மூலம் 7

 “பற்றினான் பற்றுஅற்றான் நூல்தவசி, எப்பொருளும்

முற்றினான் ஆகும் முதல்வன்நூல் – பற்றினால்,

பாத்துண்பான் பார்ப்பான், பழிஉணர்வான் சான்றவன்,

காத்துண்பான் காணான் பிணி.” -- சிறுபஞ்சமூலம்.


எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றே, அவற்றில் சார்பு இல்லாதவனாகிய இறைவனால் செய்யப்பட்ட முதல் நூலைக் கடைபிடித்து ஒழுகுகின்றவன் வீடு பேற்றை விரும்பி நோற்பவனாவான். எல்லாப் பொருளையும் முற்ற உணர்ந்தவன் எல்லார்க்கும் தலைவன் ஆவான். நூல்களில் கூறப்பட்ட அறங்களைக் கைக்கொள்வதன் மூலம், தன் மனைக்கு வரும் விருந்தினர் முதலியவர்களை உண்பித்துத் தானும் உண்கின்றவன் அந்தணன் ஆவான். பழிக்கு எதுவான செயல்களை அறிந்து விலக்குவோன், அறிவால் நிறைந்த பெரியோன் ஆவான். உடலுக்குப் பொருந்தாத உணவுகளை மறுத்து உண்பவன் நோய் கொள்ளான்.


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...