கடுகம் 11

 “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும், இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவது உடைத்து.” -- திரிகடுகம்.


தன்னை அழையாதவன் ஆடுகின்ற கூத்தாட்டத்தைச் சென்று பார்ப்பதும், தளர்ந்து விழும்படி மதுவுண்டு களிக்காதவனாய் இருந்தும், கள்ளுண்டவன் போல் வழுப்படப் பேசுதலும், தன்னை நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறையும் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும், ஊரிலுள்ளோர் எல்லாரும் துன்பப்படும் குற்றத்தை  உடையன ஆகும். 


No comments:

மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...