மூலம் 10

 “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் தன்பார்ப்பு,

நாவிற்கு நன்றல் வசை.” -- சிறுபஞ்சமூலம்.


சிலந்திப் பூச்சிக்குத் தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும். எருது முதலிய மிருகங்களுக்கு நீண்ட கொம்புகளே எமனாகும். வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும். நண்டுக்குத் தன் குஞ்சுகளே எமனாகும். ஒருவனுடைய நாவுக்கு, நன்மையல்லாத பழியைக் கொடுக்கும் பிறரை நன்று அல்லாத வசைமொழிகள் சொல்லுதல்  எமனாகும்.


சிலந்திப்பூச்சி முட்டை இட்டவுடன் அழிதலால், “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்’’ என்றார். “நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில் கொண்ட கரு அளிக்கும்” என்பது ஔவையார் அருளிய நல்வழி. விலங்குகளுக்கு நீண்ட கொம்பு இருந்தால், மரங்கள் முதலியவற்றில் குத்தி முறிந்து, அதனால் அவை வருத்தம் அடைய நேரும். அல்லது பிற உயிர்களின் மீதோ, மனிதர் மீதோ பட்டாலும் கேடு விளைவிக்கும் என்பதாலும், “நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம்” என்றும் கொள்ளலாம். கவரிமான் முட்செடி முதலியவற்றில் பட்டுத் தனது உடம்பில் உள்ள மயிர் ஒன்று உதிர்ந்தால், அது உழிரை விட்டுவிடும் என்பதால், “மயிர்தான் வலம்படா மாவிற்குக் கூற்றம்” என்றார். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா” என்பது திருக்குறள்.  


No comments:

058. கண்ணோட்டம் - 06. மண்ணோடு இயைந்த

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொ...