ஆகும் காலம் உண்டானால் எல்லாம் ஆகும்

                                                    ஆங்காலத்தில் எல்லாம் ஆகும்

போங்காலத்தில் எல்லாம் போகும்.

-----

 

     திருக்குறளில் "இகல்" என்னும் ஓர் அதிகாரம். இகல் என்பதுமாறுபாடு கொள்வது ஆகும். பகைமை உணர்வு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைவது இந்த மாறுபாடு கொள்ளுகின்ற மன நிலையே காரணம். யாரோடும் நினைவால் மாறுபடுவது. சொல்லால் மாறுபடுவதுசெயலாலும் மாறுபடுவது. இகலால் வரும் கேட்டினை அறிவுற்றுத்துகின்றார் நாயனார் இந்த அதிகாரத்தின் வாயிலாக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "ஒருவன் தனக்கு ஆக்கம் வருகின்ற காலத்தில்காரணம் இருந்தாலும்பிறரோடு மாறுபாடு கொள்ளுவதை நினைக்கமாட்டான். தனக்கு அழிவு நேரும்போதுகாரணம் இல்லாது இருந்தும்,பிறரோடு மாறுபாடு கொள்ளுவான்" என்கின்றார் நாயனார்.

 

     ஆக்கத்திற்கு முன்னர் நடப்பது மாறுபாடு இல்லாமை. கேட்டிற்கு முன்னர் நடப்பது மாறுபாடு கொள்ளுதல். எனவேமாறுபாடு இல்லையானால் செல்வம் உண்டு என்பதும்,அது உண்டானால் கேடும் உண்டாகும் என்பதும் பெறப்படும்.

 

     ஒருவனுக்கு நல்வினைப் பயன் உண்டானால்யாரிடத்தும் மாறுபாடு கொள்ளாமல்நட்பாய் இருந்து தனது செல்வத்தை வளர்த்துக் கொள்வான். தீவினையின் பயன் உண்டானால்பகைமை கொள்ளத் தகாதவர் இடத்தும் பகைமையை வளர்த்துக் கொண்டுகேட்டினைத் தேடிக் கொள்வான்.

     

     மாறுபாடு கொள்வதற்குக் காரணங்கள் பல உண்டு. சிறிய பெரிய காரணங்களுக்காக மாறுபாடு தோன்றும்காரணம் இன்றியும் பகைமை உண்டாகும். பகைமை உணர்வு எளிதாக நீக்கத்தக்கதாக இருந்தாலும்சிலர் வீம்புக்காக பகைமையை வளர்த்துக் கொள்வர். அவர்கள் இந்த உணர்வு ஏன் தம்மிடத்தில் தோன்றியது என்பையும் கூட அறியமாட்டார்கள். பகையை விரும்பி வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மற்றவர்க்குத் துன்பம் தருவதிலேயே முனைப்புக் காட்டுவர். அதில் அவர்களுக்கு அப்படி ஒரு பொய்யான மகிழ்ச்சி. அவர்களை இன்னா அறிவினர் என்கிறார் திருவள்ளுவ நாயனார். அவர்கள் உண்மையை உணர மறுப்பதால்,"மெய்ப்பொருள் காணார்" என்றும் சொன்னார். எனவே 'மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்என்றார்.

 

"இகல் காணான் ஆக்கம் வரும்கால்,அதனை

மிகல் காணும் கேடு தரற்கு".                   

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஆம்கால் இறைவர் அடி தொழுவார்செல்வம்எல்லாம்

போம்கால் அசுரர் பொர வருவார், ---நீங்கா

இகல் காணான் ஆக்கம் வரும்கால்,அதனை

மிகல் காணும் கேடு தரற்கு.

 

இதன் பொருள் ---   

 

     ஆம் கால் (அசுரர்) இறைவர் அடி தொழுவார் --- (முப்புரவாசிகளாகிய கமலாட்சன்வித்யுன்மாலிதாரகாட்சன் என்னும் அரக்கர் மூவர்) அவர்க்கு ஆகிவரும் காலத்தில் சிவபெருமானை வழிபட்டு எல்லா நலங்களையும் பெற்றனர். செல்வம் எல்லாம் போம் கால் --- அப்படிப் பெற்ற செல்வமும் வாழ்வும் அனைத்தும் நீங்கும் காலம் வந்தபோது,  அசுரர் பொர வருவார் --- அந்த மூன்று அரக்கர்களும் சிவபெருமானிடத்து மாறுபாடு கொண்டு (தாம் வரம் கிடந்து பெற்ற செல்வங்கள் அனைத்தையும் இழந்தனர்)

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"சொன்ன நிறத்தான் சுதனே அரும்பகையாய்

இன்உயிரைக் கொன்றான்,இரங்கேசா! - மன்னும்

இகல்காணான் ஆக்கம் வருங்கால்,அதனை

மிகல்காணுங் கேடு தரற்கு".    

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சொன்ன நிறத்தான் சுதனே --- கனக மேனியன் ஆகிய இரணியனுடைய மகனாகிய பிரகலாதாழ்வானேஅரும் பகையாய் --- (அவனுக்குப்) பெரும் பகையாய்இன் உயிரைக் கொன்றான் --- (அவனுடைய) ஆருயிரைப் போக்கினான், (ஆகையால்இது) ஆக்கம் வருங்கால் --- ஒருவனுக்குச் செல்வம் வரும்போதுமன்னும் --- எப்போதும் (பிறரிடத்தில்) பொருந்தியஇகல் காணான் --- பகைமையை (காரணம் இருந்தும்) நினையான்கேடு தரற்கு --- தனக்குத் தானே கேடு தருவித்துக் கொள்வதற்குஅதனை ---(காரணமில்லாது இருந்தும்) அந்தப் பகைமை உணர்வில்,மிகல் காணும் --- மிகுதலை நினைப்பான் (என்பதை விளக்குகின்றது).

 

     சொன்ன நிறத்தான் --- சொர்ண நிறத்தான். இரணியன். இரணியனுக்கு கனகன் என்றும் பெயர் உண்டு. (சொர்ணம் --- தங்கம்கனகம். சுதன் --- மகன்.)

 

         விளக்கம்--- இரணியன் அரசாளும் காலத்தில் மேல்நடுகீழ் என்னும் மூன்றுலகமும் தனக்கு ஏவல் செய்யஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலையும் தானே நடத்தித்தன்னையன்றித் தெய்வம் இல்லை என்று எல்லாரும் சொல்ல இகலின்றி (தன்னோடு மாறுபடுவார் இல்லாமல்) வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழிவு வந்த காலத்தில் தன் பிள்ளையே தனக்குச் சத்துருவான காரணத்தால்அவன் இறந்தான். இதனால்ஒருவன் "ஆக்கம் வருங்கால்மன்னும் இகல் காணான்", "கேடு தரற்குஅதனை மிகல் காணும்" என்பது விளங்குகின்றது.

 

     இரணியாட்சன் என்பவன் நிலத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு பாதலத்திற்குச் சென்றான். திருமால் பன்றியுருவம் எடுத்துக் கொண்டு அவனைக் கொன்றார். இரணியகசிபு என்னும் மூத்தமகன் திருமாலிடத்திலே பகை கொண்டு நான்முகனைக் குறித்துத் தவம் செய்தான். உலகங்களை ஆக்கல்காத்தல்அழித்தல் முதலிய காரயங்களைத் தானே செய்தல் முதலிய பல வரங்களையும்,மும்மூர்த்திகள் தமக்குரிய உருவத்தோடு படைக்கலம் உடையவர் எதிர்த்தாலும்பகல் இரவு என்னும் காலங்களிலும்மண்விண்உள்புறம் என்னும் இடங்களினும் அழியாமையும் பிறவும் பெற்று எல்லோரும் தன்னையே வழிபடுமாறு செய்தான். இந்திரன் முதலானவர்கட்குத் துன்பம் விளைவித்தான். இவ்வாறு கொடுங்கோலனாக அரசியற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அவனுடைய புதல்வர் நால்வருக்கும் சுக்கிராசாரியார் புதல்வர்கள் இருவர் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தனர். அந் நால்வருள் மூத்தவனாகிய பிரகலாதன் திருமாலையே பரம்பொருளாகக் கொண்டமையை அறிந்து இரணியன் சினந்தான். அவனைக் கொல்லும் பொருட்டுப் பலப்பல துன்பங்களைச் செய்தான். எதனாலும் பிரகலாதன் இறவாமையைக் கண்டு மனம் புழுங்கினான். ஒருநாள் மாலையில் மகனை அழைத்து, "நீ கூறியபடி திருமால் எங்கும் உள்ளவனாயிருப்பின் இத்தூணில் காட்டுவாயாக" எனக் கூறி ஒரு தூணைப் புடைத்தான். அதிலிருந்து தோன்றிய நரசிங்கமூர்த்தியோடு எதிர்த்து அவரால் மாண்டான்.

 

     இரணியனுக்கு ஆகும் காலம் இருந்த காலத்தில் அன்பு மகனாகத் தோன்றினர் பிரகலாத ஆழ்வார். அவனுக்குஆணவம் முற்றி அழிந்துபோகும் காலம் வந்தபோதுஅந்த அன்பு மகனாலேயே மடிய நேர்ந்தது.

 

     தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது குறித்து ஏற்கனவே பொறாமை கொண்டிருந்த துரியோதனன்தனது தந்தையை அடிக்கடிச் சந்தித்துத் தனக்குச் சுதந்திரமான அரச போகங்களும் உரிமைகளும் வேண்டுமென்று வற்புறுத்தினான். மனம் கலங்கிய திருதராட்டிரன் என்ன செய்வதென்று புரியாமல்வீடுமர்விதுரர் முதலியோர்களை அழைத்து ஆலோசனை செய்தான். தன் மக்களாகிய துரியோதனாதியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவே அசூயை,பொறாமைபகைமை. ஆகிய தீய உணர்வுகள் தோன்றியதனால் ஓற்றுமை குலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கினான். இந்த ஒற்றுமைக் குலைவைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவர்களை வினவினான். பிறந்ததிலிருந்தே இவர்கள்ஐவர் மேல் அசூயை கொள்வது இயற்கையாகி விட்டதனால் நாம் அழைத்து அறிவுரை கூறினாலும் கேட்கமாட்டார்கள். இந்த ஒற்றுமைக் குலைவும் குரோதமும் உண்டாக்கப் போகின்ற தீய விளைவுகளை நுகர்ந்து துன்புற்றாலொழிய இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. எனவே இவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று வீடுமர் முதலியோர் மனக் கசப்போடு கூறிவிட்டுச் சென்றனர்.

 

     மனம் என்பது விந்தையானது. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள மனம் இல்லாமையால்பொறாமைவஞ்சகம் முதலிய உணர்வுகள்நல்ல மனத்திலும் சூழ்நிலை காரணமாகப் புகுந்து விடுவது உண்டு. பாதுகாப்பு நிறைந்த வீட்டிலும் கவனக் குறைவால் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால்நாய்கள்திருடர்கள் நுழையும்படி நேர்ந்து விடுகின்றது. மனத்தினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமையால்தீய குணங்கள் இடம் பெற்று விடும். தன் மக்களாகிய துரியோதனாதியர்களின் அசூயையும்பொறாமையும் தவறானவை என்று அஞ்சி மனம் பதறிப் பதைத்த திருதராட்டிரனது பண்புகூட நாளடைவில் மாறுபட்டது. தன் புதல்வர்கள்,பாண்டுவின் புதல்வர்கள் என்று வேறுபடுத்திப் பாராத அவனேநாளடைவில் மனம் மாறி வஞ்சகமாக நினைக்கத் தொடங்கி விட்டான். கர்ணன்சகுனிதுர்ச்சாதனன்கர்ணன் முதலியவர்களும் சேர்ந்து பொறாமை பேசிப் பேசி அவன் மனத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்கள். இதன் விளைவு,பாண்டவர்கள் துன்பத்தை அடைய,துரியோதனாதியர்கள் செல்வ வளத்தில் மிக்குக் களித்து இருந்தனர். இதுபாண்டவர்களுக்குப் போங்காலமாகவும் கௌரவர்களுக்கு ஆங்காலமாகவும்இருந்தது. அதனால் பகைமை உணர்வு மேலும் மேலும் வளர்ந்தது. பின்னர்பாண்டவர்களுக்கு ஆங்காலம் உண்டாகிகௌரவர்களுக்குப் போங்காலம் வந்தபோதுபாண்டவர்கள் தாம் இழந்தவற்றை எல்லாம் ஒருங்கே பெற்று மகிழ்ந்தனர். கௌரவர்கள் தாம் பெற்று இருந்தவற்றை எல்லாம் ஒருங்கே இழந்துஅழிந்தே போயினர். 

 

     "ஆங்காலம் வந்தால் எல்லாம் கேளாமலே ஆகும். போங்காலம் வந்தால் அனைத்தும் சொல்லாமலே போகும்".

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...