“இழுக்கல் இயல்பிற்று இளமை, பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமை,இம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.” -- திரிகடுகம்.
இளமைப் பருவம் வழுவுதலை இயல்பாக உடையது. அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதல் பேதைமை ஆகும். ஈனத்தன்மை என்பது எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும். ஆதலால், இம் மூவகையினரையும் மேல் விளைவை அறியும் அறிவுடையார் நெருங்கமாட்டார்.
No comments:
Post a Comment