திரு ஏகம்ப மாலை - 17

"ஆற்றில் கரைத்த புளி ஆக்கிடாமல், என் அன்பை எல்லாம்

போற்றித் திருவுள்ளம் பற்றும் ஐயா, புரம் மூன்று எரித்துக்

கூற்றைப் பணிகொள்ளும் தாள்உடையாய், குன்றவில் உடையாய்,

ஏற்றுக்கொடி உடையாய், இறைவா! கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! மகாமேரு மலையாகிய வில்லை உடையவனே!  முப்புரங்களை எரித்தவனே! எமனை அடிமை கொண்டவனே! விடைக் கொடியை உடையவனே!  என் அன்பு முழுமையும் ஆற்றில் கரைத்துவிட்ட புளியைப் போல் ஆகிவிடாமல், என்னைப் பாதுகாத்து உனது திருவடியிலே சேர்த்துக்கொள்ள மனம் பற்றுவாயாக.


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...