அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கவேண்டும்

                                  அப்போதைக்கு இப்போதே சொல்லிவைக்க வேண்டும்

-----

 

     இறைவனைப் புகழ்வது நமது கடமைவாய் படைத்ததன் பயனும் அதுவே ஆகும். இறைவனால் பெற்ற பயனை நினைந்து நன்றி கூறும் செயல் அது. அதனால் விளையும் பயன் ஒன்று உண்டு. அது என்ன என்று பார்க்கலாம்.

 

     இறைவனது பொருள்சேர் புகழைக் கூறும் அருட்பாடல்களை அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்றுக் கொண்டவர்கள்சாகும் காலத்தில் ஒரு பாவி வந்து மிரட்டுவானேஅவனுடைய மிரட்டலுக்குப் பயப்பட மாட்டார்கள். நம்மிடம் இருக்கும் சொத்தைக் கண்டு காலன் பயப்படமாட்டான். நாம் வகிக்கும் பதவியைக் கண்டும் பயந்து உயிரை விட்டுப் போக மாட்டான். எந்த நிமிடத்தில்எந்தக் கணத்தில் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போக வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அவனை வெல்ல வேண்டுமென்றால் அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். எழுதுப் பிழை அறப் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால்அந்தப் பாவி காலன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானேஅப்பொழுதா படிக்க முடியும்சாகிற காலத்தில் சங்கராசங்கரா என்று சொல்ல வருமாவராது. மனிதனுடைய பழக்கத்தால் உண்டான வாசனை எதுவோ அதுவே சாகிற காலத்தில் முந்திக் கொண்டு நிற்கும்.

 

     நன்றாக வாழ்கின்ற வேளையில் சிரிக்கலாம். ஆனால்துன்பம் வரும் வேளையில் சிரிக்கவேண்டும் என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகின்றாரே! அது முடியுமாஎன்றால் முடியாதுதான். அறம் பாவம் என்று இரண்டு அச்சம் இருக்கின்ற வரையில்மனிதனால் அச்ச உணர்வு இல்லாமல் வாழமுடியாது. அடியவர்க்கு அச்சம் என்பது இல்லை. 

 

"காணாமல் வேணது எல்லாம் கத்தலாம்,கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதேநாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும்பெரும்பூனை வந்தக்கால்,

கீச்சுக்கீச்சு என்னும் கிளி".

 

இது ஔவைப் பிராட்டியாரின் தனிப் பாடல்களில் ஒன்று.

 

இதன் பொருள் ---

 

     கற்றவரைக் காணாதபோதுஅவர்கள் இல்லாத இடத்தில்ஒருவர் தாம் விரும்பிவாறு எல்லாம் உரக்கப் பேசலாம். ஆனால்கற்றவர் வந்துவிட்டால்,நாணாமல் வாய் திறந்து நல்ல சொற்களைச் சொல்ல இயலாது. கிளி தனக்குக் கற்பித்தவற்றை அஞ்சாமல் பேசும். ஆனால்தனக்குப் பகையான பூனை ஒன்று வருமானால்அச்சத்தால் அதுகீச்சு கீச்சு என்று கதறும்.

 

     நல்லவர்களின் பார்வையில் இல்லாத வரையில் கன்னா பின்னா என்று வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கத் தோன்றும். ஆனால்கற்ற பெரியோர்கள் முன்னிலையில் நல்ல சொற்களைக் கூட வாய்விட்டுப் பேச முடியாதபடி அச்சம் வந்து முன் நிற்கும். இது எதைப் போன்றது என்றால்வீட்டிலே கிளியை வைத்துஅதற்கு வார்த்தை சொல்லிப் பழக்குவார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கும் கிளி. ஆனால்,தனக்குப் பகையான பூனை வந்துவிட்டால்அச்சத்தில் கிளியானதுதனது இயல்பான நிலையில்கீச்சு கீச்சு என்று அலரும். அப்போது "அக்கக்கா" என்று சொல்லாதகிளியின் நிலையைப் போன்றதே நமது நிலை.

 

     மனிதர்களும் கூட தட்டிக் கேட்க யாரும் இல்லாதபோதுதம்மையே பெரிதாக மதித்துவாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். நல்ல வார்த்தை பேச வராது. அதிலும்இறைவன் திருநாமத்தைச் சொல்லுவது என்றால் வாய் நோகும். ஒருக்கால்சொல்லிக் கொண்டு இருந்தாலும்அச்சப்படும் நிகழ்வு நேர்ந்தால்ஐயோஐயோ என்று அலறல் தான் வரும். "சிவசிவ" என்று சொல்ல வராது. வாழும்போதே இப்படி என்றால்மரணம் சம்பவிக்கும் காலத்தில் எப்படி இருக்கும்?.

 

     இறைவன் நினைப்புச் சாகின்ற தருணத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். நம்முடைய அநுபவத்தில் நம் நினைவில் என்ன என்ன படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன.திருடனைக் கண்டு பயப்படுகிறோம்திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம்.கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால்கனவிலும் இறைவன் வருவான். நாம் இறைவனை நினைப்பதில்லைஅவன்நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகளே கனவில் தோன்றுகின்றன. "கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய்கருணை ஈதோ?" என்று வள்ளல்பெருமான் புலம்பியது போலநமக்குப் புலம்ப வருவது இல்லை.

 

     கனவில் இறைவனைக் காண வேண்டுமென்றால்நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால்உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

 

     பயத்தால் அலறும்போது, "அம்மாஅப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது இறைவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும்.

 

     மரண பக்குவம் ஆகின்ற காலத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வராது. கூடி இருப்பவர்களாவது சொல்லவேண்டும். அதைக் கேட்டுக் கொண்டே உயிர் பிரியவேண்டும். நல்வினைப் பயன் இருந்தால் நடக்கும். இல்லாதபோதுஐயோஅம்மா என்ற அலறல் சத்தம்தான் இருக்கும். கூ... கா.... என உறவினர்கள் கூடி அழுவார்கள். சாகப் போகின்றவனும் அலறுவான். கூட இருப்பவர்களும் அலறுவார்கள். "செத்த பிணத்தின் முன்இனிச் சாகும் பிணங்கள் கத்தும்"

 

     உயிரினது இந்தத் தன்மையை அறிந்த அப்பர் பெருமான்இறைவன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தைசாகும் தருவாயிலும் சொல்லும் பாக்கியத்தை அருள் புரியுமாறு சிவபெருமானிடம் வேண்டுகின்றார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்றும் வழக்குச் சொற்கள் உண்டு. இளமையில் இருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி வரவேண்டும். ஒருக்கால் மரண பயத்தால்சொல்ல நாக்கு எழாத நிலை வந்துவிடக் கூடாது என்பதால்சாகின்ற போதும் உனது திருநாமத்தைச் சொல்லுகின்ற பாக்கியத்தை அருள்வாய் என்று வேண்டுகின்றார்.

 

"தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண!நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே".

 

இதன் பொருள் ---

 

     தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை உம்மிடத்தே வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே!  எங்களுக்கு நன்மையை அளிப்பவனே! உன் திருப் பெயரை உனது திருமுன் நின்று துதித்து,"நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லகின்ற பாக்கியத்தை அருள் புரிவாயாக.

 

     பட்டினத்து அடிகளாரும் இவ்வாறே வேண்டுகின்றார்....

 

"ஐயும் தொடர்ந்துவிழியும் செருகிஅறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போது,ஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர்திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணிஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே".      

                                

இதன் பொருள் ---

 

     திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! அடியேன் ஒரு வரத்தை உம்மிடம் யாசிக்கின்றேன். அதனைத் திருவருள் செய்யவேண்டும். கோழையும் கட்டிகண்களும் உள்வாங்கிஉணர்வும் கெட்டுஉடம்பும் பொய்யாகி விடுகின்ற காலத்தில்திருநீற்றை அணிந்துகைகளால் உம்மைத் தொழுதுபஞ்சாட்சரத்தை ஓதும்படியாக அருள் புரியவேண்டும்.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். இறைவனும் அவரைத் தனது தோழராகவே கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். "ஐயனே! தேவரீரை நான் எப்போதும் நினைக்கிறவன் ஆயிற்றே. வழுக்கி விழுந்தாலும் உனது திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோஅம்மாஅப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.

 

"அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்,

     அதுவும் நான்படப் பாலது ஒன்று ஆனால்,

பிழுக்கை வாரியும் பால்கொள்வர்,அடிகேள்!

     பிழைப்பன்,ஆகிலும் திருவடிப் பிழையேன்;

வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்

     மற்று நான் அறியேன் மறுமாற்றம்;

ஒழுக்க! என்கண்ணுக்கு ஒருமருந்து உரையாய்,

  ஒற்றியூர் என்னும் ஊர் உறைவானே!"

 

என்றுதாம் இறைவன் திருநாமத்தை எப்போதும் மறவாமை குறித்துப் பாடுகின்றார். பிறிது ஓரிடத்தில்,"நற்றவா! உன்னை நான் மறக்கினும்சொல்லும் நா நமச்சிவாயவே"என்கின்றார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கின்றது.

 

     அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தாவது பழகி வர வேண்டும். கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால்எமன் "இந்த நேரத்தில் நான் வருவேன்" என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவேஇப்பொழுதிலிருந்தே இறைவன் கவியைச் சொல்லிப் பழகினால்,இறக்கும் பொழுது அவன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான்.

 

"சூலாயுதம் கொண்டுஎமதூதர் வந்து 

     என்னைச்சூழ்ந்து கொண்டால்,

வேலாயுதா! என்றுகூப்பிடுவேன்,அந்த

     வேளை தன்னில் 

மாலானவள்ளி தெய்வானையுடன்

     மயில் விட்டு இறங்கி,

காலால் நடந்துஎன் முன்னே வர

     வேணும்கந்தப்பனே"

 

என்று வேண்டுதலை வைக்கின்றார் அடியவர் ஒருவர்.  ஆறெழுத்து மந்திரத்தினை சதாகாலமும் நினைத்து நினைத்து உரு ஏறிய உள்ளம் இப்படிப் பேசுகின்றது. சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து சூழ்ந்து கொள்ளுகின்ற தருணத்தில் கூட இறைவன் நினைவு வந்து விடுமாம் அந்த அடியவருக்கு. "கூப்பிடுவேன்" என்று உறுதிபடக் கூறுகின்றார்.

 

     இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனால் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்லஅது மனத்திலே ஏறிஅதன் பொருள் உள்ளத்திலே தங்கும்.அதனுடைய ஆற்றல் உள்ளத்தில் பதியும்.அதனால் இறைவன் மீது கொண்ட பற்று மிகுதியாகும். இன்ப அனுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அனுபவங்கள் ஏற்படும்.

 

     ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லிப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான்.

வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை"ஆறுமுகம் என்று கூப்பிடஅந்த ஒலி இன்றைக்கு அவள் காதில்  விழுந்து குளிர்கிறது. காரணம் என்ன அவள் பலகாலும் கேட்டுப் பழகிய அந்தச் சொல்இப்போது அந்தப் பெண்ணுடைய கணவனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும்அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்றுதான் அப்பர் பெருமான் கூறுகின்றார்.

 

     இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால்அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும்வாள் தடங்கண் மாதே! உறங்குதியோ" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருநாமத்தைக் கேட்டவுடனே உள்ளம் உருகவேண்டும். அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறதுமனம் இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால்அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். எமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

 

     நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால்,பெரியவர்கள் இனிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஏதோ சம்பிரதாயத்திற்குச் சொன்னது அல்ல. உளமாற அனுபவித்துச் சொன்னது. கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும்.அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியும்.

 

     மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தை இராமலிங்க சுவாமிகளும் பாடி அனுபவித்தார். அனுபவ இனிமை உள்ளத்தில் பெருக்கெடுக்கஊனை உருக்கும் திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானை நினைந்துபாடினார்.

   

"வான் கலந்த மாணிண்க வாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால்,நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து,பால்கலந்து,செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்

ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

 

     வள்ளல்பெருமானுக்கு மட்டும் ஏன் இப்படி இனித்தது?. நாமும்தான் காலகாலமாகத் திருவாசகத்தைப் பாடி வருகின்றோம். மணிவாசகப் பெருமான் கூட திருவாசகத்துக்கு இசை வகுக்கவில்லை. நாம் திருவாசகத்துக்குப் பலப்பல இசை வடிவங்களைக் கொடுத்துஉடுக்கை அடிக்காத குறையாகப் பாடி வருகின்றோம். வள்ளல்பெருமானுக்கு இனித்தது போல நமக்கு இனிக்கவில்லையேஏன்?

 

     திருவாசகம் முற்றோதல் என்றாலேகுடிக்கவும்உண்ணவும் பஞ்சமில்லை. குடிக்கப் பால் தருகின்றார்கள். குடித்தால் அதில் இனிப்புத் தெரியவில்லை. பாலில் சருக்கரை இல்லை என்று தோன்றுகின்றது. நாம் பாடுவதில் இனிமை இல்லை என்பது தோன்றவில்லை. பாடுவதில்தான் பஞ்சம். பாலில் சருக்கரை இல்லை என்பது மட்டும் தோன்றுகிறது. "சருக்கரை போடவில்லையா?"என்று கேட்கின்றோம். "சருக்கரை போட்டுள்ளது. அடியில் இருக்கும். கலக்கிக் குடியுங்கள்" என்று பதில் வருகின்றது. பாலிலே சருக்கரையானது கலந்தால்தான் இனிக்கும். உண்ண உணவு தருகின்றார்கள். அந்த உணவில் உப்பு சரியான அளவில் கலந்து இருக்காததால்உணவு சுவையாகத் தோன்றவில்லை. உப்பைக் கேட்டுக் கலந்து உண்ணுகின்றோம். உப்பைத் தனியாக உண்ண முடியாது. உப்பு உணவோடு கலந்தால்உண்ண இனிமை தரும்.

 

     அதுபோலவேபாட்டின் பொருளோடு மனம் ஒன்றிக் கலந்து பாடுகின்றவர்க்குப் பாட்டு இனிக்கும். நான் பாடுகின்றேன் என்னும் எண்ணம் இருக்கும்போது இனிக்காது. தன்னை மறந்த நிலையில் இனிக்கும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொன்னால் அல்லவா இனிக்கும்!. எனவே, "நான் கலந்து பாடுங்கால்" என்றார் வள்ளல்பெருமான். ஊனை மறக்காமல் நாம் பாடுவதால்பால் வேண்டும்உணவு வேண்டும் என்று தோன்றுகின்றது. பாடுகின்ற பாட்டைக் கருத்தில் கொள்ளுகின்றோமோஇல்லையோகாலநிலையை கருத்தில் கொள்ளத் தவறுவது இல்லை.

 

     இறைவன் நினைவு உள்ளத்தில் கலந்து இருந்தால்பசி உணர்வு தோன்றாது. வழிபாட்டை மறந்துஉணவு நினைப்புத் தோன்றாது. அனுபவித்தால்தான் இது புரியும். வள்ளல் பெருமான் சொல்லுகின்றார்.

 

"அன்னம்உண அழைக்கின்றாய் தோழி! இங்கே நான்தான்

அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்

உன்னை நினைத்து உண்டேன்என் உள்ளகத்தே வாழும்

ஒருதலைமைப் பெருந்தலைவருடைய அருட் புகழாம்

இன்னமுதில் என்னுடை அன்பு என்னும் நறுங்கனியின்

இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்

கன்னல்உளே தனித்து எடுத்த தேம்பாகும் கலந்தே

களித்து உண்டேன்,பசிசிறிதும் கண்டிலன் உள்ளகத்தே".

 

     நம்மை மறந்து இருப்பது நடக்குமாஎன்று தோன்றலாம். நம்மை மறந்துபராக்குப் பார்த்துக் கொண்டு இருந்த காலத்தில் நமது உடமையை இழந்து நின்றோமே. நமது உடைமை என்ற எண்ணம் இல்லாமல் இருந்த காலத்தில் அது பறிபோனதை நம்மால் அறிய முடியவில்லையே.

 

     நாம் அயில்வேலன் கவியில் கலந்துநம்மை மறந்து அன்போடு பிழையறக் கற்றுப் பாடினால் எமனையே வெல்லலாம் என்று அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார். அவர் சொல்லும் பாட்டு எதிர்மறை வாய்பாட்டில் இருக்கிறது. "முருகப் பெருமானுடைய பாட்டை நீங்கள் அன்பாலே பாடவில்லை. எழுத்துப் பிறை அறக் கற்கவில்லை. எரிமூண்டது என்னப் பொங்கு வெங்கூற்றன் தன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுப்பானேஅப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அந்தச் சமயத்தில் கவி கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் பயன் இல்லையே!" என்று கேட்கும் கேள்வியாக அது இருக்கிறது.

 

     சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணினால் நன்னெறி வாய்க்காது என்கின்றது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்..

 

"வாங்கு ஆலம் உண்டசெழுந் தண்டலையார்

     அடிபோற்றி வணங்கி நாடிப்

போங்காலம் வருமுன்னே புண்ணியம்செய்து,

     அரிய கதி பொருந்துறாமல்

ஆங்காலம் உள்ளது எல்லாம் விபசாரம்

     ஆகிஅறிவு அழிந்து,வீணே

சாங்காலம் சங்கரா! சங்கரா!

     எனின் வருமோ தருமந்தானே!"

 

இதன் பொருள் ---

 

     பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை வாங்கிப் பருகிய வளமிக்க திருத் தண்டலை இறைவரின்  திருவடியைக் கும்பிட்டு ஆராய்ந்துஇறக்குங்காலம் வருவதற்குமுன்னே நலம் புரிந்து சிறந்த நிலையை அடையாமல்வாழும் நாள் உள்ள வரைக்கும்தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்துஇறக்கும்போது வீணாகச் சங்கரா! சங்கரா! எனவேண்டின் நன்னெறி கிடைத்திடுமோ?

 

      வாழ்நாளில் ஒருவனுக்கு எதன்மேல் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதுவே இறுதியில் அவன் நினைவில் இருக்கும். ஆகையால்வாழ்நாள் முழுதும் இல்லாத சில நினைவு இறுதியில் வராது. மற்றும்வாழ்நாள் முழுதும் தவறு செய்தவன் அதன் பயனை நுகர்ந்தேஆகவேண்டும். 

 

     உடம்பு நன்றாக உள்ளபோதே இறைவன் திருநாமத்தை அன்போடு சொல்லி வரவேண்டும்அவனது அருட்பாடல்களையும் அன்போடுபொருள் உணர்ந்து ஓதிவர வேண்டும்.

 

     முதுமை வந்து என்னை நலியும் காலத்தில் நான் உன்னை நினைக்கமாட்டேன். அதனால்அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்றார் ஆழ்வார். நாம் ஏன் காலம் கடத்த வேண்டும்நாமும் காலம் உண்டாகவே காதல் செய்து உய்யலாமே.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...