52. சாவு வரும் முன் சிவனை வழிபடு

 “அரசின் இலையதனின் அக்கிரமத் தினின்று

விரைய விழுதுளியே போலும், - புரையுடைய

ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல்,

நோக்கல்,நன்று என்றே நவில்.” -- நீதிவெண்பா.


அரசிலையின் நுனியிலிருந்து விரைந்து விழுகின்ற நீர்த் துளியைப் போல, குற்றமுடைய இவ் உடல் அழிவதற்கு முன்னதாகவே சிவபெருமான் திருவடியை வணங்குதலும், திருவடியைக் கண்டு மகிழ்தலும் நல்லது என்றே சொல்.


(அக்கிரம் - நுனிப் பாகம். புரை - குற்றம். ஆக்கை - உடம்பு.  அரன் - சிவன்.)


No comments:

மூலம் - 1

"ஒத்த ஒழுக்கம், கொலைபொய் புலால்களவோடு ஒத்த இவையல ஓர்நூல் இட்டு-ஒத்த உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர் சிறுபஞ்ச மூலம் சிறந்து." ...