மூலம் 8

 “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் குற்றம் குறைகளை மறந்து அருள் உடையவன் ஆதல். கால்களுக்கு அழகாவது, பிறரிடத்தில் இரக்கப் போகாமை. ஆராய்ச்சிக்கு அழகாவது, பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல். இசைக்கு அழகாவது, அதனைக் கேட்டவர்கள், இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம். புகழினால் விளங்குகின்ற, அரசனுக்கு (தலைவனுக்கு) அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தமாட்டான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம். 


No comments:

058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்த...