திரு ஏகம்ப மாலை - 17

"ஆற்றில் கரைத்த புளி ஆக்கிடாமல், என் அன்பை எல்லாம்

போற்றித் திருவுள்ளம் பற்றும் ஐயா, புரம் மூன்று எரித்துக்

கூற்றைப் பணிகொள்ளும் தாள்உடையாய், குன்றவில் உடையாய்,

ஏற்றுக்கொடி உடையாய், இறைவா! கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! மகாமேரு மலையாகிய வில்லை உடையவனே!  முப்புரங்களை எரித்தவனே! எமனை அடிமை கொண்டவனே! விடைக் கொடியை உடையவனே!  என் அன்பு முழுமையும் ஆற்றில் கரைத்துவிட்ட புளியைப் போல் ஆகிவிடாமல், என்னைப் பாதுகாத்து உனது திருவடியிலே சேர்த்துக்கொள்ள மனம் பற்றுவாயாக.


No comments:

Post a Comment

54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

  “கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;     செங்கோலிற் கடல்சூழ் வையம் புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,     நரகமில்லை; பொய்யி தன்றால்; உரப...