திரு ஏகம்ப மாலை - 24

"சொக்கிட்டு அரண்மனைப் புக்கு உள்திருடிய துட்டர் வந்து

திக்குற்ற மன்னரைக் கேட்பது போல், சிவ நிந்தை செய்து,

மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து, வீடு இச்சிக்கும்

எக்குப் பெருத்தவர்க்கு என்சொல்லுவேன், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பிறரை மயக்குகின்ற மாயப் பொடி தூவி, அரண்மனையில் உள்ளே புகுந்து களவு செய்த துட்டர்கள், காவலர்களால் பிடித்துக் கொண்டு வரப்பட்டு, திக்குகள் தோறும் புகழ் பெற்ற மன்னர் முன்னே நிறுத்தும் போது, தண்டனைக்குப் பயந்து, தம்மை தண்டிக்காது விடும்படி கேட்டுக் கொள்வது போல, சிவநிந்தையைச் செய்து, குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய வழிபாட்டு நெறிகளை இழித்துக் கூறி, முத்தி அடைய விரும்புகின்ற கொடியவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன்.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...