திருத் தில்லை - 10

 


"உடுப்பானும், பால்அனம் உண்பானும், உய்வித்து ஒருவர்தம்மைக்

கெடுப்பானும், ஏதுஎன்று கேள்வி செய்வானும், கெதியடங்கக்

கொடுப்பானும், தேகி என்று ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று

தடுப்பானும், நீ அல்லையோ, தில்லைஆனந்தத் தாண்டவனே."

பொழிப்புரை ---  ஆடை முதலியவற்றைத் தரிப்பவனும், அதன் பின்னே பால் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரப் புசிப்பவனும், ஒருவரை வாழ்வித்து, ஒருவரைக் கெடுப்பவனும், யாது என்று கேட்பவனும், வறுமை ஒழியக் கொடுப்பவனும், கொடு என்று இரப்பவனும், அவ்வாறு ஏற்பாருக்குக் கொடுக்க ஒட்டாமல் உறுதியாய் நின்று தடுப்பவனும், எல்லாம் நீயே அன்றோ. தில்லை அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் இடுகின்ற பெருமானே!

விளக்கம் ---  உயிர்கள் செய்யும் தொழிலனைத்தும் சிவனருள் விதித்தபடியே நடக்கும். எல்லாம் அவரவருக்கு ஊட்டப்படும் வினையின் பயனே.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...