“அரசின் இலையதனின் அக்கிரமத் தினின்று
விரைய விழுதுளியே போலும், - புரையுடைய
ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல்,
நோக்கல்,நன்று என்றே நவில்.” -- நீதிவெண்பா.
அரசிலையின் நுனியிலிருந்து விரைந்து விழுகின்ற நீர்த் துளியைப் போல, குற்றமுடைய இவ் உடல் அழிவதற்கு முன்னதாகவே சிவபெருமான் திருவடியை வணங்குதலும், திருவடியைக் கண்டு மகிழ்தலும் நல்லது என்றே சொல்.
(அக்கிரம் - நுனிப் பாகம். புரை - குற்றம். ஆக்கை - உடம்பு. அரன் - சிவன்.)
No comments:
Post a Comment