலம் அறியாதோன் --- ஒரு காரியத்தைச் செய்யலுற்று அதற்குரிய காலத்தை அறியாதவன்கையுறல் --- காரிய சித்தியடைதல்பொய் --- பொய்யாம்.

 

 

காலம் அறிந்தாங்கு இடம்அறிந்து செய்வினையின்

மூலம் அறிந்து விளைவுஅறிந்து - மேலும்தாம்

சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து

ஆள்வினை ஆளப் படும்.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     காலம் அறிந்து --- (ஒரு காரியத்தைச் செய்தற்குரிய) காலத்தினை அறிந்து,இடம் அறிந்து --- அக்காரியத்தைச் செய்து முடித்தற்கேற்ற இடத்தினையும் அறிந்துசெய்வினையின் மூலம் அறிந்து --- செய்யும் அக்காரியத்தின் காரணத்தையும் அறிந்துவிளைவு அறிந்து --- அதைச் செய்து முடித்தபின் அதனாலேற்படும் பயனையும் அறிந்துமேலும் --- பின்னும்சூழ்வன. தாம் சூழ்ந்து --- ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்துதுணைமை வலி தெரிந்து --- (அக் காரியம் செய்து முடித்தற்குத்) துணை செய்ய இருப்போர் வலிமையுந் தெரிந்துகொண்டுஆள்வினை --- முயற்சிஆளப்படும் --- (பின்னர்ச்) செய்யப்படும்.

 

 

வீங்குதோள் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால்,- ஆங்கு

முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்பு

அடியிழுப்பின் இல்லை அரண்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     வீங்கு தோள் செம்பியன் சீற்றம் --- பருத்த தோளை உடைய சோழனது சினம்விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் --- மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால்முடியும் திறத்தால் முயல்க --- எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் --- கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால்.

 

         நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாதகாரியம் ஒன்றில்லையாம்.

 

         செம்பியன் ஆகாயத்தின்கண் இருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டு அழித்தான். இது பற்றியே இவன் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான். அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போலமுடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பது. இதற்குப் போதிய சான்று சோழனேயாவான். ஆங்கு : அசை.

 

 

காலமும் இடனும் ஏற்ற

     கருவியும் தெரிந்து கற்ற

நூல் உற நோக்கிதெய்வம்

     நுனித்துஅறம் குணித்த மேலோர் 

சீலமும்புகழ்க்கு வேண்டும்

     செய்கையும்தெரிந்துகொண்டு,

பால்வரும் உறுதி யாவும்

     தலைவற்குப் பயக்கும் நீரார் ;   ---  மந்திரப் படலம்கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து --- வினை செய்தற்குத் தக்க காலத்தையும் இடத்தையும்அதற்குரிய கருவிகளையும் அறிந்து கற்ற நூல் உற நோக்கி --- தாம் படித்த அரச நீதி நூல்களின் கருத்துகளோடுஒப்பிட்டுக் கண்டு ;  தெய்வம் நுனித்து --- தெய்வத்தையும் தியானித்து ;  அறம் குணித்த மேலோர் --- அரசியல் அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் ---ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ;  தெரிந்து கொண்டு --- ஆராய்ந்து அறிந்துகொண்டு ;  பால் வரும் உறுதி யாவும் --- அவ் ஆராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப் பயக்கும் நீரார் --- தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மை உடையவர்கள்.

 

     இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் -கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்தஅந்தப் பகுதிகளால் விளையும் நன்மை.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...