“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே,
பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது
அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால்
இழத்தலும் துன்பமே ஆம்.” -- நீதிவெண்பா
துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம். அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே. அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.
No comments:
Post a Comment