திருத் தில்லை - 9

 


"தெய்வச் சிதம்பர தேவா உன் சித்தம் திரும்பிவிட்டால்

பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியும் எங்கே,

மெய்வைத்த செல்வம் எங்கே,  மண்டலீகர் தம் மேடைஎங்கே,

கைவைத்த நாடக சாலை எங்கே, இது கண்மயக்கே."


பொழிப்புரை --- தெய்வீகமான அருள்வெளியில் நடிக்கின்ற தேவனே! உமது திருவுள்ளம் பதிந்து விட்டால், அரசரது வாழ்வும், பொய்த் தன்மை உள்ள கனவை ஒத்த பூமியும் என்ன ஆகும். மெய்த் தன்மை அமைத்ததாகக் கொள்ளப்படும் செல்வம் என்னாகும். அலங்காரம் செய்த நாடக சாலை என்னாகும். இது யாவும் கண் மயக்கமே. எல்லாம் சூனியமே.


விளக்கம் - சிவபெருமானுடைய திருவருளானது அடியவரிடம் பதிந்து விட்டால், உலக இன்பங்கள் யாவும் பொய் எனவே தெளிவாகத் தோன்றும்.


No comments:

45. ஆபத்து வரும்போது செல்வமும் தொலையும்

“ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே, ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால்! - ஆபத்து வந்தால், அவளும் மருவாமல் எப்பொருளும் அந்தோ உடன்போம் அற...